வார ராசிபலன்: 07/10/2022 முதல் 13/10/2022 வரை! வேதாகோபாலன்

மேஷம் சோம்பலைத் தவிர்ப்பது நல்லது. ஆபீஸ் தொடர்பான பணிகள் கொஞ்சம் தாமதப்பட்டாலும்கூட நல்லபடியா முடிஞ்சுடும். குடும்பத்துல இருக்கறவங்க கூட, ஹாப்பியாப் பொழுது போகும்.  தள்ளிப்போட்ட விஷயங்களை உடனுக்குடன் முடிச்சுடப் பாருங்க. கற்பனை பயங்களால் கவலை அடைய வேணாம். ஃப்ரெண்ட்ஸ்கூட இத்தனை நாளறா இருந்துக்கிட்டிருந்த மனஸ்தாபங்கள் விலகும். வாக்கு வாதங்கள் எதுவும் செய்ய வேணாங்க. ஏதாச்சும் விவாதம் நடந்துக்கிட்டிருந்தா அந்த எடத்தைவிட்டு நீங்க வாயை மூடிக்கிட்டு நகர்ந்து வந்துடுங்க. கடன் குடுக்கறதையும் வாங்கறதையும் தவிர்ப்பது நல்லது. எப்போதோ செய்த … Read more

திருப்பூர் குழந்தைகள் காப்பகத்தில் 3 குழந்தைகள் உயிரிழப்பு தொடர்பாக விசாரணை குழு அமைப்பு: தமிழக அரசு

திருப்பூர்: திருப்பூர் திருமுருகன்பூண்டியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் 3 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் விவேகானந்தா சேவாலயம் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 குழந்தைகள நேற்று உயிரிழந்துள்ளனர். குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி மணிவாசகம் தலைமையில் கமிட்டி நியமனம் செய்துள்ளனர். தமிழ்நாடு அரசு நியமித்துள்ள கமிட்டி இன்று விசாரணையை தொடங்கவுள்ளது என்று தகவல் அளித்துள்ளனர்.  

அடுத்த மாதம் முதல் தனியார் விமானத்திலும் செல்லப்பிராணிகள் பயணிக்கலாம் 15-ந் தேதி முன்பதிவு தொடங்குகிறது

புதுடெல்லி, தற்போது, ஏர் இந்தியா விமானங்களில் மட்டுமே செல்லப்பிராணிகளுடன் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. இந்தநிலையில், ‘ஆகாசா ஏர்’ என்ற தனியார் விமான நிறுவனமும் தங்கள் விமானங்களில் செல்லப்பிராணிகளை அனுமதிக்க முடிவு செய்துள்ளது. கடந்த ஆகஸ்டு 7-ந் தேதி, இந்த நிறுவனம் விமான போக்குவரத்தை தொடங்கியது. 6 விமானங்களை கொண்டுள்ளது. 30 தினசரி சேவைகளை இயக்கி வருகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லியில் இருந்து விமான சேவையை தொடங்குகிறது. இதையொட்டி, ‘ஆகாசா ஏர்’ விமான நிறுவன அதிகாரிகள் கூறும் போது, நவம்பர் … Read more

ஈரோடு: கிராம வங்கியிலிருந்து ரூ.1 கோடி மதிப்பிலான தங்க நகைகளுடன் மாயமான மேலாளர்! – அச்சத்தில் மக்கள்

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தை அடுத்துள்ள டி.ஜி.புதூரில் தமிழ்நாடு கிராம வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் சுற்றுப்பகுதியிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த 2 ஆயிரம் பேர் கணக்கு வைத்து வரவு-செலவு செய்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள். இந்த நிலையில், வங்கியின் மேலாளராக இருந்த மணிகண்டன், வங்கியின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 1,800 கிராம் தங்க நகைகளுடன் மாயமாகி விட்டதாக குற்றப்பிரிவு போலீஸில் வங்கி நிர்வாகத் தரப்பில் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீஸாரும், வங்கியின் … Read more

