உத்தரப்பிரதேசத்தில் லாரி மோதியதில் இரண்டு சிறுமிகள் உயிரிழப்பு

தியோரியா, உத்தரப்பிரதேசத்தில் நேற்று இரவு லாரி மோதி இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டிரைவரை கைது செய்த போலீசார், லாரியை பறிமுதல் செய்தனர். தசரா திருவிழாவிற்கு கோட்வாலி சந்திப்பில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். இந்த நிலையில், மொஹல்லா கருல்பர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி கோட்வாலி சந்திப்பு அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து திரிஷா யாதவ் (வயது 3), சாக்‌ஷி (வயது 13) என்ற சிறுமிகள் மீது மோதியது. இதில் சிறுமிகள் … Read more

Doctor Vikatan: பருக்கள் இருந்தால் பாலை தவிர்க்க வேண்டுமா?

Doctor Vikatan: என் வயது 23. முகத்தில் பருக்கள் அதிகமிருக்கின்றன. பருக்கள் பிரச்னை இருப்பவர்கள் பால் மற்றும் பால் பொருள்களைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுவது உண்மையா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்… டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன் பருக்கள் இருந்தால் உடனே பாலை நிறுத்தாமல், உங்களுக்கு நீங்களே ஒரு சுயபரிசோதனை செய்து பாருங்கள். பால் புரதம் மற்றும் லாக்டோஸ் ஒவ்வாமை உள்ளவர்களும் பால் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ரத்தச் … Read more

உத்தரகண்டில் பஸ் கவிழ்ந்த விபத்துக்குள்ளானதில் 25 பேர் உயிரிழப்பு

டேராடூன்: உத்தரகண்ட்டில் பஸ் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. பவுரி கர்வால் பகுதியில் நேற்று(அக்., 04) இரவு திருமண விழாவிற்காக 46 பேருடன் சென்ற பஸ், பள்ளத்தாக்கில் திடீரென கவிழ்ந்தது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதில் 25 பேர் உயிரிழந்த நிலையில் 21 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் … Read more

4 நகரங்களில் இன்று முதல் 5ஜி சேவை: ஜியோ அறிவிப்பு

மும்பை: டெல்லி, மும்பை, கொல்கத்தா, வாரணாசியில் சோதனை அடிப்படையில் இன்று முதல் 5ஜி சேவை தொடங்க உள்ளதாக ஜியோ அறிவித்துள்ளது. மற்ற நகரங்களுக்கும் 5ஜி சேவை படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

தேசிய கட்சி தொடங்கும் சந்திரசேகர ராவ்; மதுப்பிரியர்களுக்கு மது, உயிர் கோழி இலவசமாக கொடுத்த டிஆர்எஸ் நிர்வாகி

ஐதராபாத், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ். தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவரான இவர் தேசிய அரசியலில் கால் பதிக்கும் நோக்கில் தேசிய கட்சி ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக, பல்வேறு மாநில தலைவர்களை சந்தித்து பேசிய சந்திரசேகர ராவ் இன்று தனது புதிய தேசிய கட்சிக்கான அறிவிப்பை வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சந்திரசேகர ராவ் தேசியக்கட்சி தொடங்க உள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், தெலுங்கானாவின் வாராங்கல் … Read more

`பொன்னியின் செல்வன்' டூடுல் கதாபாத்திரங்களை வெளியிட்ட அமுல்!

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்போடு வெளியான `பொன்னியின் செல்வன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, படத்திற்குப் பாராட்டு தெரிவிக்கும் விதமாக, அமுல் நிறுவனம் அனிமேட்டடு டூடுல் (Doodle) ஒன்றை வெளியிட்டுள்ளது. பொன்னியின் செல்வன் மணிரத்னம் இயக்கத்தில் சோழர்களின் வரலாற்றை எடுத்துரைக்கும் விதமாக ரிலீசாகியிருக்கும் படம் தான் பொன்னியின் செல்வன். இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். கல்கி எழுதிய இந்த வரலாற்றுக் கதைக்கென ஏற்கெனவே பெரும் ரசிகர் பட்டாளம் இருந்து வந்த நிலையில், … Read more

டிவிட்டரை வாங்க எலான் மாஸ்க் சம்மதம்

தென்னாப்பிரிக்கா: டிவிட்டரை வாங்க எலான் மாஸ்க் சம்மதம் தெரிவித்துள்ளார். எலான் மாஸ்க்கிற்கு எதிராக டிவிட்டர் நிறுவனம் தொடர்ந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் நிலையில் ஒப்பந்தப்படி டிவிட்டரை வாங்கிக் கொள்வதாக சம்மதம் தெரிவித்துள்ளார். எலான் மாஸ்க் அறிவிப்பை தொடர்ந்து டிவிட்டர் பங்குகள் இருபது சதவிகிதம் அதிகரித்து 52 டாலராக உயர்ந்துள்ளது.

மெரினாவில் செல்போனில் பேசிக் கொண்டிருந்த நபரை பீர் பாட்டிலால் தாக்கி செல்போன் பறிப்பு

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் செல்போனில் பேசிக் கொண்டிருந்த கோயம்பேட்டை சேர்ந்த அகில் வர்கீஸ் பால் என்பவரை பீர் பாட்டிலால் தாக்கி மர்ம நபர்கள் செல்போனை பறித்து சென்றுள்ளனர். தலையில் படுகாயம் அடைந்த வர்கீஸ் பால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இருந்து என்னை வெளியேற்றும் முயற்சியை தடுத்தார் ராகுல் காந்தி – சசி தரூர்

புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 19-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கேரள காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. மல்லிகார்ஜூன கார்கேவுக்கு சோனியா காந்தியின் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றிபெறும் நோக்கத்தோடு சசி தரூர் மற்றும் கார்கே தீவிர நடவடிக்கைகளில் … Read more

குமரி: காதலிப்பதாக ஏமாற்றி சிறார்வதைக்கு ஆளாக்கப்பட்ட 2 சிறுமிகள்… சக மாணவன், டெம்போ டிரைவர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, கன்னியாகுமரி பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். அதே கல்லூரியில் கன்னியாகுமரி சின்ன முட்டம் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவரும் படித்து வருகிறார். மாணவியும், மாணவரும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மாணவி கடந்த சில நாள்களுக்கு முன்பு திடீரென மாயமானார். அவரை பெற்றோர் பல இடங்களில் தேடியுள்ளனர். இரண்டு நாளில் வீட்டிற்கு திரும்பிய மாணவியிடம் எங்கு சென்றாய் என … Read more