மராட்டியம்: பஸ்-லாரி மோதல்; 11 பேர் பலி, 32 பேர் காயம்

நாசிக், மராட்டியத்தில் நாசிக் நகரில் அவுரங்காபாத் சாலையில் பயணிகளை ஏற்றி கொண்டு சென்ற பஸ் ஒன்று இன்று அதிகாலை 5 மணியளவில் லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில், பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் பஸ் தீப்பிடித்து கொண்டது. தீ மளமளவென பஸ் முழுவதும் பற்றி எரிய தொடங்கியது. இதனால், பஸ்சுக்குள் சிக்கி கொண்ட பயணிகள் வெளியே வர முடியாமல் பரிதவித்தனர். இந்த விபத்தில் மற்றும் தீயில் சிக்கி 11 பயணிகள் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் ஒரு … Read more

ஆன்லைனில் ரம்மி, கடன் செயலிகளில் லோன்… நெருக்கடி தாங்க முடியாமல் விபரீத முடிவெடுத்த இளைஞர்!

ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுகா, திங்களூர் அருகேவுள்ள சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (34). இவருக்கு திருமணமாகி கீதா என்ற மனைவியும், 5 வயதில் ஒரு மகனும், 5 மாத ஆண் குழந்தையும் இருக்கின்றனர். கோபிசெட்டிபாளையம் அருகே கொளப்பலூரில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் துணை மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். கிருஷ்ணமூர்த்தி ஆன்லைனில் ரம்மி சூதாட்டத்தில் ஆர்வம் கொண்டிருந்ததால் செல்போனில் ரம்மி விளையாட்டில் மூழ்கியிருக்கிறார். இதனால் கையிருப்புப் பணம் கரையத் தொடங்கியது. இதையடுத்து தன்னுடைய ஆதார் அட்டை, பான் … Read more

நீண்டகாலமாக பெண் தேடி திருமணத்திற்கு ஏங்கும் ஆண்களே குறி! பல பெயர்களில் கல்யாணங்கள் செய்த பெண்

பல்வேறு பெயர்களில் மோசடி செய்து 5 பேரை மணந்த பெண். பணம், நகைக்காக திருமணத்துக்கு ஏங்கும் ஆண்களை குறிவைத்து மெகா மோசடி. தமிழகத்தில் 5 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் கைதான நிலையில் அவர் எப்படியெல்லாம் தனது பெயர்களை மாற்றி மோசடி செய்தார் என்பது குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் தீபன் (32). இவருக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்த்து வந்துள்ளனர். நீண்டகாலமாக பெண் கிடைக்காததால் ஏற்கனவே திருமணம் … Read more

கோவையில் கட்டு கட்டாக ரூ. 2,000 கள்ள நோட்டுகள் பறிமுதல்: 3 பேர் கைது

கோவை: பிரஸ் காலனியில் ரூ.2,000 கள்ள நோட்டுகள் கட்டு கட்டாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சந்தேகத்துக்கு இடமான நபர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்த போது ரூ.2,000 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்துள்ளனர். 9 அட்டை பெட்டிகளில் கட்டு கட்டாக ரூ.2,000 கள்ள நோட்டுகள் இருந்தது கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஷ்மீரில் துப்பாக்கி தவறுதலாக வெடித்து ராணுவ வீரர் பலி

ஸ்ரீநகர், காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் சந்தர்மோகன் (வயது 28) என்ற ராணுவ வீரர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சோபோர் பகுதியில் சத்தூசா என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாமுக்கு வெளியே நேற்று முன்தினம் மாலை அவர் பணியில் இருந்தார். அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக அவரது துப்பாக்கி வெடித்தது. அதில் குண்டு பாய்ந்து ராணுவர் வீரர் சந்தர்மோகன் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தினத்தந்தி Related Tags : காஷ்மீர் துப்பாக்கி ராணுவ வீரர் … Read more

புதுச்சேரி: “குலக்கல்வியை திணிக்கப் பார்க்கிறார்கள்!” – சி.பி.எஸ்.இ விவகாரத்தில் பாயும் திமுக

சமீபத்தில் புதுச்சேரிக்கு வந்த மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ”புதுச்சேரியில் இருக்கும் அரசுப் பள்ளிகள் அனைத்தும் விரைவில் சி.பி.எஸ்.இ பள்ளிகளாக மாற்றப்படும்” என்று கூறியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவரும், மாநில தி.மு.க அமைப்பாளருமான எம்.எல்.ஏ சிவா அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், “புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகளை சி.பி.எஸ்.இ பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம், புதுச்சேரி … Read more

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 23

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 23 பா. தேவிமயில் குமார் கணவனதிகாரம் கண்ணகியின் கோபம், கணவனதிகாரத்தின் நீட்சியே! கற்பை நிரூபிக்க, கனலில் குளிக்க எந்த ராமனும் இதுவரை, பிறக்கவில்லை! பத்தோடு, பதினொன்றாய், பொருளாக நினைத்தே பெண்ணை சூதாடினான் சபையிலே! இலை தழைகளை உடுத்திய ஆதாம், அடுத்து உடுத்தினான் அதிகாரத்தை! அவன் வழி வந்த ஆண்களுக்கு, எளிதாக கிடைத்தது ஏய்த்திட ஒரு அடிமை! அவன் ஏவல் செய்ய ஏவாள்களை, அன்றிலிருந்து அருகே வைத்து கொண்டான்! மனைவி … Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புயுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது .காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை,மயிலாடுதுறை, நாகை, தருமபுரி,கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மலை பெய்யும் என அறிவித்துள்ளது.

இந்தியாவில் புதிதாக 2,797 பேருக்கு கோவிட்: 12 பேர் பலி| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,797 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,797 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,46,09,257 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 3,884 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,40,51,228 ஆனது. தற்போது 29,251 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோவிட் காரணமாக 12 … Read more

கர்நாடகாவில் 7-வது நாளாக நடைபயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி..!

கர்நாடகா, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ”பாரத் ஜோடோ யாத்ரா” என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு கடந்த செப்டம்பர் 7-ந் தேதி தொடங்கினார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ராகுல்காந்தியிடம் வழங்கி பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து மேற்கொண்டுள்ள ‘பாரத் ஜோடோ யாத்திரை’ தமிழகம், கேரளாவை தொடர்ந்து கர்நாடகத்தில் தற்போது நடந்து வருகிறது. நேற்று முன்தினம் … Read more