சீன தயாரிப்பு இந்திய தேசியக்கொடியை ஏந்தி சென்றது வேதனை: சபாநாயகர் அப்பாவு கருத்து| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சென்னை: சீனாவில் தயாரான இந்திய தேசியக்கொடியை ஏந்தி சென்றது வேதனையான விஷயம் என தமிழக சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். கனடாவின் ஹாலிபேக்ஸ் நகரில் 65வது சபாநாயகர்கள் மாநாடு நடந்தது. அதில், பல்வேறு நாடுகளின், மாநிலங்களில் சபாநாயகர்கள் பங்கேற்றனர். இந்தியா சார்பில், லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா, தமிழக சபாநாயகர் அப்பாவு மற்றும் பல மாநில சபாநாயகர்கள் பங்கேற்றனர். மாநாடு நடந்த வளாகத்தில் ஓம்பிர்லா தலைமையில் சபாநாயகர்கள் தங்களது கைகளில் தேசியகக்கொடி ஏந்தி … Read more

வீழ்ச்சி காணும் கச்சா எண்ணெய்.. 2020க்கு பிறகு தரமான சம்பவம்.. பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

கச்சா எண்ணெய் விலையானது சர்வதேச சந்தையில் தொடர்ந்து மூன்றாவது மாதமாக சரிவினைக் கண்டுள்ளது . இது அமெரிக்காவின் மத்திய வங்கியானது பொருளாதாரத்தில் தாக்கம் இருந்தாலும், வட்டி விகிதத்தினை அதிகரிக்கும் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதற்கிடையில் சீனாவின் ஜீரோ கோவிட் பாலிசி என பலவும் தேவையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் தேவையானது குறையலாம் என்ற நிலை இருந்து வருகின்றது. இனி எண்ணெய்-க்கும், தங்கத்திற்கும் எந்த பிரச்சனையும் இல்லை..!! தற்போதைய நிலவரம்? … Read more

`2 மணி நேரமா ஆம்புலன்ஸ் வரல'… நிறைமாத கர்ப்பிணி மனைவியை தள்ளுவண்டியில் அழைத்து சென்ற அவலம்

மத்திய பிரதேசத்தின் தாமோ மாவட்டத்தின் ரானேஹ் கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு செவ்வாயன்று பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து கைலாஷ் அஹிர்வார் என்பவர் 108 அரசு ஆம்புலன்ஸ் சேவைக்கு போன் செய்திருக்கிறார். சுமார் இரண்டு மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அருகிலிருந்த சுகாதார மையத்திற்கு தனது மனைவியை அழைத்துச் சென்றார். அங்கு செவிலியர்கள், மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் மனம் உடைந்து போனார். இதையடுத்து ஒரு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தனது மனவியை … Read more

நடுவானில் விமானத்தில் தனது பணியைத் துவங்க இருக்கும் பிரித்தானியாவின் புதிய பிரதமர்

வரும் திங்கட்கிழமை, நவம்பர் மாதம் 5ஆம் திகதி, பிரித்தானியாவின் புதிய பிரதமர் அறிவிக்கப்பட உள்ளார். அவர் தனது பணிகளை விமானத்தில் துவங்க இருக்கிறார். பிரித்தானிய பிரதமர் தேர்வில் இம்முறை பல புதுமைகள் நிகழ இருக்கின்றன… ஒன்று பிரதமரின் பதவியேற்பு விழா இம்முறை பக்கிங்காம் அரண்மனையில் அல்ல. பொதுவாக, புதிதாக பிரதமராக பொறுப்பேற்பவர் பக்கிங்காம் அரண்மனைக்குச் சென்று பிரித்தானிய மகாராணியாரை சந்திப்பார். மகாராணியார் புதிய பிரதமரின் கைகளை முத்தமிடுவார். பதிலுக்கு, பிரதமர் மகாராணியாரின் கைகளை முத்தமிடுவார். இது ஆண்டாண்டு … Read more

