ஜம்மு காஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்… புலம்பெயர் தொழிலாளி ஒருவர் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீரில், இந்திய ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய அடுத்த நாளே, புலம் பெயர் தொழிலாளி ஒருவர் தீவிரவாதியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பவம் நடந்ததாக கூறப்படும் சோத்னாரா சும்பல் என்ற இடத்தில், தீவிரவாதிகள் நேற்றிரவு துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கின்றனர். இதில் சிக்கி, பலத்த காயமடைந்த புலம்பெயர் தொழிலாளி, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஜம்மு காஷ்மீர் இந்த நிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட நபர், பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளியென்றும், … Read more

பிரித்தானியாவில் ஏராளமான பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை: வெளியாகும் விளம்பரங்கள்

*பிரித்தானியாவில் ஏராளமான பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை. *குறிப்பாக, நடிகர்கள், நடனக்கலைஞர்கள், நீச்சல் பயிற்சி அளிப்போருக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உள்ளன. பிரித்தானியாவில் சென்ற மாதத்தின் இறுதி வாரத்தில் மட்டுமே 1.85 மில்லியன் வேலை வாய்ப்புகள் விளம்பரம் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், வாரந்தோறும் 200,000 பணியாட்கள் தேவை என விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக, இதுவரை இல்லாத வகையில், நடிகர்கள், நடனக்களைஞர்கள் போன்ற பொழுதுபோக்குத் துறை தொடர்பான பணி மற்றும் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி அளிப்போர் ஆகியோருக்கு அதிக அளவில் தேவை … Read more

காங்கிரஸ் எம்.பி. சசிதரூருக்கு உயரிய விருதான ‘செவாலியே விருது’! இங்கிலாந்து அரசாங்கம் அறிவிப்பு…

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான  சசிதரூருக்கு சிறந்த மனிதருக்கான  ‘செவாலியே விருது’ ஐ இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்து உள்ளது. செவாலியர் விருது பொதுவாழ்வில் சிறப்பிற்கு உரியவருக்கு வழங்கப்படும் பிரஞ்சு நாட்டின் அரசு வழங்கும் மிக உயரிய விருதாகும். அதாவது சிறந்த மனிதர்களாக அல்லது உயர் மனிதர்களாக அறியப்படும் மனிதர்களைத் தேர்ந்து பிரஞ்சு அரசாங்கத்தினால் வழங்கப்படுகிறது. செவாலியே (பிரெஞ்சு மொழி: Chevalier) விருது  என்பது உலகின் பல பகுதிகளில் இயங்கிவரும் முன்னணி மனிதர்களை பெருமைப்படுத்தும் வகையில் … Read more

ஆர்டர்லி முறை: அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஆர்டர்லி முறை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்டர்லி பயன்படுத்தும் காவல் உயரதிகாரிகளை கேள்வி கேட்க மக்களுக்கு உரிமை உண்டு. ஆர்டர்லி  விவகாரத்தில் முதலமைச்சரின் எச்சரிக்கை மட்டும் போதாது; உரிய நடவடிக்கை தேவை என நீதிபதி எஸ்.எம்.சுரமணியம் தெரிவித்தார்.

தங்கம் விலை 3வது நாளாக சரிவு.. இன்று எவ்வளவு குறைந்திருக்கு..இது வாங்க சரியான நேரமா?

அமெரிக்கா பத்திர சந்தையானது வட்டி அதிகரிப்பின் மத்தியில் மீண்டும் ஏற்றம் கண்டு வருகின்றது. இதற்கிடையில் இன்று மூன்றாவது நாளாக தங்கம் விலையானது அழுத்தத்தில் காணப்படுகிறது. எனினும் டாலரின் மதிப்பானது சற்று வலுவிழந்து காணப்படும் நிலையில், இது தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது. இதற்கிடையில் இன்று காலை தொடக்கத்திலேயே சரிவில் தொடங்கிய தங்கம் விலையானது, தொடர்ந்து சரிவிலேயே கணப்படுகிறது. இது இன்னும் சரியுமா? நிபுணர்களின் கணிப்பு என்ன? கவனிக்க வேண்டிய காரணிகள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம். தங்கம் விலை இன்று … Read more

