சோனியாகாந்தி குடும்பம் என்னை ஆதரிப்பதாக கூறுவது தவறு – மல்லிகார்ஜுன கார்கே பேட்டி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தல், வருகிற 17-ந் தேதி நடக்கிறது. இதில் போட்டியிட மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர், கே.என்.திரிபாதி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். திரிபாதியின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதால், மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் ஆகியோர் மட்டும் களத்தில் உள்ளனர். இந்தநிலையில், மல்லிகார்ஜுன கார்கே நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, சோனியாகாந்தி குடும்பத்தின் ஆதரவு பெற்றவராக அவர் கருதப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:- சோனியாகாந்தி குடும்பம் என்னை ஆதரிப்பதாக … Read more

இலங்கை அகதி முகாமில் வசிக்கும் பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த வி.ஏ.ஓ! – கைது செய்த போலீஸ்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே இருக்கிறது இரும்பூதிப்பட்டி. இந்த கிராமத்தில் இலங்கை அகதிகள் முகாம் இயங்கி வருகிறது. இந்த கிராமத்தை உள்ளடக்கிய சிவாயம் வடக்கு கிராம நிர்வாக அலுவலராக, அரவக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள வெஞ்சமாங்கூடலூரைச் சேர்ந்த அன்புராஜ் (36) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த செப்டம்பர் 29 – ஆம் தேதி மதியம் இரும்பூதிப்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் உள்ள வீட்டில் தூங்கி கொண்டிருந்த திருமணமான 35 வயது பெண்ணிடம், வீட்டினுள் அத்துமீறி நுழைந்து பாலியல் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,550,573 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.50 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,550,573 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 623,446,521 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 603,298,958 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 39,453 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அக்-03: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

அரைசதம் விளாசி அசத்திய சூர்யகுமார் யாதவ்: வெற்றியை விரட்டிய டேவிட் மில்லர்.., திரில் டி 20 போட்டி!

இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி. 22 பந்துகளில் 61 ஓட்டங்கள் குவித்து இந்திய அணி வீரர் சூர்யகுமார் யாதவ் அசத்தல். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியில் இந்திய அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்ற இந்த இரண்டாவது டி 20 போட்டி, அதிரடிக்கு பஞ்சம் இல்லாமல் சிக்ஸர்களும் பவுண்டரிகளும் பறக்க விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. ஆட்டத்தின் … Read more

03.10.22 திங்கட்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | October – 03 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

களங்கத்தை போக்க உருவான ஏரி| Dinamalar

தாவணகரே மாவட்டத்தில், வருண பகவான் ஆர்ப்பரித்ததில் பத்ரா உட்பட, பல்வேறு ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பாய்கிறது. ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஏரி என பிரசித்தி பெற்ற சூளகரே ஏரி நிரம்பி வழிகிறது. இந்த ஏரியின் பின்னணியில், சுவாரஸ்யமான கதை உள்ளது.தாவணகரே மாவட்டம், சென்னகிரி தாலுகாவில், சூளகரே ஏரி கரையை தாண்டி வெளியே தண்ணீர் பாய்கிறது. சுற்றுப்பகுதிகளில் பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்கியுள்ளது. இந்த அழகான காட்சியை பார்க்க, சுற்றுலா பயணியர், உள்ளூர் மக்கள் குவிகின்றனர். ஏரியில் … Read more

ஆபாச படம் ஆசாமிக்கு 20 ஆண்டு சிறை| Dinamalar

ஷிவமொகா : ஆபாச வீடியோ பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பரப்பிய நபருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, ஷிவமொகா கூடுதல் மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றம்தீர்ப்பளித்தது.ஷிவமொகா, சொரபாவை சேர்ந்தவர் திம்மப்பா, 42. இவர் சிறுவர்களின் ஆபாச வீடியோக்களை பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பதிவிறக்கம் செய்தார். இது குறித்து, ஷிவமொகா சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் வந்தது.விசாரணை நடத்திய போலீசார், 2020 ஜனவரி 12ல், திம்மப்பாவை கைது செய்து, ஷிவமொகா கூடுதல் மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றத்தில் … Read more

சமஸ்கிருதம் கற்றுத்தரும் ராஜஸ்தானி கடை உரிமையாளர்| Dinamalar

தாய் மொழி ராஜஸ்தானியாக இருந்தாலும், சமஸ்கிருதத்தின் மீது கொண்ட மதிப்பால், விஜயபுராவில் தனது கடையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, தானே சமஸ்கிருதம் சொல்லித்தருகிறார்.ராஜஸ்தானை சேர்ந்தவர் ராம்சிங், 55. இரண்டு மூன்று தலைமுறைக்கு முன் கர்நாடகாவின் விஜயபுராவிற்கு பிழைப்பு தேடி வந்தனர். விஜயபுரா மீனாட்சி சவுக்கில் துணி கடை துவக்கி, நடத்தி வருகின்றார். இக்கடையில் 60 முதல் 70 தொழிலாளர்கள் உள்ளனர். கடை உரிமையாளர், ஊழியர்களிடம் சமஸ்கிருதத்தில் பேசி வருகிறார்.புதிதாக இணையும் தொழிலாளர்களுக்கு, தினமும் அரை மணிநேரம் சமஸ்கிருதம் கற்றுத்தருகிறார். … Read more

“கிடைக்காத ஓய்வூதிய பணம்” கோயில்களில் பிச்சை எடுக்கும் ஓய்வு பெற்ற வேளாண் அரசு அதிகாரி..!

வேளாண்மை துறையில் அரசு அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த ஒருவருக்கு ஓய்வூதிய பணப் பலன்கள் கிடைக்கவில்லை. அதனால் மதுரை கோயில்களில் பிச்சை எடுத்து வாழும் அளவிற்கு அவரது வாழ்க்கை தலைகீழாக மாறியது. இதை அறிந்த பலரும் அதிர்ச்சிக்குள்ளான நிலையில் ஆறு வாரத்திற்குள் அந்த முதியவருக்கான பணப்பலன்களை கொடுக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு அதிகாரியாக பணியாற்றிய கோபால் உழவர் நலத்துறை திட்டங்கள், பயன்கள்; கிராம சபைக் கூட்டங்களில் தெரிவிக்கப்படும் … Read more