காசோலை மோசடி வழக்கில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியின் மருமகனுக்கு 6 மாதம் சிறை தண்டனை: சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு

சென்னை: காசோலை மோசடி வழக்கில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியின் மருமகனுக்கு 6 மாதம்  சிறை தண்டனை அளித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2016ல் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.எல். லட்சுமணனின் மருமகன் ஏ.எஸ்.குமார் ரூ.1.20 கோடி பெற்றுள்ளார். கடன் தொகை ஒரு கோடி 20 லட்சம் ரூபாயை இரண்டு மாதங்களில் திருப்பி செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஏ.எல்.குமாருக்கு எதிராக காசோலை மோசடி நிரூபிக்கப்பட்டதை அடுத்து 6 மாத சிறை தண்டனை விதித்து நீதிபதி … Read more

முப்படை தளபதி அனில் சவுஹானுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு| Dinamalar

புதுடில்லி முப்படைகளின் தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுஹானுக்கு இசட் பிளஸ்ட் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முப்படைகளுக்கும் தலைமை வகிக்கும் உயரிய பொறுப்பான முப்படைகளின் தலைமை ஜெனரல் பிபின் ராவத் நீலகிரி மாவட்டம் அருகே கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், ஜெனரல் பிபின் ராவத் உயிரிழந்தார். காலியாக இருந்த அப்பதவிக்கு லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுஹானை நியமிப்பதாக மத்திய அரசு செப்.29-ல் அறிவித்தது. செப்.30 ம் தேதி பொறுப்பேற்றார்.இந்நிலையில் முப்படை … Read more

ஐதராபாத் கூட்டு பாலியல் வன்முறை; கைதான 5 சிறார்களில் 4 பேரை பெரியவர்களாக கருதி விசாரிக்க உத்தரவு!

ஐதராபாத்தில் கடந்த மே மாதம் நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் கைதாகியிருந்த ஆறு பேரில் ஐந்து பேர் 18 வயது நிரம்பாதவர்களாக இருந்தனர். இந்த ஐந்து பேரில் நான்கு பேரை, பெரியவர்களாகக் கருத்தில் கொண்டு விசாரணையை தொடரலாம் என ஐதராபாத் சிறார் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இது சாத்தியமானது எப்படி? சிறார் நீதிச்சட்டம் 2015-ம் திருத்தச் சட்டத்தின்படி, 16 வயதை தாண்டிய சிறுவர்கள் எவரேனும் கொடூரமான குற்றத்தை செய்திருந்தால், அவர்களை பெரியவர்களாக கருத்தில் … Read more

திருப்பதி ஏழுமலையானுக்கு 427பெருமாள் திருமுகங்களுடன் 192மணி நேரத்தில் பட்டு சேலையை நெசவுசெய்து அசத்திய காஞ்சிபுரம் தம்பதி….

சென்னை: திருப்பதியில் பிரம்மோற்சவ விழா களைகட்டியுள்ள நிலையில், பிரமோற்வத்திற்காக 427 பெருமாளின் திருமுகங்களுடன் கூடிய பட்டு சேலையை காஞ்சிபுரத்தை சேர்ந்த குமரவேலு – கலையரசி தம்பதியினர் தயாரித்து அசத்தி உள்ளனர்.  சென்னையை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் கேட்டதற்கிணங்க, இந்த பட்டுச்சேலையை சுமார்  192 மணி நேரத்தில்  நெசவு செய்து சாதனை படைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் 27ந்தேதி  தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் … Read more

