சென்னையில் நிர்பயா பெண்கள் ஆலோசனை மையத்தின் புதிய அலுவலக கட்டட திறப்பு விழா

சென்னை: சென்னை, எழும்பூரில் நிர்பயா பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆலோசனை மையத்தின் புதிய அலுவலக கட்டட திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சமூக நலன் துறை அமைச்சர் கீதாஜீவன், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், நடிகை சாய் பல்லவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கென்யா வறட்சியால் அழிந்த 2% வரிக்குதிரைகள் | அண்டார்டிகாவில் தபால் அலுவலகப் பணியில் பெண்கள்

மியான்மரில் டோனி குபொட்டா என்ற திரைப்பட தயாரிப்பாளருக்கு ராணுவத்துக்கு எதிரான எதிர்ப்பை ஊக்குவித்த காரணத்துக்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அன்டார்டிகாவில் ஐந்து மாதங்களுக்கு தபால் அலுவலகம் நடத்தும் பணிக்கு இங்கிலாந்தைச் சேர்ந்த நான்கு பெண்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். மெக்ஸிகோவின் சான் மிகுவல் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 17 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இரண்டு வருடங்களாக கென்யாவில் நீடித்து வரும் வறட்சியின் காரணமாக உலகின் 2 சதவிகித வரிக்குதிரைகள் அழிந்துவிட்டதாகத் தகவல். உகாண்டா … Read more

வடகிழக்கு பருவமழை: 10ம் தேதி மின்துறை ஆய்வுக்கூட்டம் நடைபெறும் என அமைச்சர் தகவல்…

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், மின்சாரத்துறையில் எடுக்கப்பட வேண்டிய  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வரும் 10ந்தேதி ஆய்வு கூட்டம் நடத்தப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். வடகிழக்கு பருவமழை இந்த மாத இறுதியில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதையடுத்து, முன்னேற்பாடு பணிகளை தமிழகஅரசு முடுக்கி விட்டுள்ளது. ஏற்கனவே சென்னை உள்பட மாவட்டங்களில் மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கும்படி மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு முதலமைச்சர் … Read more

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

சென்னை : ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டம் நடத்தும் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க இந்த அவசர சட்டம் வகை செய்கிறது. ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக ஆய்வு நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டு முதலமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

`பரந்தூர் விமான நிலைய திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும்' -பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை

சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பரந்தூரில் அமையவிருக்கிறது என ஆகஸ்ட் 1-ல் மத்திய விமானப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் வி.கே.சிங், அதிகாரபூர்வமாக அறிவித்தார். புதிய விமான நிலையம் தொடர்பான அறிவிப்புகள் ஆட்சியாளர்கள், தொழில்துறையினர், சென்னைவாசிகள் என பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஆனால் விவசாய நிலங்கள், தரிசு நிலத்தில் மேயும் கால்நடைகள், தாமரை ஏரிகள் என விவசாய மண்டலம் போல் இருக்கும் பரந்தூர் ஊராட்சி மக்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் செய்து வருகின்றனர். பரந்தூர் … Read more

அதிமுக விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை: சபாநாயகர் அப்பாவு

சென்னை : அதிமுக விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். அதிமுக கொறடா அளித்த கடிதம் தொடர்பாக உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் எனவும், பன்னீர்செல்வம், பழனிசாமி அளித்த கடிதங்கள் தொடர்பாக இரு தரப்பிடம் விளக்கம் கேட்பது ஆய்வில் உள்ளது எனவும் அவர் கூறினார்.

சேலம்: நிதி நிறுவனம் நடத்தி மோசடி; கைதான பாஜக பிரமுகர் தொடர்புடைய இடங்களில் சோதனை!

சேலம் தாதகாப்பட்டி குமரன் நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவர் சேலத்தை மையமாகக் கொண்டு `ஜஸ்ட் வின்’ எனும் நிதி நிறுவனத்தை நடத்தி வந்திருக்கிறார். இந்த நிலையில் சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், நாமக்கல் என தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆட்களைச் சேர்த்து ரூபாய் ஐநூறு கோடிக்கு மேலாக நிதி திரட்டி நிறுவனத்தை இயக்கி வந்திருக்கிறார். மேலும் ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதாந்தோறும் 20 ஆயிரம் 12 மாதங்களுக்கு தருவதாகக் கூறி பொதுமக்களிடமிருந்து முதலீடுகளை திரட்டியிருக்கிறார். … Read more

திருப்பூரில் காப்பகத்தில் உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: திருப்பூரில் காப்பகத்தில் உணவு சாப்பிட்டு உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சிகிச்சையில் உள்ள சிறுவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கவும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

பாலியல் பலாத்கார முயற்சி 16 வயது சிறுவன் கைது| Dinamalar

வில்லியனுார்: இரவில் வீடு திரும்பிய இளம்பெண்ணை வழிமறித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சிறுவனை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி, கரிக்கலாம்பாக்கம் அருகே உள்ள கம்பளிகாரன்குப்பம் காலனியை சேர்ந்த 27 வயது பெண், புதுச்சேரியில் உள்ள ‘பியூட்டி பார்லரில்’ வேலை செய்து வருகிறார். தினமும் வேலைக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம்.நேற்று முன்தினம் வேலை முடிந்து, இரவு 8:00 மணிக்கு கரிக்கலாம்பாக்கம் அடுத்த நத்தமேடு பஸ் நிறுத்தத்தில் இறங்கி, வீட்டிற்கு நடந்து சென்றார். தனியாக சென்ற போது, … Read more

ரூ.50 லட்சம் இன்சூரன்ஸ் பணத்துக்கு ஆசை… திட்டமிட்டு கணவரைக் கொலைசெய்த மனைவி! – என்ன நடந்தது?

ராஜஸ்தான் மாநிலம், நாகெளர் மாவட்டத்திலுள்ள குந்தியா கிராமத்தில் நேமாராம் மகத் (67),சாரதா (47) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர். இந்த நிலையில், சாரதா தன்னுடைய கணவன் பெயரிலிருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிலத்தை தன்னுடைய பெயரில் மாற்றச்சொல்லி அடிக்கடி அவரை துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக ஒருமுறை சண்டை ஏற்பட்ட போது, நேமாராம் தன் மனைவியின் காலை உடைத்திருக்கிறார். அதையடுத்து நேமாராம் மனைவி அவர்மீது போலீஸில் புகாரளித்திருக்கிறார். … Read more