ஓணம் பண்டிகையை முன்னிட்டு 8ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

கன்னியாகுமாரி: ஓணம் பண்டிகை தினத்தினை முன்னிட்டு 08.09.2022 அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக செப்டம்பர் மாதம் 2வது சனிக்கிழமை அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழைப்பழத்தை அமுக்கங்கய்யா! 50 வயது நபருக்கு காது குத்து! ஆசையை நிறைவேற்றி வைத்த சொந்த பந்தம்!

Tamilnadu oi-Mohan S கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே, குடும்ப ஏழ்மையின் காரணமாக சிறு வயதில் மொட்டை அடித்து, காது குத்தாமல் இருந்தவருக்கு, 50 வயதில் அவரது ஆசையை நிறைவேற்றி, உறவினர்கள் நெகிழ்ச்சி அடைய செய்தனர். இந்துக்களின் சாஸ்திர சம்பிரதாயப்படி, பிறந்த குழந்தைக்கு ஒரு குறிப்பிட்டகால பகுதியில் சொந்தபந்தங்கள் கூடி, குலதெய்வ கோயிலில் மொட்டை போடுதல் மற்றும் காதணி விழா நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த விழா பொதுவாக குழந்தைபிறந்த முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் … Read more

உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்த இந்தியா.. பிரிட்டன் பின்னுக்கு தள்ளப்பட்டது..!

சர்வதேச பொருளாதாரத்தில் 2008 நிதி நெருக்கடிக்குப் பின்பு கொரோனா தான் பெரும் பாதிப்பாகப் பார்க்கப்பட்ட நிலையில் கொரோனாவுக்குப் பின்பு ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் மிகப்பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் வாயிலாகச் சர்வதேச பொருளாதாரத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது, குறிப்பாக வல்லரசு நாடுகள் எனக் கருதப்படும் டாப் 10 நாடுகள் மத்தியில் பெரிய அளவிலான மாற்றங்களும் சரிவுகளும் பதிவாகியுள்ளது. இதற்கிடையில் ரஷ்யா உடன் நட்பு நாடாக இருக்கும் இந்தியா உட்படப் … Read more

பால் பொருட்களை பிளாஸ்டிக் பாட்டிலில் விற்க விதி அனுமதிக்கிறது! உணவு பாதுகாப்புத் துறை நீதிமன்றத்தில் அறிக்கை…

சென்னை: ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை பிளாஸ்டிக் பாட்டிலில் விற்க விதி அனுமதிப்பதாக உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் தடை தொடர்பான வழக்கில்,  உணவுப் பாதுகாப்பு துறை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்த பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நெகிழி உற்பத்தியாளர்கள் தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுமீதான விசாரணை  நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அமர்வில் … Read more

பே டிஎம், ரேஸோர் பே, கேஷ்ஃபிரீ ஆகிய ஆன்லைன் பணபரிவர்த்தனை நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை; பே டிஎம், ரேஸோர் பே, கேஷ்ஃபிரீ ஆகிய ஆன்லைன் பணபரிவர்த்தனை நிறுவன அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். செல்போன் செயலி மூலம் சட்டவிரோதமாக கடன் வழங்கல் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.

இரக்கமற்ற மனித இனம்.. நூற்றுக்கணக்கான பறவைகளின் அபய குரலோடு மரத்தை சாய்த்த ஜேசிபி! கண்டனங்களால் கைது

India oi-Jackson Singh மலப்புரம்: சாலை அமைப்பதற்காக பெரிய மரம் ஒன்று வெட்டி சாய்க்கப்பட்ட போது அதில் கூடுகட்டி வாழ்ந்து கொண்டிருந்த நூற்றுக்கணக்கான பறவைகள் உயிரிழந்த சம்பவம் காண்போரை கண் கலங்க வைத்துள்ளது. இந்த உலகத்திலேயே இயற்கையை அழிக்கும் ஓர் உயிரினம் இருக்கிறது என்றால் அது சந்தேகமே இல்லாமல் மனிதன் தான். ஆறுகளில் நீர்ப்பிடிப்புக்கு ஆதாரமாக இருக்கும் ஆற்று மணலை வரைமுறை இல்லாமல் எடுப்பது; தனது சுயநலத்துக்காக உயிர் வாயுவை கொடுக்கும் மரங்களை வெட்டுவது; மலைகளை உடைப்பது … Read more

பேடிஎம், ரேசர்பே நிறுவனங்களில் அமலாக்கத்துறை ரெய்டு| Dinamalar

புதுடில்லி: சீனர்களால் நடத்தப்படும் , மொபைல்போன் மூலம் சட்ட விரோதமாக கடன் வழங்கும் செயலிகள் குறித்த வழக்கு தொடர்பாக ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செயலியான ரேசர்பே, பேடிஎம் மற்றும் கேஷ்ப்ரீ நிறுவனங்களில் ரெய்டு நடத்தப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. கர்நாடக தலைநகர் பெங்களூருவில் 6 இடங்களில் நேற்று (செப்.,2) துவங்கிய இந்த ரெய்டு தொடர்ந்து நடந்து வருவதாக தெரிவித்துள்ளது. சீனர்கள் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களின் வங்கிக்கணக்கில் இருந்த ரூ.17 கோடி முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் போலியான ஆவணங்களை பயன்படுத்தி … Read more

கடனில் மிதக்கும் கௌதம் அதானி.. மொத்தம் எத்தனை கோடி தெரியுமா..?

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் சுமார் 141 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ள கௌதம் அதானி-யின் அதானி குழுமம் கடனில் மிதக்கிறது. உலகப் பணக்காரர்கள் மத்தியில் சில வருடங்களுக்கு முன்பு தான் டாப் 10 பட்டியலில் சேர்ந்த கௌதம் அதானி வேகமாக முன்னேறி உலகின் 3வது பெரும் பணக்காரர் ஆக உயர்ந்துள்ளார். தற்போது இவருக்கு மேல் 151 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஜெப் பெசோஸ் மற்றும் 241 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் … Read more

“அதிக அளவு ஆணுறைகளை ஆர்டர் செய்த மும்பை'': ஸ்விக்கியின் கணக்கெடுப்பு சொல்வதென்ன?

ஆன்லைனில் உணவுகளை விநியோகிப்பது மட்டுமல்லாமல், பலசரக்கு மளிகைப் பொருள்களையும் `இன்ஸ்டாமார்ட்’ (Instamart) மூலம் ஸ்விக்கி விநியோகித்து வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் ஸ்விக்கியில் அதிகமாக ஆர்டர் செய்யப்படும் பொருள்கள் குறித்தும், விநியோக வளர்ச்சி குறித்தும் ஸ்விக்கி கணக்கெடுப்பை மேற்கொண்டது. Swiggy `ஸ்விக்கி ஊழியர்கள் பிற நிறுவனங்களில் பணிபுரியலாம்’: புதிய விதிமுறையை அறிவித்த ஸ்விக்கி! அதில், மும்பையில் கடந்த ஓராண்டில் ஆணுறைகளின் ஆர்டர்கள் 570 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இன்ஸ்டாமார்ட்டின் வளர்ச்சி 16 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் ஸ்விக்கி … Read more