‛‛ மக்களிடையே சண்டையை உருவாக்கும் காங்., : அமித்ஷா தாக்கு| Dinamalar

சிம்லா: காங்., வேலை மக்களிடையே சண்டையை உருவாக்குவதும், நெருப்பை மூட்டுவதும், ஆனால் பிரதமர் மோடி வளர்ச்சிக்காக பாடுபடுகிறார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். ஹிமாச்சல் பிரதேசத்திற்கு வருகை தந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிர்மார் நகரில் நடந்த பொது பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது: காங்., வேலை மக்களிடையே சண்டையை உருவாக்குவதும், நெருப்பை மூட்டுவதும், ஆனால் பிரதமர் மோடி வளர்ச்சிக்காக பாடுபடுகிறார். காங்., கட்சியானது, ஆட்சி அதிகாரத்திற்கு … Read more

பசுமைப் பட்டாசுகள் வெடிக்கலாமா? பட்டாசு குறித்த கேள்வி-பதில்கள்! FAQ

தீபாவளி  வந்தாச்சு,  புது துணி எடுத்து, பலகாரமெல்லாம் செஞ்சு,  பட்டாசு எல்லாம் வாங்கி  அமர்க்களமாக கொண்டாட எல்லாரும் தயாரா இருப்பீங்க. தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிக்க ஆரம்பித்துவிடுவதால் ஒலியும், காற்றும் அதிக அளவில் மாசுபடுகிறது. தமிழக அரசு பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை அறிவித்து வருகிறது… வாகனம், தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகையினால் தினமும் சுற்றுச்சூழல் மாசடைவதை விடவா வந்துவிடப்போகிறது. தீபாவளி அன்று ஒருநாள் மட்டும்  வெடிக்கும் பட்டாசுகளால் அந்த அளவுக்கு மாசடைந்து விடுமா? என்று பலரும் கேள்வி … Read more

திமுகவினர் நடந்தும் பள்ளிகளில் கூட தமிழ் கட்டாயம் இல்லை – இந்தி திணிப்பு என்பது திமுகவின் கபட நாடகம்! அண்ணாமலை

சென்னை: இந்தி திணிப்பு என்பது திமுகவின் கபட நாடகம், திமுகவினர் நடந்தும் பள்ளிகளில் கூட தமிழ் கட்டாயம் இல்லை என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் உதயநிதி ஸ்டாலின் இந்தி படங்களை தமிழ்நாட்டில் விநியோகிப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். திமுக இளைஞர் அணி சார்பில் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் மாநிலம் முழுவதும் இன்று நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். … Read more

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நாளை மாலை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்..!!

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நாளை மாலை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. வரும் 17ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடவுள்ள நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறவிருக்கிறது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடக்க உள்ளது.

காங்., ஆட்சியில் சிறப்பு கூறு நிதியில் ஊழல் பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன் குற்றச்சாட்டு| Dinamalar

புதுச்சேரி: காங்., ஆட்சியின்போது, சிறப்பு கூறு நிதியில் ஊழல் நடந்துள்ளதாக பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன் குற்றம்சாட்டியுள்ளார். அவர், கூறியதாவது; புதுச்சேரியில் கடந்த காங்., ஆட்சியில் ஆதிதிராவிட இன மக்கள் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேரடியாக ஆய்வு செய்தோம். அக்கிராமங்களில் சாலை, குடிநீர், மின்சாரம், கழிவறை உள்ளிட்ட வசதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. இவையெல்லாம் நிறைவேற்றப்பட்டதாக மத்திய அரசுக்கு தவறான தகவல் அளித்து, முறைகேடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் ஆதிதிராவிட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட சிறப்பு கூறு நிதி … Read more

“சி.வி.சண்முகத்துக்கும் எனக்கும் இடையே சிண்டு முடியப் பார்க்கிறார்கள்!’’ – கே.பி.முனுசாமி

