பிராந்திய மொழிகளில் சட்டம் எழுதப்பட வேண்டும்: பிரதமர்| Dinamalar

புதுடில்லி: ஏழை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் சட்டங்கள் எளிமையாகவும், பிராந்திய மொழிகளிலும் எழுதப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.குஜராத்தில் நடக்கும் சட்ட அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் மாநாட்டில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: *மிகவும் பழமையான சட்டங்கள் நீக்கப்பட வேண்டும் *சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் நடைமுறைகளுக்கு மாற்று வழிகள் கண்டறியப்படுவதுடன், நீதி கிடைப்பதை எளிதாக்க வேண்டும் *பிற்போக்கான காலனித்துவ சட்டங்களை அகற்றுவதன் மூலம் காலனித்துவத்தின் தடைகளை உடைப்பது நமக்கு … Read more

மொத்த விலை பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 10.7 சதவீதம் ஆக சரிவு!

புதுடெல்லி, மொத்த விலைக் குறியீட்டின் அடிப்படையில் வருடாந்திர பணவீக்க விகிதம் செப்டம்பர் மாதத்தில் 10.7 சதவீதம் ஆக குறைந்துள்ளது. இது வருடாந்திர பணவீக்க விகிதம், 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தை விட அதிகம். கனிம எண்ணெய்கள், உணவுப் பொருட்கள், கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, ரசாயனங்கள் மற்றும் ரசாயனப் பொருட்கள், அடிப்படை உலோகங்கள், மின்சாரம், ஜவுளி போன்றவற்றின் விலைகள் உயர்ந்ததால் கடந்த ஆண்டு இதே மாதத்தைவிட பண வீக்கம் அதிகரித்துள்ளது. மொத்த விலை பணவீக்கம் ஆகஸ்ட் … Read more

மத்திய அரசின் புதிய `மூவ்’ – இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்குத் தயாராகிறதா தென்னிந்தியா?

உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக்குழு தனது 11-வது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் அளித்தது. அதில், எல்லா மாநிலங்களில் ஆங்கிலத்தை விட பிராந்திய மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து இந்தக்குழுவின் துணைத் தலைவரான பிஜேடி கட்சியின் தலைவர் பார்த்ருஹரி மஹ்தாப், “அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு புதிய தேசிய கல்விக் கொள்கையின் படி கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி அல்லது பிராந்திய மொழி இருக்க … Read more

உளுந்தூர்பேட்டை அருகே சமையல் கேஸ் கசிவு: வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மயக்கம்..!!

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே சமையல் கேஸ் கசிவால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மயக்கமடைந்தனர். சரஸ்வதி (40) தனது மகள் சந்தியா (18), சவுமியா (14), மகன் யுவராஜ் (12) ஆகியோருடன் வீட்டில் தூங்கியபோது எரிவாயு கசிந்தது. மீட்கப்பட்ட 4 பேரும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விவகாரம்: தேர்தல் ஆணையர் விளக்கம்

புதுடெல்லி, தேர்தலின்போது கொடுக்கப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றுவது தொடர்பான பரிந்துரைக்கு அரசியல் கட்சிகளின் பதிலுக்காக காத்திருப்பதாக தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் தெரிவித்தார். இமாசல பிரதேச தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார், பின்னர் நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தேர்தலின்போது வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் வாக்குறுதி வழங்க மறுக்கமுடியாத உரிமை உள்ளது. அதை எப்படி நிறைவேற்றுவார்கள் என்பதை அறிய வாக்காளர்களுக்கும் உரிமை உண்டு.எனவே … Read more

புதுக்கோட்டை அரசு ஒப்பந்ததாரர்… 3 நாள்களாக நடைபெற்ற சோதனை; சிக்கிய ஆவணங்கள்?! – ரெய்டு பின்னணி!

புதுக்கோட்டை பெரியார் நகரைச் சேர்ந்தவர் பாண்டித்துரை. இவர் நெடுஞ்சாலைத்துறை அரசு ஒப்பந்ததாரராக இருக்கிறார். கடந்த அ.தி.மு.க ஆட்சி, தற்போதைய தி.மு.க ஆட்சி என தமிழகம் முழுவதும் ஊர் பெயர் பலகை வைத்தல், சாலையில் பிரதிபலிப்பு பலகை வைத்தல் உள்ளிட்ட பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். ஒப்பந்தபணி எடுத்து செய்ததில் தரமற்ற பொருட்களை உபயோகப்படுத்தியதும், வரி ஏய்ப்பு செய்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் பேரில், புதுக்கோட்டை பெரியார் நகரில் உள்ள பாண்டித்துரையின் வீடு … Read more

பெரும்புள்ளிகளை வீடியோ எடுத்து மிரட்டி கோடீஸ்வரியான ஏழைப்பெண்! அரண்மனை வாழ்க்கை… பகீர் தகவல்கள்

அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்களின் அந்தரங்க படங்களை காட்டி மிரட்டி பணம் பறித்த பெண். 4 ஆண்டில் பல கோடிகளுக்கு அதிபதியான பகீர் பின்னணி இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பெரும்புள்ளிகளை வளைத்து போட்டு அவர்களை மிரட்டி பல கோடிகளுக்கு அதிபதியான பெண் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒடிசாவின் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அர்ச்சனா நாக், இப்போது சொகுசு கார்கள், நான்கு உயர் இன நாய்கள் மற்றும் ஒரு வெள்ளை குதிரையுடன் … Read more

ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவி சத்யா வழக்கு; சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னை: பரங்கிமலை ரயில் நிலையத்தில், சக மாணவனால்,  ரயில் முன் தள்ளி விட்டு கொலையான கல்லூரி மாணவி சத்யா வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். காவல்துறையினரின் கட்டப்பஞ்சாயத்தால்தான் இந்த விவகாரம் கொலை வரைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில்  நேற்று முதினம் மதியவேளையில், கல்லூரி மாணவி சத்யாவை அவரது நண்பரான,  சதீஷ் என்பவரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். பின் தப்பியோடிய கொலையாளி கைது செய்யப்பட்டார். மகள் இறந்த துக்கத்தில் … Read more

நில அபகரிப்பு வழக்கு: முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் மாநில தலைவர் கைது..!!

சென்னை: பாஜக ஆதரவு சிறுபான்மை பிரிவு அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் மாநில தலைவர் பாத்திமா அலி கைது செய்யப்பட்டார். நில அபகரிப்பு வழக்கில் பாத்திமா அலியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது.

இந்தியாவில் புதிதாக 2,430 பேருக்கு கோவிட்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,430 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,430 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,46,26,427 ஆனது.கடந்த 24 மணி நேரத்தில், 2,378 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,40,70,935 ஆனது. தற்போது 26,618 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோவிட் காரணமாக 8 பேர் … Read more