பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் நலம் விசாரிப்பு| Dinamalar

புதுடில்லி: உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ், 82, உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி: முலாயம் சிங்கின் உடல்நிலை குறித்து அவரது மகன் அகிலேஷிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். மேலும் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான உதவிகளை செய்யவும், தயாராக உள்ளதாக கூறியுள்ளார். யோகி ஆதித்யநாத்: உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் அகிலேஷிடம் பேசி, மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களை அழைத்து, முலாயம் சிங்கிற்க்கு சிறந்த சிகிச்சை … Read more

Mad Company விமர்சனம்: பிரிந்த உறவுகளுக்கான நாடகம் – வெப் சீரிஸ் களத்தில் ஜெயித்தாரா பிரசன்னா?

’உங்க வாழ்க்கையில தவறவிட்ட ஏதோ ஒரு உறவுக்காக இன்னமும் ஏங்கிக்கிட்டிருக்கீங்களா? அதே உறவாக வந்து நடிக்கிறதுக்கு நாங்க இருக்கோம்’ என்கிற சைக்கலாஜிக்கல் கதைக்களம்தான் பிரசன்னா, கனிகா, எஸ்.பி.பி சரண், தன்யா பாலகிருஷ்ணா உள்ளிட்டோர் நடிப்பில் ஆஹா ஓ.டி.டியில்  வெளியாகியிருக்கும் ’Mad Company’ வெப் சீரிஸின் ஒன்லைன். பிரபல நடிகர் ஏ.கே-வாக வரும் பிரசன்னாவுக்கும் ஊடகவியலாளராக வரும் எஸ்.பி.பி சரணுக்கும் ஒரு மோதல் வெடிக்கிறது. இதனால், செய்தி சேனலிலிருந்து நீக்கப்படும் சரண், தனியாக சேனல் தொடங்கிவிடுகிறார். படத்தில் நடிப்பதற்கு ரெட் … Read more

கனடாவில் உதவிக்காக அரசு அலுவலகத்தை தொலைபேசியில் அழைத்த பெண்: கிடைத்த அதிர்ச்சியளிக்கும் பதில்…

கனேடிய பெண் ஒருவர் காப்பீடு தொடர்பான உதவி ஒன்றிற்காக அரசு அலுவலகம் ஒன்றை அழைத்துள்ளார். அவர் 2019ஆம் ஆண்டே இறந்துபோனதாக ஆவணங்களில் பதிவாகியுள்ளதாக அந்த அரசு அலுவலர் தெரிவித்துள்ளார். Saskatchewanஇல் வாழும் Coreen Shatz, காப்பீடு தொடர்பான உதவி ஒன்றிற்காக அரசு அலுவலகம் ஒன்றை அழைத்துள்ளார். மறுமுனையில் அவருக்கு பதிலளித்தவர் கூறிய விடயத்தால் அதிர்ச்சியில் உறைந்துபோனார் அவர். ஆம், அரசு ஆவணங்களின்படி, 2019ஆம் ஆண்டு, ஜூலை மாதமே Coreen இறந்துபோனதாக பதிவாகியுள்ளதாக அந்த அரசு அலுவலர் தெரிவித்துள்ளார். … Read more

இல.கணேசன் 2 நாட்களில் வீடு திரும்புவார்: மருத்துவமனை நிர்வாகம்

சென்னை: சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இல.கணேசன் 2 நாட்களில் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இல.கணேசனின் உடல்நிலை சீராக உள்ளதால் அவர் 2 நாட்களில் வீடு திரும்புவார் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.  

ஹரியானா கட்டட விபத்து: ஒருவர் பலி| Dinamalar

குருக்ராம்: ஹரியானா குருகிராம் பகுதியில் பழைய 3 மாடி கட்டம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒருவரை மீட்கும் பணியி ல் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். குருக்ராம்: ஹரியானா குருகிராம் பகுதியில் பழைய 3 மாடி கட்டம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒருவரை ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…! சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான … Read more

மும்பை: தாண்டியா நடனத்தின்போது மாரடைப்பால் இறந்த மகன்; தகவலறிந்து பிரிந்த தந்தையின் உயிர்!

