தீக்குளித்து இறந்தவர் பழங்குடியினர் இல்லை! நீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல்…

சென்னை: நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து இறந்தவர் பழங்குடியினர் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழகஅரசு தெரிவித்து உள்ளது. பல ஆண்டுகளாக மகனுக்கு சாதிச்சான்றிதழ் கேட்டு வந்த வேல்முருகன் என்பவர், அது கிடைக்காததால், உயர்நீதிமன்ற வளாகத்தில் திடீரென பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொண்டார்.  மகனுக்கு பழங்குடியினர் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தும் அதை வழங்காமல் தங்களை அலைக்கழித்ததாக குற்றம் சாட்டி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையம் அருகே காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை சேர்ந்த … Read more

சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் எம்.பி. ரவீந்திரநாத்தை விசாரிக்க மக்களவை சபாநாயகருக்கு வனத்துறையினர் கடிதம்

சென்னை: சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் எம்.பி. ரவீந்திரநாத்தை விசாரிக்க மக்களவை சபாநாயகருக்கு வனத்துறையினர் கடிதம் எழுதியுள்ளனர். விசாரனைக்கு பின் ரவீந்திரநாத் மீது வழக்குப்பதிவு செய்யவும் வனத்துறை திட்டம் தெரிவித்துள்ளது. ரவீந்திரநாத்திற்கு சொந்தமான தோட்டத்தின் மின் வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்ததாக ஏற்கனவே மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டில்லியில் 25 இடங்களில் அமலாக்க துறை ரெய்டு| Dinamalar

புதுடில்லி: மது விற்பனை முறைகேடு நடந்திருப்பதாக எழுந்துள்ள புகாரின் பேரில் இன்று டில்லியில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் டில்லி மற்றும் பஞ்சாபில் இந்த ரெய்டு நடந்தது. தற்போது கூடுதல் ஆவணங்களை சேகரிக்க இந்த ரெய்டு நடப்பதாக தெரிகிறது. கெஜ்ரிவாலின் தலைமையிலான ஆம்ஆத்மி ஆட்சியில் மதுபானம் விற்பனை மற்றும் லைசென்ஸ் புதுப்பித்தில் தொடர்பாக புதிய கொள்கை உருவாக்கப்பட்டது. இதில் பலர் ஆதாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. புதுடில்லி: மது … Read more

University of Madras: ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்துடன் இணைந்து புதிய இளங்கலை பட்டம் அறிமுகம்!

இளங்கலை முதல் முனைவர் பட்டம் வரை பல்வேறு பட்டப்படிப்புகளை வழங்கிவரும் மெட்ராஸ் பல்கலைக்கழகம் கடந்த திங்கட்கிழமை இளங்கலை படிப்பிற்கான புதியதொரு துறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பட்டத்தைப் பெரும் மாணவர்களுக்கு மெல்போர்னில் இயங்கும் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் சான்றளிதல் வழங்கப்படும். அதை பெறுவதற்கு அப்பல்கலைக்கழகம் நடத்தும் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறுதல் அவசியம். இப்படிப்பின் முதல் நான்கு செமஸ்டர்களில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் மற்றும் நடைமுறை படிப்புகளை மாணவர்கள் படிப்பார்கள்‌. இறுதி இரண்டு செமஸ்டர்களில் இயற்பியல், வேதியியல் அல்லது … Read more

தாயை கொன்றுவிட்டு பாட்டுக்கேட்டபடி புகைபிடித்த 14 வயது சிறுவன்! விசாரணையின்போது சிரித்துக்கொண்டே பதிலளித்ததால் அதிர்ச்சி

