கேரளாவில் அரசு பேருந்து – பள்ளி சுற்றுலா பேருந்து மோதி கோர விபத்து – 9 பேர் பலி

பாலக்காடு, கேரள மாநிலம், எர்ணாகுளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் ஊட்டிக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். இந்த சுற்றுலா பஸ்சில் 43 மாணவர்கள், 5 ஆசிரியர்கள் உள்ளிட்ட 51 பேர் இருந்துள்ளனர். இந்த நிலையில், பாலக்காடு-வடகஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற சுற்றுலா பஸ்சானது முன்னால் சென்று கொண்டிருந்த கேரள அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதனையடுத்து சுற்றுலா பஸ்சானது சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் சுற்றுலா பஸ்சில் இருந்த 5 … Read more

“சமூக சீர்திருத்தங்களுக்கு பெரியார் மட்டும் காரணமில்லை…” – சொல்கிறார் வானதி சீனிவாசன்

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு தமிழக அரசு அனுமதி மறுப்பு, பி.எஃப்.ஐ அமைப்புமீது மத்திய அரசின் தடை, தமிழகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு… என பா.ஜ.க-வைச் சுற்றிப் பரபரப்பு பற்றிக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில், அந்தக் கட்சியின் தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசனை அவரின் இல்லத்தில் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்… “திருமாவளவன், ஆ.ராசா சனாதனத்தைக் கொண்டு பெண்களைத் தவறாகப் பேசுகிறார்கள்’ என்று குற்றச்சாட்டு முன் வைக்கும் பா.ஜ.க-வினர், அண்ணாமலை பெரியார் சொன்னாதாக சொல்லி கூறியிருக்கும் … Read more

கர்நாடகாவில் ராகுல்காந்தியுடன் சோனியா காந்தியும் இணைந்து பாதயாத்திரை… வீடியோ…

சென்னை: இரண்டு நாள் தசரா விடுமுறைக்கு பிறகு, கர்நாடக மாநிலத்தில் இருந்து ராகுல்காந்தி மீண்டும் பாதயாத்திரையை தொடங்கினார். அவருடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியும் இணைந்து நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். நாட்டு மக்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தி, குமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்கள் பாரத் ஜோடா யாத்திரை மேற்கொள்ளும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தில்  செப்டம்பர் 7ந்தேதி மாலை தனது  யாத்திரையை தொடங்கினார். இந்த யாத்திரையானது,  12மாநிலங்கள் … Read more

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.38,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.4,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைத்து ரூ.66.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நீதிபதிகள் நியமனத்துக்கு எழுத்துமூலம் ஒப்புதல் கேட்பதா? – நீதிபதிகள் அதிருப்தி

புதுடெல்லி, ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகளையும், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளையும் நியமிப்பதில் ‘கொலிஜியம்’ என்ற அமைப்பு மத்திய அரசுக்கு சிபாரிசு செய்கிறது. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான கொலிஜியத்தில், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சந்திரசூட், எஸ்.கே.கவுல், எஸ்.ஏ.நாசர், கே.எம்.ஜோசப் ஆகிய 5 பேர் இடம்பெற்றுள்ளனர். சுப்ரீம் கோர்ட்டில் காலியாக உள்ள 4 இடங்களுக்கு நீதிபதிகளை நியமிப்பதற்கு 4 பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. மூத்த வக்கீல் கே.வி.விஸ்வநாதன், பஞ்சாப், அரியானா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரவிசங்கர் … Read more

காம்பியா: 66 குழந்தைகள் மரணம்; இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து காரணமா? – விசாரிக்கும் WHO

ஆப்ரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகளின் மரணத்துக்கு இந்திய நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தை குழந்தைகள் உட்கொண்டது காரணமாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவின் மைய்டன் பார்மாசூட்டிக்கல்ஸ் லிமிட்டெட் தயாரித்த நான்கு இருமல் மற்றும் சளிக்கான சிரப்களை ஆய்வு செய்துள்ள நிலையில், இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. மேலும், மேற்கு ஆப்ரிக்கா நாடுகளில் இந்த மருந்துகள் அதிகளவில் விநியோகம் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. WHO – டெட்ரோஸ் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸிடம் … Read more

இளவரசர் ஹரியை அடுத்து… கமிலாவுக்கு எதிராக திரும்பிய இளவரசர் வில்லியம்: எதிர்பார்க்காத திருப்பம்

டயானாவின் பிள்ளைகள் இருவரும் தங்கள் தந்தையின் இந்த முடிவுக்கு ஒப்புக்கொள்ளவில்லை தமது பிள்ளைகளுக்கு வளர்ப்பு பாட்டியாராக ஒருபோதும் கமிலாவை ஏற்க முடியாது என வில்லியம் ராணியார் மறைவுக்கு பின்னர் வேல்ஸ் இளவரசராக பொறுப்பேற்றுள்ள வில்லியம் ராணியாராக முடிசூட்டவிருக்கும் கமிலாவிடம் முன்னர் விவாதித்த விடயம் தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இளவரசி டயானா விபத்தில் கொல்லப்பட்ட பின்னர், மன்னர் சார்லஸ் தமது முன்னாள் காதலியான கமிலாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால், இந்த முடிவில் ராணியாருக்கு மறுப்பேதும் இல்லை என்றாலும், … Read more

இந்து மதம் ராஜராஜ சோழன் காலத்தில் கிடையாது : ‘தசாவதானி’ கமல்

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான பிறகு ராஜராஜ சோழன் குறித்த ஆய்வுகள் பொதுவெளியில் பரவலாக நடைபெற்று வருகிறது. திரைப்படங்கள் குறிப்பாக தமிழ் திரைப்படங்கள் வெளிவரும் சமயத்தில் அதுகுறித்த சர்ச்சையை ஏற்படுத்துவது சமீப ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன் “ராஜராஜ சோழன் இந்து அல்ல” என்று ஒற்றைவரியில் கூறிய கருத்து பலவிதங்களில் பேசுபொருளாகி இருக்கிறது. Proves @EPSTamilNadu is a sanghi so are his followers !! @OfficeOfOPS … Read more

மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் நிறைவு

சென்னை: மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. ரூ.5.4 கோடி செலவில் சிசிடிவி அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் கழுத்தை அறுத்து டி.ஜி.பி. படுகொலை: நண்பர் வீட்டு வேலைக்காரர் கைது

ஜம்மு, காஷ்மீர் சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்தவர் ஹேமந்த்குமார் லோகியா. இவர், ஜம்மு புறநகர் பகுதியில் உள்ள தனது நண்பர் ஒருவர் வீட்டில் சில நாட்களாக தங்கியிருந்தார். கடந்த திங்கட்கிழமையன்று இரவு உணவு உண்டபின் லோகியா படுக்கை அறைக்குச் சென்றார். அப்போது அந்த அறைக்குள் நுழைந்த வீட்டு வேலைக்காரர், ஒரு கூர்மையான ஆயுதத்தால் டி.ஜி.பி.யை கழுத்தை அறுத்து படுகொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தேடிவந்த போலீசார், வயல்வெளியில் பதுங்கியிருந்த யாசிர் லோகர் என்ற … Read more