The Raja Saab Review: `இது சங்கராந்தி ஃபீஸ்ட் காதுரா!' – சோதிக்கும் பிரபாஸின் ஹாரர் காமெடி சினிமா!

தாய், தந்தை அரவணைப்பின்றி பாட்டியால் வளர்க்கப்படுகிறார் ராஜூ (பிரபாஸ்). பாட்டி கங்கம்மாவுக்கு (சரினா வாகப்) ராஜூ மட்டுமேதான் உலகம். கங்கம்மா, நீண்ட வருடங்களுக்கு முன்பு காணாமல் போன கணவரின் பற்றிய நினைவுகளிலேயே மூழ்கிக் கிடக்கிறார். அனைத்தையும் மறந்துவிடும் கங்கம்மாவால், இந்த நினைவுகளிலிருந்து மட்டும் மீள முடியவில்லை. பாட்டியின் நிலைமையைக் கண்டு கவலைப்படும் பேரன், திடீரென தனது தாத்தா போன்றொருவரை ஒரு போட்டோவில் காண்கிறார். The Raja Saab Review அதைத் தொடர்ந்து தாத்தாவைத் தேடிக் கண்டுபிடிக்கப் புறப்படுகிறார் … Read more

போகி பண்டிகை: புகையில்லாமல் கொண்டாட மாசுக் கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள்!

சென்னை: போகி பண்டிகையை புகையில்லாமல் கொண்டாட பொதுமக்களுக்கு  மாசுக் கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. போகி பண்டிகை என்பது பொங்கல் திருநாளின் முதல் நாள் (மார்கழி மாதக் கடைசி நாள்), பழையன கழித்து புதியன புகுவதைக் குறிக்கும் ஒரு விழா; இந்த நாளில் வீட்டில் உள்ள பழைய, தேவையில்லாத பொருட்களை எரித்து, வீட்டை சுத்தம் செய்து, மாக்கோலமிட்டு, மங்களகரமாக அலங்கரித்து, இந்திரனுக்காகவும், செழுமைக்காகவும் கொண்டாடப்படு கிறது, இது பொங்கலுக்கான தொடக்க விழாவாகும்.  இந்த பண்டிகையன்று பொதுமக்கள் தங்களது … Read more

மோடி 'இதை' மட்டும் செய்தால் இந்தியா – அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தை சக்சஸ்! – ட்ரம்பின் அதிகாரி

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவிகித வரி நிச்சயம் ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் சுமை. இந்தியா, அமெரிக்கா இடையே நடந்துகொண்டிருக்கும் வர்த்தகப் பேச்சுவார்த்தை கைகூடினால், இந்தச் சுமை குறையும் என்கிற பெரிய எதிர்பார்ப்பு இந்தியாவில் இருந்து வருகிறது. ஆனால், இந்தப் பேச்சுவார்த்தை இன்னமும் இழுத்துக்கொண்டே போகிறது. அவ்வப்போது, ‘பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்’ என்கிற செய்தி வந்தாலும், அது செய்தியாகவே முடிந்துவிடுகிறது. இந்த நிலையில், இந்தியா – அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தை கைகூடுவதற்கான உண்மையை பாட்காஸ்ட் ஒன்றில் கூறியுள்ளார், அமெரிக்க … Read more

திமுக கூட்டணியில் சேருகிறது ராமதாஸ் தலைமையிலான பாமக….! வேட்பு மனு வழங்கும் நிகழ்ச்சியில் சூசகம்…

சென்னை:  டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பாமகவில் வேட்பு மனு வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய ராமதாஸ்,  மு.க.ஸ்டாலின் ஆட்சி நன்றாகத் தான் இருக்கிறது,  அரசியலில் எதுவும் நடக்கலாம் என கூறினார். இதன் மூலம்   பாமக நிறுவனர் ராமதாஸ்  திமுக கூட்டணியில் சேருவது உறுதியாகி உள்ளது. பாமகவில் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக பாமக இரு பிரிவு பிரிந்து கிடக்கிறது. பாமக தலைவர் அன்புமணி தலைமையிலான பாமகவே அதிகாரப்பூர்வமானது என தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதனால், அன்புமணி, … Read more

ஶ்ரீதர் வேம்பு விவாகரத்து வழக்கு: 1.7 பில்லியன் டாலர் பாண்ட் இழப்பீடு வழங்க வேண்டுமா?!

