EPFO முக்கிய அறிவிப்பு..ஓய்வூதியதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

இந்தியாவில் உள்ள தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம், தொடர்ந்து அறிவிப்புகளை கொடுத்து வருகின்றது. குறிப்பாக மூத்த குடிமக்களின் நலனை கருத்தில் கொண்டு சில அறிவிப்புகளை கொடுத்து வருகின்றது. ஓய்வூதியதாரர்கள் பென்சனை பெற தங்களது ஆயுள் சான்றிதழை வருடா வருடம் கொடுக்க வேண்டியிருக்கும். இதனை மிக எளிதாக அஞ்சலகத்திலேயே பெறும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதனை மூத்த குடி மக்கள் நலனுக்காக அவர்கள் வீடு தேடி சென்று சேவைகளை வழங்கும் வகையில் சேவைகள் … Read more

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி உற்பத்தி இந்தியாவில் தொடக்கம் ~ அதன் தேவைகள் என்ன?

கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோயை ஏற்படுத்தும் Human papillomavirus -க்கு எதிரான தடுப்பூசியை இதுவரை வெளிநாடுகளிலிருந்து பெற்று வந்த நிலையில், தற்போது அதன் உற்பத்தி இந்தியாவிலேயே தொடங்கியிருக்கிறது. கோவாக்சின் தடுப்பூசியைத் தயாரித்த சீரம் நிறுவனம்தான் இந்தத் தடுப்பூசியையும் தயாரிக்கிறது. இதற்கான விலை இன்னும் தீர்மானிக்கப்படாத நிலையில் 200 – 400 ரூபாய் வரை இருக்கலாம் என சீரம் நிறுவனத்தின் செயல் அலுவலர் அதார் பூனவாலா தெரிவித்திருக்கிறார். டாக்டர் டவுட் – கர்ப்பப்பை! முகத்தைப் பார்த்துப் பேசுகிறதா உங்கள் குழந்தை? ஆட்டிசம் … Read more

மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் ஜாமீன் பெற்ற 2 ஆசிரியைகள் காவல்நிலையம் வருகை! வெளியான புகைப்படம்

கள்ளக்குறிச்சி பள்ளி ஆசிரியைகள் கையெழுத்து போட இன்று காவல் நிலையம் வந்தனர். ஸ்ரீமதி வழக்கில் கைதான ஐந்து பேரை நேற்று ஜாமீனில் விடுவித்தது நீதிமன்றம் ஜாமினில் வெளிவந்த கள்ளக்குறிச்சி பள்ளி ஆசிரியைகள் கையெழுத்திட காவல் நிலையத்திற்கு இன்று வருகை தந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் பயின்று வந்த பனிரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பள்ளித் தாளாளர் உள்ளிட்ட ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் … Read more

உ.பி.யில் சாமி சிலையை வைத்து மோசடி… 3 பேர் கைது

உன்னாவ்; உ.பி.யில் சாமி சிலைகளை பூமிக்குள் புதைத்து வைத்து மோசடியில் ஈடுபட்ட 3பேரை காவல்துறை கைது செய்துள்ளது. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி உற்சாகமாக கொண்டாடிவரும் வேளையில், உ.பி.மாநிலம் உன்னாவ்நகரில், 3 பேர் கொண்ட கும்பல் சாமி சிலைகளை வைத்து பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கும்பல் ஆன்லைன் மூலம் சாமி  சிலைகளை வாங்கி, அதை யாருக்கும் தெரியாமல் காட்டுக்குள் எடுத்துச் சென்று குழிதோண்டி புதைத்து வைத்துள்ளது. பின்னர், ஏதேதோ காரணங்கள் கூறி, அந்த … Read more

தூத்துக்குடியில் கடந்த ஒருவார காலமாக தொடர் மழை: உப்பளங்கள் நீரில் மூழ்கி, உப்பு உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கடந்த ஒருவார காலமாக பெய்த தொடர் மழையால் உப்பளங்கள் நீரில் மூழ்கி, உப்பு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழையால் உற்பத்தியை நிறுத்தியதால் கடந்த வாரம் டன் ரூ.2,300க்கு விற்பனையான உப்பு தற்போது ரூ.3,500 வரை உயர்ந்துள்ளது. தற்போது வரை மழை தொடர்வதால் தூத்துக்குடியில் உப்பு விலை வரும் நாட்களில் மேலும் உயரக்கூடும் என கணிக்கப்படுகிறது. 

