மணல் திருட்டு தொடர்பாக புகார் அளித்ததால் ஆத்திரம்… ஆ.டி.ஐ ஆர்வலருக்கு நேர்ந்த கொடூரம்!

குஜராத் மாநிலத்தில், ஆர்.டி.ஐ ஆர்வலரும் அவரின் மகனும் சென்ற ஸ்கூட்டர்மீது, சட்டவிரோத மணல் அகழ்வில் குற்றம்சாட்டப்பட்ட நபரின் கார் மோதியதில், ஆர்.டி.ஐ ஆர்வலரின் மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஆர்.டி.ஐ ஆர்வலர் ரமேஷ் பாலியா என்றும் அவரின் மகன் நரேந்திரன் என்றும் தெரியவந்திருக்கிறது.  இவர்கள் லக்பத் தாலுகாவில் உள்ள மேக்பர் கிராமத்தில் வசித்துவருகின்றனர். அதோடு, ரமேஷ் பாலியா உள்ளூர் பட்டியலின தலைவராகவும் அறியப்படுகிறார். மணல் குவாரி இதில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் நபர் … Read more

ஆன்லைன் ரம்மிக்கு மேலும் ஒரு பலி! திருச்சியில் கல்லூரி மாணவர் தற்கொலை

திருச்சி: தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் ஏற்படும் தற்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று  மேலும் ஒரு பலி ஏற்பட்டுள்ளது. திருச்சியில்  கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மணப்பாறையில், ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த சந்தோஷ் என்ற வாலிபர் ஒருவர், ரயின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு காரணம், ஆன்லைன் ரம்பி என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் … Read more

திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களை சந்தித்த சமூக பாதுகாப்புத் துறை இயக்குநர்

திருப்பூர்: திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களை சந்தித்து சமூக பாதுகாப்புத் துறை இயக்குநர் வளர்மதி  நலம் விசாரித்தார். திருப்பூரில் கெட்டுப்போன உணவு உட்கொண்ட 3 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

16,000 அடி உயரத்தில் களமிறங்கிய சிறப்புப் படை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: உத்தரகண்டில், இமயமலையில் மலையேற்றத்தில் ஈடுபட்டு இருந்தபோது ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 27 வீரர்களை மீட்பதற்காக 16 ஆயிரம் அடி உயரத்தில் தேடுதல் பணியை மேற்கொள்ள சிறப்புக் குழுவினர் சென்றுள்ளனர். உத்தரகண்டிலிருக்கும் இமயமலையில், ‘திரவுபதி’ மலைச்சிகரம் உள்ளது. இங்குள்ள, நேரு மலையேற்ற பயிற்சி மையம், மலையேற்ற வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த பயிற்சி மையத்தின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் திரவுபதி மலைச்சிகரத்தில் ஏறினர்.இதில் ஒரு பகுதியினர் நேற்று முன்தினம் … Read more

விகடன் ஸ்க்ரீன்ப்ளே ஒர்க்‌ஷாப்: 2 மணி நேரம் ஒதுக்கும் ரசிகனுக்குத் தரமான படத்தைக் கொடுப்பது எப்படி?

விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கும் திரைக்கதை வடிவமைப்பாளர்களில் ஒருவர்தான் பாலகுமாரன் தமிழ்ச்செல்வன். தமிழ் சினிமாவின் புதிய திரைக்கதை ஆசிரியர், திரைக்கதை மருத்துவர். ‘கிரியோனி – பிலிம் & ஸ்கிரிப்ட் ஸ்ட்ராட்டஜி கம்பெனி’ என்ற நிறுவனத்தை இவரின் நண்பர் மாணிக்கஜமீனுடன் இணைந்து நடத்திவருகிறார். ஒரு ஸ்கிரிப்ட்டைப் பல கோணங்களில் ஆராய்ந்து அதில் உள்ள நிறைகுறைகளை இயக்குநர் மற்றும் தயாரிப்புத் தரப்புக்கு எடுத்துரைப்பது மட்டுமன்றி, அதைச் சரி செய்து ஒரு வெற்றிப் படத்திற்கான திரைக்கதையாக மாற்றித் தருகிறார். `சிவப்பு … Read more

