“தாக்கரேயிடம் எஞ்சியிருக்கும் சிலரால் சேனாவை உருவாக்க முடியாது" – பட்னாவிஸ் மனைவி அம்ருதா

மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதா பிரபல தனியார் வங்கியில் உயர் அதிகாரியாக இருக்கிறார். கடந்த முறை மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியில் இருந்த போது மகாராஷ்டிரா அரசு ஊழியர்களின் சம்பள கணக்கை தான் வேலை செய்த வங்கியில் திறக்கவேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் சர்ச்சையும் ஏற்பட்டது. தற்போது மீண்டும் பட்னாவிஸ் துணை முதல்வராக பதவியேற்று இருக்கிறார். இது குறித்து அம்ருதா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், கூறியதாவது, “எனது கணவர் எப்போதும் … Read more

அமெரிக்க குழு வருகை…கடும் கோபத்தில் சீனா: தைவானை சுற்றி அதிதீவிரமாக போர் பயிற்சி

அமெரிக்க சட்டமியற்றுபவர்கள் குழு தைவானுக்கு பயணம். தைவானை சுற்றியுள்ள கடல் பிராந்தியத்தில் சீனா போர் பயிற்சி அமெரிக்காவின் சட்டமியற்றுபவர்கள் குழு தீவு நாடான தைவானுக்கு ஞாயிற்றுக்கிழமை பயணம் மேற்கொண்டதை அடுத்து சீனா தனது போர் பயிற்சியை தைவானை சுற்றியுள்ள கடல் பகுதியில் தொடங்கியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் சுற்றுப்பயணத்தை தொடர்ந்து, அமெரிக்காவின் சென்ட்டர் எட் மார்கி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் தைவான் தலைநகர் தைபேவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு … Read more

பெரியார் சிலை குறித்து அவதூறு: கனல் கண்ணனை கைது செய்தது காவல்துறை…

சென்னை; பெரியார் சிலை குறித்து அவதூறாக பேசிய சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனை புதுச்சேரியில் காவல்துறையினர் கைது செய்தனர். திராவிடர் கழகத்தினரின் புகாரின்பேரில் காவல்துறை கைது செய்துள்ளது. ஆனால் இந்து தெய்வங்கள் குறித்து அவதூறு பேசும் தி.க.க உள்பட பல்வேறு அமைப்புகள் மீது புகார் கூறியும் காவல்துறை நடவடிக்கை எடுப்பது இல்லை என்பது விமர்சினத்துக்குள்ளாகி வருகிறது. இந்து முன்னணி அமைப்பு கடந்த ஒரு மாதமாக ‘இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார பயணம்’ என்ற தொடர் பிரசாரத்தை … Read more

75வது சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து: முதல்வர் ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் வருகை

சென்னை: 75வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து வழங்குகிறார். அமைச்சர்கள் மெய்யநாதன், அனிதா ராதா கிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, தயாநிதி மாறன் ஆகியோர் வருகை தந்தனர். 

உலகின் மிக உயர்ந்த போர்முனையான சியாச்சினில் பறந்த தேசியக்கொடி| Dinamalar

புதுடில்லி: உலகின் மிக உயர்ந்த போர் முனையான சியாச்சின் பனிமலையில் இந்திய ராணுவ வீரர்கள் தேசியக்கொடி ஏற்றியுள்ள வீடியோ வைரலாகியுள்ளது. உலகின் மிக உயர்ந்த மற்றும் அதிக குளிர் நிறைந்த போர் முனையாக சியாச்சின் பனிமலை காணப்படுகிறது. ஏறக்குறைய 23 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள சியாச்சின் பனிமலை, 75 கி.மீ நீளமும், 10 ஆயிரம் சதுர கி.மீ பரப்பளவும் கொண்டது. சியாச்சினில் மைனஸ் 30 முதல் 40 டிகிரி தட்பவெப்ப நிலை காணப்படும். ஹெலிகாப்டர்கள் உதவியுடன் … Read more

முகேஷ் அம்பானி குடும்பத்திற்கு தொலைபேசி மிரட்டல்… கைதான நபரின் அதிர்ச்சி தகவல்!

இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி குடும்பத்திற்கு தொலைபேசி மிரட்டல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வந்த இந்த அழைப்பு குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். ரிலையன்ஸ் நிறுவனத்தின் அறக்கட்டளை மருத்துவமனைக்கு இந்த மிரட்டல் அழைப்பு வந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளன. கிரிக்கெட் மைதானத்தில் முகேஷ் அம்பானி – சுந்தர் பிச்சை சந்திப்பு… என்ன பேசியிருப்பார்கள்? முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் … Read more

“தேசப்பற்றை வளர்க்கும் கட்சியாக பாஜக இருக்கிறது” – வானதி சீனிவாசன் பேச்சு

நாட்டின் 75-வது சுதந்திர தினம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பா.ஜ.க மகளிர் அணி சார்பில் நேற்று சுதந்திர தின வந்தே மாதரம் பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.கவைச்‌ சேர்ந்த எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். கோத்தகிரிக்கு வருகை தந்த அவருக்கு படுகர் இன மக்களின் பாரம்பர்ய உடையை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து படுகர் இன பெண்களுடன் நடனமாடினார்‌. வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ … Read more

எழும்பூர் அருங்காட்சியகத்தில் காந்தி உருவச்சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டீ, எழும்பூர் அருங்காட்சியகத்தில் காந்தி உருவச்சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். இந்தியாவின் 75வது சுதந்திர நாளை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றினார். இதையடுத்து பல்வேறு விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட விருதாளர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார். அதைத்தொடர்ந்து,  சென்னை, எழும்பூர் அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலையை திறந்து வைத்தார். காந்தி தமிழகம் வந்தபோது மேலாடையை … Read more

புதுக்கோட்டை விராலிமலை அருகே கிராமசபை கூட்டத்தை புறக்கணித்த மக்கள்

புதுக்கோட்டை: விராலிமலை லட்சுமணன்பட்டி கிராமசபை கூட்டத்துக்கு ஊராட்சி செயலர் வராததால் மக்கள் கூட்டத்தை புறக்கணித்தனர். களமாவூர் ஊராட்சி செயலாளராக உள்ள சாமிநாதன் கூடுதல் பொறுப்பாக லட்சுமணன்பட்டியையும் கவனித்து வருகிறார். இன்று களமாவூரில் நடந்த கிராமசபை கூட்டத்தில் சாமிநாதன் பங்கேற்காததால் லட்சுமணன்பட்டி கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

சீனாவை வீழ்த்திய இந்தியா.. எப்படி தெரியுமா?

ஆசியா பசிபிக் பகுதியில் உள்ள சிறந்த 200 நடுத்தர வணிகங்களின் பட்டியலை போர்ப்ஸ் ஆசியா, அதன் 2022 பதிப்பில் கடந்த வாரம் வெளியிட்டது. இவை 1 பில்லியனுக்கும் குறைவான வருடாந்திர வருவாய் கொண்ட பொது வர்த்தகம் செய்யப்படும் வணிகங்கள், நடப்பு ஆண்டில் 26 நிறுவனங்களில் இருந்து, 24 நிறுவனங்களாக குறைந்துள்ளது. ஆசிய நாடுகளை பொறுத்தவரை இது இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. பட்டியலில் 22 நிறுவனங்களைக் கொண்டிருந்த சீனாவை விட ஒரு இடம் முன்னேறியுள்ளது. 30 இடங்களுடன் … Read more