முதுநிலை கல்வியியல் படிப்புக்கு அக்.6 முதல் அக்.12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: கல்லூரி கல்வி இயக்ககம் தகவல்

சென்னை: முதுநிலை கல்வியியல் படிப்புக்கு அக்.6 முதல் அக்.12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் அக்டோபர் 15-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதுநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு அக்டோபர் 18-ம் தேதி முதல் தொடங்கும் என கல்லூரி கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.

`நல்ல காரியங்களை தசமியில் தொடங்குங்கள்… வெற்றி நிச்சயம்!’ – விஜயதசமி அபூர்வ தகவல் தொகுப்பு!

விஜய தசமித் திருநாள் (5.10.22) நமக்குக் காரிய வெற்றியை அருளும் திருநாள் விஜயதசமி. இந்த நாளில் எந்தவொரு புதிய முயற்சிகளைத் தொடங்கினாலும் வெற்றி நிச்சயம் என்பது நம்பிக்கை. இந்தத் தினத்தில் என்னென்ன காரியங்களைத் தொடங்கலாம், விஜய தசமியின் மகிமைகள் என்னென்ன விரிவான விளக்கங்கள் உங்களுக்காக! புதிய தொழில்கள் தொடங்குவது, பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்க, இசை, பாட்டு, நடனம் போன்ற கலைகளைக் கற்கத் தொடங்கவும் உகந்த நாள் இந்தத் தினம். இந்த நாளில் அவரவர் தங்களின் குரு மற்றும் … Read more

போலி மருந்துகளை கண்டறிய மருந்து அட்டைகளில் கியூஆர் கோடு அறிமுகம்!

டெல்லி: மருந்துகள் போலியானதா என்பதை கண்டறியும் வகையில் மருந்து அட்டைகளின் மீது QR Code பதிவிடும் முறை அறிமுகமாக உள்ளது. முதற்கட்டமாக, 300 மருந்து நிறுவனங்களின் முக்கிய மருந்துகளில் இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. நமது நாட்டில் ‘போலி’களுக்கு எப்போதுமே பஞ்சமில்லை. போலி செய்தியாகட்டும், போலி நோட்டு (கள்ள நோட்டு) களாகட்டும் நாடு முழுவதும் பரவலாக காணப்படுகிறது. அதுபோல உயிர்காக்கும் மருந்துகளிலும் போலிகள் நடமாடுகிறது. மேலும் ஆன்லைன் மருந்தகமும் அதிகரித்து வருகின்றன.  இதன் காரணமாக போலியான மருந்துகளால் … Read more

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதருக்கு 13 வயது சிறுமியை திருமணம் செய்து வைத்ததாக புகாரில் 2 பேர் கைது: 4 பேர் மீது வழக்குப்பதிவு

சிதம்பரம்: கடந்த 2021ல் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதருக்கு 13 வயது சிறுமியை திருமணம் செய்து வைத்ததாக புகாரில் சிறுமியின் தாய் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமணம் குறித்து கடலூர் ஊர்நல அலுவலர் சித்ரா அளித்த புகாரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் .

செய்தி வாசிப்பாளர் ரத்னா வீடு முழுக்க வித்தியாச கொலு | News Reader Rathna's house golu 2022 |

செய்திவாசிப்பாளர் ரத்னா தன் வீட்டில் பிரமாண்ட கொலு வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். தற்போது தன் புது வீட்டிலும் பாரம்பர்ய கொலு, தீம் கொலு என்று அதிக சிரத்தையோடு வீடுமுழுக்க கொலு வைத்திருக்கிறார். இந்த கொலுவைப் பொதுமக்கள் அனைவருமே பார்வையிடலாம். வாருங்கள் நாமும் அந்த அழகிய கொலுவை தரிசிப்போம். Source link

நாளை விஜயதசமி – பூஜை நேரம் மற்றும் ஏடு படிக்கும் நேரம் விவரம்…

சென்னை: நவராத்திரி பண்டிகையின் இறுதிநாளான  விஜயதசமி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. நாளைய தினம்,  பூஜை நேரம், ஏடு படிக்கும் நேரம் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. நமது உள்ளங்கையில் முப்பெருந்தேவியர் வாசம் செய்கின்றனர். விரல் நுனியில் செல்வம் தரும் லட்சுமியும், கையின் நடுப்பகுதியில் கல்வியைத் தரும் சரஸ்வதியும், அடிப்பகுதியில் வீரத்தைத் தரும் பார்வதியும் வாசம் செய்கின்றனர். எனவேதான் நம் முன்னோர்கள், காலையில் எழுந்ததும் நமது உள்ளங்கைகளைப் பார்க்க வேண்டும் எனச் சொல்கின்றனர். இந்த மூன்று தேவிகளையும் வழிபடும் … Read more

உங்களுடனான அந்த ஒரு நிமிட உரையாடலை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது: நடிகர் ரஜினிக்கு நடிகர் ஜெயம்ரவி டிவிட்

சென்னை: உங்களுடனான அந்த ஒரு நிமிட உரையாடலை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது என நடிகர் ஜெயம்ரவி நடிகர் ரஜினியிடம் கூறியுள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தையும், எனது நடிப்பையும் விரும்பினீர்கள் என்பதை அறிந்து நான் மிகவும் என மகிழ்ச்சியடைந்தேன் உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி ரஜினி சார் என தனது த்விட்டேர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

"எனது ராணி!" – நெகிழ்ந்த ரன்வீர் சிங்; தீபிகா படுகோனுடனான விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

நடிகர் ரன்வீர் சிங் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில நாள்களாக அவர்கள் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாகச் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகவும், இருவரும் பிரியப்போவதாகவும் சமூக வலைத்தளத்தில் செய்தி பரவியது. இது குறித்து ரன்வீர் சிங் ஏற்கெனவே மறுப்பு தெரிவித்திருந்தார். ஆனாலும் இந்த வதந்திகள் அடங்குவதாக இல்லை. இருவரும் இச்செய்தியை சமூக வலைதளங்கள் மூலம் மறுத்து இருந்தனர். இந்நிலையில் தீபிகா படுகோன் பிரபல … Read more

2023ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிப்பு…

2023ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3  விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, அமெரிக்காவின் ஜான் கிளாசர், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அலியான் அஸ்பெக்ட், ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த அன்டன் ஷிலிங்கர் ஆகியோருக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும், மருத்துவம் , இயற்பியல், வேதியல், பொருளாதாரம் , அமைதி , இலக்கியம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் ஆராய்சியாளர்கள், வல்லுநர்களுக்கு நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி அறிவிக்கப்படும் நோபல் பரிசுகளில்,  அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், மற்ற … Read more

எந்தவொரு அமைதி முயற்சிகளிலும் பங்களிக்க இந்தியா தயார்: உக்ரைனின் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

டெல்லி: எந்தவொரு அமைதி முயற்சிகளிலும் பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது என உக்ரைனின் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் கூறியுள்ளார். ரஷ்ய படைகளுடன் போராடி வரும் கிழக்கு ஐரோப்பிய நாட்டில் அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.