சிங்கப்பூரில் குடும்ப அலுவலகம் : முகேஷ் அம்பானி துவக்குகிறார்

மும்பை: ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, தன்னுடைய குடும்ப முதலீடுகளை கவனித்துக்கொள்வதற்காக குடும்ப அலுவலகத்தை சிங்கப்பூரில் அமைக்கிறார்.குடும்ப அலுவலகம் என்பது, தனியாருக்கான பிரத்யேக நிறுவனமாகும். ஒரு பணக்கார குடும்பத்திற்கான முதலீட்டு மற்றும் சொத்து மேலாண்மையை இவ்வலுவலகம் கையாளும். இப்படி ஒரு அலுவலகத்தை ஒருவர் அமைப்பதன் குறிக்கோள், தன்னுடைய தலைமுறைகளுக்கு செல்வத்தை திறம்பட பெருக்கி, வழங்குவதற்கான ஏற்பாடாகும்.உலகின் பெரும் பணக்காரர்கள் பலர், அண்மைக் காலமாக, சிங்கப்பூரில் குடும்ப அலுவலகங்களை துவக்கி வருகின்றனர்.கடந்த 2020ல், சிங்கப்பூரில் 400 … Read more

தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க மறுத்து அண்ணா பல்கலை. பிறப்பித்த உத்தரவு ரத்து: ஐகோர்ட்

தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க மறுத்து அண்ணா பல்கலைகழகம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. சென்னை பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி கல்லூரி, ஈரோடு ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பொறியியல் கல்லூரிகள் தாக்கல் செய்த மனு மீதான விசரணையில் 4 வாரங்களில் பல்கலைக்கழக மானியக்குழு சுதந்திரமாக முடிவெடுக்க நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை சென்ட்ரல்-ஹவுரா விரைவு ரயில் புறப்பாடு ஒன்றரை மணிநேரம் தாமதம்: தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: இன்று இரவு 7.15-க்கு புறப்பட இருந்த சென்னை சென்ட்ரல்-ஹவுரா விரைவு ரயில் இரவு 8.45-க்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இணை ரயில் தாமதத்தால் சென்ட்ரல் – ஹவுரா விரைவு ரயில் புறப்படுவதில் ஒன்றரை மணிநேரம் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

பாலியல் கொடுமைக்கு ஆளாகும் பட்டியலினப் பெண்களில் மூன்றில் ஒருவர் குழந்தைகள்- ஆய்வில் தகவல்!

பி.யூ.சி.எல் (PUCL – People’s Union for Civil Liberties) அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட ஓர் ஆய்வறிக்கையில், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் ஆதிதிராவிட பெண்களில் மூன்றில் ஒருவர் குழந்தை என்று தெரிவித்துள்ளது. `பட்டியலின சாதிகள் மற்றும் பட்டியலின பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் (SC/ST (PoA) சட்டம்), 1989 – தமிழ்நாடு நிலை 2021’ என்ற பெயரில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மீது நிகழும் வன்முறை குறித்து இந்த ஆய்வில் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதன் முடிவில், 2021-ம் … Read more

பாட்னா – எர்ணாகுளம் விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.2.2 கோடி மதிப்புள்ள போதை ஆயில் கோவையில் பறிமுதல்

கோவை: பாட்னா – எர்ணாகுளம் விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.2.2 கோடி மதிப்புள்ள போதை ஆயில் கோவையில் பறிமுதல் செய்யப்பட்டுள்திருப்பூர்: ளது. பாட்னா – எர்ணாகுளம் விரைவு ரயில் திருப்பூர் – கோவை இடையே வந்த போது ரயில்வே அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ரயிலின் எஸ்,10 பெட்டியில் இருக்கையின் அடியில் மறைத்து வைத்திருந்த 3 பிளாஸ்டிக் பைகளில் போதை ஆயில் சிக்கியது.

ராஜராஜ சோழன் இந்துவா? சைவமா? வைணவமா? சரத்குமார் காட்டமான பரபரப்பு அறிக்கை!

சென்னை: ராஜராஜ சோழன் இந்துவா? சைவமா? வைணவமா? என்பது தொடர்பான விமர்சனங்கள் குறித்து நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் பரபரப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, மதரீதியிலான விமர்சனங்கள் அதிகரித்து வரும் நிலையில், பொன்னியின் செல்வன் படத்துக்கு பிறகு, அது மேலும் அதிகரித்துள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் இந்துக்களையும், இந்து மக்களையும் அவமதிக்கும் வகையில் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். மேலும், தஞ்சை பிரகதீஸ்வரர் உள்பட பல கோவில்களை கட்டிய,  … Read more

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சேலம், தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூரில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The Ghost Review: கொஞ்சம் பீஸ்ட், விஸ்வாசம், லூசிஃபர் கலந்தால் அண்டர்வேர்ல்டை அடக்கும் கோஸ்ட் ரெடி!

சர்வதேச காவல்துறை அதிகாரியான நாகர்ஜுனா, தன் குடும்பத்தில் நடக்கவிருக்கும் ஒரு கொலையைத் தடுத்து நிறுத்தும் வைபவமே தெலுங்கில் வெளியாகியிருக்கும் `தி கோஸ்ட்’. அரேபியாவின் ஏதோவொரு இடத்தில் ஸ்னைப்பர் வைத்து தீவிரவாதிகளைச் சுட்டு வீழ்த்துகிறார் நாகர்ஜுனா. அவருக்குப் பக்கபலமாக இணைந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சண்டை போடுகிறார் அவரின் துணைவியான சோனல் சௌஹான். இப்படிச் சுட்டுக்கிட்டே இருந்தா எப்படி என யோசிப்பதற்குள் படம் துபாய்க்கு வந்துவிடுகிறது. ‘ரட்சகன்’ படத்திலிருந்தே நாகர்ஜுனாவின் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாது என்பது நாம் எல்லோரும் … Read more

கரூரில் சாலை போடாமலேயே கோடிக்கணக்கில் முறைகேடு நடைபெற்றுள்ளதில் முதலமைச்சரும் கூட்டுக் கொள்ளை! டிடிவி தினகரன்…

சென்னை: கரூரில்  சாலை போடாமலே கோடிக்கணக்கில்  பணம் கையாடல் விவகாரத்தில் முதலமைச்சருடன் கூட்டுக் கொள்ளையோ என்ற சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது என்று அம்மா மக்கள் கட்சி தலைவர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். கரூரில் நடைபெறும் ஊழல் குறித்து அறப்போர் இயக்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில்,  சாலை போடாமலேயே ரூ 5 கோடி சங்கர் ஆனந்த் இன்ஃப்ரா என்னும் ஒப்பந்ததாரருக்கு கரூர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மார்ச் 2022-ல் பணம் கொடுத்து ஊழல் நடந்துள்ளது என … Read more