நவராத்திரியையொட்டி வடமாநிலங்களில் தாண்டியா நடனம் மிகவும் பிரபலமாக நடந்து வருகிறது. இரவில் தொடங்கி நள்ளிரவு வரை இந்த நடனம் நடைபெறும். மும்பையில் நடைபெறும் தாண்டியா நடன நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துகொள்வது வழக்கமாகும். விழா இறுதிக்கட்டத்தை எட்டி இருப்பதால் தாண்டியா நடன நிகழ்ச்சிகள் மும்பையில் இரவு நேரங்களில் மிகவும் உற்சாகமாக நடந்து வருகின்றன. இதனைக் காண கட்டணமும் வசூலிக்கப்படுவதுண்டு. மும்பை அருகில் உள்ள விரார் குளோபல் சிட்டியில் தாண்டியா நடனத்திற்கு அந்தப் பகுதி மக்கள் சார்பாக ஏற்பாடு … Read more

புதுச்சேரியில் மின் ஊழியர்களின் போராட்டம் வாபஸ்

புதுச்சேரி: புதுச்சேரியில் மின் ஊழியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. முதலமைச்சர் ரங்கசாமி, மின் துறை அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 6 நாட்களாக தீவிரமாக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது.

மனைவியை சுமந்துகொண்டு திருமலை படியில் ஏறிய பாகுபலி கணவன்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் திருப்பதி: மனைவியின் சவாலை ஏற்று திருமலை திருப்பதி மலை படிக்கட்டுகளில் மனைவியை தோள் மீது சுமந்துக்கொண்டு கணவர் படியேறிய நிகழ்வு வைரலாகியுள்ளது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கடியப்புலங்காவை சேர்ந்தவர் வெங்கட சத்யநாராயணா. அவருடைய மனைவி லாவண்யா. இவர்கள் திருமலை திருப்பதிக்கு நடைபயணமாக நேர்த்திக்கடன் செலுத்த சென்றுள்ளனர். மலை படிக்கட்டுகளில் கணவர் சத்யநாராயணா வேகமாக படியேறுவதை கவனித்த லாவண்யா, முடிந்தால் என்னை தூக்கி தோள் மீது வைத்துக்கொண்டு … Read more

புழுன்னா என்ன… பூச்சின்னா என்ன? அஞ்சிய குழந்தைகளுக்கு ஆர்வம் தூண்டிய முகாம்!

தட்டாண்களையும், பட்டாம் பூச்சிகளையும் ஓடி ஓடி பிடித்து விளையாடிய காலம், ரயிலு பூச்சி, பொன்வண்டுகளை பார்த்து ரசித்த காலம் 90ஸ் கிட்ஸூடன் முடித்துவிட்டது போல… ஓடி ஆடி விளையாட வேண்டிய இன்றைய குழந்தைகள் எப்போதும் செல்போனில் மூழ்கி கிடக்கின்றன. தாய்மார்கள் நிலா காட்டி சோறு ஊட்டிய காலம் போய் தற்போது செல்போனில் வீடியோ காட்டி சோறு ஊட்டும் காலத்தில் உள்ளோம். இதனால் என்னவோ நம்மை சுற்றி என்ன இருக்கிறது என்பதைக் கூட குழந்தைகள் கவனிக்காமலும், தெரிந்துகொள்ளாமலும் உள்ளனர். குறிப்பாக  பூச்சிகள் … Read more

MBBS, BDS சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

சென்னை: MBBS, BDS சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசத்தை நீட்டித்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. இன்றுடன் அவகாசம் முடிவடையவிருந்த நிலையில் வரும் 6ம் தேதி மாலை மாலை 5 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.