கஞ்சா போதைக்கு அடிமையான சிறுவன் கண்டித்த தாயை கொலை செய்த கொடூரம் கொலை செய்துவிட்டு சாதித்தது போல் புகைபிடித்தபடி நடந்து சென்ற 14 வயது சிறுவன் தமிழக மாவட்டம் ஈரோட்டில் பெற்ற தாயை கல்லைப் போட்டு கொன்ற சிறுவன் போதைக்கு அடிமையானதாக தெரிய வந்துள்ளது. ஈரோடு மாவட்டம் சுங்கக்காரன் பாளையத்தைச் சேர்ந்த யுவராணி என்ற பெண், அவரது 14 வயது மகன் சஞ்சயால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சரிவர படிக்காததால் விடுதியில் சேர்க்கப்பட்ட சிறுவன் … Read more

இமாச்சல பிரதேசத்தில் நவம்பர் 12ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல்! தேர்தல் தேதியை அறிவித்தார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர்…

டெல்லி: குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்கள் சட்டமன்ற ஆயுட்காலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில், அடுத்த சட்டமன்ற தேர்தல் தேதிகளை  இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் வெளியிட்டுள்ளார். 68 தொகுதிகளை கொண்ட இமாசல பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள சட்டசபையின் ஆயுட்காலம் முடிவடையதையொட்டி, புதிய சட்டசபையை அமைப்பதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இமாச்சல் பிரதேச சட்டமன்ற தேர்தல்  ஒரே கட்டமாக நடைபெறுகிறது.  நவம்பர் 12ந்தேதி  வாக்குப்பதிவு  … Read more

ஓசூர் அருகே உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மூச்சுத்திணறல்

ஓசூர்: ஓசூர் அருகே உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷவாயு கசிவு ஏற்பட்டதால் மாணவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை – மைசூரு வந்தே பாரத் ரயில்: நவ.,10 முதல் இயக்கம்

புதுடில்லி: நாட்டின் 5வது வந்தே பாரத் ரயில் சென்னையில் இருந்து நவ.,10ம் தேதி துவங்கி வைக்கப்படுகிறது. பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் திட்டம் நாட்டின் 75 நகரங்களை இணைக்கும் வகையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 15ல் பிரதமர் மோடி வெளியிட்டார். அதன்படி, புதுடில்லி – வாரணாசி மற்றும் புதுடில்லி – ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா, காந்திநகர் – மும்பை, உனா – டில்லி … Read more

திமுக அரசுக்கு தமிழ்நாடு மீனவர்கள் அவசரக் கோரிக்கை – தவறும் பட்சத்தில் தொடர் போராட்டம்?!

மத்திய, மாநில அரசுகள் மீனவர்களின் வாழ்வுரிமையை பறிக்கும் வகையில் பல்வேறு சட்ட திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தமிழ்நாடு மீனவர்கள் குற்றச்சாட்டு சாட்டியிருக்கின்றனர். குறிப்பாக, தமிழ்நாடு அரசு கடலில் காற்றாலை அமைப்பது போன்ற, மீனவர்களுக்கு எதிரானத் திட்டங்களை கொண்டுவருவதாகவும், அவற்றை மறுபரிசீலனை செய்யவேண்டும் என கோரிக்கை வைத்திருக்கின்றனர். மேலும், கோரிக்கையை நிறைவேற்றத் தவறும்பட்சத்தில் போராட்டத்தை முன்னெடுப்போம் என தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பினர் அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். மீனவர்கள் `சுருக்குமடி வலைக்கு அனுமதி கேட்டு மீனவர்கள் போராட்டம்’ – என்ன … Read more

மருந்து தட்டுப்பாடு இருப்பது உண்மைதான்! நேற்றுவரை மறுத்த அமைச்சர் இன்று பல்டி…

சென்னை: சில இடங்களில் மருந்து தட்டுப்பாடு இருப்பது உண்மைதான் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் உண்மையை ஒத்துக்கொண்டார். மருந்து தட்டுப்பாடு என பொதுமக்களும், எதிர்க்கட்சிகளும் கூறி வந்த நிலையில், அதை  நேற்றுவரை மறுத்து வந்த அமைச்சர் இன்று மருந்து தட்டுப்பாடு உள்ளது என உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். சென்னை எழும்பூர் குடும்பநல பயிற்சி மைய வளாகத்தில் திருநங்கைகளின் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  … Read more