2021-ம் ஆண்டு விவகாரத்திற்காக விண்ணப்பித்திருந்தார் ஜோஹோவின் நிறுவனர் ஶ்ரீதர் வேம்பு. அந்த வழக்கு இன்னமும் கலிபோர்னியா நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், அமெரிக்க நீதிமன்றம் ஶ்ரீதர் வேம்புவிடம் அவர் மனைவியின் நிதித் தேவைகளுக்காக 1.7 பில்லியன் டாலர் மதிப்பிலான பாண்ட் ஒன்றை தரும்படி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது குறித்து ஶ்ரீதர் வேம்புவின் வழக்கறிஞர் கிறிஸ்டோபர் சி. மெல்ச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்…. கிறிஸ்டோபர் சி. மெல்ச்சர் இந்தியா, சீனா மீது 500% வரியா? … Read more

2026 சட்டமன்ற தேர்தல்: தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழு அமைத்தார் தவெக தலைவர் விஜய்…

சென்னை: தமிழ்நாடு 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு,  தமிழக வெற்றிக்கழகம் சார்பில்,   தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழுவை அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்து உள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. மக்களை கவரும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணியில், திமுக,  அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் தீவிரமாக செயலாற்றி வரும் நிலையில், தவெகவும் தேர்தல் அறிக்கை தயாரிகக 12 … Read more

மேற்கு வங்காள கவர்னருக்கு கொலை மிரட்டல் – போலீசார் விசாரணை

கொல்கத்தா, மேற்கு வங்காள கவர்னராக செயல்பட்டு வருபவர் சந்திர போஸ். இந்நிலையில், கவர்னர் சந்திர போசுக்கு நேற்று இரவு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கவர்னர் மாளிகைக்கு இமெயில் மூலம் வந்த மிரட்டலில் சந்திர போஸ் வெடிகுண்டு வைத்து கொல்லப்படுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக மாநில டிஜிபி-யிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கவர்னருக்கு இமெயில் மூலம் கொலை மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், … Read more

அதிமுக: இரட்டை இலை சின்னத்தைப் பயன்படுத்த தடைக்கோரி வழக்கு; இபிஎஸ்-க்கு எதிரான மனு தள்ளுபடி

அதிமுக-வில் உட்கட்சி விவகாரம் தொடர்பாக, நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும் வரை, அதிமுக-வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்பதற்காகவும், எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராகவும் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி, கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை கடந்த ஜூலையில் விசாரணைக்கு ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது நீதிமன்றம். இரட்டை இலை இதையடுத்து … Read more

சென்னை எழும்பூர் பகுதியில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்..

சென்னை:  சென்னைஎழும்பூர் பகுதியில்  இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை எழும்பூர் பகுதியில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாவும், இந்த  போக்குவரத்து மாற்றங்களுக்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஒத்துழைக்குமாறு சென்னை போக்குவரத்து போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:- சென்னை பெருநகர போக்குவரத்து காவல், எழும்பூர் போக்குவரத்து காவல் நிலையத்திற்குட்பட்ட பாந்தியன் ரவுண்டானா பகுதியானது 5 முனை சந்திப்பு மற்றும் இரண்டு ரவுண்டானாக்கள் உள்ளதால், போக்குவரத்து நெரிசலை சீர்படுத்த தற்காலிகமாக இன்று முதல் … Read more

பொதுச் செயலாளர் பதவி: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனு மீது இன்று விசாரணை

புதுடெல்லி, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூரிய மூர்த்தி, சென்னை சிவில் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், கடந்த 2022 ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களையும், பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று அறிவிக்க கோரியும் முறையிட்டு இருந்தார். இந்த வழக்கை நிராகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை சிவில் கோர்ட்டு கடந்த ஜூலையில் விசாரணைக்கு ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் … Read more