புதிய அட்டர்னி ஜெனரலாக புதுச்சேரியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி நியமனம்

டெல்லி: மத்திய அரசின் புதிய அட்டர்னி ஜெனரலாக, புதுச்சேரி மாநிலத்தை பூர்விகமாக கொண்ட மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு  பிறப்பித்தார். தற்போதைய அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலின் பதவிக் காலம் வரும் 30ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், புதிய அட்டார்னி ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கியை மத்தியஅரசு நியமனம் செய்தது. ஆனால், அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார். இதையடுத்து, புதிய அட்டர்னி ஜெனரலாக ஆர்.வெங்கடரமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். … Read more

ஆன்லைன் ஆப் மூலம் கடன் பெற்று திரும்ப செலுத்திய இளைஞருக்கு தொந்தரவு: இளைஞர் தற்கொலை

சென்னை: ஆன்லைன் ஆப் மூலம் கடன் பெற்று திரும்ப செலுத்திய இளைஞருக்கு மேலும் ரூ.50,000 கேட்டு தினமும் தொந்தரவு அளித்துள்ளனர். மென்பொருள் நிறுவன ஊழியர் நரேந்திரனுக்கு மிரட்ட வந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நரேந்திரன் தாயாருக்கு போன் செய்த மரம் நபர் தகாத வார்த்தைகளால் பேசியதாக போலீசில் புகார் அளித்தனர். ஆன்லைன் ஆப் கடன் செயலில் மிரட்டல் வந்தது குறித்து எம்ஜிஆர் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

உ.பி., துர்கா பூஜை பந்தலில் தீ விபத்து: 5 பேர் பலி| Dinamalar

பதோகி: உத்தரபிரதேச மாநிலம் பதோகியில் துர்கா பூஜை பந்தலில் நேற்று (அக்.,2) இரவில் ஆரத்தி நடைபெற்றது. அப்போது பந்தலுக்குள் சுமார் 150க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். அந்த நேரத்தில் அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பலத்த தீக்காயங்களுடன் படுகாயமடைந்த 55 பேர் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு … Read more

அம்மன் பெயர் கொண்ட இஸ்லாமிய பெண்ணின் சமாதி: இந்து மற்றும் இஸ்லாமியர்கள் கிடா வெட்டி வழிபாடு!

அம்மன் பெயர் கொண்ட இஸ்லாமிய பெண்ணின் ஜீவசமாதியில், இந்து மற்றும் இஸ்லாமியர்கள் கிடா வெட்டி வழிபடுவது, ராமநாதபுரம் மாவட்டம் பகுதியில் நடந்து வரும் ஆச்சர்யமான பாரம்பர்ய வழக்கம். `ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே 300 ஆண்டுகளுக்கு முன்பு தொண்டி, தனுஷ்கோடி, சாயல்குடி கடற்கரை பகுதிகளுக்கு வணிகம் செய்வதற்காக மாட்டு வண்டிகளில் வந்த இஸ்லாமியர்கள், சாயல்குடி பிள்ளையார் குளத்தின் கிராமத்தில் தங்கி இருந்தபோது, அங்கு வாழ்ந்த இந்துக்களின் குடும்பங்களுடன் ஒற்றுமையாக பழகி வந்தனர். அப்போது இஸ்லாமிய சிறுமி ஒருவர் … Read more

மலைப்பகுதிகளில் உள்ள 1.17 அரசுப்பள்ளி மாணாக்கர்களுக்கு ஸ்வெட்டர் வழங்குவதற்கான ஒப்பந்தம் கோரியது தமிழகஅரசு…

