கோவை செவிலியர் கொலை வழக்கில் கணவர் கைது

கோவை: தனியார் மருத்துவமனை வளாகத்துக்குள் செவிலியர் மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் செவிலியர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சி.ஆர்.பி.எப். இயக்குனர் ஜெனரல் பொறுப்பேற்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: சி.ஆர்.பி.எப்.போலீஸ் படை இயக்குனர் ஜெனரலாக சுஜோய் லால் தாவோசென் இன்று பொறுப்பேற்றார்.நாட்டின் மிகப்பெரிய போலீஸ் படையான சி.ஆர்.பி.எப். எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் இயக்குனர் ஜெனரலாக இருந்த குல்தீப் பதவி காலம் செப்.30-ல் நிறைவடைந்தது. இதையடுத்து சி.ஆர்.பி.எப். போலீஸ்படையின் 37-வது டைரக்டர் ஜெனரலாக சுஜோய் லால் தாவோசென் நியமிக்கப்பட்டார். சுஜோலால் தாவோசென் நியமனத்திற்கு மத்திய அமைச்சரவையில் நியமன குழு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து இன்று (அக்.03) இன்று … Read more

“ஒரு நிமிடம் ஓய்வு கிடைத்தாலும் தலை சாய நினைப்பது மல்லாங்கிணறில்தான்!" – தமிழச்சி தங்கபாண்டியன்

மதுரை புத்தகத்திருவிழாவின் 9-ஆம் நாளில் நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான தமிழச்சி தங்கபாண்டியனின் ’மண்வாசம்’, ’சொட்டாங்கல்’, ’மயிலிறகு மனசு’ ஆகிய மூன்று நூல்களின் மறுபதிப்பு வெளியீட்டு விழா மண் வாசத்தோடு நடைபெற்றது. விழாவில் மல்லாங்கிணறு சுமதி தமிழச்சியானது இப்படித்தான்!- பர்வீன் சுல்தானா நேர்காணலில் தமிழச்சி தங்கபாண்டியன் கவிஞர் மனுஷ்யபுத்திரன், வண்ணதாசன், கலாப்ரியா, ச.தமிழ்ச்செல்வன், பாரதி கிருஷ்ணகுமார், சு.வெங்கடேசன் எம்.பி, அ.முத்துக்கிருஷ்ணன், பர்வீன் சுல்தானா, சுகா ஆகியோர் கலந்துள்ள, கலகலவென்று நடந்தது நூல் வெளியீட்டு விழா. மூன்று நூல்களையும் சு.வெங்கடேசன் … Read more

டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து இருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகல்: பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மும்பை: ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2022ல் இருந்து காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா விலகியுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. அவருக்கு பதிலாக விளையாடவுள்ள வீரரை விரைவில் அறிவிப்போம் என பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.

200 ரயில்வே ஸ்டேஷன்களை நவீனமயமாக்க திட்டம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அவுரங்காபாத் :நாடு முழுதும், 200 ரயில்வே ஸ்டேஷன்கள் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் நவீனமயமாக்கும் பணிகள் துவங்கியுள்ளதாக, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார்.மஹாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாதில் புதிதாக அமைக்கப்பட்ட ரயில் பெட்டிகள் பராமரிப்பு தொழிற்சாலையை திறந்து வைத்து, ரயில்வே அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:இந்திய ரயில்வே துறையை நவீன தொழில்நுட்ப வசதிக்கு ஏற்ப மாற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாடு முழுதும், 200க்கும் மேற்பட்ட … Read more

“நித்தியானந்தா என நினைத்து எனது ஆசிரமத்தை இடித்துவிட்டனர்!" – பல்லடம் சாமியார் போலீஸில் புகார்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் காவல் நிலையத்துக்கு திங்கள்கிழமை மாலை, காரில் வந்தவரைப் பார்த்து போலீஸ் மட்டுமின்றி அங்கிருந்த பொதுமக்களுக்கும் வியப்பு கலந்த ஆச்சர்யம் ஏற்பட்டது. காரணம் வந்தவரின் நடை, உடை, பாவனை அச்சு அசலாக நித்தியானந்தாவைப் போல் இருந்ததுதான் கோவை செல்வபுரத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரானந்தா. இவர் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆன்மிகப் பணி மேற்கொண்டு வருகிறார். காவல் நிலையம் பல்லடத்தில் தனது ஆன்மிகப் பணியை விரிவுபடுத்த ஏதுவாக காரணம்பேட்டை அருகே செல்வகுமார் என்பவருக்குச் … Read more

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி20 போட்டி: விராட் கோலிக்கு ஓய்வு

மும்பை:தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் விராட் கோலிக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இரு டி20 போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்து வருகிறது.

குளிர்பானத்தில் ஆசிட் கலந்துகொடுத்த சக மாணவன்? – சிகிச்சையில் 6-ம் வகுப்பு சிறுவன்; என்ன நடந்தது?

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகேவுள்ள மெதுக்கும்மல் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவன் அதங்கோடு பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 24-ம் தேதி பள்ளியில் காலாண்டு தேர்வு முடிந்து வெளியே வந்துள்ளான். அந்த சமயத்தில் பள்ளி வளாகத்தில் வைத்து இந்தச் சிறுவனுக்கு மற்றொரு மாணவன் குளிர்பானம் குடிக்க கொடுத்துள்ளான். அதை குடிக்கும்போது சிறுவனுக்கு நெஞ்செரிச்சல் இருந்ததாகக் கூறப்படுகிறது. சிறிது குடித்த உடனே விளையாடிக்கொண்டிருந்த மற்றொரு சிறுவன் இவன்மீது மோதியதில் … Read more

பெண் மருத்துவரை மேற்படிப்பிற்கான கலந்தாய்வில் அனுமதிக்குமாறு மத்திய மருத்துவ சேர்க்கை குழுவிற்கு ஐகோர்ட் ஆணை

சென்னை: பெண் மருத்துவரை மேற்படிப்பிற்கான கலந்தாய்வில் அனுமதிக்குமாறு மத்திய மருத்துவ சேர்க்கை குழுவிற்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்தவரை மணமுடித்தால், பிறப்பிடம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்று மறுக்கப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. புதுச்சேரி மருத்துவர் ஹேமா, மேற்படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்காக பிறப்பிடம், ஓ.பி.சி. சான்று கோரி விண்ணப்பித்தார். திருக்கோவிலூரை சேர்ந்தவரை மணந்து கொண்டதால், பிறப்பிட சான்று, ஓ.பி.சி. சான்று வழங்க மறுத்து தாசில்தார் உத்தரவிட்டார். புதுச்சேரி தாசில்தாரர்உத்தரவுக்கு எதிராக ஹேமா தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வறுமை, வேலையின்மையை சரி செய்ய வேண்டும்: ஆர்எஸ்எஸ் பொதுச்செயலர்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: நாட்டில் வறுமை, வேலையின்மை என்பது நாட்டின் முக்கிய பிரச்னைகள் என்றும் அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே கூறியுள்ளார். ஆர்எஸ்எஸ் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே பேசியதாவது: கடந்த சில ஆண்டுகளில் நாடு பல்வேறு துறைகளில் முன்னேறி உள்ளது. இருப்பினும், சில துறைகளில் நாம் சிக்கல்களை எதிர்கொண்டு வருவது உண்மைதான். வறுமை என்பது … Read more