சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி தற்கொலை – என்ன நடந்தது?!

உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் 17 வயது காது கேளாத, வாய் பேச முடியாத சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, 21 வயது இளைஞன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட அந்த இளைஞர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, காவல்துறை அவரை தேடிவந்தது. அவர் அலிகர் நகரில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. தற்கொலை இது தொடர்பாக காவல்துறை, “பாலியல் வன்கொடுமை குற்றவாளி அலிகாரில் மறைந்திருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது சகோதரருடன் சென்றிருக்கிறார். பின்னர் … Read more

சென்னையில் அதிகாலை முதல் தொடர்ந்து பெய்யும் சாரல் மழை…

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று இதிகாலை முதல் தொடர்ந்து சாரல் மழை போல மிதமான மழை பெய்து வருவதால் பொதுமக்கள் குதூகலமாக காணப்படுகின்றனர். அதே வேளையில் விஜயதசமி  வியாபாரம் படுத்துவிட்டதாக, சாலையோர வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காலை முதல் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. கிண்டி, அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், தி.நகர், சைதாப்பேட்டை, பெரம்பூர், மாதவரம், இசிஆர், ஓஎம்ஆர் உள்பட பல பகுதிகளில் காலை முதலே … Read more

இமாச்சல பிரதேசம் பிலாஸ்பூரில் அதிநவீன எய்ம்ஸ் மருத்துவமனை: பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

இமாச்சல பிரதேசம்: இமாச்சல பிரதேசத்தில் 1,470 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பிலாஸ்பூரில் அதிநவீன எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், ஒன்றிய  அமைச்சர் அனுராக் தாக்கூர், பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

சைபர் குற்றyத்தை தடுக்க வெளிநாட்டு போலீசுடன் இணைந்து சிபிஐ அதிரடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: நாடு முழுவதும் சைபர் குற்றங்களை தடுக்க ‘ஆப்ரேஷன் சக்ரா’ என்ற பெயரில் 18 மாநிலங்களில் 105 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது. இதில் கோடிக்கணக்கில் பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் இணைய வழியிலான சைபர் குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிரித்து வருகிறது. போலி கால்சென்டர் மூலமாக இணைய வழியில் பண மோசடி, தகவல் திருட்டு உள்பட பல குற்றங்களால் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து … Read more

`வள்ளலார் எனும் ஆன்மிகப் புரட்சியாளர்' – 200 வது பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு!

கடலூர் மாவட்டம் வடலூர் அருகில் இருக்கும் மருதூரில் 1823-ம் ஆண்டு அக்டோபர் 5-ந் தேதி, ராமையாப்பிள்ளை, சின்னம்மை தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் ராமலிங்கம். வள்ளலார் சிறுவயது முதலே தெய்வ பக்தியில் திளைத்த ராமலிங்கம், ஸ்தோத்திரப்பாடல்கள் பாடி மகிழ்ந்தார். இவரே இவரே பின்னாளில் வள்ளலார் என போற்றப்பட்டார். வள்ளலார் கருணை ஒன்றே இறைவனை அடைய போதுமான சாதனம் என்றார். ஜீவகாருண்யத்தால் மட்டுமே இறை நிலையை எட்ட முடியும் என்றார். வள்ளலார் பிறந்த நாள் ‘அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி; தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி’ … Read more

மங்கள்யான் செயலிழந்தது…! இஸ்ரோ அறிவிப்பு…

ஸ்ரீஹரிகோட்டா:  செவ்வாய்க்கோளை ஆய்வு செய்வதற்கான அனுப்பி வைக்கப்பட்ட மங்கள்யான் செயற்கை கோள் கடந்த சில ஆண்டுகளாக செவ்வாய் கோளை சுற்றி வந்த நிலையில், அது செயலிழந்து விட்டதாக இஸ்ரோ அறிவித்து உள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, கடந்த 2013 நவம்பர் 5-ம் தேதி  சூரிய குடும்பத்தில் உள்ள செவ்வாய் கோளை ஆராய்ச்சி செய்வதற்காக பிஎஸ்எல்வி-சி25 ராக்கெட் மூலம் மங்கள்யான் விண்கலத்தை விண்ணில் ஏவியது. இந்த விண்கலம் கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி … Read more

கோத்தகிரி – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில சுற்றுலா பயணிகளை விரட்டிய காட்டுயானைகள்…

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி – மேட்டுப்பாளையம் மலைபாதையில் குட்டியுடன் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளது. அவ்வப்போது உணவு, மற்றும் தண்ணீருக்காக சாலையை கடக்கின்றன. இந்நிலையில் முள்ளூர் என்ற பகுதியில் காட்டுயானை சாலையை கடக்க முயன்ற போது சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுக்க முயன்றனர். காட்டுயானைகள் ஆக்ரோஷமாக வந்ததை கண்ட சுற்றுலா பயணிகள் ஓட்டம் பிடித்தனர். பின்னர் காட்டுயானைகள் தேயிலை தோட்டம் வழியாக வனப்பகுதிக்குள் சென்றது.

அதிவேகமாக வந்த கார்; மும்பை கடல்பாலத்தில் நிறுத்தியிருந்த கார்கள் மீது மோதியதில் 5 பேர் பலி | Video

மும்பையில் பாந்த்ரா-ஒர்லி இடையே நடுக்கடலில் பாலம் கட்டப்பட்டு இருக்கிறது. இந்த கடல் பாலத்தில் செல்ல கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மும்பையின் ஒரு அடையாளமாக விளங்கும் இந்த கடல் பாலத்தில் அடிக்கடி தற்கொலை சம்பவங்கள் நடப்பதுண்டு. காரை கடல் பாலத்தின் மத்திய பகுதிக்கு ஓட்டிச்சென்று பாலத்தில் இருந்து கடலில் குதித்து விடுவது என சில விரும்பதகாத சம்பவங்கள் நடந்தது. இதனால் கடல் பாலத்தில் எங்கும் வாகனங்களை தேவையில்லாமல் நிறுத்தக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் இந்த பாலத்தில் வாகனங்கள் எப்போதும் … Read more

துபாயில் பிரமாண்டமான இந்து கோவில்… ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் திறந்து வைத்தார்.. புகைப்படங்கள்…

துபாயில் பிரமாண்டமான இந்து கோவில் அக்டோபர் 4ந்தேதி (நேற்று) திறக்கப்பட்டு உள்ளது. ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் திறந்து வைத்தார். இந்த கோவிலில் இன்றுமுதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. துபாயின் ஜபேல் அலி பகுதியில்உள்ள பழமையான கோவிலை புதுப்பிக்கும் வகையில், கடந்த 2020 ஆண்டு  அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த கோவில் சிந்தி குரு தர்பாரின் மிக பழமை வாய்ந்த கோயிலாகும்.  அதன்படி, இந்த கோவில்  148 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வந்த நிலையில், … Read more

கலைஞர் கருணாநிதியின் பேனா நினைவு சின்னம்: தமிழக அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம்

சென்னை: கலைஞர் கருணாநிதிக்கு கடலின் நடுவே பேனா சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஒன்றிய சுற்றுசூழல் மற்றும் காலநிலை துறை தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை தாக்கல் செய்ய பொதுப்பணித்துறைக்கு உத்தரவு அளித்துள்ளது.