புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க சுகாதாரத்துறை பரிந்துரை

புதுச்சேரி: புதுச்சேரியில், காய்ச்சல் காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது. புதுச்சேரியில் கடந்த 10 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதால் சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

\"உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவது நியாயம்தான்..\" சொல்வது போப் ஆண்டவர்

International oi-Jackson Singh வாடிகன்: “உக்ரைனுக்கு சில நாடுகள் ஆயுதங்கள் வழங்குவது நியாயப்படி ஏற்றுக்கொள்ளத்தக்கது தான்” என்று கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவர் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். பொதுவாக, உலகில் எங்கேனும் போர் நடந்தால், அதன் உள் விவகாரங்களில் தலையிடாமல் போர் நிறுத்தப்பட வேண்டும் என்றுதான் போப்பாக பதவி வகிப்பவர்கள் கூறுவார்கள். ஆனால், போர் பிரான்சிஸ் உக்ரைனுக்கு ஆதரவாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. உக்ரைன் – ரஷ்யா போர் 6 மாதங்களையும் தாண்டி நடைபெற்று வருகிறது. இதில் … Read more

3 இன்ச்-க்காக 6 லட்சம் செலவு செய்யும் டெக் ஊழியர்கள்.. இப்ப இதுதான் டிரெண்ட்..!

உலகளவில் காஸ்மெட்டிக் சர்ஜரி தாக்கம் மக்கள் மத்தியில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, கடந்த சில வருடங்கள் முன் வரையில் பெண்கள் மட்டுமே இதில் இருந்த நிலையில் தற்போது ஆண்களும் அதிகளவில் காஸ்மெட்டிக் சர்ஜரி செய்யத் துவங்கியுள்ளனர். குறிப்பாகப் பெரிய நிறுவனங்களில் அதிகச் சம்பளம் வாங்குவோர் தங்களது ப்ரொபஷனல் வாழ்க்கையைத் தொடர்ந்து மேம்படுத்துவது மட்டும் அல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையை மேம்படுத்துவது போல, தங்களுடைய தோற்றத்தை மாற்றிக்கொள்ளும் சர்ஜரி செய்கின்றனர். அப்படி ஆண்கள் கடந்த 2 வருடத்தில் அதிகப்படியாகச் … Read more

“மோடி, நிரூபியுங்கள் அல்லது அதானியின் அறிவுரைப்படி சீனாவிடம் சரணடையுங்கள்!" – சுப்பிரமணியன் சுவாமி

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான எல்லைப்பிரச்னையென்பது, கடந்த சில மாதங்களாகவே பெரிய அளவில் பேசுபொருளாகிவருகிறது. அதுவும், இந்திய-சீன எல்லையில், சீனா தனி கிராமம் ஒன்றை உருவாக்கியிருப்பது செயற்கைக்கோள் படங்கள் வாயிலாகத் தெரியவர அது இன்னும் பிரச்சினையைக் கிளப்பியது. மோடி அதைத் தொடர்ந்து அரசியல் எதிர்க்கட்சிகள் பலவும் ஆளும் பா.ஜ.க-வைச் சாடிவந்தன. அதோடு காங்கிரஸும், `இந்திய நிலத்தை மோடி சீனாவுக்குத் தாரைவார்த்துவிட்டார்’ என விமர்சனம் செய்துவந்தது. இந்த நிலையில், பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் எம்.பி சுப்பிரமணியன் சுவாமியும், தற்போது இந்த … Read more

சீனாவின் 42 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ….

பிஜிங்: சீனாவின் சாங்ஷா நகரில் உள்ள 42 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. கட்டிடத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சீனாவின் ம த்திய ஹுனான் மாகாணத்தின் தலைநகரான சாங்ஷா நகரில் உள்ள 42 மாடிகள் கொண்ட சீனா டெலிகாம் கட்டிடத்தில் இன்று காலை திடீரென தீ பிடித்தது. அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான சைனா டெலிகாம் அலுவலகம் அந்த கட்டிடத்தில் இயங்கி  வருகிறது. … Read more

