சண்டைக்கு தயாரான வேல்ஸ் இளவரசர் வில்லியம்: மகிழ்ச்சியில் புன்னகைத்த இளவரசி கேட்

விளையாட்டு பயிற்சி தொண்டு நிறுவனத்தின் விழாவில் கலந்து கொண்ட வேல்ஸ் அரச தம்பதி. இளைஞர்களின் வழிகாட்டுதலில் குத்துச் சண்டை விளையாடிய இளவரசர் வில்லியம். பிரித்தானியாவின் விளையாட்டு பயிற்சி தொண்டு நிறுவனத்தின் விழாவில் கலந்து கொண்ட வேல்ஸ் இளவரசர் வில்லியம் குத்துச் சண்டை கையுறைகள் அணிந்து சில குத்துக்களை வீசினார். பிரித்தானியாவின் வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் இருவரும் லண்டனின் ஸ்ட்ராட்போர்டில் உள்ள ராணி எலிசபெத் ஒலிம்பிக் பூங்காவில் நடைபெற்ற விளையாட்டுப் பயிற்சித் தொண்டு நிறுவனத்தின் … Read more

உலகளவில் 62.86 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 62.86 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 62.86 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 65.67 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 60.79 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்-14: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

ஸ்பைஸ் ஜெட் விமானம் அவசரமாக தரையிறக்கம்| Dinamalar

ஹைதராபாத், :கோவாவில் இருந்து ஹைதராபாத் வந்த ‘ஸ்பைஸ் ஜெட்’ பயணியர் விமானத்தில் திடீரென புகை கிளம்பியதால், அங்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது. இது குறித்து, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரக அதிகாரிகள் நேற்று தெரிவித்ததாவது: கோவாவில் இருந்து ஹைதராபாத் நோக்கி, ஸ்பைஸ் ஜெட் விமானம் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. இதில், ௮௬ பயணியர் வந்தனர். விமானம் ஹைதராபாதை நெருங்கிய போது, பைலட் அறையில் இருந்து புகை வந்துள்ளது. உடனே, ஹைதராபாத் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் … Read more

திருமலையில் குவியும் பக்தர்கள்| Dinamalar

திருப்பதி,:நாளை புரட்டாசி சனிக்கிழமை இறுதி வாரம் என்பதால், திருமலை ஏழுமலையானை தரிசிக்க நேற்று முதலே பக்தர்கள் குவிய துவங்கினர். ஆந்திர மாநிலம் திருமலையில் கடந்த வாரம் போலவே, இந்த வாரமும் புரட்டாசி இறுதி சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் குவியத் துவங்கியுள்ளது. நேற்று காலை 32 காத்திருப்பு அறைகளை கடந்து சீலாதோரணம் பகுதி வரையில் வெளியில் உள்ள தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இதனால் தர்ம தரிசனத்திற்கு 30 மணிநேரமும், 300 ரூபாய் விரைவு தரிசனத்திற்கு ஐந்து … Read more

ஐரோப்பிய எரிவாயு பிரச்சினையை பயன்படுத்தி தன் திட்டத்தை செயல்படுத்த காய் நகர்த்தும் புடின்: ஜேர்மனியின் பதிலடி…

தன்னிடமுள்ள எரிவாயுவை ஏற்றுமதி செய்வதன் மூலம் பில்லியன் கணக்கில் வருவாய் பார்த்துவந்தது ரஷ்யா. ஆனால், புடினுடைய நாடு பிடிக்கும் ஆசையால் அதற்கு பெரும் அடி விழுந்தது. எரிவாயு ஏற்றுமதி மூலம் பல பில்லியன் டொலர்கள் வருவாய் பார்த்துவந்தது ரஷ்யா. குறிப்பாக, ஜேர்மனி முதலான ஐரோப்பிய நாடுகளுக்கு Nord Stream 1 என்னும் திட்டத்தின் மூலம் பிரம்மாண்ட குழாய் வழியாக எரிவாயு அனுப்பி வந்தது ரஷ்யா. அதுபோக, Nord Stream 2 என்னும் ஒரு திட்டத்தையும் அது துவக்க … Read more