கோவை செவிலியர் கொலை வழக்கில் கணவர் கைது

கோவை: தனியார் மருத்துவமனை வளாகத்துக்குள் செவிலியர் மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் செவிலியர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சி.ஆர்.பி.எப். இயக்குனர் ஜெனரல் பொறுப்பேற்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: சி.ஆர்.பி.எப்.போலீஸ் படை இயக்குனர் ஜெனரலாக சுஜோய் லால் தாவோசென் இன்று பொறுப்பேற்றார்.நாட்டின் மிகப்பெரிய போலீஸ் படையான சி.ஆர்.பி.எப். எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் இயக்குனர் ஜெனரலாக இருந்த குல்தீப் பதவி காலம் செப்.30-ல் நிறைவடைந்தது. இதையடுத்து சி.ஆர்.பி.எப். போலீஸ்படையின் 37-வது டைரக்டர் ஜெனரலாக சுஜோய் லால் தாவோசென் நியமிக்கப்பட்டார். சுஜோலால் தாவோசென் நியமனத்திற்கு மத்திய அமைச்சரவையில் நியமன குழு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து இன்று (அக்.03) இன்று … Read more

“ஒரு நிமிடம் ஓய்வு கிடைத்தாலும் தலை சாய நினைப்பது மல்லாங்கிணறில்தான்!" – தமிழச்சி தங்கபாண்டியன்

மதுரை புத்தகத்திருவிழாவின் 9-ஆம் நாளில் நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான தமிழச்சி தங்கபாண்டியனின் ’மண்வாசம்’, ’சொட்டாங்கல்’, ’மயிலிறகு மனசு’ ஆகிய மூன்று நூல்களின் மறுபதிப்பு வெளியீட்டு விழா மண் வாசத்தோடு நடைபெற்றது. விழாவில் மல்லாங்கிணறு சுமதி தமிழச்சியானது இப்படித்தான்!- பர்வீன் சுல்தானா நேர்காணலில் தமிழச்சி தங்கபாண்டியன் கவிஞர் மனுஷ்யபுத்திரன், வண்ணதாசன், கலாப்ரியா, ச.தமிழ்ச்செல்வன், பாரதி கிருஷ்ணகுமார், சு.வெங்கடேசன் எம்.பி, அ.முத்துக்கிருஷ்ணன், பர்வீன் சுல்தானா, சுகா ஆகியோர் கலந்துள்ள, கலகலவென்று நடந்தது நூல் வெளியீட்டு விழா. மூன்று நூல்களையும் சு.வெங்கடேசன் … Read more

டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து இருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகல்: பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மும்பை: ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2022ல் இருந்து காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா விலகியுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. அவருக்கு பதிலாக விளையாடவுள்ள வீரரை விரைவில் அறிவிப்போம் என பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.

200 ரயில்வே ஸ்டேஷன்களை நவீனமயமாக்க திட்டம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அவுரங்காபாத் :நாடு முழுதும், 200 ரயில்வே ஸ்டேஷன்கள் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் நவீனமயமாக்கும் பணிகள் துவங்கியுள்ளதாக, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார்.மஹாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாதில் புதிதாக அமைக்கப்பட்ட ரயில் பெட்டிகள் பராமரிப்பு தொழிற்சாலையை திறந்து வைத்து, ரயில்வே அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:இந்திய ரயில்வே துறையை நவீன தொழில்நுட்ப வசதிக்கு ஏற்ப மாற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாடு முழுதும், 200க்கும் மேற்பட்ட … Read more

“நித்தியானந்தா என நினைத்து எனது ஆசிரமத்தை இடித்துவிட்டனர்!" – பல்லடம் சாமியார் போலீஸில் புகார்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் காவல் நிலையத்துக்கு திங்கள்கிழமை மாலை, காரில் வந்தவரைப் பார்த்து போலீஸ் மட்டுமின்றி அங்கிருந்த பொதுமக்களுக்கும் வியப்பு கலந்த ஆச்சர்யம் ஏற்பட்டது. காரணம் வந்தவரின் நடை, உடை, பாவனை அச்சு அசலாக நித்தியானந்தாவைப் போல் இருந்ததுதான் கோவை செல்வபுரத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரானந்தா. இவர் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆன்மிகப் பணி மேற்கொண்டு வருகிறார். காவல் நிலையம் பல்லடத்தில் தனது ஆன்மிகப் பணியை விரிவுபடுத்த ஏதுவாக காரணம்பேட்டை அருகே செல்வகுமார் என்பவருக்குச் … Read more