கொரோனாவுக்கு உலக அளவில் 6,372,908 பேர் பலி

ஜெனீவா:உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.72 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,372,908 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 560,588,991 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 533,558,340 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 37,814 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வங்கி அதிகாரி அடித்து கொலை அவசர புத்தி செக்யூரிட்டி கைது| Dinamalar

எச்.ஏ.எல். : திருடன் என தவறாக நினைத்து, வங்கி அதிகாரியை இரும்புத்தடியால் அடித்து கொலை செய்த, செக்யூரிட்டி கைது செய்யப்பட்டார். ஒடிசாவைச் சேர்ந்த அபினாஷ், 24, அங்குள்ள வங்கி கிளையொன்றில், மேலாளராக பணியாற்றினார். பயிற்சிக்காக பெங்களூரு வந்திருந்தார். முனேனகொப்பலுவில், தன் அண்ணனின் நண்பர்கள் இருந்த அறையில் தங்கியிருந்தார். இந்நிலையில், இரவு பார்ட்டிக்கு சென்ற இவர், ஜூன் 5 அதிகாலை 3:00 மணியளவில், குடிபோதையில் அறைக்கு புறப்பட்டார். ஆனால், அவருக்கு வழி தெரியவில்லை. வழி தவறி எச்.ஏ.எல்.,லின், ஆனந்த … Read more

இலங்கை ஜனாதிபதியிடம் போராட்டக்காரர்கள் கிண்டலாக மூன்வைத்த கேள்வி? வைரலான ஸ்கிரீன்ஷாட் புகைப்படம்

இலங்கை ஜனாபதி கோட்டாபய ராஜபக்சவிடம் அவரது வீட்டில் சின்ன பின் மொபைல் சார்ஜர் இல்லையா? என அவரது இணைய பக்கம் மூலமாக ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கையில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியால் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என கோரிக்கை முன்வைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் குதித்தனர். இவ்வாறு சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களின் போராட்டம், ஜனாதிபதி கோட்டாபயவின் அதிகாரப்பூர்வ இல்லத்தை முழுவதுமாக கைப்பற்றும் அளவிற்கு பூதாகரமாக வெடித்தது. … Read more

ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் மீண்டும் குளறுபடி 14 மணி நேரம் பரிதவித்த மங்களூரு பயணியர்| Dinamalar

மங்களூரு : துபாயிலிருந்து 189 பயணியருடன் புறப்பட்ட ‘ஸ்பைஸ் ஜெட்’ விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, மங்களூருக்கு பதிலாக கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது. அங்கு விமானியின் பணி நேரம் முடிந்து விட்டதாக கூறி, அவர் விமானத்தை இயக்க மறுத்து விட்டார். இதனால், மறுநாள் காலை ௧௦:௦௦ மணி வரை, 14 மணி நேரம் பயணியர் பரிதவித்தனர்.துபாயிலிருந்து ஜூலை 8ம் தேதி, ‘ஸ்பைஸ் ஜெட்’ நிறுவன விமானம், 189 பயணியருடன் மாலை 5:00 மணிக்கு … Read more

அரசு பள்ளிகளில் மாணவர் தேர்தல் இலாகாக்கள் ஒதுக்கி கண்காணிப்பு| Dinamalar

சாம்ராஜ் நகர் : சரியான தலைவரை தேர்ந்தெடுக்கும் அறிவை மாணவர்களிடம் வளர்க்கும் வகையில் சாம்ராஜ் நகர் மாவட்டத்தின் பல்வேறு அரசு பள்ளிகளில், ‘மாணவர் தேர்தல்’ நடத்தப்பட்டு வருகிறது.சாம்ராஜ் நகர் மாவட்டம், குண்டுலுபேட் சோமள்ளி கிராமத்தில் ஸ்ரீகங்காதரேஸ்வரா அரசு முதன்மை தொடக்க பள்ளி உள்ளது. இங்கு மாணவர் பார்லிமென்ட் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் போட்டியிட விரும்புவோர், 10 ரூபாய் கட்டணம் செலுத்தி போட்டியிடலாம் என்று கூறப்பட்டது.தற்போது நடக்கும் கிராம பஞ்சாயத்து தேர்தல் போன்றே, ஓட்டு சீட்டு நடைமுறை, விரலில் … Read more

ராஜபக்ச கேட்டுக் கொண்டால்…இந்திய ராணுவம் களமிறங்கும்: பிரபல தலைவர் கருத்து!

