தமிழகத்தில் மணம் முடித்ததால் மறுப்பு; கவுன்சிலிங்கில் பங்கேற்க புதுச்சேரி டாக்டருக்கு அனுமதி| Dinamalar

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்ததால், பிறப்பிட சான்றிதழ் வழங்க மறுத்ததை எதிர்த்து, வழக்கு தொடர்ந்த பெண் டாக்டரை, முதுநிலை மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதிக்கும்படி, புதுச்சேரி ‘சென்டாக்’ நிறுவனத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி, ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த டாக்டர் ஹேமா என்பவர் தாக்கல் செய்த மனு:விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுாரைச் சேர்ந்தவரை திருமணம் செய்தேன். 2021 நவம்பர் வரை, திருமணத்துக்கு ஒரு வாரம் முன்பு வரை, புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றினேன். பின், புதுச்சேரியில் … Read more

சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் கலைப்பு இல்லை – மத்திய அரசு திட்டவட்டம்

புதுடெல்லி, மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகத்தை கலைத்து விட்டு அதனை, சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையுடன் இணைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அப்படி எந்த ஒரு திட்டமும் பரிசீலனையில் இல்லை என மத்திய அரசு நேற்று தெளிவுபடுத்தியுள்ளது. பத்திரிகை தகவல் பணியகம் இதனை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை மந்திரி ஸ்மிரிதி இரானியும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். தினத்தந்தி Related Tags : Ministry of Minority Affairs Central Govt

`எல்லா வகையிலும் அவர்களுக்குத் துணை நிற்பேன்'-அரசியலில் களமிறங்குவது குறித்து கங்கனா ரனாவத்

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிகை என்பதைத் தாண்டி தனது தடாலடியான கருத்துகளால் கவனம் பெற்றவர். கங்கனா ரனாவத் சினிமா மட்டுமின்றி அரசியல் குறித்தும் தனது விமர்சனங்களை முன்வைப்பவர். மத்திய அரசு தொடர்பான பிரச்னைகள், சில அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து பேசுவது வழக்கம். இதுமட்டுமின்றி அவர் தலைவி, எமர்ஜென்சி போன்று அரசியல் தலைவர்களின் கதாபாத்திரத்தில் நடித்து வருவதால் ரனாவத் அரசியலில் களமிறங்குவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். இந்நிலையில் கங்கனா ரனாவத் அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்ற … Read more

தமிழகத்தில் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளா் காலி பணியிடங்களை உடனே நிரப்ப உத்தரவு

சென்னை; தமிழகத்தில் காலியாக உள்ள 2, 748 கிராம உதவியாளா் பணியிடங்களை உடனே நிரப்ப மாவட்ட ஆட்சியா்களுக்கு வருவாய் நிா்வாக ஆணையா் எஸ்.கே.பிரபாகா் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா்களுக்கு அவா் எழுதிய கடிதம்:- மாநிலத்தில் காலியாக உள்ள கிராம நிா்வாக அலுவலா் பணியிடங்களை நிரப்பு வது குறித்து மாவட்ட ஆட்சியா்களிடம் இருந்து பெறப்பட்ட பட்டியல் அடிப்படையில் 2, 748 காலியிடங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. அதிகப் படியான காலியிடங்கள் இருப்பதால், அவற்றை உடனடியாக நிரப்புவதற்கான நடவடிக்கைகளை அரசின் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,551,600 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.51 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,551,600 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 623,655,738 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 603,723,497 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 39,415 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேரள பல்கலைக்கழகத்தில் இளங்கோவடிகள் பெயரில் இருக்கை அமைக்கக்கோரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மனு

திருவனந்தபுரம், கேரளாவில் சமீபத்தில் நடந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாட்டில் கலந்து கொள்ள திருவனந்தபுரம் வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், திருவனந்தபுரம் தமிழ் சங்க பொதுச்செயலாளர் சு.முருகன், செயலாளர் சி.கண்ணன் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- சங்க கால தமிழ் புலவர்களில் 50-க்கும் அதிகமானோர் சேர நாட்டைச் (தற்போதைய கேரளம்) சேர்ந்தவர்கள். சிலப்பதிகாரம் தந்த இளங்கோவடிகளும் சேர நாட்டினர் தான். எனவே, தமிழ் இலக்கியத்துக்கு பெரும் நன்கொடையாகிய சிலப்பதிகாரத்தை படைத்த இளங்கோவடிகளின் … Read more

வெந்தயம், வெங்காயம், வேப்பிலை, மருதாணி: பொடுகுத் தொல்லையை போக்க இயற்கையான 10 வழிகள்!

பொடுகு… இது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடிய ஒன்று. அதிலும் குறிப்பாக, இளம் வயதினருக்கு பல நேரங்களில் தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது இந்தப் பொடுகுத் தொல்லை. பொடுகுதானே என்று அலட்சியமாகவும் இருக்க முடியாது. இதைக் கண்டுகொள்ளாமல்விட்டால், முடி உதிர்வு ஏற்படலாம். அதோடு ஒருசில தோல் வியாதிகள் உருவாகவும் இது வழிவகுக்கும். முகத்தில் பருக்கள் உருவாகலாம்; கழுத்திலும், காதின் பின்புறத்திலும் தோல் தொடர்பான நோய்கள் ஏற்படலாம். பொடுகுத் தொல்லை (Representational Image) … Read more

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், த்திய மேற்கு வங்கக் கடலில் நிலவும், காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, சில மாவட்டங் களில் மிதமான மழை தொடரும். தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களிலும், இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டமாக … Read more

தஞ்சாவூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 6 பேரில் மேலும் ஒருவரது உடல் மீட்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 6 பேரில் மேலும் ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்றில் 6 பேர் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஏற்கனவே 4 பேர் மீட்கப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.

பெங்களூருவில் 12 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

பெங்களூரு: பெங்களூருவில் பகுதி நேர வேலை தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக சீனா நிறுவனங்களுக்கு சொந்தமான 12 அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பெங்களூருவில் உள்ள இளைஞர்களை குறிவைத்து, அவர்களிடம் பகுதி நேர வேலை தருவதாக கூறி, ஒரு செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கூறுகின்றனர். பின்னர், அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை மற்றொரு முதலீட்டு செயலியில் அந்த நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இதுகுறித்து பெங்களூரு தெற்கு மண்டல போலீஸ் நிலையம் ஒன்றில் புகார் அளிக்கப்பட்டது. … Read more