கனமழையைத் தாங்குமா தமிழ்நாடு? கமலஹாசன் கேள்வி…

சென்னை: சாதாரண மழையையே தாங்காமல் தவிக்கும் தமிழ்நாடு, கனமழையைத் தாங்குமா? வடகிழக்குப் பருவமழைக்குத் தமிழ்நாடு தயாரா? நிவாரணம் தீர்வாகாது! என தமிழகஅரக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார். இந்திய வானிலை ஆய்வு மையத், தமிழகத்தில் வரும் 20-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் சாத்தியக்கூறு இருப்பதாக தெரிவித்து உள்ளது.  இதனையடுத்து,  மழை பாதிப்புகளை தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. சென்னை யில், மின்மோட்டார்கள் தயார் நிலையில் … Read more

தேசிய விளையாட்டு போட்டியில் மகளிர் யோகாசன பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார் தமிழக வீராங்கனை வைஷ்னவி

குஜராத்: தேசிய விளையாட்டு போட்டிகள் குஜராத்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தேசிய விளையாட்டு போட்டியில் மகளிர் யோகாசன பிரிவில் தமிழக வீராங்கனை வைஷ்னவி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மகளிர் யோகாசன போட்டியில் 2 மற்றும் 3-வது இடங்களை மகாராஷ்டிர வீராங்கனைகள் பிடித்துள்ளனர். பதக்கபட்டியலில் தமிழக அணி 20 தங்கம் உட்பட 60 பதக்கங்களுடன் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது  

பிரதமர் மோடி நாளை (அக்.9) குஜராத் செல்கிறார்!| Dinamalar

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள்கள் பயணமாக நாளை(அக்.,09) குஜராத் செல்கிறார். அங்கு, பிரதமர் மோடி, ரூ.14,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அக்.11 ஆம் தேதி ம.பி சென்று, மாதேஸ்வரி கோவிலில் வழிபாடு செய்கிறார். புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள்கள் பயணமாக நாளை(அக்.,09) குஜராத் செல்கிறார். அங்கு, பிரதமர் மோடி, ரூ.14,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அக்.11 ஆம் தேதி ம.பி புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை … Read more

உங்கள் வீட்டில் மாடித்தோட்டம் அமைப்பது எப்படி? வழிகாட்டும் நேரடி நிகழ்ச்சி!

இன்றைக்கு பல வீடுகளில் மாடி இருக்கிறதோ இல்லையோ, மாடித்தோட்டம் கண்டிப்பாக இருக்கிறது. இன்று பெரும்பாலானோர் இயற்கையோடு இணைந்து வாழவே விரும்புகிறார்கள். அதனால் தற்போதைய காலகட்டத்தில் மாடித்தோட்டம் தான் ட்ரெண்டிங். மாடித்தோட்டம் காய்கறிகள், பூக்கள் மாடித்தோட்டம் கொடுக்கும் விளைச்சல்! மாடித்தோட்டத்தை உங்கள் வீடுகளில் அமைக்க விரும்புகிறீர்களா? அல்லது நீங்கள் ஏற்கனவே உங்களது வீட்டில் அமைத்திருக்கும் மாடி தோட்டத்தை சிறப்பாக்க வேண்டுமா? இதோ உங்களுக்காக வருகிறது “வீட்டிலும் செய்யலாம் விவசாயம்! மாபெரும் மாடித்தோட்ட கருத்தரங்கு!” இந்த நேரடி நிகழ்ச்சியை தமிழ்நாடு … Read more

புதுச்சேரி மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 38சதவிகிதமாக உயர்வு…

புதுச்சேரி: புதுச்சேரி மாநில அரசு, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி உத்தரவிட்டு உள்ளது. இதுவரை 34 சதவிகிதமாக இருந்த அகவிலைப்படி 38சதவிகிதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. மத்தியஅரசு  அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டது. பின்னர் செப்டம்பர் மாதம்  38 சதவீத மாக அதிகரித்துள்ளது. இதையடுத்து புதுச்சேரி மாநில அரசு, அம்மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 38 சதவீதமாக உயர்த்தி உத்தரவிட்டு உள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34 சதவீதத்திலிருந்து 38 … Read more

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்கும் வரை மாணவர்களுக்கான பயிற்சி தொடரும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி

சென்னை: நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்கும் வரை மாணவர்களுக்கான பயிற்சி தொடரும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். அரசுப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படுகிறது என்பது உண்மையில்லை. போதை பொருள் இல்லா வளாகங்களாக பள்ளிக்கூடங்கள் மாற வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலையில் நடைபெற்ற தமிழ்நாடு அறக்கட்டளை ஆண்டு விழாவில் பங்கேற்ற அமைச்சர் பேட்டி அளித்துள்ளார்.

இந்திய தேசிய காங்கிரஸில் ஏதேனும் சித்தாந்தம் எஞ்சியுள்ளதா? : பாஜ., தேசிய தலைவர் நட்டா

கவுஹாத்தி: இந்திய தேசிய காங்கிரஸில் ஏதேனும் சித்தாந்தம் எஞ்சியுள்ளதா?. இந்தியாவில் உள்ள ஒரே சித்தாந்த அடிப்படையிலான மற்றும் தேசிய கட்சி பாஜக மட்டும் செயல்படுகின்றது என பாஜ., தேசிய தலைவர் நட்டா கூறினார். பாஜ., மாநில அலுவலகத்தை திறப்பு விழா: அசாம் மாநிலத்திற்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பா.ஜ.க.தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் சென்றனர். அங்கு இன்று(அக்.,08) கவுகாத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜ., மாநில அலுவலகத்தை திறந்து வைத்தனர். … Read more

“ஜம்மு-காஷ்மீருக்கு யாரும் செல்ல வேண்டாம்!" – நாட்டு மக்களை அறிவுறுத்தும் அமெரிக்கா… என்ன காரணம்?

“இந்தியாவில் நிலவிவரும் பயங்கரவாதம், அமைதியின்மை காரணமாக ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம்” என அமெரிக்க உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்காவிலிருந்து இந்தியா, பாகிஸ்தான் செல்வோருக்கு உள்துறை அமைச்சகம் அறிவுரை வழங்குவது வழக்கமான ஒன்றெனக் கூறப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டும் வழிகாட்டு நெறிமுறை அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. வெள்ளை மாளிகை, அமெரிக்கா இது தொடர்பாக அமெரிக்க உள்துறை, “இந்தியாவில் நிலவிவரும் பயங்கரவாதம் மற்றும் குற்றச்செயல்கள் காரணமாக இந்தியாவுக்கு செல்லும் அமெரிக்கர்கள் அதிக கவனமுடன் இருக்க … Read more

டிராக்டர் டிரைலரை திருடிய பாஜக நிர்வாகிகள் கைது!

விருதுநகர்: டிராக்டர் டிரைலரை திருடிய பாஜக நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்த டிராக்டரின் டிரைலர் திருடு போனது. இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கண்ணன், கருப்பசாமி ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் அண்ணன் தம்பி என்பதும், கண்ணன், பாஜக அமைப்பு சாரா தொழிலாளர் அணியின் விருதுநகர் மாவட்டச் செயலாளராக இருந்து வருவதும் தெரிய … Read more

தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால்  தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புயுள்ளது என்று வானிலை ஆய்வு மையம்  அறிவித்துள்ளது. ஓரிரு இடங்களில் ஈத், மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளனர்.