பி.டி.ஆர். – அண்ணாமலை ட்விட்டரில் சொற்போர்: தமிழ்நாட்டின் சாபக்கேடு VS செருப்புக்குக்கூட சமமில்லை

India bbc-BBC Tamil தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையும் ட்விட்டரில் தொடர்ந்து மோதி வருகின்றனர். இந்நிலையில், நேற்று நிதியமைச்சர் தனது செருப்புக்குக்கூட சமமானவரில்லை என அண்ணாமலை பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் இடையிலான சொற்போர் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நேற்று மாலை ஐந்தேகால் மணியளவில் ஆங்கிலத்தில் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். பிடிஆர் தியாகராஜன் … Read more

இந்தியாவின் பிஎம்ஐ விகிதம் தொடர்ந்து வளர்ச்சி..என்ன காரணம் தெரியுமா?

டெல்லி: இந்தியாவின் உற்பத்தி விகிதம் குறித்தான பி எம் ஐ தரவானது தொடர்ந்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது தொடர்ந்து நாட்டில் தேவையானது மீண்டு வருவதை காட்டுகின்றது. தொடர்ந்து நாட்டின் பணவீக்கம் குறைந்து வரும் நிலையில், சந்தையில் உள்ளீட்டு செலவினங்கள் குறைந்து வருகின்றது. இதன் காரணமாக தேவையானது மீண்டு வரத் தொடங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் பணவீக்க விகிதமானது தொடர்ந்து சரிவடையத் தொடங்கியுள்ளது. இந்தியா தொடந்து இதில் கவனம் செலுத்தணும்.. எதிர்காலத்திற்கு இது தான் நல்லது! … Read more

“தாவுத் இப்ராஹிம் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.25 லட்சம் சன்மானம்!" – என்.ஐ.ஏ அறிவிப்பு

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்படும் தாவுத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கிறான். தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆயுதம், போதைப்பொருள் கடத்தல், இந்தியாவுக்குள் கள்ள நோட்டுகளை கடத்திக் கொண்டு வருதல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறான். ஆனால் தாவுத் தங்கள் நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் கூறி வருகிறது. தாவுத் இப்ராஹிம் மற்றும் அவன் கூட்டாளிகளுக்கு எதிராக தேசிய புலனாய்வு ஏஜென்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கு பதிவுசெய்தது. தாவூத் இப்ராஹிம் அதனடிப்படையில் அமலாக்கப் … Read more

கனடாவில் ஒன்றரை வயது குழந்தை சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு: 3 பொலிஸார் மீது குற்றச்சாட்டு

கனடாவில் ஒன்றரை வயது குழந்தை சுட்டு கொல்லப்பட்ட வழக்கில் 3 பொலிஸார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கழித்து அவர்கள் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். 2020-ஆம் ஆண்டு ஒன்ராறியோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது ஒன்றரை வயதுக் குழந்தை உயிரிழந்தமை தொடர்பில் மூன்று கனேடிய பொலிஸ் அதிகாரிகள் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் புதன்கிழமை அறிவித்தது. நவம்பர் 26, 2020 அன்று ரொறன்ரொவிற்கு வடக்கே சுமார் 100 கிலோமீட்டர் (60 மைல்) … Read more

பல்கலைக்கழகங்களின் வேந்தராக மாநில முதல்வரே நியமனம் செய்யும் மசோதா! கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றம்…

திருவனந்தபுரம்: பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதாவை கேரள சட்டமன்றம்  நிறைவேற்றியது. ஏற்கனவே தமிழநாட்டில் இதுபோன்ற மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது கேரள அரசு நிறைவேற்றி உள்ளது. கேரள மாநிலத்தில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்படும் விஷயத்தில், மாநில முதல்வருக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.  கண்ணூர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான எல்.டி.எஃப் அரசுக்கும் இடையே சில … Read more