இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்-உமா குரைஷி இணைந்து நடிக்கும் புதிய படம்

மும்பை: இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்-உமா குரைஷி இணைந்து நடிக்கும் புதிய படத்தில் புகைபடங்கள் வெளியாகியுள்ளது. ஹுமா குரேஷி & சொனாக்‌ஷி சின்ஹா நடிக்கும் ”Double XL” என்ற பாலிவுட் திரைப்படத்தில் நடிக்கிறார் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிக்கர் தவான். இத்திரைப்படம் நவ.4ம் தேதி வெளியாகிறது.

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துளளார். கோவை தங்கம் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலங்களில் தனது தொகுதி மக்களின் நலனில் நாட்டம் கொண்டு செயல்பட்டு வந்தார் என அந்த இரங்கல் செய்தியில் முதல்வர் தெரிவித்தார்.

பெண்களுக்கான பிரத்யேகஅவள் விடுதி திறப்பு| Dinamalar

கொச்சி கேரளாவின் கொச்சி மாநகராட்சியில், பெண்கள் மட்டுமே தங்கக்கூடிய, மலிவு விலையிலான பிரத்யேக தங்கும் விடுதி திறக்கப்பட்டுள்ளது. கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு கொச்சியில், 10 ரூபாய்க்கு உணவு அளிக்கும், ‘சம்ரிதி’ திட்டத்தை மாநகராட்சி சமீபத்தில் துவக்கியது. இதையடுத்து, பெண்களுக்கான பிரத்யேக தங்கும் விடுதி நேற்று திறக்கப்பட்டது. ‘அவள் விடுதி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த தங்கும் விடுதியில், மிக குறைந்த கட்டணத்தில் … Read more

“போலீஸார் அபராதம் விதித்தால் என்ன செய்வது?” – ஹெல்மெட் உடன் வலம் வந்த தள்ளுவண்டி வியாபாரி | Video

போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது கட்டாயம். விதிகளை மீறுபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கில் அபராத வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 27 அன்று காரில் சென்ற பியூஷ் வர்ஷ்னி என்பவருக்கு ஹெல்மெட் அணியவில்லை என காவல்துறை அபராதம் விதித்திருந்தது. மேலும், அவருக்கு வழங்கப்பட்ட ரசீதில் காரின் எண்ணுடன் ஹெல்மெட் அணியவில்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைத் தொடந்து, காவல்துறையின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பியூஷ் வர்ஷ்னி காரில் … Read more

35-வது நாளாக ‘பாரத் ஜோடோ யாத்திரை’-யை தொடங்கினார் ராகுல் காந்தி

சித்ரதுர்கா: கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள சல்லகெரே நகரில் இருந்து ‘பாரத் ஜோடோ யாத்திரை’யை மீண்டும் தொடங்கினார் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான நடைபயணம்” என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். மொத்தம் 150 நாட்கள் நடைபெற உள்ள இந்த யாத்திரை தற்போது வரை 30 நாட்களை கடந்துள்ளது டன், தமிழ்நாடு, கேரளாவை கடந்து கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடில் 3 நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட அவர், செப்டம்பர் … Read more

முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம், உடல்நலக்குறைவால் காலமானார்

கோவை: முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம், உடல்நலக்குறைவால் காலமானார். 2001 முதல் 2011ம் ஆண்டு வரை வால்பாறை சட்டமன்ற உறுப்பினராக கோவை தங்கம் இருந்துள்ளார். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு: கல்குவாரி குட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி – மீன் பிடிக்கச் சென்றபோது நடந்த சோகம்!

ஈரோடு மாவட்டம், அந்தியூர், தவுட்டுப்பாளையம் பழனியப்பா 4ஆவது குறுக்கு வீதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன்  ராகவன் (10), அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் நந்தகிஷோர் (10), ஏழாவது குறுக்கு வீதியைச் சேர்ந்த பாலன் மகன் சிபினேஷ் (11) ஆகிய மூன்று பேரும் காமராஜ் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தனர். நேற்றுமுந்தினம் மாலை 3 சிறுவர்களும், அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே செங்காட்டுகுட்டையில் உள்ள கல்குவாரி குட்டைக்கு மீன் பிடிக்கச் … Read more

சார்லஸ் மன்னர் முடிசூட்டு விழா… ஹரி- மேகன் தம்பதி பங்கேற்பது சந்தேகம்

குறிப்பிட்ட திகதியானது தனிப்பட்ட முறையில் ஹரி- மேகன் தம்பதிக்கு சிறப்பு வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. தமது பிள்ளைகளுக்கு இளவரசர் பட்டத்தை அளிக்க அரண்மனை மறுப்பதாக குற்றஞ்சாட்டி வருகிறார் ஹரி. மூன்றாம் சார்லஸ் மன்னர் முடிசூட்டு விழா திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் சிலருக்கு தனிப்பட்ட விழாக்களை தள்ளிவைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சார்லஸ் மன்னரின் முடிசூட்டும் விழா எதிர்வரும் மே மாதம் 6ம் திகதி சனிக்கிழமை முன்னெடுக்கப்பட உள்ளது. லண்டனில் அமைந்துள்ள வெஸ்ட்மின்ஸ்டர் குரு … Read more

நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணை மீண்டும் முழு கொள்ளவை எட்டியது

சேலம்: நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணை மீண்டும் முழு கொள்ளவை எட்டியது. தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து மீண்டும் முழு கொள்ளவை எட்டியுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 644 கனஅடி வீதம் வந்த தண்ணீர், நேற்று மாலை வினாடிக்கு 33 ஆயிரத்து 420 கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 119.74 அடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் கடை, ஓட்டலில் பணியாற்றிவந்த குழந்தை தொழிலாளர்கள் 5 பேர் மீட்பு

சென்னை: சென்னை மண்ணடி மற்றும் பூக்கடை பகுதிகளில் கடை, ஓட்டலில் பணியாற்றிவந்த குழந்தை தொழிலாளர்கள் 5 பேர் மீட்கப்பட்டுள்ளார்.  மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்கள் அனைவரும் ராயபுரத்தில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். சிறுவர்களை வேலைக்கு அமர்த்திய பேக்கரி, டீக்கடை, ஓட்டல் உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.