"செங்கலைக் காட்டியவர் தற்போது எய்ம்ஸ் குறித்துப் பேச மறுப்பது ஏன்?" – ஆர்.பி.உதயகுமார் கேள்வி

“எய்ம்ஸ்க்காக எடப்பாடியார் ஒதுக்கிய நிலம் இங்கே உள்ளது, செங்கலைக் காட்டிய உதயநிதி எங்கே?” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியிருக்கிறார். ஆர்.பி.உதயகுமார் இது தொடர்பாக அவர் விடுத்திருக்கும் அறிக்கையில், “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்று அம்மாவும், எடப்பாடியாரும் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தியதன் விளைவால் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2015-ம் ஆண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு 2019-ம் ஆண்டு பிரதமர் அடிக்கல் நாட்டினார். தமிழகத்தில் 37 அரசு மருத்துவமனைகள் இருந்தாலும், எய்ம்ஸ் மருத்துவமனை … Read more

காங்கிரஸ் மூத்த தலைவர் துப்டன் டெம்பா காலமானார்

இட்டாநகர்: காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான துப்டன் டெம்பா நேற்றிரவு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 63. அவர் கடந்த வியாழகிழமை அன்று வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து சிகிச்சை பலனின்றி காலமானார். தீவிர அரசியலில் சேருவதற்கு முன்பு, டெம்பா ஒரு அதிகாரத்துவ அதிகாரியாக இருந்தார். புதுடெல்லியில் உள்ள ஜேஎன்யுவில் சர்வதேச உறவுகளில் எம்.ஏ மற்றும் டிப்ளமசியில் எம்.பில் பட்டம் பெற்றார். … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,559,176 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.59 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,559,176 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 625,939,355 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 605,510,569 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 39,873 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வீரஆஞ்சநேயர் திருக்கோயில், களம்பூர்

அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில், திருவண்ணாமலை மாவட்டம், களம்பூரில் அமைந்துள்ளது. களம்பூர் கடைவீதியில் 55 ஆண்டுகளுக்கு முன் வைகுண்ட ஏகாதசி அன்று மின்சாரக் கம்பியில் சிக்கி குரங்கு ஒன்று உயிரிழந்தது. அதை நாராயணசாமி என்பவர் சாலை ஓரத்தில் குழி தோண்டி புதைத்தார். அதன் அருகில் ஆஞ்சநேயர் கோயில் கட்டினார். காலப்போக்கில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இணைந்து 23 அடி உயரத்தில் அஞ்சலிஹஸ்த நிலையில் வீர ஆஞ்சநேயர் சிலை நிறுவினர். தற்போது அதற்கும் பூஜைகள் நடந்து வருகிறது. ஆரணியை சுற்றியுள்ள … Read more

அக்-08: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

மதம் மாறியவர்களுக்கு எஸ்.சி., அந்தஸ்து; ஆய்வு செய்ய மூவர் ஆணையம் அமைப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி : மதம் மாறியவர்களுக்கு பட்டியலின அந்தஸ்து வழங்குவது குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சாசனம் 1950ல் இயற்றப்பட்டு அவ்வப்போது அதில் திருத்தங்களும் செய்யப்பட்டு வருகின்றன. இந்த சாசனத்தில், ஹிந்து, சீக்கிய மற்றும் புத்த மதத்தை பின்பற்றும் பட்டியலின மக்களுக்கு மட்டுமே அதற்குரிய சலுகைகள் வழங்கப்படும் எனவும், இவற்றைத் தவிர மற்ற மதத்தை பின்பற்றுவோர் … Read more

முலாயம் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்| Dinamalar

குருகிராம் : உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ், 82, உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது .உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேல் சிகிச்சைக்காக கடந்த ஆகஸ்ட் 22ல் ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் குழுவினர் அவருக்கு தீவிர … Read more

நெருங்கும் பொருளாதார மந்த நிலை : பன்னாட்டு நிதியத்தின் கணிப்பு| Dinamalar

புதுடில்லி :உலக பொருளாதார வளர்ச்சி குறித்த தன்னுடைய எதிர்பார்ப்பை, மீண்டும் குறைத்து அறிவித்துள்ளது, பன்னாட்டு நிதியம். தற்போதைய சூழலை வைத்து பார்க்கும்போது, உலக பொருளாதார வளர்ச்சி, நடப்பாண்டிலும் அடுத்த ஆண்டிலும் சரிவைக் காணும் என்று பன்னாட்டு நிதியம் தெரிவித்து உள்ளது.இது குறித்து, பன்னாட்டு நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டாலினா ஜார்ஜீவா கூறியதாவது: நிலைமைகள் சரியாகிவிடும் என்பதற்குள்ளாகவே விஷயங்கள் மோசமாகிவிடும் போல் தெரிகிறது.பிப்ரவரியில் துவங்கிய ரஷ்ய படையெடுப்பு, பன்னாட்டு நிதியத்தின் கணிப்பை பெரிதும் மாற்றிவிட்டது. போர் காரணமாக, உலகின் … Read more

பிசிசிஐ அடுத்த தலைவர் ரோஜர் பின்னணி? :

மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னணி தேர்வாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிசிசிஐ- எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி மற்றும் செயலாளராக ஜெய்ஷா ஆகியோர் 2019ம் ஆண்டு பதவியேற்றுக்கொண்டனர். இவர்களின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவுக்கு வருகிறது.இதையடுத்து புதிய தலைவர்களுக்கான தேர்தல் அக்டோபர் 18-ம் தேதி நடக்கிறது. இதில் 13ம் தேதி இந்த தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாளாகும். அக்டோபர் 14ம் … Read more

நாடு முழுதும் சி.என்.ஜி. விலை அதிரடியாக உயர்வு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: நாடு முழுவதும் பி.என்.ஜி., மற்றும் சி.என்.ஜி. காஸ் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டு்ள்ளது. சி.என்.ஜி., எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் டில்லி, நொய்டா, குருகிராம், காஸியாபாத், உள்ளிட்ட பெருநகங்களில் சி.என்.ஜி. விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் டில்லியில் ஒரு கிலோ சி.என்.ஜி. விலை ரூ.75.1 ஆக இருந்த நிலையில் ரூ.3 உயர்ந்து ரூ. 78.1 ஆக உயர்ந்துள்ளது. அதே … Read more