கொச்சி புறப்பட்டவிமானத்தில் தீ| Dinamalar

புதுடில்லி :தென்மேற்கு ஆசிய நாடான ஓமன் தலைநகர் மஸ்கட் நகரில் இருந்து, கேரளாவின் கொச்சி நகருக்கு ‘ஏர் இந்தியா’விமானம் நேற்று புறப்பட தயாராக இருந்தது. இதில், நான்கு குழந்தைகள் உட்பட 145 பயணியர், ஆறு பணியாளர்கள் என, மொத்தம் 151 பேர் இருந்தனர். விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன், இரண்டு இன்ஜின்களுள் ஒன்று தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து, பயணியர் மற்றும் விமான பணியாளர்கள் உடனடியாக கீழே இறக்கப்பட்டனர். பதற்றத்துடன் ஓடி கீழே இறங்கிய போது, பயணியர் … Read more

நல்ல சான்ஸ்.. தங்கம் விலை இன்றும் சரிவு.. எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா?

தங்கம் (gold price) விலையானது கடந்த சில அமர்வுகளாக தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. இன்றும் சர்வதேச சந்தையில் சற்று குறைந்துள்ளது. இது இன்னும் குறையலாமோ என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது. தங்கத்தில் செல் ஆஃப் அதிகரித்துள்ள நிலையில், தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. இதற்கிடையில் இன்று சர்வதேச சந்தை நிலவரம் என்ன? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கம் விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் … Read more

"நான் நினைத்ததை விட நீண்ட காலம் விளையாடினேன்!" – ரோஜர் ஃபெடரரின் ஓய்வுச் செய்தி சொல்வது என்ன?

டென்னிஸ் லெஜண்ட் ரோஜர் ஃபெடரர் ஓய்வை அறிவித்துள்ளார். 6 ஆஸ்திரேலிய ஓப்பன், ஒரு பிரெஞ்ச் ஓப்பன், 8 விம்பிள்டன், 5 யு.எஸ் ஓப்பன் என 20 கிராண்ட்ஸ்லாம் டைட்டில்களை வென்ற முதல் டென்னிஸ் வீரர் என்ற பெருமைக்குரியவர் ஃபெடரர். அவரின் ஓய்வுச் செய்தி இதுதான்: “என் டென்னிஸ் குடும்பத்துக்கும், அதைத் தாண்டிய எல்லோருக்கும் வணக்கம்! இத்தனை ஆண்டுகளில் டென்னிஸ் எனக்கு அளித்த பரிசுகளில் மிகவும் மகத்தானது, நான் சந்தித்த மனிதர்களின் அன்புதான். நண்பர்கள், சக போட்டியாளர்கள், ரசிகர்கள் … Read more

முதலிரவில் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த மணமகன்: ஆந்திராவில் ஏற்பட்ட பரிதாபம்!

ஆந்திராவில் இளம் காதல் ஜோடிகள் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம். முதலிரவில் மாரடைப்பு ஏற்பட்டு மணமகன் உயிரிழப்பு. ஆந்திராவில் திருமணம் ஆன புது மாப்பிள்ளை, முதலிரவு அறையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகால மண்டலம் பட்டிப்பாடி வாரி பள்ளியை சேர்ந்த துளசி பிரசாத் மற்றும் மதனப்பள்ளியை சேர்ந்த இளம் பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.  இதனைத் தொடர்ந்து கடந்த 13ம் திகதி பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவீட்டார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.  இந்நிலையில் ஆந்திர … Read more

மகிழ்ச்சி: சென்னை டூ திருப்பதி முன்பதிவில்லா பயணிகள் ரயில் மீண்டும் இயக்கம்…

சென்னை:  சென்னை -திருப்பதி இடையே முன்பதிவு இல்லாத பயணிகள் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். திருப்பதி ஏழுமலையான தரிசிக்க பல ஆண்டு காலமாக, முன்பதிவில்லா ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்பட்டு வந்தது. தினசரி இருமுறை இயக்கப்பட்டு வந்த இந்த ரயில், கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் வந்து, முற்றிலும் இயல்பு வாழ்க்கை திரும்பியதால், திருப்பதி பயணிகள் ரயிலை … Read more

