பாட்னா – எர்ணாகுளம் விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.2.2 கோடி மதிப்புள்ள போதை ஆயில் கோவையில் பறிமுதல்

கோவை: பாட்னா – எர்ணாகுளம் விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.2.2 கோடி மதிப்புள்ள போதை ஆயில் கோவையில் பறிமுதல் செய்யப்பட்டுள்திருப்பூர்: ளது. பாட்னா – எர்ணாகுளம் விரைவு ரயில் திருப்பூர் – கோவை இடையே வந்த போது ரயில்வே அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ரயிலின் எஸ்,10 பெட்டியில் இருக்கையின் அடியில் மறைத்து வைத்திருந்த 3 பிளாஸ்டிக் பைகளில் போதை ஆயில் சிக்கியது.

ராஜராஜ சோழன் இந்துவா? சைவமா? வைணவமா? சரத்குமார் காட்டமான பரபரப்பு அறிக்கை!

சென்னை: ராஜராஜ சோழன் இந்துவா? சைவமா? வைணவமா? என்பது தொடர்பான விமர்சனங்கள் குறித்து நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் பரபரப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, மதரீதியிலான விமர்சனங்கள் அதிகரித்து வரும் நிலையில், பொன்னியின் செல்வன் படத்துக்கு பிறகு, அது மேலும் அதிகரித்துள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் இந்துக்களையும், இந்து மக்களையும் அவமதிக்கும் வகையில் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். மேலும், தஞ்சை பிரகதீஸ்வரர் உள்பட பல கோவில்களை கட்டிய,  … Read more

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சேலம், தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூரில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The Ghost Review: கொஞ்சம் பீஸ்ட், விஸ்வாசம், லூசிஃபர் கலந்தால் அண்டர்வேர்ல்டை அடக்கும் கோஸ்ட் ரெடி!

சர்வதேச காவல்துறை அதிகாரியான நாகர்ஜுனா, தன் குடும்பத்தில் நடக்கவிருக்கும் ஒரு கொலையைத் தடுத்து நிறுத்தும் வைபவமே தெலுங்கில் வெளியாகியிருக்கும் `தி கோஸ்ட்’. அரேபியாவின் ஏதோவொரு இடத்தில் ஸ்னைப்பர் வைத்து தீவிரவாதிகளைச் சுட்டு வீழ்த்துகிறார் நாகர்ஜுனா. அவருக்குப் பக்கபலமாக இணைந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சண்டை போடுகிறார் அவரின் துணைவியான சோனல் சௌஹான். இப்படிச் சுட்டுக்கிட்டே இருந்தா எப்படி என யோசிப்பதற்குள் படம் துபாய்க்கு வந்துவிடுகிறது. ‘ரட்சகன்’ படத்திலிருந்தே நாகர்ஜுனாவின் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாது என்பது நாம் எல்லோரும் … Read more

கரூரில் சாலை போடாமலேயே கோடிக்கணக்கில் முறைகேடு நடைபெற்றுள்ளதில் முதலமைச்சரும் கூட்டுக் கொள்ளை! டிடிவி தினகரன்…

சென்னை: கரூரில்  சாலை போடாமலே கோடிக்கணக்கில்  பணம் கையாடல் விவகாரத்தில் முதலமைச்சருடன் கூட்டுக் கொள்ளையோ என்ற சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது என்று அம்மா மக்கள் கட்சி தலைவர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். கரூரில் நடைபெறும் ஊழல் குறித்து அறப்போர் இயக்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில்,  சாலை போடாமலேயே ரூ 5 கோடி சங்கர் ஆனந்த் இன்ஃப்ரா என்னும் ஒப்பந்ததாரருக்கு கரூர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மார்ச் 2022-ல் பணம் கொடுத்து ஊழல் நடந்துள்ளது என … Read more

மிலாதுநபி திருநாளை ஒட்டி இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து

சென்னை: மிலாதுநபி திருநாளை ஒட்டி இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். அமைதியை பரப்பிய முகமது நபி அவர்கள் பிறந்த நாளை நினைவுகூர்ந்து போற்றி கொண்டாடி மகிழ்வோம். உளங்கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக ஆளுநர் ரவி வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமியாக எதிர்கொண்ட பாலியல் தொல்லையின் விளைவு; மகளிடம் காட்டும் ஓவர் பாதுகாப்பு: சரியா?#PennDiary86

எனக்கு 27 வயதாகிறது. நான்கு வயது பெண் குழந்தையின் அம்மா நான். என் குழந்தையிடம் நான் அளவுக்கு அதிகமாகக் காட்டும் பாதுகாப்பு உணர்வு, சரியா, தவறா என்ற குழப்பத்துக்கு விடை காணவே இதை எழுதுகிறேன். Sexual Abuse குடும்ப வன்முறையாகிப்போன இரண்டாவது திருமணம், வாழ அழைக்கும் முதல் கணவர்; முடிவு என்ன? #PennDiary84 குழந்தை பருவத்தில் பாலியல் தொல்லை என்ற கொடூரத்தை எதிர்கொள்ள நேர்ந்த எத்தனையோ பேரில் நானும் ஒருத்தி. எங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் வசித்தவர் … Read more

கார்த்தி சிதம்பரம் ஆதரவு: தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகும் எண்ணம் இல்லை! சசிதரூர்

திருவனந்தபுரம்: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகும் எண்ணம் இல்லை என போட்டி வேட்பாளர் சசிதரூர்  விளக்கமளித்துள்ளார்.  சசிதரூருக்கு ஆதரவு அளிப்பதாக தமிழக எம்.பி. கார்த்தி சிதம்பரம் அறிவித்துள்ளார். கட்சியில் சீர்திருத்த சிந்தனை அவசரமாக தேவைப்படுவதால் சசிதருக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான  தேர்தல் வரும் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து … Read more

சோதனைக்கு மேல் சோதனை: பழுதாகி நின்ற வந்தே பாரத் ரயில்!

டெல்லி – வாரணாசி சென்ற வந்தே பாரத் ரயிலின் சக்கரங்களில் கோளாறு ஏற்பட்டதால், உ.பி.யின் புலந்த்சாகர் மாவட்டத்தில் 6 மணி நேரம் நிறுத்தப்பட்டது. பயணிகள் வேறு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.நேற்றும், நேற்று முன்தினமும் கால்நடைகள் மீது மோதி ரயிலின் முன்பகுதி சேதமானது குறிப்பிடதக்கது.