பன் அல்வா, பொல்டே சைனா, குடி வறுவல் சிக்கன்; சப்புக் கொட்ட வைக்கும் சௌராஷ்டிரா உணவுத் திருவிழா!

கோயில் விழா, இலக்கிய விழா, சினிமா விழா, அரசியல் விழா என தினந்தோறும் திருவிழாக்களால் களைகட்டும் மதுரையில், ஹோட்டல்களும் உணவு படைப்பதை திருவிழாபோல கொண்டாடுகின்றனர். சிக்கன் வறுவல் சென்னைக்காரங்களுக்கு சூப்பர் வீக் எண்ட் ஸ்பாட்! இதன் காரணமாக சுவையான உணவைத்தேடி வெளியூர் மக்கள் மதுரைக்கு சுற்றுலாவே வந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம். வெளியூர், உள்ளூர் மக்கள் என்ற பேதமில்லாமல் வெரைட்டியான உணவுகளை தயாரித்து வழங்குவதில் மதுரையிலுள்ள ஹோட்டல்கரர்கள் போட்டி போட்டு வருகிறார்கள். மட்டன் வறுவல் இந்நிலையில் அனைத்து … Read more

டெல்லியில் பொதுஇடங்களில் முகக்கவசம் கட்டாயம் – மீறினால் அபராதம்…

டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், பொதுமக்கள் முகக்கவசம்  அணிவது மீண்டும் கட்டாயமக்கப்பட்டுள்ளது. மீறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் முகக்கவசம் கட்டாயம் என உத்தரவிட்ட நிலையில், தற்போது டெல்லி மாநில அரசும் முக்கவசம் அணிவது கட்டாயம் என தெரிவித்து உள்ளது. இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு 15ஆயிரம் முதல் 20ஆயிம் வரை ஏறி இறங்கி காணப்படுகிறது. தலைநகர் டெல்லியில் தினசரி 2ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. … Read more

வணிகவியலில் டிப்ளமோ படித்த மாணவர்களை நேரடியாக B.Com, 2-ம் ஆண்டில் சேர்க்க மறுக்க கூடாது: கல்லூரிக் கல்வி இயக்கம்

சென்னை: வணிகவியலில் டிப்ளமோ படித்த மாணவர்களை நேரடியாக B.Com, 2-ம் ஆண்டில் சேர்க்க மறுக்க கூடாது என அனைத்து வகை கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் கல்லூரிக் கல்வி இயக்கம் உத்தரவிட்டுள்ளது.

துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் ஜக்தீப் தங்கர்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: துணை ஜனாதிபதியாக ஜக்தீப் தங்கர் பதவியேற்று கொண்டார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நிறைவு பெற்றதை தொடர்ந்து கடந்த 6 ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடந்தது. அதில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் களமிறங்கிய ஜக்தீப் தங்கர் வெற்றி பெற்றார். தொடர்ந்து, ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் துணை ஜனாதிபதியாக ஜக்தீப் தங்கர் பதவியேற்று … Read more

பணவீக்கத்தினால் மக்களுக்கு மோசமான பாதிப்பு.. பாகிஸ்தான் பெண்ணின் குமுறல்.. !

சர்வதேச அளவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில் மக்கள் அதன் தாக்கத்தினை உணரத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக மிக மோசமான விலைவாசி, கடன், நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் இருந்து வரும் பாகிஸ்தான், இலங்கையில் இது மிக மோசமான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் பெண் ஒருவர் வீடியோ பதிவொன்றில், பாகிஸ்தான் அரசினை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். சீன ஸ்மார்ட்போன்களை தவிர்ப்பது சாத்தியமா.. இந்தியாவின் நிலை என்ன? அரசு ஏழைகளை கொன்று விட்டது? அதில் விலைவாசி விண்ணைத் … Read more

காமன்வெல்த்: பாகிஸ்தான் மற்றும் இலங்கையைச் சேர்ந்த வீரர்களைக் காணவில்லை; அதிர்ச்சியில் இங்கிலாந்து!

2022-ம் ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெற்றது. உலக நாடுகளைச் சேர்ந்த பல்வேறு வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டனர். குறிப்பாக இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்றனர். இந்நிலையில் காமன்வெல்த் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் அனைவரும் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த வீரர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்புவதற்குத் தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில், … Read more

மிஸ் பண்ணிடாதீங்க: சென்னை தீவுத்திடலில் நாளை முதல் 3 நாட்கள் உணவுத்திருவிழா….

சென்னை: சென்னை தலைமைச்செயலகம் அருகே உள்ள  தீவுத்திடலில் நாளை முதல் 3 நாட்கள் உணவுத்திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவை உணவு பாதுகாப்பு துறை  நடத்துகிறது. அத்துடன், பொதுமக்களை கவரும் வகையில்,  பாரம்பரிய உணவு வகைகள், உணவு சார்ந்த போட்டிகள், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. சென்னை தீவுத்திடலில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் நாளை உணவுத்திருவிழா நடத்தப்படுகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த உணவுத் திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்தும் விதமாக 150 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. … Read more

தமிழக மீனவர்கள் 9 பேருக்கு ஆக.25 வரை காவல்: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

கொழும்பு: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேருக்கு ஆக.25 வரை காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கைதான தமிழக மீனவர்கள் 9 பேரையும் ஆக.25 வரை திருகோணமலை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக தரையிறக்கும் சோதனை: ககன்யான் திட்டத்தில் சாதனை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெங்களூரு: விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக, குறைந்த உயரத்தில் இருந்து வீரர்களை பாதுகாப்பாக தரையிறக்கும் மோட்டார் சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நடத்தி சாதித்துள்ளது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும், ‘ககன்யான்’ திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, ‘இஸ்ரோ’ ஈடுபட்டுள்ளது. இதற்கு பயன்படுத்தப்பட உள்ள, ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டில் பொருத்தப்படவுள்ள, ‘பூஸ்டர்’ சமீபத்தில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக, விண்வெளி வீரர்கள் குழு … Read more

6 லட்சம் கோடியை தொட்ட ஐசிஐசிஐ வங்கி.. எலைட் கிளப்-ல் சேர்ந்தாச்சு..!

ஐசிஐசிஐ வங்கியின் பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் ரூ.866.15-ஐ எட்டிய நிலையில் இதன் சந்தை மதிப்பு முதல் முறையாக 6.01 லட்சம் கோடி ரூபாயை தொட்டு உள்ளது. 2022 ஆம் ஆண்டில் இதுவரை ஐசிஐசிஐ வங்கி பங்குகள் கிட்டத்தட்ட 17% உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையில் ஐசிஐசிஐ வங்கி பங்குகள் அதன் முந்தைய முடிவிலிருந்து 1.27 சதவீதம் அதிகரித்து 859.30 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. 25 ஆண்டுகளாக Parle-G பிஸ்கட் விலை ரூ.5 தான். … Read more