திமுக ஆட்சியை அனைத்து தரப்பிலும் பாராட்டுகிறார்கள்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை: திமுக ஆட்சியை அனைத்து தரப்பிலும் பாராட்டுகிறார்கள் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 15 மாதங்களை கடந்து சிறப்பாக ஆட்சி நடைபெற்று வருகிறது. சொத்து வரி உயர்வு குறித்து பல பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார் எடப்பாடி பழனிசாமி. சொத்து வரி உயர்த்தாவிட்டால் மானியங்கள் நிறுத்தப்படும் என்று ஒன்றிய அரசு கூறியது எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

ராதிகா மெர்ச்சன்ட் உடன் திருப்பதி சென்ற முகேஷ் அம்பானி.. எவ்வளவு நன்கொடை கொடுத்தார் தெரியுமா..?

திருப்பதி என்றாலே நம் நினைவுக்கு வருவது திருப்பதி ஏழுமலையான் தான். மக்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள் என அனைத்து தரப்பினரும் திருப்பதி ஏழுமலையான் மீது தீரா நம்பிக்கை இருக்கும் காரணத்தால் வருடத்தில் ஒரு முறையாவது நேரில் சந்தித்து வழிப்படும் வழக்கத்தைக் கொண்டு உள்ளனர். சொல்லப்போனால் பல தொழிலதிபர்கள் தங்களின் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தைத் திருப்பதி ஏழுமலையானுக்குக் காணிக்கையாக அளிக்கும் வழக்கத்தையும் கொண்டு உள்ளனர். இப்படியிருக்கையில் இந்தியாவின் 2வது பெரிய … Read more

"கேப்டன் கூல்!"- ஆனந்த் மஹிந்திரா பாராட்டிய மனிதர்; காட்டு யானை vs பொலேரோ டிரைவர் – நடந்தது என்ன?

காட்டுப் பகுதிகளில் கார் ஓட்டும்போது கவனமாக ஓட்டுபவர் மட்டும் நல்ல டிரைவர் இல்லை. விலங்குகளைத் தொந்தரவு செய்யாமல், ஒருவேளை அவை கோபப்பட்டால் பதற்றப்படாமல் விபத்துக்குள்ளாக்காமல் அவற்றிடமிருந்து லாகவமாகத் தப்பித்து திறமையாக வாகனம் ஓட்டுபவர்தான் மிக நல்ல டிரைவர்.  அப்படி ஒரு டிரைவருக்குத்தான் ‘பெஸ்ட் பொலேரோ டிரைவர்’ எனும் பட்டத்தையும், ‘கேப்டன் கூல்’ எனும் அடைமொழியையும் வழங்கியிருக்கிறார், மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா. கர்நாடகாவில் உள்ள கபினி எனும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில், ஒரு பொலேரோ வாகனம் ஒன்றைக் … Read more

வேளச்சேரி ஈரடுக்கு மேம்பாலத்தில் 2-வது வழிப்பாதையை நாளை திறந்து வைக்கிறார் முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை:  வேளச்சேரி – கைவேலி வழித்தடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலத்தின் இரண்டாவது பகுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (செப்டம்பர் 17ஆம் தேதி)  திறந்து வைக்கிறார். வேளச்சேரி பகுதியில் ஏற்பட்டுள்ள விஜயநகரில் போக்குவரத்து நெரிசலை போக்கும் வகையில்  விஜயநகரில், வேளச்சேரி – தரமணி, வேளச்சேரி-கைவேலி சாலைகளை இணைக்கும் வகையில் ரூ.108 கோடியில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டும் பணி  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, கடந்த 2016-ம் ஆண்டு துவங்கப்பட்டது. தரமணி சாலையில் இருந்து வேளச்சேரி விரைவு … Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் மீதான புகாரை 2 வாரங்களில் விசாரித்து முடிக்க சேலம் மாநகர காவல்துறைக்கு ஐகோர்ட் கெடு

சென்னை: வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் என்.சுப்பிரமணியன் மீதான புகாரை 2 வாரங்களில் விசாரித்து முடிக்க சேலம் மாநகர காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. 2011-2015-ல் அதிமுக ஆட்சியில் ஆதி திராவிடர் நல அமைச்சராக இருந்த சுப்பிரமணியன் ரூ. 65 லட்சம் மோசடி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.