டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெரும் திட்டம்: அக்டோபர் 11-ம் தேதி உத்தரவு

சென்னை: டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெரும் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான வழக்கில் அக்டோபர் 11-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம்  அறிவித்துள்ளது. காலி மதுபாட்டில்களை திரும்ப பெரும் திட்டம் தொடர்பாக வழக்கறிஞர்களிடம் தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது. பரிசீலித்து அறிக்கை அளிக்க இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் அளித்துள்ளது.

அமெரிக்காவையே மிஞ்சிய சீனா.. இந்தியாவுக்கு எது பெஸ்ட்!

டெல்லி: சீனா அமெரிக்காவினை விஞ்சி இந்தியாவின் மிகச் சிறந்த வர்த்தக பார்ட்னராக, 11.49 பில்லியன் டாலருடன் கடந்த ஜூலை மாதத்தில் முன்னேற்றம் கண்டுள்ளது. இது குறித்து வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவின் படி, சீனா அமெரிக்காவை விஞ்சி, சீனாவின் மீது வளர்ந்து வரும் நம்பிக்கையை சுட்டிக் காட்டியுள்ளது. இதே ஜூலையில் அமெரிக்காவின் வர்த்தகமானது 11.08 பில்லியன் டாலராகவும் உள்ளது. இது அமெரிக்காவில் அதிகரித்து வரும் பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில், தேவையும் மெதுவாக குறையத் தொடங்கியுள்ளது. அமெரிக்க … Read more

டொரான்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகர் விருதுவென்ற விஜய் சேதுபதி!

கனடாவின் 47-ஆவது வருடாந்திர சர்வதேச திரைப்பட விழா, செப்டம்பர் 8ம் தேதி அன்று டொரான்டோ நகரில் தொடங்கியது. இந்த மாபெரும் திரைப்பட விழா 10 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. சர்வதேச அரங்கில் படமாக்கப்பட்ட பல்வேறு வகையான திரைப் படைப்புகள் இந்த விழாவில் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன. திரையிடல் இது ஒரு புறம் இருக்க, கனடாவில் தமிழ்ச் சமூகத்தினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழ் மொழிக்கும் தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் விதமாக டொரான்டோ தமிழ் … Read more

மகாராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பிரபலம்! அடையாளம் கண்ட பொதுமக்கள் செய்த செயல்

பொதுமக்கள் பலருக்கு டேவிட் பெக்காம் டோனட்ஸ் வாங்கிக் கொடுத்தார் சில புகைப்படங்களில் பெக்காம் சிரித்துக்கொண்டிருப்பதைக் காணமுடிந்தது மற்றும் அவரது தலையில் நீல நிற மென்மையான தொப்பியை அணிந்திருந்தார் லண்டனில் பிரித்தானிய மகாராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த டேவிட் பெக்கமை அடையாளம் கண்டுகொண்ட பொதுமக்கள் அவரை புகைப்படம் எடுத்தனர். பிரித்தானிய மகாராணியாரின் உடலுக்கு ஏராளமானோர் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். பொதுமக்களுடன் அமைதியாக கலந்துகொண்ட இங்கிலாந்தின் முன்னாள் கால்பந்து பிரபலம் டேவிட் பெக்காம் … Read more

பாஜகவில் இணைகிறார் முன்னாள் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்சிங்..

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தின் காங்கிரஸ் ஆட்சியின்போது மாநில மதல்வராக இருந்தவர் கேப்டன் அமரீந்தர்சிங். இவருக்கு கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்த நிலையில், அவரிடம் இருந்து முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. மாநிலம் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத்சித்து அறிவிக்கப்பட்டார். இதனால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அமரீந்தர்சிங், பாஜகவில் இணைவார் என கருதப்பட்ட நிலையில், தனிக்கட்சி தொடங்கி சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டார். ஆனால், தேர்தலில் பெருந்தோல்வி அடைந்ததுடன், காங்கிரஸ் கட்சியும் தோல்வி அடைந்தது. முதன்முறையாக பஞ்சாபில் அமோக வெற்றி பெற்று … Read more

தமிழக வனப்பகுதியிலுள்ள அந்நிய மரங்களை அகற்ற உடனே நடவடிக்கை எடுக்காவிடில் அது வனத்தை அழித்துவிடும்: உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழக வனப்பகுதியிலுள்ள அந்நிய மரங்களை அகற்ற உடனே நடவடிக்கை எடுக்காவிடில் அது வனத்தை அழித்துவிடும் என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அந்நிய மரங்களை அகற்ற தனியார் நிறுவனங்களின் சமூக பாதுகாப்பு நிதியை ஏன் பயன்படுத்த கூடாது? என நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளார்.

1100 புள்ளிகளுக்கு மேலாக சரிந்த சென்செக்ஸ்.. இன்றைய டாப் கெயினர், டாப் லூசர்ஸ் யார்?

இந்திய பங்கு சந்தையானது இன்றைய அமர்வின் பிற்பாதியில் பலத்த சரிவினைக் கண்டுள்ளது. குறிப்பாக சென்செக்ஸ் 1100 புள்ளிகளுக்கு மேலாக சரிவினைக் கண்டு முடிவடைந்துள்ளது. இது 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு மோசமான சரிவாகும். நிஃப்டி 2% கீழாக முடிவடைந்து 17,530 என்ற லெவலுக்கு கீழாக முடிவடைந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவி வரும் மோசமான நிலைக்கு மத்தியில் பங்கு சந்தைகளில் பலத்த சரிவினைக் கண்டுள்ளன. அமெரிக்க பணவீக்கத்தால் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு, ரூ.3 லட்சம் கோடி இழப்பு..! … Read more

உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்கள் மருத்துவப்படிப்பு தொடர அனுமதி மறுப்பு – மத்திய அரசு சொல்வதென்ன?

ரஷ்யாவுடனான போரால், உக்ரைனில் மருத்துவம் படித்து கொண்டிருந்த இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பிய நிலையில், அவர்களை இந்திய கல்லூரிகளில் சேர்த்துக்கொள்ள முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. இந்திய மாணவர்கள் அதிகளவில் உக்ரைன் நாட்டில் மருத்துவம் பயின்று வந்தனர். ஆனால் ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக, அவர்கள் இந்தியாவுக்கு திரும்பினர். தொடர்ந்து இங்கு தங்களுடைய மருத்துவப் படிப்பை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். Medical Studies இந்நிலையில், மாணவர்களுக்கு அனுமதி … Read more

அரசுக்கு  இழப்பு ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது தமிழகஅரசு கடுமையான  நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுவாக தவறு செய்யும் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்படுவதும், பின்னர் அவர்கள் வேறு இடங்களுக்கும் மாற்றலாகி செல்வதும் வாடிக்கையாகி வருவதால், அதிகாரிகள் தவறு செய்வதும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது தமிழகஅரசு கடுமையான  நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சைதாப்பேட்டை பணிமனையில் நடத்துனராக … Read more

புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக நாளை முதல் 1-8ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.25ம் தேதி வரை விடுமுறை

புதுச்சேரி: புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக நாளை முதல் 1-8ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.25ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் பேரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.