பயங்கரவாதிகளுடன் போரிட்ட மோப்ப நாய் ஜூம் உயிரிழந்தது| Dinamalar

புதுடில்லி ஜம்மு – காஷ்மீரில் சமீபத்தில் நடந்த மோதலின்போது இரண்டு பயங்கரவாதிகளை கொல்ல உதவிய, ‘ஜூம்’ என்று பெயரிடப்பட்ட ராணுவ நாய் நேற்று உயிரிழந்தது. நம் ராணுவத்தின் ‘ஆப்பரேஷன் தாங்பாவா’ அதிரடிப் பிரிவில், ஜூம் என்று பெயரிடப்பட்ட நாய் பணியாற்றி வந்தது. பெல்ஜிய ஷெபர்டு வகையைச் சேர்ந்த, 2 வயதான இந்த நாய், கடந்த எட்டு மாதங்களாக இந்தப் பிரிவில் பணியாற்றி வந்தது. இதற்கு பயங்கரவாதிகளை கண்டுபிடித்து, அவர்களை வீழ்த்துவதற்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், காஷ்மீரின் … Read more

காஷ்மீரில் 36 போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு| Dinamalar

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் ஊழல், பல்வேறு கிரிமினல் குற்றச்சாட்டிற்குள்ளான 36 போலீஸ் அதிகாரிகளுக்கு அரசு நிர்வாகம் கட்டாய ஓய்வு அளித்து உத்தரவிட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் காவலத்துறையில் 36 போலீஸ் அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது அரசு நிர்வாகத்தின் கவனத்திற்கு சென்றது. இது தொடர்பாக அவர்கள் மீது துறை ரீதியாக நடத்திய விசாரணையில், இவர்கள் பணிக்கு சரிவர வராமல் அலட்சியம் காட்டியதும், அடிக்கடி விடுமுறை எடுத்து வருவதும் தெரியவந்தது, இவர்கள் சிலர் ஊழலில் ஈடுபட்டதும், குற்றச் செயல்களில் ஈடுபட்டு … Read more

நடிகைகள் முதல் பெண் தலைவர்கள் வரை…ஒற்றை நாட்டுக்கு எதிராக தங்கள் தலைமுடியை வெட்டி போராட்டம்

ஈரானின் கட்டாய ஹிஜாப் சட்டத்திற்கு எதிராக போராடிய மஹ்சா மோகோய்(18) சுட்டுக் கொல்லப்பட்டார்.  ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் அபிர் அல்-சஹ்லானி தலைமுடிகளை வெட்டி போராட்டம். ஈரான் அரசுக்கு எதிராக உலகம் முழுவதும் உள்ள பெண்கள் தங்கள் தலைமுடியை வெட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஈரானில் பெண்கள் தலைமறைப்புகளை (ஹிஜாப்) அணிவது கட்டாயமாக்கப்படுவதாக ஈரானின் பழமைவாத அரசு  அறிவித்ததை தொடர்ந்து, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெண்கள் போராட்டம் வெடித்தது. செப்டம்பர் 13 அன்று தெஹ்ரானில் மஹ்சா அமினி … Read more

பிரதமரை அவதுாறாக பேசிய குஜராத் ஆம் ஆத்மி தலைவர் கைது| Dinamalar

புதுடில்லி பிரதமர் மோடி மற்றும் பெண்கள் குறித்து அவதுாறாக பேசிய குஜராத் மாநில ஆம் ஆத்மி தலைவர் கோபால் இட்டாலியாவை புதுடில்லி போலீசார் நேற்று கைது செய்தனர். குஜராத் மாநில ஆம் ஆத்மி தலைவர்கோபால் இட்டாலியா பேசும் இரண்டு, ‘வீடியோ’ க்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகின. இதில், முதல் வீடியோவில் அவர் பிரதமர் மோடியை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்து இருந்தார். இரண்டாவது வீடியோவில், ‘சுரண்டலுக்கு அடிப்படை காரணமே கோவில்களும், இதிகாச கதைகளும் தான். ‘பெண்கள் மரியாதையுடன் … Read more