வள்ளுவரும், பெரியாரும் தான் உலகிலேயே சமூக நீதி பேசியவர்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பன்னாட்டு பெரியார் மனிதநேய மாநாட்டில் காணொலி வாயிலாக பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உலகிலேயே சமூக நீதி பேசியவர்கள் வள்ளுவரும், பெரியாரும்தான் என கூறினார். கனடாவில் சமூகநீதிக்கான பன்னாட்டுப் பெரியார் மனிதநேய மாநாடு நடைபெற்றது. இதில் நேரடியாக கலந்து கொள்ள முடியாததால், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கனடாவில் இந்த மாநாடு நடைபெறுவது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். சமூகநீதிக்கான பன்னாட்டு மாநாடு 2017-ம் … Read more

அடேங்கப்பா!.. பாஜகவையே பின்னுக்கு தள்ளிட்டீங்களே.. கோவா தேர்தல் செலவில் மம்தா பானர்ஜி கட்சி முதலிடம்!

India oi-Mani Singh S பானாஜி: கடந்த ஆண்டு நடந்து முடிந்த கோவா சட்டமன்ற தேர்தலில், தேர்தல் செலவுகளில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பாஜகவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளது. கோவா மாநிலத்திற்கு கடந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்த ஆம் ஆத்மி கட்சியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் கடும் முயற்சி எடுத்து தீவிர தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டன. கோவா சட்டமன்ற தேர்தல் ஆம் ஆத்மி கட்சியும் … Read more

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு: நிதியமைச்சர் விளக்கம்| Dinamalar

புனே: மற்ற கரன்சிகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு “மிக நன்றாக” உள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவை கண்டது. ஒரு டாலருக்கு நிகரான மதிப்பு 80 ரூபாயை தாண்டியது. இது இந்திய ரூபாயின் மதிப்பில் வரலாறு காணாத வீழ்ச்சி, ஒரு டாலருக்கு நிகராக 39 காசுகள் சரிந்து இந்திய ரூபாயின் மதிப்பு முதல் முறையாக 81-ஐ தாண்டி 81.27 ஆக உள்ளது.அமெரிக்க … Read more

இந்திய ரூபாயின் மதிப்பு சீராக உள்ளது.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பலே விளக்கம்!

புனே: மற்ற உலக நாணயங்களுடன் ஒப்பிடும்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, மிக சிறப்பாக உள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் ஏற்ற இறக்கம் என்பது அதிகளவில் இருந்தாலும், ரூபாய் மதிப்பு அந்தளவுக்கு பாதிக்கவில்லை. இதனை மத்திய ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகின்றது. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி.. 82 ஆக வீழ்ச்சி காணலாம்..! வரலாறு காணாத சரிவு கடந்த சில தினங்களாகவே … Read more

அயர்லாந்து டு ஸ்காட்லாந்து – 15 டிகிரி குளிர் கடலில் 14.39 மணி நேரம் நீந்தி தேனி மாணவர் சாதனை!

தேனி பழைய அரசு மருத்துவமனை ரோட்டைச் சேர்ந்தவர் சினேகன்(14). இவர் தேனி மெட்ரிக் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கிறார். இவர் இரண்டு முறை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பாக்ஜலசந்தி கடலில் நீந்தி சாதனை படைத்துள்ளார். இதையடுத்து அதிக குளிர் கடலான வட அயர்லாந்து நாட்டில் உள்ள வடக்கு கால்வாய் கடலில் 35 கிலோ மீட்டர் தூரத்தை ஃப்ரீ ஸ்டைல் முறையில் நீந்தி சாதனை படைக்க முடிவெடுத்தார்.  சினேகன் இதற்காக செப்டம்பர் 2-ம் தேதி வடக்கு அயர்லாந்து சென்ற மாணவர் … Read more

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்நாட்டில் இதுவரை H1N1 காய்ச்சலால் 465 பேர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், அரசு மருத்துவமனையில் 10 பேர் அனுமதி. தனியார் மருத்துவமனையில் 269 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 186 பேர் தனிமைப்படுத்தி கொண்டு உள்ளனர் என்றும் கூறினார்.

38-வது மெகா தடுப்பூசி முகாம்: 4 மணி நிலவரப்படி 6.35 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்று வரவும் 38-வது மெகா தடுப்பூசி முகாமில் 6.35 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 21,590 பேர் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியும், 1.28 லட்சம் பேர் 2-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டனர். பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை 4 லட்சத்து 85 ஆயிரத்து 100 பேர் செலுத்தி கொண்டதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தேர்தல் வந்தாலே போதும்.. இந்து முஸ்லீம் மோதலை கிளப்புவதே பாஜகவின் வேலை..! பாயும் ஓவைசி

India oi-Vigneshkumar காந்திநகர்: குஜராத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அசாரூதின் ஓவைசி பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக 99 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. இப்போது பூபேந்திர பட்டேல் தலைமையிலான பாஜக ஆட்சியை நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் பாஜகவை எப்படியாவது தோற்கடித்தே தீர வேண்டும் என்ற முனைப்பில் பல எதிர்க்கட்சிகள் களமிறங்கி உள்ளன. … Read more

எஸ்பிஐ Vs அஞ்சலக FD திட்டங்கள்.. முதிர்வு காலத்தில் ரூ.10 கிடைக்க எவ்வளவு முதலீடு?

SBI Vs post office FD: பிக்சட் டெபாசிட் திட்டங்கள் இன்றும் சாமானிய மக்கள் மத்தியில் பிரபலமான திட்டங்களாக உள்ளன. இன்று என்ன தான் பல முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், எஃப்டி என்பது சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. எனினும் இந்த எஃப்டி திட்டத்தில் எது சிறந்தது? எஸ்பிஐ வங்கி பிக்சட் டெபாசிட்டா, அஞ்சலகத்தின் டைம் டெபாசிட்டா? இதில் எதில் வட்டி விகிதம் அதிகம்? எது சிறந்த தேர்வாக இருக்கும்? எதில் வருமானம் அதிகம் கிடைக்கும்? ரிஸ்க் இல்லா … Read more

Gpay பார்கோடு குளறுபடி; ரூ.550-க்கு போட்ட பெட்ரோலுக்கு ரூ.55,000 செலுத்திய நபர்!

மகாராஷ்டிரா தானேவில் தன்னுடைய ஸ்கூட்டருக்கு பெட்ரோல் போடச் சென்ற ஒருவர் பங்க் ஊழியருக்கு ரூ.550 கொடுப்பதற்கு பதிலாக தவறுதலாக ரூ.55,053 செலுத்தியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அந்த நபர் தன்னுடைய ஸ்கூட்டருக்கு தானேவில் உள்ள ஷெல் பெட்ரோல் பங்க்கில் டேங்க் ஃபுல் செய்திருக்கிறார். அதற்கு பில் ரூ.550 வந்திருக்கிறது. அந்த வாடிக்கையாளரும் கூகுள் பே மூலம் பணம் செலுத்த முயற்சி செய்தார். அப்போது QR குளறுபடியால் ரூ.550-க்கு பதில் ரூ.55,053 என தவறுதலாக பில் பதிவாகியிருக்கிறது. கூகுள் … Read more