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. நீதித்துறை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 

புலி டிசைனுடன் நமீபியா சென்ற சிறப்பு விமானம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: 1948ல் இந்தியாவின் கடைசி சிறுத்தை இறந்தது. அதன்பிறகு நாட்டில் சிறுத்தை இனம் அழிந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் சிறுத்தை இனத்தை பெருக்கும் நோக்கில் நமீபியா நாட்டில் இருந்து 8 சிறுத்தைகளை இந்தியா பெற உள்ளது. சிறுத்தைகளை அழைத்து வருவதற்காக புலி வடிவ டிசைனுடன் சிறப்பு விமானம் நமீபியா சென்றடைந்தது. நம் நாட்டில் சிறுத்தைகள் இனமே இல்லை. கடைசியாக, சத்தீஸ்கரின் கோரியா பூங்காவில் இருந்த சிறுத்தை, 1948ல் இறந்தது. இதையடுத்து, … Read more

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பங்குகள் தடுமாற்றம்.. முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன..?

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி-யின் பங்குகள் இன்று மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டன. இவ்வங்கி அதன் வெளியீட்டு விலையான 510 ரூபாய்க்கு எதிராக 3 சதவீதம் தள்ளுபடி உடன் NSE இல் 495 ரூபாய்க்குப் பட்டியலிடப்பட்டன. ஆனால் மும்பை பங்குச்சந்தையில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பங்குகள் 510 ரூபாய் விலைக்கே பட்டியலிடப்பட்டாலும் 484 ரூபாய் வரையில் சரிந்தது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பங்குகள் தடுமாற்றம்.. முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன..? 831 கோடி ரூபாய் ஐபிஓ தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி … Read more

ஜன்னில் வழியே செல்போனை திருட முயன்ற திருடன்; 10 கி.மீ அந்தரத்தில் தொங்கவிட்ட பயணிகள்! | viral video

மக்கள் அதிகமாகக் கூடும் பொது இடங்களில் எதிர்பாராத நேரங்களில், திருடர்களின் சாமர்த்தியத்தால் பலரின் பொருள்கள் களவு போவதென்பது அவ்வப்போது ஆங்காங்கே நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதேசமயம், இதுபோன்ற சம்பவங்களில் திருடர்கள் வசமாக மாட்டிக்கொண்டு தர்ம அடி வாங்கும் நிகழ்வுகளும் அரங்கேறும். திருடன் அப்படியான ஒரு நிகழ்வாகத்தான் பீகாரில், ரயில் ஒன்றில் ஜன்னல் வழியே பயணியிடம் செல்போன் பறிக்க முயன்ற திருடன் ஒருவன், பயணிகளிடம் கைகள் சிக்கிக்கொள்ளக் கிட்டத்தட்ட 10 கிலோமீட்டருக்கு மேல் ஜன்னலில் தொங்கிய சம்பவம் நடந்திருக்கிறது. அது … Read more

பிரபல பத்திரிகையாளர், யுடியூபர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

சென்னை: நீதிபதிகளை விமர்சித்த பிரபல பத்திரிகையாளர் மற்றும்  யுடியூபர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக சிறையில் அடைக்கப்படுகிறார்.  ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என  பத்திரிகையாளரும், டியுயூபருமான சவுக்கு சங்கர் தனது பேசியிருந்தார். கடந்த ஜூலை 22 ஆம் தேதி, ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என ரெட்பிக்ஸ்  யுடியூப் சேனலில் சவுக்கு சங்கர் தெரிவித்திருந்தார். இந்த வீடியோ வைரலான நிலையில், நீதித்துறை மீதான … Read more