இந்தியாவில் மேலும் 2,529 பேருக்கு கோவிட்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,529 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,529 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,46,04,463 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 3,553 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,40,43,436 ஆனது. தற்போது 32,282 பேர் சிகிச்சையில் உள்ளனர்.கோவிட் காரணமாக 4 பேர் மரணமடைந்ததால், … Read more

மருத்துவர்களின் அலட்சியம், பறிபோன தாய்-சிசு உயிர்!உண்மையைக் கண்டறிந்த மருத்துவக்குழு- பின்னணி என்ன?

பல கடினமான சூழ்நிலைகளில் நோயாளிகளின் உயிரை மருத்துவர்கள் காப்பாற்றினாலும், அவ்வப்போது மருத்துவ அலட்சியங்களால் உயிரிழப்புகளும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. சமீபத்தில், மருத்துவர்களின் அலட்சியத்தால் பாலக்காடு பகுதியில் தாய் மற்றும் சிசு இறந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரசவம் பிரசவவலி உண்டானதை அடுத்து, ஐஸ்வர்யா என்ற பெண் பாலக்காட்டில் உள்ள தங்கம் மருத்துவமனையில் ஜூன் 29-ம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். முதலில் சிசேரியன் செய்ய அறிவுறுத்திய மருத்துவர்கள், பின்பு நார்மல் டெலிவெரி முறையில் மருத்துவம் பார்க்க … Read more

66குழந்தைகளை காவு வாங்கிய இந்திய நிறுவன ‘இருமல் சிரப்’புகளுக்கு உலக சுகாதார நிறுவனம் தடை?

ஜெனிவா: காம்பியா நாட்டில் 66குழந்தைகளின் இறப்புக்கு இந்தியாவைச் சேர்ந்த பிரபலன மருந்துதயாரிப்பு நிறுவனத்தின் இருமல் மருந்துகள் காரணம் என உலக சுகாதார நிறுவனம் குற்றம் சாட்டி உள்ளது. இந்த நிறுவனம் மற்றும்  4 இருமல் மற்றும் சளி மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் உள்ள பிரபல மருந்துதயாரிப்பு நிறுவனம் மெய்டன் பர்மாசூட்டிக்கல்ஸ். இந்த நிறுவனத்தில் குழந்தைகள் மற்றும் பெரியவர் களுக்கான இருமல் சிரப் உள்பட பல மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. … Read more

மணப்பாறை அருகே ஆன்லைன் விளையாட்டால் கல்லூரி மாணவன் தற்கொலை

திருச்சி: மணப்பாறை அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தோற்ற கல்லூரி மாணவன் தற்கொலை செய்துகொண்டார். சந்தோஷ் என்ற பொறியியல் மாணவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்காக,வீட்டில் நகை பணம் எடுத்து சென்றபோது பெற்றோர் திட்டியதால் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

336 மது பாட்டில்கள் பறிமுதல்: ஒருவர் கைது| Dinamalar

மயிலாடுதுறை: புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் இருந்து சட்ட விரோதமாக மது பாட்டில்கள் மற்றும் கள்ள சாராயம் கடத்திவரப்பட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. வாகன சோதனை: இந்நிலையில் மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் காரைக்கால்- சீர்காழி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கைது: அப்போது அதிவேகமாக வந்த டாட்டா இண்டிகோ காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் 7 அட்டை பெட்டிகளில் 336 … Read more

ஓராண்டாக திட்டம் தீட்டி வங்கியில் ரூ.12 கோடி கொள்ளை; அடையாளத்தை மாற்றி தலைமறைவாக வாழ்ந்தவர் கைது!

மும்பை தானே மான்பாடாவில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கரன்சி சேமிப்பு கிடங்கு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 12 கோடி ரூபாய் கடந்த ஜூலை 12-ம் தேதி கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனர். வங்கியில் லாக்கர் சாவிகள் பொறுப்பாளராகப் பணியாற்றிய அல்தாப் ஷேக் (43) இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருந்தார். இது தொடர்பாக அல்தாப் சகோதரி நிலோபர் வீட்டில் சோதனை நடத்தி வங்கியில் திருடப்பட்ட பணத்தின் குறிப்பிட்ட பகுதி மீட்கப்பட்டது. இதையடுத்து நிலோபர், கொள்ளையில் … Read more

ஆதிமனிதன் தன்னை எப்போதாவது மனிதன் என்று கூறிக்கொண்டானா? கமலுக்கு நடிகை கஸ்தூரி கேள்வி

சென்னை: நடிகர் கமலை நடிகை கஸ்தூரி கலாய்த்து டிவிட்பதிவிட்டுள்ளார். அதில், ஆதி மனிதன் தன்னை எப்போதாவது மனிதன் என்று கூறிக்கொண்டானா என கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டில் இந்து மதம் குறித்து ஆளாளுக்கு பேசி வருவது சர்ச்சையாகி வருகிறது. சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தைத் தொடர்ந்து, இந்த விவகாரம் மேலும் சூடுபிடித்துள்ளது. ராஜராஜ சோழனை இந்து அரசனாக்க முயற்சிக்கிறார்கள் என வெற்றிமாறன் கூறியதை அடுத்து இந்த விவகாரம் விவாதப்பொருளாக மாறி வருகிறது.  இது குறித்து நடிகர் … Read more

செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீரால் நோயாளிகள் அவதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் மழைநீர் ஒழுகியதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். அவசர சிகிச்சை பிரிவில் மழைநீர் ஒழுங்கியதால் அனைத்து படுக்கைகளில் இருந்த நோயாளிகளும் வேறு பிரிவிற்கு மாற்றப்பட்டனர்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீரால் நோயாளிகள் அவதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் மழைநீர் ஒழுகியதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். அவசர சிகிச்சை பிரிவில் மழைநீர் ஒழுங்கியதால் அனைத்து படுக்கைகளில் இருந்த நோயாளிகளும் வேறு பிரிவிற்கு மாற்றப்பட்டனர்.

மும்பை விமான நிலையத்தில் போதைப்பொருள் வைத்திருந்த நபர் கைது – ரூ.80 கோடி மதிப்புள்ள 16 கிலோ ஹெராயின் பறிமுதல்

மும்பை, மும்பை சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் வைத்திருந்த நபரை வருவாய் புலனாய்வு இயக்குனரக (டிஆர்ஐ) அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடமிருந்து 16 கிலோ உயர்தர ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.80 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று டிஆர்ஐ தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர் கேரளாவைச் சேர்ந்த பினு ஜான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். டிஆர்ஐ அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பினு ஜான் விமான நிலையத்தை … Read more