இலங்கையின் ராஜபக்சேவுக்கு இந்தியாவின் ராணுவ உதவி வேண்டுமானால் நாங்கள்(இந்தியா) கொடுக்க வேண்டும் என இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் சுப்பிரமணிய சுவாமி கருத்து தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, அந்த நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என லட்சக்கணக்கான இலங்கை மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனைத் தொடர்ந்து இலங்கையின் காலிமுகத் திடலில் ஜூலை 9ம் திகதியான சனிக்கிழமை காலை தொடங்கிய மக்கள் … Read more

28 கோடி பேருக்கு இ — ஷ்ரம் கார்டு மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி பெருமிதம்| Dinamalar

பெங்களூரு : ”நாட்டில் 28 கோடி பேருக்கு ‘இ — ஷ்ரம்’ கார்டுகள் அளிக்கப்பட்டுள்ளது,” என மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.பெங்களூரில், நேற்று நடந்த மாநில பா.ஜ., தொழிலாளர் பிரிவு செயற்குழு கூட்டத்தில், மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி பங்கேற்று பேசியதாவது:’ஒரு நாடு ஒரு கார்டு’ திட்டத்தால், நகர் பகுதிகளுக்கு பிழைக்க வரும் அமைப்பு சாரா தொழிலாளர்கள், எந்த நகருக்கு சென்றாலும் ரேஷன் பொருட்கள் கிடைக்கும்; சுய தொழில் துவங்க கடனுதவி வழங்கப்படும். அரசின் நலத்திட்டங்கள் … Read more

மாநகராட்சி கமிஷனர் குழப்பம்; ஆம் ஆத்மி குற்றச்சாட்டு| Dinamalar

பெங்களூரு : ‘சாம்ராஜ் பேட்டின், ஈத்கா மைதானம் விஷயத்தில் விவாதம் ஏற்படுவதற்கு, பெங்களூரு மாநகராட்சியே காரணம்’ என, ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.இது குறித்து, ஆம் ஆத்மியின் பெங்களூரு பிரிவு செயலரும், சாம்ராஜ்பேட் தலைவருமான ஜெகதீஷ் சந்திரா கூறியதாவது:மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத், சாம்ராஜ்பேட் ஈத்கா மைதானம் தொடர்பாக, முன்னுக்கு பின், முரணான கருத்துகளை தெரிவிக்கிறார். மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்.ஒரு முறை இந்த மைதானம், வக்ப் வாரியத்தின் சொத்து என்கிறார்; மற்றொரு முறை மாநகராட்சி சொத்து … Read more

பெண் டாக்டரிடம் ரூ.11 லட்சம் அபேஸ்| Dinamalar

குமாரசாமி லே — அவுட் : மின் கட்டணம் செலுத்தும்படி கூறிய, சைபர் மோசடி நபர்கள், பெண் டாக்டரிடம் 10.76 லட்சம் ரூபாய் கொள்ளையடித்தனர்.பெங்களூரின், குமாரசாமி லே — அவுட்டில் வசிப்பவர் டாக்டர் வாணி பிரபாகர். ஜூலை 7ல், அறிமுகமில்லாத எண்ணிலிருந்து, குறுந்தகவல் வந்தது. இந்த எண்ணில் தொடர்பு கொண்டு விசாரித்த போது, அதில் பேசிய நபர், மின் கட்டணம் செலுத்த ‘டீம் விவர்’ செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி கூறினார்.இதன்படி வாணி, பதிவிறக்கம் செய்து கொண்டார். … Read more

11.07.22 திங்கட்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | July – 11 இன்றைய ராசிபலன் | Astrology

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link