சென்னையில் 5ஜி சேவை துவக்கியது ஏர்டெல்

சென்னை: நாட்டில் சென்னை உள்ளிட்ட 8 முக்கிய நகரங்களில் இன்று ஏர்டெல் தனது 5ஜி சேவையை தொடங்கியுள்ளது. இந்த 5ஜி சேவையை இன்று முதல் டெல்லி, மும்பை,சென்னை,பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுரி, நாக்பூர் மற்றும் வாராணசி ஆகிய 8 நகரங்களில் ஏர்டெல் நிறுவனம் தொடங்கியுள்ளது. மேலும், இந்த புதிய 5ஜி சேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் 4ஜி சேவைகளுக்கு செலுத்திய கட்டணத்தை செலுத்தியே பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை துறைமுகத்தில் 37 விலை உயர்ந்த மது பாட்டில் கடத்தல்: லாரி டிரைவர் கைது

சென்னை: சென்னை துறைமுகத்தில் இருந்து 37 விலை உயர்ந்த மது பாட்டில்களை கடத்திய லாரி டிரைவர் கைது செய்துள்ளனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் லாரியை சோதனை செய்த போது மது பாட்டில்கள் சிக்கியது. மதுபாட்டில்களை கடத்திய லாரி டிரைவர் பரந்தாமனை (26) துறைமுகம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

“என் மனைவிகூட என்னை இவ்வளவு திட்டியதில்லை!" – லெப்டினன்ட் கவர்னரை கிண்டல்செய்த கெஜ்ரிவால்

இந்தாண்டு மே மாதத்தில் டெல்லிக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் கவர்னர்(எல்.ஜி) வி.கே.சக்சேனாவுக்கும், ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அதிலும் சமீபத்தில், மாநிலத்தின் புதிய கலால் கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக, ஆளுங்கட்சி அமைச்சர் மணீஷ் சிசோடியா மீது சிபிஐ நடவடிக்கை எடுக்குமாறு வி.கே.சக்சேனா உத்தரவிட்டது ஆளுங்கட்சியிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அதன் பின்னர் மணீஷ் சிசோடியாவுக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியதையடுத்து, ரூ.1,400 கோடி கருப்புப் … Read more

டெய்லி மெயில் மீது வழக்கு தொடர்ந்துள்ள இளவரசர் ஹரி, மற்றும் 5 பேர்: தனியுரிமை மீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு

டெய்லி மெயில் நிறுவனத்தின் வெளியீட்டாளர்கள் மீது பிரித்தானிய இளவரசர் ஹரி சட்ட வழக்கு. ANL வியாழனன்று இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி நிராகரித்துள்ளது. பிரித்தானிய இளவரசர் ஹரி, எல்டன் ஜான் மற்றும் பலர் டெய்லி மெயில் நிறுவனத்தின் வெளியீட்டாளர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். செய்தி நிறுவனமான டெய்லி மெயில் அதன் தலைப்புகளில் சட்டவிரோதமான தகவல்களை சேகரித்ததாகக் கூறி அதன் வெளியீட்டாளர் மீது ஆறு பேர் வழக்கு தொடர்ந்துள்ளனர், அதில் பிரித்தானியாவின் இளவரசர் ஹரி மற்றும் பாடகர் … Read more

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தியாகராய நகரில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி தி.நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிக அளவில் தி.நகர் வட்டார பகுதிகளுக்கு வருகைத் தர வாய்ப்புள்ளதைக் கருத்தில் கொண்டுப் பொதுமக்களின் வசதிக்காகவும் போக்குவரத்தினைச் சீரமைக்கும் நோக்கிலும் 08.10.2022 முதல் 24.10.2022 வரை, தி.நகர் பகுதியில் சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை சார்பில் கீழ்கண்ட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களும் வணிகர்களும் போக்குவரத்து காவல் துறையினருக்குத் தக்க ஒத்துழைப்பை நல்கக் கேட்டுக் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,556,949 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.56 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,556,949 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 625,285,856 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 605,099,684 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 39,911 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.