ஆகஸ்டு மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1,43,612 கோடி! மத்திய நிதியமைச்சகம் தகவல்…

டெல்லி: இந்தியாவில் கடந்த ஆகஸ்டு மாத ஜிஎஸ்டி வசூல்ரூ.1,43,612 கோடி என மத்திய நிதியமைச்சகம் அறிவித்து உள்ளது. இது கடந்த ஆண்டு ஆகஸ்டு மாத ஜிஎஸ்டி வசூலை விட 19% அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1,43,612 கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகியுள்ளதாக ஒன்றிய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தை விட ஜிஎஸ்டி வசூல் 28% அதிகம். தமிழகத்தில் 2021 ஆகஸ்ட்டில் ரூ.7,060 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல், இந்தாண்டு ஆகஸ்ட்டில் 19% அதிகரித்து ரூ.8,386 … Read more

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

சென்னை: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கடலூர், டெல்டா மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

பூலித்தேவருக்கு பிரதமர் மோடி புகழாரம்| Dinamalar

புதுடில்லி : சுதந்திர போராட்டவீரர் நெற்கட்டும் செவல் பாளையக்காரர் பூலித் தேவரின் 307 வது பிறந்த தினம் இன்று. தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே நெற்கட்டும்செவலில் உள்ள பூலித்தேவர் மணிமண்டபத்தில் மத்திய அமைச்சர் எல். முருகன், தமிழக அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் இன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் பிரதமர் புகழாரம் பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வெளியிட்ட அறிக்கை: மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த நாளில் … Read more

பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு மைக்ரோசாப்ட்-இல் வேலை.. சம்பளம் இத்தனை லட்சமா?

பார்வையற்ற மாற்றுத் திறனாளி இளைஞர் ஒருவருக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் வேலை அளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த இளைஞருக்கு ரூபாய் 47 லட்சம் ஆண்டு சம்பளத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலை கிடைத்து உள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. சிறு வயதிலேயே கண் பார்வை இழந்த இந்த இளைஞர் தனது விடா முயற்சியின் மூலம் என்ஜினியரிங் படிப்பு படித்து தற்போது தனது கனவு நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மைக்ரோசாப்ட் … Read more

IND vs HKG: ராகுலிடம் இல்லாத இன்டென்ட்டை வெளிப்படுத்திய ஹாங்காங்; இந்தியா சரிசெய்ய வேண்டியது என்ன?

இந்திய ஏபிடி சூர்யக்குமாரின் பேட் ஹாங்காங் பந்துவீச்சை சூறையாடி, சூப்பர் 4-க்குள் இந்தியாவை எடுத்துச் சென்றுள்ளது. ஹாங்காங்கிற்கு எதிரான போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம், லீக் சுற்றில் இரண்டு போட்டிகளையுமே இந்தியா வென்று, அதிரடியாக சூப்பர் 4-ல் நுழைந்துள்ளது. சர்வதேச டி20 தரப்பட்டியலில் வேண்டுமென்றால் இடங்கள் மாறலாம், ஆனால், இந்தியாவின் தற்போதைய தலைசிறந்த டி20 பேட்ஸ்மேன் என்றால் அது சூர்யக்குமார் யாதவ்தான். “ரிலே”வில் ஓடும் வீரர்களில், அணியின் தலைசிறந்த வீரர், எப்பொழுதும் இறுதி நபராகத்தான் … Read more

குக் வித் கோமாளி புகழ் திருமணம் விமரிசையாக நடைபெற்றது! பிரபலங்கள் வாழ்த்து.. புகைப்படங்கள்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற புகழ் – பென்சியா தம்பதிக்கு இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்கப் போவது சாம்பியன் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி, அதில் தனித்துவம் பெற்று, பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அதீத கவனம் பெற்று, அந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமானவர் புகழ். இவர் தற்போது திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் புகழ் தனது நீண்ட கால தோழி பென்சியாவை மணந்துள்ளார். View … Read more