`பிரதமர் ஆசை இருக்கா? ஜெயலலிதாவுக்கு அழைப்பு ஏன்?' – 2003-ல் மோடி அளித்த பேட்டி #AppExclusive

குஜராத் சட்டசபை தேர்தலுக்குப் பிறகு பாரதிய ஜனதா கட்சியின்‌ அகில இந்தியத்‌ தலைவர்கள்‌ வரிசையில்‌ முன்னணிக்கு வந்திருப்பவர்‌ குஜராத்‌ முதல்வர்‌ நரேந்திரமோடி… ‘வாஜ்பாய்‌, அத்வானிக்குப்‌ பிறகு மிகப்பெரிய கூட்டத்தைக்‌ கூட்டிக்‌ காட்டிய மோடி, பிரதமர்‌பதவிக்கும்‌ தகுதியானவர்‌’ என்று ஆர்‌.எஸ்‌.எஸ்‌. – விஷ்வஹிந்து பரிஷத்‌ தலைவர்கள்‌ நினைக்கிறார்கள்‌. புதுடெல்லியில்‌ நடந்த அனைத்துலக புலம்பெயர்‌ இந்தியர்கள்‌ (என்‌.ஆர்‌.ஐ.) மாநாட்டுக்கு வந்த மோடியை நாம்‌ ஸ்பெஷலாகச்‌ சந்தித்தோம்‌. தங்குதடையில்லாமல்‌ நம்மிடம்‌ மனம்‌ விட்டுப்‌ பேசினார்‌. நரேந்திரமோடி “குஜராத்‌ தேர்தல்‌ முடிவுகளை எதிர்பார்த்தீர்களா?இந்த … Read more

செப்டம்பர் 17: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 119-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 119-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கர்நாடக பா.ஜனதா செயற்குழு கூட்டம் வருகிற 24-ந் தேதி பெங்களூருவில் நடக்கிறது

பெங்களூரு: சட்டசபை ேதர்தல் கர்நாடகத்தில் பசவராஜ்பொம்மை தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு (2023) மே மாதம் கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதனால் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பா.ஜனதா கட்சி ஆயத்தமாகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கட்சியை வலுப்படுத்தும் வகையில் கட்சி கூட்டங்களையும் பா.ஜனதா மேலிடம் நடத்தி வருகிறது. ெசயற்குழு கூட்டம் அதன்படி கர்நாடக பா.ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கடந்த 11-ந் தேதி … Read more

ஓய்வுக்கால முதலீடுகளும் வருமான வரி சேமிப்பும்..!

நம்மில் பெரும்பாலானோர் எந்த முதலீட்டை மேற்கொண்டாலும் அதில் வருமான வரியை மிச்சப்படுத்த வழி இருக்கிறதா என்று பார்க்கிறார்கள். அந்த வகையில், ஓய்வுக்கால முதலீடும் விதிவிலக்கு அல்ல. என்.விஜயகுமார், நிர்வாக இயக்குநர், https://www.click4mf.com/ வரிச் சலுகை அளிக்கும் ஓய்வுக்கால முதலீடுகள்… ஓய்வுக்காலத்துக்கான முதலீட்டில் வருமான வரியை மிச்சப்படுத்த கீழ்க்கண்ட திட்டங்கள் உதவும். 1. விருப்ப பிராவிடன்ட் ஃபண்ட் (VPF), 2. பொதுமக்களுக்கான பிராவிடண்ட் ஃபண்ட் (PPF), 3. பென்ஷன் மியூச்சுவல் ஃபண்ட் – வரிச் சலுகை திட்டம், 4. … Read more

உலகளவில் 61.63 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 61.63 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 61.63 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 65.27 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 59.56 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோலார் தங்கவயலில் 971 ஏக்கரில் தொழிற்பேட்டை அமைக்கப்படும்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உறுதி

பெங்களூரு: பொருளாதார சுமை கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 12-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் மந்திரியாக இருந்த உமேஷ்கட்டி, இங்கிலாந்து ராணி எலிசபெத் மற்றும் முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சபை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் மழைக்கால கூட்டத்தொடரின் 5-வது நாள் கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று காலை தொடங்கியது. கேள்வி நேரத்தில் கோலார் தங்கவயல் தொகுதி உறுப்பினர் ரூபா கலா சசிதர் கேட்ட கேள்விக்கு … Read more

மதுக் கொள்கை முறைகேடு :அமலாக்கத் துறை.ரெய்டு!| Dinamalar

புதுடில்லி :புதுடில்லி அரசின் மதுபானக்கொள்கை முறைகேடு விவகாரம் தொடர்பாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, டில்லி ஆகிய மாநிலங்களில், 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டாம் கட்டமாக நேற்று அதிரடி சோதனை நடத்தினர். புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்த ஆண்டு நவம்பரில் மாநில அரசு புதிய மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியது. இதன்படி, டில்லி பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 800-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. … Read more

கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் வெடிவைத்து ஆவணங்கள் எரிப்பு; முறைகேட்டை மறைக்க மர்மநபர்கள் சதியா?

பெங்களூரு: கிராம பஞ்சாயத்து அலுவலகம் துமகூரு மாவட்டம் பாவகடா தாலுகா ஒய்.என்.ஒசக்கோட்டை அருகே பூதிபெட்டா கிராமம் உள்ளது. அந்த கிராமத்திலேயே பூதிபெட்டா கிராம பஞ்சாயத்து அலுவலகம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் ஊழியர்கள் பஞ்சாயத்து அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றிருந்தனர். இந்த நிலையில், நள்ளிரவில் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் மா்ம பொருள் வெடித்து சிதறும் சத்தம் கேட்டது. உடனே கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து பஞ்சாயத்து அலுவலகத்திற்கு ஓடிவந்தனர். தகவல் அறிந்ததும் பாவகடா போலீசார் விரைந்து … Read more

உ.பி., யில் கன மழையால்சுவர் இடிந்து 22 பேர் பலி| Dinamalar

லக்னோ, உத்தர பிரதேசத்தில் கன மழையால் பல இடங்களில் சுவர் இடிந்து, இரண்டு குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்தனர்.உ.பி.,யின் பல இடங்களில் நேற்று முன்தினம் இரவு கன மழை கொட்டியது. லக்னோ அருகே தில்குஷா என்ற இடத்தில், ராணுவ முகாமில் கட்டப்பட்டு வந்த சுற்றுச்சுவர் நேற்று அதிகாலையில் பலத்த மழை காரணமாக இடிந்து விழுந்தது. இதன் அருகே குடிசை அமைத்து தங்கியிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். ராணுவத்தினர் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில், ஒன்பது … Read more

கர்நாடகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 பேர் சாவு

பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று 22 ஆயிரத்து 711 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 426 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூருவில் 230 பேருக்கும், சிக்பள்ளாப்பூரில் 12 பேருக்கும், ஹாசனில் 19 பேருக்கும், கலபுரகி, குடகில் தலா 13 பேருக்கும், மைசூருவில் 28 பேருக்கும், ராமநகரில் 21 பேருக்கும், சிவமொக்காவில் 15 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கதக், கலபுரகி, மைசூரு, உத்தரகன்னடாவில் தலா ஒருவர் என மொத்தம் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஒரே … Read more