சென்னை: ஊட்டி, கொடைக்கானல், வால்பாறை போன்ற  மலைப்பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கம்பளிச்சட்டைகள் (ஸ்வெட்டர் ) வழங்க தமிழகஅரசு ஒப்பந்தம் கோரியுள்ளது. அதன்படி, 1.17 லட்சம் ஸ்வெட்டர்கள் தேவை என அறிவிக்கப் பட்டு உள்ளது. மலைப்பிரதேசங்களில் குளிரில் நடுங்கும் மாணாக்கர்களுக்கு தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஸ்வெட்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மலைப்பகுதிகளில்  ஆண்டு முழுவதும் கடுங்குளிரும், மழையும் பொழிவதால், அரசுப்பள்ளிகளில், எட்டாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஸ்வெட்டர் வழங்கப்படுகிறது. கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று … Read more

காசோலை மோசடி வழக்கில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியின் மருமகனுக்கு 6 மாதம் சிறை தண்டனை: சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு

சென்னை: காசோலை மோசடி வழக்கில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியின் மருமகனுக்கு 6 மாதம்  சிறை தண்டனை அளித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2016ல் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.எல். லட்சுமணனின் மருமகன் ஏ.எஸ்.குமார் ரூ.1.20 கோடி பெற்றுள்ளார். கடன் தொகை ஒரு கோடி 20 லட்சம் ரூபாயை இரண்டு மாதங்களில் திருப்பி செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஏ.எல்.குமாருக்கு எதிராக காசோலை மோசடி நிரூபிக்கப்பட்டதை அடுத்து 6 மாத சிறை தண்டனை விதித்து நீதிபதி … Read more

முப்படை தளபதி அனில் சவுஹானுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு| Dinamalar

புதுடில்லி முப்படைகளின் தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுஹானுக்கு இசட் பிளஸ்ட் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முப்படைகளுக்கும் தலைமை வகிக்கும் உயரிய பொறுப்பான முப்படைகளின் தலைமை ஜெனரல் பிபின் ராவத் நீலகிரி மாவட்டம் அருகே கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், ஜெனரல் பிபின் ராவத் உயிரிழந்தார். காலியாக இருந்த அப்பதவிக்கு லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுஹானை நியமிப்பதாக மத்திய அரசு செப்.29-ல் அறிவித்தது. செப்.30 ம் தேதி பொறுப்பேற்றார்.இந்நிலையில் முப்படை … Read more

ஐதராபாத் கூட்டு பாலியல் வன்முறை; கைதான 5 சிறார்களில் 4 பேரை பெரியவர்களாக கருதி விசாரிக்க உத்தரவு!

ஐதராபாத்தில் கடந்த மே மாதம் நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் கைதாகியிருந்த ஆறு பேரில் ஐந்து பேர் 18 வயது நிரம்பாதவர்களாக இருந்தனர். இந்த ஐந்து பேரில் நான்கு பேரை, பெரியவர்களாகக் கருத்தில் கொண்டு விசாரணையை தொடரலாம் என ஐதராபாத் சிறார் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இது சாத்தியமானது எப்படி? சிறார் நீதிச்சட்டம் 2015-ம் திருத்தச் சட்டத்தின்படி, 16 வயதை தாண்டிய சிறுவர்கள் எவரேனும் கொடூரமான குற்றத்தை செய்திருந்தால், அவர்களை பெரியவர்களாக கருத்தில் … Read more

திருப்பதி ஏழுமலையானுக்கு 427பெருமாள் திருமுகங்களுடன் 192மணி நேரத்தில் பட்டு சேலையை நெசவுசெய்து அசத்திய காஞ்சிபுரம் தம்பதி….

சென்னை: திருப்பதியில் பிரம்மோற்சவ விழா களைகட்டியுள்ள நிலையில், பிரமோற்வத்திற்காக 427 பெருமாளின் திருமுகங்களுடன் கூடிய பட்டு சேலையை காஞ்சிபுரத்தை சேர்ந்த குமரவேலு – கலையரசி தம்பதியினர் தயாரித்து அசத்தி உள்ளனர்.  சென்னையை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் கேட்டதற்கிணங்க, இந்த பட்டுச்சேலையை சுமார்  192 மணி நேரத்தில்  நெசவு செய்து சாதனை படைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் 27ந்தேதி  தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் … Read more