அதிமுக எம்.எல்.ஏ-வும் அந்தக் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான கே.பி.முனுசாமி, கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம், ‘‘உங்களுக்கும் சி.வி.சண்முகத்துக்கும் ‘ஈகோ’ பிரச்னை நிலவுவதாகவும், அதனால் எடப்பாடி பழனிசாமியை நீங்கள் சந்திக்கச் செல்லவில்லை என்ற தகவல் உலாவுகிறதே?’’ என்ற கேள்வியை செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், ‘“விஷமத்தனமான இந்தக் கேள்விக்கு பதில் சொல்வதற்கே நான் வெட்கப்படுகிறேன். கொள்கைப்பிடிப்புடைய ஒரு தொண்டன் நான். சி.வி.சண்முகம் என்னுடைய தம்பியைப் போன்றவர். அவர் மீது கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கான எண்ணம் எந்த … Read more

பிரபலமான தஞ்சாவூர் தட்டுக்கு அறிவுசார் சொத்துரிமைக்கான தேசிய விருது! தமிழகஅரசு தகவல்…

சென்னை: பிரபலமான தஞ்சாவூர் தட்டுக்கு அறிவுசார் சொத்துரிமைக்கான தேசிய விருது கிடைத்துள்ளதாக  தமிழகஅரசு தெரிவித்து உள்ளது. தஞ்சாவூர் கலைத்தட்டு, தஞ்சாவூர் வீணை, தஞ்சாவூர் ஓவியம், நாச்சியார் கோவில் குத்துவிளக்கு, சுவாமிமலை வெண்கலசிலைகளுக்கு கடந்த 2015ம் ஆண்டு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது தஞ்சாவூர் தட்டுக்கு அறிவுசார் சொத்துரிமைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அரசு நோடல் அதிகாரி சஞ்சய் காந்தி,  இயற்கை பொருட்கள், உற்பத்தி பொருட்கள் என 5 வகையான … Read more

தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு..!!

சென்னை: தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கோவை வடக்கு சட்டம் – ஒழுங்கு துணை ஆணையராக இருந்த மாதவன், சென்னை சைபர் கிரைம் எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சைபர் கிரைம் கண்காணிப்பாளராக இருந்த அசோக்குமார், கோவை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காதலியுடன் சுற்றித் திரிந்த கணவரை பஜாரில் வைத்து வெளுத்த மனைவி| Dinamalar

புதுடில்லி, :புதுடில்லியில் கடைவீதியில் காதலியுடன் சுற்றித் திரிந்த கணவரை, அந்த இடத்திலேயே, அவரது மனைவி அடித்து துவைத்த ‘வீடியோ’ வேகமாகப் பரவியது. புதுடில்லியில் காஜியாபாத் மார்க்கெட் பகுதி, சாதாரணமாகவே மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். பண்டிகை காலம் என்றால் சொல்லவே வேண்டாம். இந்நிலையில், வடமாநிலங்களில் தற்போது கர்வா சவுத் என்ற விழா கொண்டாடப்படுகிறது; இது, நம் ஊர்களில் பெண்கள் தங்களது கணவர் தீர்க்க ஆயுசுடன் இருக்கவேண்டி விரதமிருந்து கொண்டாடும் வரலட்சுமி நோன்பு போன்றது. இதனால் காஜியாபாத் மார்க்கெட்டில் … Read more

சிறுநீரகம் முதல் இதயப் பிரச்னை வரை தவிர்க்க, ரத்த ஓட்டம் சீராக்கும் உணவுகள்! #VisualStory

Blood vessels நம் உடல் உறுப்புகளுக்குத் தேவையான ஆற்றல் ரத்தம் மூலமாகக் கிடைக்கிறது. உடலின் ஒவ்வோர் உறுப்புக்கும் தேவையான ஊட்டச்சத்துக்களையும், ஆக்ஸிஜனையும் ரத்தம் சரியாக வழங்காதபோது, உடலில் பிரச்னை தொடங்குகிறது.   Human body ரத்த ஓட்டம் சீராக இல்லையெனில் சிறுநீரகப் பிரச்னை, உயர் ரத்த அழுத்தம், நரம்பு வீக்கம் போன்ற தீவிர பிரச்னைகள் ஏற்படலாம். அவற்றை தவிர்க்க, ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க வேண்டியது அவசியம். சில நல்ல உணவுகளை உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொள்வது, உடற்பயிற்சி … Read more