சென்னையில் 5ஜி சேவை துவக்கியது ஏர்டெல்

சென்னை: நாட்டில் சென்னை உள்ளிட்ட 8 முக்கிய நகரங்களில் இன்று ஏர்டெல் தனது 5ஜி சேவையை தொடங்கியுள்ளது. இந்த 5ஜி சேவையை இன்று முதல் டெல்லி, மும்பை,சென்னை,பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுரி, நாக்பூர் மற்றும் வாராணசி ஆகிய 8 நகரங்களில் ஏர்டெல் நிறுவனம் தொடங்கியுள்ளது. மேலும், இந்த புதிய 5ஜி சேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் 4ஜி சேவைகளுக்கு செலுத்திய கட்டணத்தை செலுத்தியே பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை துறைமுகத்தில் 37 விலை உயர்ந்த மது பாட்டில் கடத்தல்: லாரி டிரைவர் கைது

சென்னை: சென்னை துறைமுகத்தில் இருந்து 37 விலை உயர்ந்த மது பாட்டில்களை கடத்திய லாரி டிரைவர் கைது செய்துள்ளனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் லாரியை சோதனை செய்த போது மது பாட்டில்கள் சிக்கியது. மதுபாட்டில்களை கடத்திய லாரி டிரைவர் பரந்தாமனை (26) துறைமுகம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

“என் மனைவிகூட என்னை இவ்வளவு திட்டியதில்லை!" – லெப்டினன்ட் கவர்னரை கிண்டல்செய்த கெஜ்ரிவால்

இந்தாண்டு மே மாதத்தில் டெல்லிக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் கவர்னர்(எல்.ஜி) வி.கே.சக்சேனாவுக்கும், ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அதிலும் சமீபத்தில், மாநிலத்தின் புதிய கலால் கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக, ஆளுங்கட்சி அமைச்சர் மணீஷ் சிசோடியா மீது சிபிஐ நடவடிக்கை எடுக்குமாறு வி.கே.சக்சேனா உத்தரவிட்டது ஆளுங்கட்சியிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அதன் பின்னர் மணீஷ் சிசோடியாவுக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியதையடுத்து, ரூ.1,400 கோடி கருப்புப் … Read more

டெய்லி மெயில் மீது வழக்கு தொடர்ந்துள்ள இளவரசர் ஹரி, மற்றும் 5 பேர்: தனியுரிமை மீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு

டெய்லி மெயில் நிறுவனத்தின் வெளியீட்டாளர்கள் மீது பிரித்தானிய இளவரசர் ஹரி சட்ட வழக்கு. ANL வியாழனன்று இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி நிராகரித்துள்ளது. பிரித்தானிய இளவரசர் ஹரி, எல்டன் ஜான் மற்றும் பலர் டெய்லி மெயில் நிறுவனத்தின் வெளியீட்டாளர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். செய்தி நிறுவனமான டெய்லி மெயில் அதன் தலைப்புகளில் சட்டவிரோதமான தகவல்களை சேகரித்ததாகக் கூறி அதன் வெளியீட்டாளர் மீது ஆறு பேர் வழக்கு தொடர்ந்துள்ளனர், அதில் பிரித்தானியாவின் இளவரசர் ஹரி மற்றும் பாடகர் … Read more

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தியாகராய நகரில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி தி.நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிக அளவில் தி.நகர் வட்டார பகுதிகளுக்கு வருகைத் தர வாய்ப்புள்ளதைக் கருத்தில் கொண்டுப் பொதுமக்களின் வசதிக்காகவும் போக்குவரத்தினைச் சீரமைக்கும் நோக்கிலும் 08.10.2022 முதல் 24.10.2022 வரை, தி.நகர் பகுதியில் சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை சார்பில் கீழ்கண்ட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களும் வணிகர்களும் போக்குவரத்து காவல் துறையினருக்குத் தக்க ஒத்துழைப்பை நல்கக் கேட்டுக் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,556,949 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.56 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,556,949 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 625,285,856 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 605,099,684 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 39,911 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜனாதிபதி குறித்து சர்ச்சை பேச்சு : காங்., பிரமுகருக்கு கண்டனம்| Dinamalar

புதுடில்லி :ஜனாதிபதி திரவுபதி முர்மு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்கிரஸ் பிரமுகர் உதித் ராஜுக்கு, பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி திரவுபதி முர்மு சமீபத்தில் குஜராத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் அவர், ‘நாட்டின் மொத்த உப்பு உற்பத்தியில் குஜராத்தின் பங்கு மட்டும், 76 சதவீதம். இதன் வாயிலாக, நம் நாட்டு மக்களில் பெரும்பாலானோர் குஜராத் உப்பை சாப்பிடுகின்றனர் எனக் கூறலாம்’ என்றார்.காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான உதித் ராஜ், இதை … Read more

நட்சத்திர பலன்கள்: அக்டோபர் 7 முதல் 13 வரை #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி: தென் ஆப்பிரிக்கா வெற்றி

லக்னோ: லக்னோவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் மழை காரணமாக போட்டி தொடங்குவதற்கு தாமதம் ஏற்பட்டது. இதனால் போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன் படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டை இழந்து 249ரன்களை சேர்ந்தது. 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா, இந்திய அணி 40 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 240 … Read more

அக்-07: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.