பேரிஜம் ஏரியை காண சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

திண்டுக்கல்: கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் ஏரி வனப்பகுதிக்குள் யானைகள் நடமாட்டம் உள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. யானைகள் நடமாட்டத்தால் பேரிஜம் ஏரியை காண சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முலாயம் சிங் யாதவின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார் பிரதமர் மோடி!

புதுடெல்லி, சமாஜ்வாதி கட்சி நிறுவனரும் உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியான முலாயம் சிங் யாதவின்(82) உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் முலாயம் சிங் சிகிச்சை பெற்று வந்தார். இச்சூழ்நிலையில் நேற்று அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில், சமாஜ்வாடி கட்சித் தலைவரும் முலாயம் சிங் யாதவின் மகனுமான அகிலேஷ் யாதவிடம் பேசிய பிரதமர் மோடி, முலாயம் … Read more

Bigg Boss சீசன் 6: சன் டிவி முகம், கானா பாடகர், பிரபல நடிகையின் சகோதரர் – களைகட்டும் பிக் பாஸ் வீடு!

வரும் 9ம் தேதியிலிருந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது பிக் பாஸ் தமிழ் சீசன் 6. இந்தாண்டு போட்டியாளர்களின் எண்ணிக்கை வழக்கமானதை விட அதிகம். மக்கள் போட்டியாளர்கள் என 6 சாமானியர்களும் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லவிருக்கிறார்கள். மேலும் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் போதே டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்திலும் 24 மணி நேரமும் நிகழ்ச்சியைப் பார்க்க வழி செய்திருக்கிறார்கள். போட்டியாளர்களாக யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பதை அறிய பிக் பாஸ் ரசிகர்களின் பெரிய … Read more

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.912 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு

சென்னை: பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.912 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒன்றிய அரசு சார்பில் ரூ.547 கோடி, மாநில அரசின் பங்கான ரூ.365 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் குஜராத்தில் பசு பாதுகாப்புக்கு நாளொன்றுக்கு ரூ.40 வழங்கப்படும்- அரவிந்த் கெஜ்ரிவால்

ராஜ்கோட், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் அங்கு தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. டெல்லி, பஞ்சாப்பை தொடர்ந்து குஜராத்திலும் கொடி நாட்ட துடிக்கும் ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால், அடிக்கடி குஜராத் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். அந்தவகையில் பஞ்சாப் ஆம் ஆத்மி முதல்-மந்திரி பகவந்த் … Read more

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மீது தற்கொலைப்படை தாக்குதல் திட்டமா?! – பாதுகாப்பு அதிகரிப்பு

மகாராஷ்டிராவில் சிவசேனா இரு அணிகளாக உடைந்த பிறகு அடிக்கடி இரு அணிகளும் மோதிக்கொள்கின்றன. வரும் 5-ம் தேதி தசராவையொட்டி மும்பையில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அணியும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியும் தனித்தனியாக பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்து வருகின்றன. இதனால் அடிக்கடி முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வெளியிடங்களுக்கு சென்றுகொண்டிருக்கிறார். இதில் ஏக்நாத் ஷிண்டே உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து மாநில உள்துறை அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் ஷிண்டேயின் பாதுகாப்பை … Read more

மன்னர் சார்லஸ் தான் உயிராக காதலித்த கமிலாவை விட்டு டயானாவை முதலில் மணந்தது ஏன்? வெளியான உண்மை காரணம்

சார்லஸ் கமிலாவுக்குப் பதிலாக டயானாவை மணந்ததற்கான உண்மையான காரணம். அரச குடும்பம் எடுத்த முடிவையடுத்தே கமிலாவை அவர் முதலில் மணக்கவில்லை என வெளியான தகவல். மன்னர் சார்லஸ் கமீலாவை முதலில் திருமணம் செய்யாமல் டயானாவை மணந்ததற்கான உண்மை காரணம் தெரியவந்துள்ளது. சார்லஸுக்கும் டயானாவுக்கும் கடந்த 1981ல் திருமணம் நடைபெற்றது, இதற்கு கிட்டத்தட்ட பத்தாண்டுகள் முன்னரே கமிலாவுக்கும் ஆண்ட்ரூ பார்க்கர் என்பவருக்கும் திருமணம் நடந்தது. TIM GRAHAM PHOTO LIBRARY VIA GETTY சார்லஸ் – கமிலா வேறு … Read more

நிலக்கோட்டை அருகே மணல் கொள்ளை நடந்த இடத்தில் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. நேரில் ஆய்வு

நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே மணல் கொள்ளை நடந்த இடத்தில் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் நேரில் ஆய்வு செய்துள்ளார். நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி வைகை ஆற்றுப் படுகையில் 2 நாட்களுக்கு முன் மணல் திருட்டு நடைபெற்றது.

மின் துறை ஊழியர்களுக்கு நோட்டீஸ்: உடனடியாக பணிக்கு திரும்ப இறுதி எச்சரிக்கை

புதுச்சேரி: ஐந்து நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மின் துறை ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். தவறியனால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போராட்ட குழுவிற்கு இறுதி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. புதுச்சோரி மின் துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஊழியர்கள் கடந்த 28 ம் தேதி முதல் வேலை நிறுத்த்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் துணை மின் நிலையங்களில் புகுந்த போராட்ட கும்பல், மின் இணைப்புகளை துண்டித்ததால் மாநிலமே இருளில் மூழ்கியது.ஆத்திரமடைந்த மக்கள் பல இடங்களில் … Read more

விண்வெளியில் ஆய்வு பணியில் ஈடுபட்ட மங்கள்யான் விண்கலம் செயலிழந்தது

பெங்களூரு: இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ), விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டு ரூ.450 கோடி செலவில் பி.எஸ்.எல்.வி.-25 ராக்கெட் மூலம் மங்கள்யான் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. அது 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ந் தேதி செவ்வாய் கிரக கோளப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அதன் செயல்பாடு நின்றுள்ளது. இதன் மூலம் மங்கள்யான் விண்கலம் விடை பெற்று கொண்டது. இதுகுறித்து இஸ்ரோ அதிகாரிகள் கூறியதாவது:- மங்கள்யான் விண்கலத்தில் … Read more