`வருமானத்துக்கு அதிகமான சொத்து’ – முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி.பாஸ்கர் வீட்டில் ரெய்டு

நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2011-16, 2016 – 21 வரை இருமுறை அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கே.பி.பி.பாஸ்கர். கடந்த சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க சார்பில் நமக்கல் தொகுதியில் நின்று, தி.மு.க ராமலிங்கத்திடம் தோல்வியை தழுவினார். அதோடு, இவர், அ.தி.மு.க நாமக்கல் நகரச் செயலாளராகவும் இருக்கிறார். இந்நிலையில், இவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 4.72 கோடி வரை சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்த லஞ்சஒழிப்புத்துறையினர், இவர் சம்பந்தப்பட்ட 26 இடங்களில் இன்று சோதனை நடத்தி … Read more

உப்பள தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் – ]ஹஜ் பயனாளிகளுக்கு ரூ.4.56 கோடி மானியம்! திட்டங்களை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்…

சென்னை: உப்பள தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5ஆயிரம்  நிவாரணம் வழக்கும் திட்டத்தை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனறு தொடங்கி வைத்தார். தமிழ்நாடு உப்பு நிறுவனம் சார்பில் நெய்தல் உப்பு விற்பனையையும் தொடங்கி வைத்தார். அத்துடன் ஹஜ் பயனாளிகளுக்கு ரூ.4.56 கோடி மானியத்தொகையும் முதல்வர் வழங்கினார் சென்னை தலைமை செயலகத்தில்  இன்று நடைபெற்று நிகழ்வில், உப்பள தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு,க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை  தொடங்கி வைக்கும் அடையாளமாக முதலில் 5 பேருக்கு  தலா ரூ.5 … Read more

பவானிசாகர் அணை நிலவரம்: நீர்வரத்து வினாடிக்கு 15,200 கனஅடி…

ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15,200 கனஅடியாக உள்ளது. இதனால், வினாடிக்கு 15,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 105 அடி உயரம் கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக உள்ளது. கீழ்பவானி வாய்க்காலில் 500கனஅடி, அரக்கன் கோட்டை – தடப்பள்ளி வாய்க்காலில் 500கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

குஜராத்தில் கார் மோதி 6 பேர் பலி| Dinamalar

ஆமதாபாத்: குஜராத்தில் கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியாகினர். ஆனந்த் மாவட்டத்தில் ஜோசித்ரா தாலுகாவில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சென்றதில் ஆட்டோ மற்றும் பைக் மீது மோதியது. இதில் காரில் சென்ற 4 பேர் பைக்கில் சென்ற 2 பேர் இறந்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆமதாபாத்: குஜராத்தில் கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியாகினர். ஆனந்த் மாவட்டத்தில் ஜோசித்ரா தாலுகாவில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சென்றதில் ஆட்டோ … Read more

5ஜி அலைக்கற்றை கட்டணத்தை செலுத்துவதற்கான காலக்கெடு நீட்டிப்பு… என்ன காரணம்?

5ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்தது என்பதும் இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ, அதானி நிறுவனம், ஏர்டெல் மற்றும் வோடோபோன் ஆகிய நிறுவனங்கள் கலந்து கொண்டன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் 5ஜி அலைக்கற்றை ஏலம் எடுத்த நிறுவனங்கள் அதற்கான கட்டணத்தை செலுத்துவதற்கு காலக்கெடுவை ஒருநாள் நீடித்து தொலைத்தொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது. இந்த ஒரு நாள் காலக்கெடு நீட்டிக்க என்ன காரணம் என்பதை தற்போது பார்ப்போம். 5ஜி அலைக்கற்றை ஏலம் 5ஜி … Read more