புதுச்சேரி மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 38சதவிகிதமாக உயர்வு…

புதுச்சேரி: புதுச்சேரி மாநில அரசு, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி உத்தரவிட்டு உள்ளது. இதுவரை 34 சதவிகிதமாக இருந்த அகவிலைப்படி 38சதவிகிதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. மத்தியஅரசு  அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டது. பின்னர் செப்டம்பர் மாதம்  38 சதவீத மாக அதிகரித்துள்ளது. இதையடுத்து புதுச்சேரி மாநில அரசு, அம்மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 38 சதவீதமாக உயர்த்தி உத்தரவிட்டு உள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34 சதவீதத்திலிருந்து 38 … Read more

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்கும் வரை மாணவர்களுக்கான பயிற்சி தொடரும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி

சென்னை: நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்கும் வரை மாணவர்களுக்கான பயிற்சி தொடரும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். அரசுப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படுகிறது என்பது உண்மையில்லை. போதை பொருள் இல்லா வளாகங்களாக பள்ளிக்கூடங்கள் மாற வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலையில் நடைபெற்ற தமிழ்நாடு அறக்கட்டளை ஆண்டு விழாவில் பங்கேற்ற அமைச்சர் பேட்டி அளித்துள்ளார்.

இந்திய தேசிய காங்கிரஸில் ஏதேனும் சித்தாந்தம் எஞ்சியுள்ளதா? : பாஜ., தேசிய தலைவர் நட்டா

கவுஹாத்தி: இந்திய தேசிய காங்கிரஸில் ஏதேனும் சித்தாந்தம் எஞ்சியுள்ளதா?. இந்தியாவில் உள்ள ஒரே சித்தாந்த அடிப்படையிலான மற்றும் தேசிய கட்சி பாஜக மட்டும் செயல்படுகின்றது என பாஜ., தேசிய தலைவர் நட்டா கூறினார். பாஜ., மாநில அலுவலகத்தை திறப்பு விழா: அசாம் மாநிலத்திற்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பா.ஜ.க.தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் சென்றனர். அங்கு இன்று(அக்.,08) கவுகாத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜ., மாநில அலுவலகத்தை திறந்து வைத்தனர். … Read more

“ஜம்மு-காஷ்மீருக்கு யாரும் செல்ல வேண்டாம்!" – நாட்டு மக்களை அறிவுறுத்தும் அமெரிக்கா… என்ன காரணம்?

“இந்தியாவில் நிலவிவரும் பயங்கரவாதம், அமைதியின்மை காரணமாக ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம்” என அமெரிக்க உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்காவிலிருந்து இந்தியா, பாகிஸ்தான் செல்வோருக்கு உள்துறை அமைச்சகம் அறிவுரை வழங்குவது வழக்கமான ஒன்றெனக் கூறப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டும் வழிகாட்டு நெறிமுறை அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. வெள்ளை மாளிகை, அமெரிக்கா இது தொடர்பாக அமெரிக்க உள்துறை, “இந்தியாவில் நிலவிவரும் பயங்கரவாதம் மற்றும் குற்றச்செயல்கள் காரணமாக இந்தியாவுக்கு செல்லும் அமெரிக்கர்கள் அதிக கவனமுடன் இருக்க … Read more

டிராக்டர் டிரைலரை திருடிய பாஜக நிர்வாகிகள் கைது!

விருதுநகர்: டிராக்டர் டிரைலரை திருடிய பாஜக நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்த டிராக்டரின் டிரைலர் திருடு போனது. இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கண்ணன், கருப்பசாமி ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் அண்ணன் தம்பி என்பதும், கண்ணன், பாஜக அமைப்பு சாரா தொழிலாளர் அணியின் விருதுநகர் மாவட்டச் செயலாளராக இருந்து வருவதும் தெரிய … Read more

தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால்  தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புயுள்ளது என்று வானிலை ஆய்வு மையம்  அறிவித்துள்ளது. ஓரிரு இடங்களில் ஈத், மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளனர். 

“அரசுப் பள்ளிகளை சி.பி.எஸ்.இ-க்கு மாற்றுவதற்குக் காரணம் இதுதான்!" – தமிழிசை கூறும் விளக்கமென்ன?

புதுச்சேரியில் அனைத்து அரசுப் பள்ளிகளும் விரைவில் சி.பி.எஸ்.இ பள்ளிகளாக மாற்றப்படும் என்று, மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்ததற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக, “சி.பி.எஸ்.இ கல்வித்திட்டம் மூலம் இந்தியையும், குலக்கல்வியையும் திணிக்க முயல்கிறார்கள்” என்று புதுச்சேரி தி.மு.க குற்றம்சுமத்தியிருக்கிறது. இந்த நிலையில், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ”புதிய கல்விக் கொள்கை நிச்சயமாக அமல்படுத்தப்படும். … Read more

ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு பிறந்தநாள்… வாழ்த்துச் சொன்ன ஒரே தலைவர் யார் தெரியுமா?

புடின் தனது 70ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ஆனால், உலகத் தலைவர்களில் ஒருவர் தவிர யாரும் அவருக்கு வாழ்த்துச் சொல்லவில்லை. உலகம் முழுவதுமே புடினுக்கு வாழ்த்துச் சொல்ல மறுத்துவிட்ட நிலையில், ஒரே ஒரு நாட்டின் தலைவர் மட்டுமே அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லியுள்ளார். அந்த தலைவர், வட கொரியாவின் ஜனாதிபதியான கிம் ஜாங் உன்தான்! அமெரிக்காவின் சவால்களையும் அச்சுறுத்தல்களையும் நசுக்குவதற்காக புடினை வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார் கிம். ரஷ்யாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையில் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது நல்லுறவு … Read more

கேரள கடல் பகுதியில் கடத்தி வரப்பட்ட ரூ.1200 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்!

கொச்சி: கேரள கடல் பகுதியில் கடத்தி வரப்பட்ட ரூ.1200 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்த கடற்படை காவல்துறையினர், அதை கடத்தி வந்தவர்களையும் கைது செய்தனர். இந்தியாவிற்கு வெளிநாடுகளில் இருந்து ஹெராயின் உள்பட போதைப்பொருட்கள் கடத்தி வருவது அதிகரித்து வருகிறது. இதை தடுக்க தீவிரமான கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வந்தாலும், மற்றொருபுறமாக கடத்தல் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், 1,200 கோடி ஆப்கானிஸ்தான் ஹெராயின், பாகிஸ்தான் வழியாக ஈரானிய படகில் இந்தியா வரும் வழியில் கேரள கடற்படையில் … Read more

பெருமழையை எதிர்கொள்ளும் வகையில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது: முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி

சென்னை: பெருமழையை எதிர்கொள்ளும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.15 நாட்கள் முதல் 1 மாதத்துக்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். எப்படிப்பட்ட மழை பெய்தாலும் அதை சமாளிக்க கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் திருப்தி தருகின்றன என்று ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.