குட்டி யானைக்கு சிறந்த சிகிச்சை! ராகுல்காந்தியின் கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் பொம்மை…

பெங்களூரு: குட்டி யானைக்கு சிறந்த சிகிச்சை வழங்கப்படும் என ராகுல்காந்தியின் கோரிக்கையை ஏற்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பதில் அளித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டுவரும்  ராகுல்காந்தி, தசரா பண்டிகையையொட்டி 2 நாள் யாத்திரைக்கு விடுமுறை அளித்தார். அப்போது  அங்குள்ள நாகரோலே வனப்பகுதியை பார்வையிட்டார். அப்போது, தாய் யானையுடன் இருந்த குட்டி யானை ஒன்றின் வால் மற்றும் தும்பிக்கை பகுதியில் அடிபட்டிருந்தை கண்டு வருத்தமடைந்தார். அந்த குட்டி யானைக்கு உடனடியாக  சிகிச்சை வழங்க … Read more

சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட 8 மாநிலங்களில் 5G+சேவையை தொடங்கியது Airtel நெட்வொர்க்

டெல்லி: சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட 8 மாநிலங்களில் Airtel நெட்வொர்க்கின் 5G+சேவையை தொடங்கியது. 5G ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இந்த சேவையை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது.

சமன் ஆன ஆண் – பெண் சிசு இறப்பு விகிதம்: புள்ளி விவரங்கள் சொல்வதென்ன?

சமீபத்தில் வெளியாகியுள்ள மத்திய அரசு அறிக்கை ஒன்று, பெண் மற்றும் ஆண் சிசுக்கள் இறப்பு விகிதமானது சமன்பட்டிருப்பதாகத் தெரிவிக்கிறது. சிசு இளம் வயது கர்ப்பத்தால் அதிகமாகும் இறப்பு விகிதம்… தீர்வு என்ன? ஐ.எம்.ஆர். (IMR – Infant Mortality Rate) என்பது ஒவ்வோர் ஆண்டும் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 1000 பேரில் எத்தனை பேர் உயிரிழக்க நேரிடுகிறது என்பதை கணக்கிடும் வழிமுறையாகும். இதன்மூலம் பிரசவ கால இறப்புகள் மற்றும் சிறார் உயிரிழப்பு எண்ணிக்கை ஆகியவை கண்காணிக்கப்படும். இந்திய … Read more

இந்திய ஒற்றுமை பயணம் : ராகுலுக்கு ஈடுகொடுத்த சித்தராமைய்யா…

தசரா காரணமாக இரண்டு நாள் ஓய்வுக்குப் பின் இந்திய ஒற்றுமை பயணம் கர்நாடகாவில் இன்று மீண்டும் துவங்கியது. கர்நாடக மாநில பாண்டவபுரா தாலுகாவில் உள்ள பெல்லாலே கிராமத்தில் இன்று காலை துவங்கிய நடைபயணம் மதியம் நன்மங்களா தாலுகாவில் உள்ள சவுடேனஹள்ளி கேட் அருகே நிறுத்தப்பட்டது. மாலை மீண்டும் துவங்கிய யாத்திரை இரவு ப்ரம்மதேவரஹள்ளி கிராமத்தில் நிறைவடைந்தது. இன்றைய யாத்திரையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டார். இன்று காலை நடைபெற்ற பாதயாத்திரையில் ராகுல் காந்தியுடன் … Read more

மருத்துவ படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக ரூ.64 லட்சம் மோசடி செய்த முருகன் என்பவர் சென்னையில் கைது

சென்னை: மருத்துவ படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக ரூ.64 லட்சம் மோசடி செய்த முருகன் என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். தேனீ மாவட்டம் காமையாகவுண்டன்பட்டியை சேர்ந்த முருகனை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.