2023ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு விடுமுறை பட்டியல் வெளியீடு

சென்னை: 2023-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 24 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய இயக்குனர் நியமனம்| Dinamalar

புதுடில்லி: தேசிய பேரிடம் மேலாண்மை ஆணைய இயக்குனராக மிரினாலினி ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார். புயல், மழை, வெள்ளம், பூம்பம் போன்ற இயற்கை பேரழிவின் போது மீட்பு பணிகளுக்கென தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் என்ற அமைப்பு உள்ளது. இதன் இயக்குனராக மிரினாலினி ஸ்ரீவஸ்தவா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் இப்பதவியில் 2024-ம் தேதி பிப்ரவரி 9-ம் தேதிவரை இருப்பார். புதுடில்லி: தேசிய பேரிடம் மேலாண்மை ஆணைய இயக்குனராக மிரினாலினி ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார். புயல், மழை, வெள்ளம், பூம்பம் போன்ற இயற்கை பேரழிவின் … Read more

75 டன் எடையில் டீசலில் இயங்கும் நீராவி இன்ஜின் – நீலகிரிக்கு மாஸ் என்ட்ரி கொடுத்த பொன்மலை ரயில்!

யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய அந்தஸ்தைப் பெற்றிருக்கும் நீலகிரி மலை ரயில் நூற்றாண்டுகளைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. ஆசியாவின் மிக நீண்ட பற்சக்கர தண்டவாள அமைப்பைக் கொண்டுள்ள இந்த மலை ரயில் பாதையில் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை நீராவி ரயில் இன்ஜினைப் பயன்படுத்திவருகின்றனர். இயற்கை எழில் கொஞ்சும் மலைத்தொடரில் தடதடக்கும் இந்த நீலகிரி மலை ரயிலில் பயணிக்க இந்தியா மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் காத்துக்கிடக்கின்றனர். நீராவி ரயில் இன்ஜின் ஆங்கிலேயர் ஆட்சியின் … Read more

மீண்டும் அவமானப்பட முடியாது., மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவை தவிர்க்கவுள்ள ஹரி-மேகன் தம்பதி

இளவரசர் ஹரி, மேகன் மார்க்கல் தம்பதி அவமானத்தைத் தவிர்க்க முடிசூட்டு விழா அழைப்பை நிராகரிக்கலாம் என கூறப்படுகிறது. மன்னார் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டுவிழா அறிவிக்கப்பட்ட அதே நாள் அவரது பேரன் ஆர்ச்சியின் பிறந்தநாளாகும். மேகன் மார்க்கலும் இளவரசர் ஹரியும் தங்கள் அவமானப்படுத்தப்படுவதை தவிர்ப்பதற்காக அடுத்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள மன்னர் மூன்றாம் சார்லஸின் அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழாவிற்கான அழைப்பை நிராகரிக்கக்கூடும் என அரச குடும்ப வல்லுநர்கள் கூறுகின்றனர். மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா மே 6, 2023 … Read more

இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக திண்டுக்கல் கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய காட்டுப்பகுதி அறிவிப்பு…

சென்னை: திண்டுக்கல் கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய காட்டுப்பகுதியை தேவாங்கு சரணாலயமாக  தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இது இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலேயே முதல் தேவாங்கு சரணாலயம் தமிழ்நாட்டில் அமைக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சுமார் 11,806 ஹெக்டேர் பரப்பளவில் திண்டுக்கல் கரூர் இடையேயான வனப்பகுதியை தேவாங்கு சரணாயமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக,  சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் … Read more

அதிமுக நிர்வாகிகள் 12 பேர் நீக்கம்: இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அதிமுக நிர்வாகிகள் 12 பேரை கட்சியில் இருந்து நீக்கி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் எம்எல்ஏக்கள் கோவிந்தராஜ், கிருஷ்ணமூர்த்தி உள்பட 12 பேர் நீக்கப்பட்டுள்ளனர். கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக 12 பேரும் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தேன்சிட்டு, ஊஞ்சல், கனவு ஆசிரியர்: பள்ளிக்கல்வித்துறைக்கு பாராட்டு சேர்க்கும் மூன்று புதிய இதழ்கள்!

`அறிவை விரிவு செய்; அகண்டமாக்கு!’ என்ற பாவேந்தர் பாரதிதாசனின் வார்த்தைகளுக்கேற்ப புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை. பாடப்புத்தகங்கள், தேர்வுகள், மதிப்பெண்கள் என கற்றலையும், கற்பித்தலையும் கட்டாயமாக்கிக்கொண்டு, ஒரு வட்டத்துக்குள் ஆசிரியர்களும் மாணவர்களும் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், சிறிது இளைப்பாறலாக, பாடப்புத்தகளைத் தாண்டி வெளிஉலகத்தை அணுகும் ஒரு பாலமாக அவர்களின் கைகளுக்குள் வந்தமர்ந்திருக்கின்றன இந்த மூன்று இதழ்கள். இதழ் வெளியீட்டு நிகழ்வில் முதல்வர் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஆசிரியர்களுக்கென்று பிரத்யேகமாக `கனவு ஆசிரியர்’ … Read more

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு வீடியோ…

விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்தில், அதன் சக்கரம் கழன்று விழும் காட்சியைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த காட்சியைக் கண்டவர்கள் அந்த விமானத்தின் நிலை குறித்து ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்கள். இத்தாலியிலிருந்து போயிங் விமானம் ஒன்று, புறப்பட்ட நிலையில், புறப்பட்ட சிறிது நேரத்தில் அதன் சக்கரம் ஒன்று கழன்று விழும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. அந்த காட்சியைக் கண்டவர்கள் டிவிட்டரில் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்கள். விமானம் ஓடுபாதையிலிருந்து எழுந்ததும், அதன் சக்கரங்களில் … Read more

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலுக்கான வாக்குச்சீட்டை மாதிரியை வெளியிட்டார் மதுசூதன் மிஸ்திரி…

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலுக்கான மாதிரி வாக்குச்சீட்டை  தேர்தல் அலுவலர் மதுசூதன் மிஸ்திரி இன்று செய்தியாளர்களிடையே வெளியிட்டார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முழுநேரத் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து, செப்டம்பர் 24ந்தேதி வேட்புமனுத்தாக்கல் தொடங்கி 30ந்தேதி முடிவடைந்தது. இந்த தேர்தலில் பலர் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மூத்த தலைவர்கள் சசிதரூர், மல்லிகார்ஜுன கார்கே ஆகியே இருவர் மட்டுமே போட்டியிடுகிறார்கள். இதை  அகில … Read more

சவூதி அரேபியா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

வாஷிங்டன்: ரஷ்யாவுடன் சவூதி அரேபியா கூட்டணி அமைத்து செயல்பட்டு வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதனால் சவூதி அரேபியா உடனான உறவை மறு ஆய்வு செய்யப்போவதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கும் ஓபெக் அமைப்பின் முடிவால் அமெரிக்கா ஆத்திரம் என தகவல் வெளியாகியுள்ளது.