செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளது! புதிய ஆதாரத்தை வெளியிட்டது நாசா…

லண்டன்: செவ்வாய் கிரகத்தில் திரவ நீர் இருப்பது உறுதியாகி உள்ளது என அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா புதிய ஆதாரத்தை வெளியிட்டுள்ளது.   இதுதொடர்பாக,  நேச்சர் ஆஸ்ட்ரோனமி இதழில் வெளியிடப்பட்ட முடிவுகளில்,  செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்திற்கு அடியில் திரவ நீர் இருப்பதாக ரேடார் அல்லாத தரவுகளைப் பயன்படுத்தி முதல் சுயாதீன ஆதாரத்தை வழங்கியுள்ளது. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதில் அமெரிக்கா, இந்தியா  உள்பட பல நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. செவ்வாயில் தண்ணீர் இருக்கிறதா என்ற … Read more

தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை தியாகராயர் நகரில் அக்.8 முதல் 24-ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம்

சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை தியாகராயர் நகரில் அக்.8 முதல் 24-ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க மக்கள் அதிகளவில் தியாகராயர் நகர் பகுதிக்கு வர உள்ளதால் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. ஆட்டோக்கள் தியாகராயர் சாலை, தணிகாசலம் சாலை சந்திப்பில் இருந்து பனகல் பூங்கா நோக்கி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

துர்கா சிலை கரைப்பு நிகழ்ச்சி குட்டையில் மூழ்கி 6 பேர் பலி| Dinamalar

ராஜஸ்தானில், துர்கா சிலை கரைப்பு நிகழ்ச்சியில் ஈடுபட்ட இளைஞர்கள் ஆறு பேர், குட்டையில் மூழ்கி நேற்று உயிரிழந்தனர். ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள நந்த்லா கிராமத்தில் துர்கா பூஜை நடைபெற்றது. இதையடுத்து, துர்கா சிலை கரைப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. அப்போது, அங்குள்ள ஒரு குட்டையில் சிலையை கரைக்க இறங்கிய ஆறு இளைஞர்கள் தண்ணீரில் மூழ்கினர்.”மழை நீர் தேங்கிய இந்த குட்டையில் உள்ளூர் மக்கள் அடிக்கடி … Read more

மொபைல் கேம் கண்டிப்பு: தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட தந்தை; மனமுடைந்து விபரீத முடிவெடுத்த தந்தை!

சென்னை குன்றத்தூரை அடுத்த பழந்தண்டலம், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர் (40), தச்சு தொழிலாளி. இவரின் மகன் நவீன் குமார். நவீன் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். இவன் செல்போனில் கேம் விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்தான். சம்பவத்தன்றும் நவீன் குமார் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தான். அதை சுந்தர் கண்டித்துள்ளார். அதனால் மனமுடைந்த நவீன் குமார், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அதை நேரில் பார்த்த சுந்தர், கதறி அழுதார். பின்னர் … Read more

இந்தியாவில் தேடப்படும் நித்யானந்தா பாஜக நிர்வாகிக்கு கைலாசாவின் தர்மரட்சகர் விருது வழங்கி கௌரவித்தார்…

நித்யானந்தாவின் கைலாசா நாட்டின் தர்மரட்சகர் விருதை திருச்சி சூர்யா சிவா-வுக்கு வழங்கி இருக்கிறார். பாஜக ஓ.பி.சி. பிரிவு மாநில பொதுச் செயலாளரான திருச்சி சூர்யா சிவா-வுக்கு இணையவழியாக நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருதை நித்யானந்தா வழங்கியுள்ளார். திருச்சி சூர்யா சிவா கைலாசா நாட்டின் தர்மரட்சகர் விருதை ஏற்றுக்கொண்டு சூர்யா சிவா நன்றி தெரிவித்த காணொளியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியாவில் தேடப்பட்டு வரும் நித்யானந்தா கடந்த சில ஆண்டுகளாக எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் உள்ளது. … Read more

மும்பை விமான நிலையத்தில் ரூ.100 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: 2 பேர் கைது

மும்பை: மும்பை விமான நிலையத்தில் ரூ.100 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் டெல்லியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த கானா நாட்டை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த பெண் அளித்த தகவலில் கத்தார் வழியாக மும்பை வந்த பயணியை பிடித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்து 16 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கனடாவில் ஒரு இலையுதிர் காலம்! – ஜில் அனுபவம்| My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் கனடாவில் இலையுதிர் காலத்தில் பல இடங்கள் சென்று இலைகளின் வண்ணமயமான அழகை கண்டு களிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பார்த்த இடங்கள் அனைத்திலும் எனக்கு மிகவும் பிடித்தது ஆல்கன்குவின் பூங்கா. இந்த பூங்கா டொரான்டாவிலிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தாலும், அங்குள்ள … Read more

இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ் பெயர் அறிவிப்பு

ஸ்டாக்ஹோம்: இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு பிரெஞ்சு எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.  அதன்படி, நடப்பு  ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மருத்துவம், இயற்பியல், வேதியியல்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  இன்று இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரெஞ்சு எழுத்தாளருக்கு அறிவிக்கப்பட்டது. இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரெஞ்சு எழுத்தாளர் ஆனி … Read more

தமிழ்நாட்டை சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் கம்போடியா நாட்டில் சிக்கி தவிப்பு

ஃப்நாம் பெந்: தமிழ்நாட்டை சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் கம்போடியா நாட்டில் சிக்கி தவித்து வருகின்றனர். அடித்து துன்புறுத்துவது உடலில் மின்சாரம் பாய்ச்சுவது உள்ளிட்ட கொடுமைகளுக்கு உள்ளாவதாக குற்றம் சாட்டியுள்ளனர். ஆன்லைன் நிறுவனத்தில் வேலை என்று அழைத்துச் செல்லப்பட்டு சட்டவிரோத செயல்களை செய்ய கூறி மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது. உணவு இன்றி தவிப்பவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“மகாபாரதத்தை Lord of the Rings பாணியில் எடுத்தால் நான் நடிக்கத் தயார்!”- `ஆதிபுருஷ்' சைஃப் அலி கான்

1993-ம் ஆண்டு யாஷ் சோப்ராவின் ‘பரம்பரா’ திரைப்படத்தில் அறிமுகமான சைஃப் அலி கான் இன்றுவரை பாலிவுட்டின் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். Kya Kehna, Tanhaji, Hum Tum போன்ற பல வெற்றிப்படங்களைத் தந்திருக்கிறார். தற்போது ஓம் ராவத் இயக்கத்தில், டி-சீரிஸ் தயாரிப்பில் வெளியாகவுள்ள`ஆதி புருஷ்’ படத்தில் ராமராக பிரபாஸ் நடிக்க, ராவணன் கதாபாத்திரத்தில் சைஃப் அலி கான் நடித்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சைஃப் அலி கானின் கனவு கதாபாத்திரம் குறித்துக் கேட்கப்பட்டது. … Read more