தமிழ்நாடு, புதுச்சேரியில் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.

முதியோர்களுக்கு படகு சவாரி: நோணாங்குப்பத்தில் உற்சாகம்| Dinamalar

உலக முதியோர் தினத்தையொட்டி, முதியோர்கள் படகு சாவரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். உலக முதியோர் தினத்தையொட்டி, ஹெல்ப் ஏஜ் இந்தியா, முதியோர் உதவி எண் – 14567 அமைப்பு, ஈட்டன் நிறுவனம் இணைந்து புதுச்சேரியில் இயங்கி வரும் முதியோர் இல்லங்களில் உள்ள 150 முதியவர்கள் நோணாங்குப்பம் படகு குழாமிற்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். நிகழ்ச்சியின்போது முதியவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சுற்றுலா நிகழ்ச்சிக்கு தாமரைக்குளம், முதியோர் கிராமம் துணைதிட்ட இயக்குனர் சத்தியபாபு வரவேற்றார். ஹெல்ப்பேஜ் இந்தியா … Read more

ஐஆர்டிஏ புதிய நடைமுறை வந்தால் 10 லட்சம் முகவர்கள் காணாமல் போவார்கள் – எல்ஐசி ஏஜெண்டுகள் போராட்டம்!

காப்பீடு துறையில் முன்னணி இடத்தை தன் வசம் வைத்துள்ள எல்.ஐ.சியின் வளர்ச்சிக்கு அதன் முகவர்களும் முக்கிய காரணம். நாடு முழுவதும் 13 லட்சத்துக்கும் மேலான முகவர்கள் உள்ளனர். மக்களிடம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளைக் கொண்டு செல்வது இவர்களின் வேலையாக இருக்கிறது. இதற்கு கணிசமான கமிஷன் இவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஐஆர்டிஏ புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதற்கான முன்வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள மாற்றங்கள் முகவர்களை வஞ்சிப்பதாக இருக்கிறது என்று எல்ஐசி முகவர்கள் கூட்டமைப்பு (LIAFI) கூறுகிறது. இந்த முன்வரைவை … Read more

எம்.பி. ரவீந்திரநாத்குமாருக்கு சொந்தமான நிலத்தில் சிறுத்தை இறப்பு தொடர்பாக 2 பேர் கைது

தேனி: பெரியகுளம் அருகே சொர்க்கம் வனப்பகுதியில் எம்.பி. ரவீந்திரநாத்குமாருக்கு சொந்தமான நிலத்தில் சிறுத்தை இறப்பு தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே பண்ணை நிலத்தில் ஆட்டு பட்டி போட்டிருந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தோனேசியா: கால்பந்து மைதானத்தில் வெடித்த கலவரம்; 129 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

இந்தோனேசியாவில் உள்ளூர் அணிகளுக்கிடையே நடைபெற்ற கால்பந்து போட்டியின் முடிவில் மைதானத்தில் ரசிகர்களால் ஏற்பட்ட கலவரத்தில், 129 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிது. இந்தோனேசியா நாட்டின் கிழக்கு ஜாவா(East Java) மாகாணத்தில், உள்ளூர் கால்பந்து அணிகளான அரேமா எஃப்சி(Arema FC) மற்றும் பெர்செபயா சுரபயா(Persebaya Surabaya) இடையே நேற்றிரவு போட்டி நடைபெற்றது. கால்பந்து இந்தப் போட்டியின் முடிவில் அரேமா எஃப்சி, பெர்செபயா சுரபயா அணியிடம் தோல்வியடைந்ததும் அந்த அணியின் ரசிகர்கள் பெருந்திரளாக மைதானத்துக்குள் நுழைந்தனர். … Read more

அதிமுகவுடன் அமமுக இணையாது, நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம்: டி.டி.வி.தினகரன் பேச்சு

தஞ்சை: அதிமுகவுடன் அமமுக இணையாது, நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம், இணையவேண்டிய அவசியம் இல்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் சட்ட ரீதியாக போராடி வருகிறார். அவரின் கருத்தும் எனது கருத்தும் ஒன்றுதான், சொந்த கட்சிக்காரர்களையே விலைக்கு வாங்கும் அளவில் அதிமுக தவறான பாதையில் பயணிக்கிறது என செய்தியாளர் சந்திப்பில் டி.டி.வி.தினகரன் பேசினார்.

விகடன் ஸ்க்ரீன்ப்ளே ஒர்க்‌ஷாப்: கதை டு திரைக்கதை உருவாக்கம் – ஒரு படம் வெற்றிபெற எது முக்கியம்?

விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கும் திரைக்கதை வடிவமைப்பாளர்களில் ஒருவர்தான் பாலகுமாரன் தமிழ்ச்செல்வன். தமிழ் சினிமாவின் புதிய திரைக்கதை ஆசிரியர், திரைக்கதை மருத்துவர். ‘கிரியோனி – பிலிம் & ஸ்கிரிப்ட் ஸ்ட்ராட்டஜி கம்பெனி’ என்ற நிறுவனத்தை இவரின் நண்பர் மாணிக்கஜமீனுடன் இணைந்து நடத்திவருகிறார். ஒரு ஸ்கிரிப்ட்டைப் பல கோணங்களில் ஆராய்ந்து அதில் உள்ள நிறைகுறைகளை இயக்குநர் மற்றும் தயாரிப்புத் தரப்புக்கு எடுத்துரைப்பது மட்டுமன்றி, அதைச் சரி செய்து ஒரு வெற்றிப் படத்திற்கான திரைக்கதையாக மாற்றித் தருகிறார். `சிவப்பு … Read more

முதல் மனைவி தலைமையில் 2-வது திருமணம்! ஒரே வீட்டில் மூவரும் வாழ்ந்த நிலையில் கணவர் தப்பியோட்டம்… பகீர் காரணம்

முதல் மனைவி சம்மதத்தோடு 2வது திருமணம் செய்து கொண்ட நபர் வீட்டில் இருந்து தப்பியோட்டம். மனைகளின் தொல்லை தாங்க முடியாமல் தலைமறைவு என தகவல். முதல் மனைவி சம்மதத்தோடு 2வது திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் மூவரும் குடித்தனம் நடத்திய நிலையில் மனைவிகளின் தொல்லையால் கணவர் வீட்டை விட்டு ஓடிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த டிக் டாக் பிரபலம் கல்யாண். இவருக்கும் கடப்பாவை சேர்ந்த விமலா என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் … Read more

இருளில் மூழ்கிய புதுச்சேரி: மின்துறை ஊழியர்கள் மீது வழக்கு பதிவு

புதுச்சேரி: புதுச்சேரி துணைமின் நிலையங்களில் அத்துமீறி நுழைந்து மின்சாரத்தை துண்டித்ததாக மின் ஊழியர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள மின் துறை ஊழியர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

மின் ஊழியர்கள் அடாவடியால் மக்கள் அதிருப்தி| Dinamalar

புதுச்சேரி: துணை மின்நிலையங்களில் உள்ளே புகுந்த போராட்ட கும்பல் மின் இணைப்பினை துண்டித்ததால், ஒட்டுமொத்த புதுச்சேரியும்பல மணி நேரம் இருளில் மூழ்கியது. மின்துறை ஊழியர்களின் அடாவடி செயலால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மின்துறையை தனியார் மயமாக்க அரசு டெண்டரை வெளியிட்டுள்ளது. இதனைக் கண்டித்து மின்துறை ஊழியர்கள் கடந்த 28 ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், கடந்த நான்கு நாட்களாக பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இதனைக் கண்டித்து பொதுமக்கள் சாலை … Read more