ஜம்மு காஷ்மீரின் கதுவா பகுதியில் ட்ரோன்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டதாக காவல்துறை தகவல்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் கதுவா பகுதியில் தலா 3 கையெறி குண்டுகள் மற்றும் ஸ்டிக்கி  பாம்கள் , எல்லைக்கு அப்பால் இருந்து ட்ரோன்கள் மூலம் வீசப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர். அனைத்து குண்டுகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் போலீசார் கூறியுள்ளனர்.

​“பாஜக-வின் ஏஜென்ட்டாக தமிழக ஆளுநர் செயல்படக்கூடாது​!" -​ துரை வைகோ

​தேனி மாவட்ட ம​.​தி​.​மு​.​க சார்பில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படமான `மாமனிதன் வைகோ’ படம் திரையிடப்பட்டது. தேனி​ பழனிசெட்டிபட்டியில் ​உள்ள ​தியேட்டரில் ​திரையிடப்பட்ட ஆவணப்படத்தை ம​.​தி​.​மு​.​க தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ இன்று ம​.​தி​.​மு​.​க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான தி​.​மு​.​க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிர்வாகிகளுடன் பார்த்தார்.  தியேட்டர் காலை 10 மணிக்கு படம் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. துரை வைகோ வருவதற்கு தாமதமானதால், நிர்வாகிகள் தியேட்டருக்குள் காத்திருந்தனர். அப்போது ம.தி.மு.க தேனி … Read more

திமுக பொதுக்குழு எதிரொலி: நாளை ஷெனாய் நகர், திருமங்கலம், டி.ஜி.எஸ் தினகரன் சாலைகளில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: திமுக பொதுக்குழு எதிரொலியாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஷெனாய் நகர், திருமங்கலம், டி.ஜி.எஸ் தினகரன் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக  சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஷெனாய் நகர், ஈ.வி.ஆர்.சாலை – காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை  சிறு மற்றும் கனரக வணிக வாகனங்கள் ஈ.வி.ஆர். சாலையில் அண்ணா வளைவில் இருந்து ஈகா சந்திப்பு நோக்கி சிறு மற்றும் கனரக வணிக … Read more

திருப்பதியில் இருவேறு இடங்களில் செம்மரம் வெட்டிக் கடத்த முயன்ற 4 பேர் கைது

திருப்பதி: திருப்பதியில் இருவேறு இடங்களில் செம்மரம் வெட்டிக் கடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாமண்டூர் அருகே குக்கலதொட்டி தடகால்வாய் என்ற பகுதியில் செம்மரக் கடத்தல் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, வேலூரை சேர்ந்த ஏழுமலை(24), பார்த்திபன்அண்ணாமலை(21), குமார் சின்னையன் (31) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இட ஒதுக்கீடு: “கர்நாடகாவைப் போல தமிழ்நாட்டிலும் துணிச்சலாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!" – ராமதாஸ்

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கர்நாடகாவில் மக்கள்தொகை அடிப்படையில் பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்படவிருப்பது தொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். அதில், “கர்நாடகாவில் மக்கள்தொகை அடிப்படையில் பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு 15 சதவிகிதத்திலிருந்து 17 சதவிகிதமாகவும், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு 3 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாகவும் உயர்த்த அந்த மாநில அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இது மிகச்சிறந்த சமூகநீதி காக்கும் நடவடிக்கையாகும். தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக 22 சதவிகிதமாக … Read more

கரூரில் போடாத சாலைக்கு பல கோடி பில் – அதிகாரிகள் மீது வழக்கும் பதியவில்லை! அறப்போர் இயக்கம் – வீடியோ

சென்னை: கரூரில் போடாத சாலைக்கு பல கோடி பில். புகார் அளித்த பிறகு அதிகாரிகள் சஸ்பெண்ட். இது நடந்து 6 மாசம் ஆச்சு. இது வரை அந்த அதிகாரிகள்மீது வழக்கும் பதியவில்லை. விசாரணையும் நடத்தவில்லை. காரணம் என்ன? என அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டி வீடியோ வெளியிட்டு உள்ளது. சமீபத்தில் அறப்போர் இயக்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், சாலை போடாமலேயே ரூ 5 கோடி சங்கர் ஆனந்த் இன்ஃப்ரா என்னும் ஒப்பந்ததாரருக்கு கரூர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் … Read more

மெசேஜ்களில் வரும் ஆபாச புகைப்படங்களை, தானாக Block செய்யும் வசதி: இன்ஸ்டாகிராமில் விரைவில் அறிமுகம்

வாஷிங்டன்: மெசேஜ்களில் வரும் ஆபாச புகைப்படங்களை, தானாக Block செய்யும் வசதி, இன்ஸ்டாகிராமில் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபாச புகைப்படங்கள் தானாக cover ஆகிவிடும், அதனை பார்ப்பதா வேண்டாமா என பயனர்கள் முடிவு செய்யலாம் என இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.

சென்னை வந்த சசி தரூரை ஏமாற்றிய காங்கிரஸ் நிர்வாகிகள்? – புறக்கணிப்பின் பின்னணி என்ன?

அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் வரும் 17-ம் தேதி நடைபெறவிருக்கிறது. தலைவர் தேர்தலில் போட்டியிட மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்க்கே, சசி தரூர், கே.என்.திரிபாதி ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். இதில், கே.என்.திரிபாதி மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தலைவர் பதவிக்குப் போட்டியிடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அசோக் கெலாட் திடீரென்று பின்வாங்கினார். காங்கிரஸ் அதிருப்தி குழு என அழைக்கப்படும் ‘ஜி23’-ல் இடம்பெற்றிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூருக்கும், மேலிடத்தின் ஆசியுடன் மல்லிகார்ஜூன கார்கே இடையையும் நேரடி … Read more

பாம்புகள் மூலம் பணத்தை அள்ளும் கல்லூரி மாணவர்! எப்படி சாத்தியம்? நம்பமுடியாத ஆச்சரியம்

கேரளாவில் கல்லூரி மாணவர் ஒருவர் பாம்புகள் மீது காதல் கொண்டு அதை வளர்த்து பிறகு விற்பனை செய்து அதிகம் பணம் சம்பாதித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காலம் தொடங்கியதில் இருந்து கேரளாவில் செல்லப்பிராணிகள் வளர்ப்பில் நம்பமுடியாத மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. அதன்படி நாய், பூனை வளர்த்து வந்தவர்கள் பலர் வெளிநாட்டு பாம்புகளை செல்லப்பிராணியாக வளர்க்க ஆர்வம் காட்டுகின்றனர். முக்கியமாக ஆப்பிரிக்க மலைப்பாம்புகள் மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்த நிலையில் கன்னூரை சேர்ந்த முகமது ஹிசம் என்ற கல்லூரி … Read more

15நாள் முதல் 1மாதத்துக்குள் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடையும்! மு.க ஸ்டாலின் உறுதி

சென்னை: 15நாள் முதல் 1மாதத்துக்குள் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடையும், மழைநீர் வடிகால் பணிகள் திருப்தி அளிக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பருவமழை தொடங்க உள்ள நிலையில், மழைநீர் வடிகால் பணிகளை தமிழகஅரசு முடுக்கி விட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக பல இடங்களில் மோட்டார் பம்புசெட்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  இன்று சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். சென்னை மாநகரின் என்.எஸ்.சி. போஸ் … Read more