தலைப்பு செய்திகள்
கமிலா தனது முதல் கணவரை விவாகரத்து செய்ய காரணம் என்ன? மன்னர் சார்லஸை மணப்பதற்கு முன் நடந்த விஷயம்
கமிலா தனது முதல் கணவரை விவாகரத்து செய்ததற்கான காரணம். விவாகரத்து நடவடிக்கையின் போது கூறப்பட்டிருந்த தகவல்கள் கமிலா தனது முதல் கணவர் ஆண்ட்ரூ பார்க்கர் பவுல்ஸை விவாகரத்து செய்ததற்கான உண்மை காரணம் தெரியவந்துள்ளது. கமிலாவுக்கும், ஆண்ட்ருவுக்கும் கடந்த 1973ல் திருமணம் நடைபெற்ற நிலையில் 1995ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதன்பின்னர் கமிலா, சார்லஸை கடந்த 2005ல் திருமணம் செய்து கொண்டார். என்ன தான் தாமதமாக சார்லஸ் – கமிலா திருமணம் … Read more
திமுக தலைவர் பதவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனுத் தாக்கல்
சென்னை: திமுக தலைவர் பதவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனுத் தாக்கல் செய்தார். திமுகவில் 15வது உட்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. இதன்படி பேரூராட்சி, நகராட்சி பதவிக்கான நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் தேர்வு நிறைவடைந்தது. தொடர்ந்து உயர் நிலையில் உள்ள தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், தணிக்கை குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கான தேர்தல் வரும் 9ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்து இருந்தது. புதிய நிர்வாகிகள் பங்கேற்கும் பொதுக்குழு கூட்டம் வரும் 9-ம் … Read more
தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு இல்லை: அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி
சென்னை: தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு இல்லை என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு என்ற மாயத் தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்ய வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
மதம் மாறிய தலித்துகளுக்கு சலுகைகள் வழங்குவது குறித்து ஆய்வு செய்ய கமிஷன் – மத்திய அரசு அமைத்தது
புதுடெல்லி, நமது நாட்டின் அரசியல் சாசனம் (பட்டியல் சாதிகள்) ஆணை- 1950, இந்து, சீக்கிய, பவுத்த மதத்தை தவிர்த்து பிற மதங்களை சேர்ந்த ஒருவரும் எஸ்.சி. வகுப்பினராக கருதப்பட முடியாது என்று கூறுகிறது. ஆனால், இஸ்லாமிய, கிறிஸ்தவ குழுக்கள் தங்கள் மதங்களுக்கு மாறியுள்ள தலித்துகளுக்கு எஸ்.சி. வகுப்பினருக்குரிய அந்தஸ்து, சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று கோரி வருகின்றன. ஆனால் இந்த கோரிக்கையை பா.ஜ.க. எதிர்க்கிறது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், … Read more
நெற்றி, கன்னம், மூக்கு: முகப்பருக்கள் எங்கு வந்தால் என்ன உடல்நல பிரச்னை? #FaceMapping
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அந்த முகத்தின் அழகை பருக்கள் பாதிக்கலாம். குறிப்பாக, முகப்பரு வந்தாலே முகத்தை சுளித்துக் கொண்டு கவலையில் ஆழ்ந்துவிடுகின்றனர் பல டீன் ஏஜ் பெண்கள். ஆனால், நம் உடலின் உள்ளுறுப்புகளின் இயக்கம் எப்படி இருக்கிறது என்பதை அறிவிக்கும் காரணிகளாகவும் சில நேரங்களில் முகப்பருக்கள் உள்ளன. மருந்துகளை எடுத்துக்கொள்வதாலோ, வெறும் க்ரீம்களாலேயோ மட்டுமே பருக்களை நிரந்தரமாகப் போக்கிவிட முடியாது. அதற்கான காரணத்தை அறிந்து, தகுந்த வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் முகப்பரு வருவதைத் தவிர்க்கலாம். நமது … Read more
வெள்ள தடுப்பு பணிகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு
சென்னை: வெள்ள தடுப்பு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்ய உள்ளார். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தற்போதைய கணினி மாதிரியின் அடிப்படையில் இம்மாதம் 4-வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும், இயல்பை ஒட்டியே மழை பெய்வதற்கான சூழல் உள்ளதாக சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு துரிதப்படுத்தியுள்ளது. வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால், வெள்ள தடுப்பு … Read more
மகாராஷ்ராவில் பஸ்சில் தீப்பிடித்து 10 பேர் பலி| Dinamalar
நாசிக்: மகாராஷ்ரா மாநிலம் நாசிக் அருகே பஸ் கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் பஸ் தீ பற்றியது. இதில் சிக்கி 10 பே ர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாசிக்: மகாராஷ்ரா மாநிலம் நாசிக் அருகே பஸ் கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் பஸ் தீ பற்றியது. இதில் சிக்கி 10 பே ர் உடல் கருகி உயிரிழந்தனர்.nsmimg1007593nsmimgமேலும் தீ … Read more
ஒன் பை டூ
சி.வி.எம்.பி.எழிலரசன், சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க “யார் எதைச் சொல்வது என்று விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. செல்லூர் ராஜூ ஓர் உலகறிந்த விஞ்ஞானி, மதுரையின் மாபெரும் பொழுதுபோக்கு. அவர் இப்படி வாய்க்கு வந்த எதையாவது உளறிக்கொண்டுதான் இருப்பார். தி.மு.க அமைச்சர்கள் செய்தியாளர்களைச் சந்திப்பது, நிகழ்ச்சிகளில் பேசுவதெல்லாம் கலைஞர் காலத்திலிருந்து தொடரும் வழக்கம். ஆனால், அ.தி.மு.க-வில் அப்படி இல்லாமல், ஜெயலலிதா அம்மையாருக்கு அமைச்சர்களெல்லாம் அடிமைப்பட்டு இருந்தார்கள் என்றுதான் நினைத்தோம். ஆனால், அவரின் மறைவுக்குப் பிறகுதான் ஜெயலலிதா ஏன் யாரையும் பேச … Read more
சென்னையில், போதை விழிப்புணர்வு மாரத்தான்
சென்னை: சென்னையில், போதை விழிப்புணர்வு மாரத்தான் நடத்தப்பட்டது. சென்னை பெருநகர காவல்துறை மற்றும் சென்னை மருத்துவக்கல்லூரி இணைந்து நடத்தும் 5 கி.மீ போதை விழிப்புணர்வு மாரத்தான் நடத்தப்பட்டது. இந்த மாரத்தான் ஓட்டத்தை சென்னை, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் மாரத்தானை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.