இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹவுதி பிரதமர் கொல்லப்பட்டதாக தகவல்…

கெய்ரோ: இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹவுதி பிரதமர் கொல்லப்பட்டதாக தகவல்  வெளியாகி உள்ளது. “ஏமனில் உள்ள சனா பகுதியில் ஹவுதி பயங்கரவாத ஆட்சியின் இராணுவ இலக்கை துல்லியமாகத் தாக்கியதாக” இஸ்ரேலிய இராணுவம் வியாழக்கிழமை தெரிவித்திருந்தது. இந்த தாக்குதலில்   ஹவுதி பிரதமர் அகமது அல்-ரஹாவி மற்றும் பல அமைச்சர்கள் கொல்லப்பட்டதாக இன்று தகவல் வெளியாகி உள்ளது. ஏமன் தலைநகர் சனாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அரசாங்கத்தின் பிரதமர் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரானிய ஆதரவு ஹவுதிகள் இன்று … Read more

எந்த நாட்டையும் இந்தியா எதிரியாக கருதுவது இல்லை: ராஜ்நாத் சிங்

புதுடெல்லி, சர்வதேச உறவுகளில் நிரந்தர நண்பர்களும் இல்லை; நிரந்தர எதிரிகளும் இல்லை என்று பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் பேசினார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜ்நாத்சிங் பேசியதாவது: இந்தியா எந்த நாட்டையும் எதிரியாக கருதுவது இல்லை. எங்களுக்கு மக்கள், விவசாயிகள், சிறு வணிகர்கள் நலன்கள் மிகவும் முக்கியமானவை. சர்வதேச உறவுகளில் நிரந்தர நண்பரோ, எதிரியோ இல்லை. நிரந்தர நலன் மட்டுமே உள்ளது. உலகம் புதிய சவால்களுடன் வெகு வேகமாக மாறி வருகிறது. சுயசார்பு என்பது விருப்பமல்ல, தேவையானதாக மாறிவிட்டது … Read more

Ather Rizta updated – ஏதெர் ரிஸ்டா ஸ்கூட்டரில் தொடுதிரை மற்றும் புதிய நிறங்கள்

பிரபலமான ஏதெர் ரிஸ்டா ஃபேம்லி ஸ்கூட்டரின் Z வேரியண்ட் வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு OTA மூலம் தொடுதிரை வசதி மற்றும் டெர்ராகோட்டா சிவப்பு என்ற நிறம் ஒற்றை மற்றும் டூயல் டோன் என இரு விதமாக கிடைக்கின்றது. இன்றைய ஏதெரின் கம்யூனிட்டி தினத்தில் EL platform உட்பட EL01, Redux என்ற இரு கான்செப்ட்களுடன் கூடுதலாக க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் விரைவு சார்ஜரை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ரிஸ்டா இசட் வேரியண்டை ஏற்கனவே வைத்துள்ள வாடிக்கையாளர்கள் முழு தொடுதிரை … Read more

“நிரந்தர நண்பர்களோ எதிரிகளோ இல்லை; நலன்களே நிரந்தரம்'' – ராஜ்நாத் சிங்

என்டிடிவி பாதுகாப்பு உச்சி மாநாடு 2025 என்டிடிவி பாதுகாப்பு உச்சி மாநாடு 2025 நடத்தப்பட்டது. இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது:“இந்தியாவின் பாதுகாப்புக் கொள்கையில் தற்சார்பு (ஆத்மநிர்பர்தா) மிகவும் முக்கியமானது. நிரந்தர நண்பர்களோ எதிரிகளோ இல்லை; நிரந்தர நலன்களே உள்ளன. உள்நாட்டிலேயே பாதுகாப்புத் தளவாடங்களை உற்பத்தி செய்வதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. அமைச்சர் ராஜ்நாத் சிங் ஸ்டெல்த் போர்க்கப்பல்கள் ஐ.என்.எஸ். ஹிம்கிரி மற்றும் ஐ.என்.எஸ். உதய்கிரி … Read more

சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக போராடிய வழக்கறிஞர்கள் மீதான வழக்குகளை தமிழ்நாடு அரசு கைவிட மறுப்பு…

சென்னை:  சென்னையில் 12 நாட்கள் போராட்டம் நடத்திய   தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக போராடிய ஆண் பெண், வழக்கறிஞர்கள் மீதான வழக்குகளை தமிழ்நாடு அரசு கைவிட முடியாது என நீதிமன்றத்தில் தொரிவித்து உள்ளது. இந்த வழக்கில், தூய்மை பணியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களையும் காவல்துறையினர் தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டு உள்ளதால், இந்த வழக்கின் விசாரணையின்போது, தமிழ்நாடு அரசு கைவிட மறுப்பு தெரிவித்து உள்ளது. இதையடுத்து,  இந்த சம்​பவம் தொடர்​பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலை​மை​யி்ல் ஒருநபர் ஆணை​யம் அமைத்து விசா​ரிக்​கலாம் … Read more

வேறு சாதி ஆணுடன் காதல்… மகளின் கழுத்தை நெரித்துக் கொன்று வாயில் விஷத்தை ஊற்றிய தந்தை

பெங்களூரு, கர்நாடக மாநிலம் கலபுரகி பகுதியில் உள்ள மேலகுண்டா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். கடந்த வியாழக்கிழமை சங்கரின் 18 வயது மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் பரவியது. இதையடுத்து சங்கரின் குடும்பத்தினர் அந்த பெண்ணுக்கு இறுதிச் சடங்குகள் செய்து உடலை அடக்கம் செய்தனர். இந்நிலையில், இது குறித்து மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சங்கரின் வீட்டிற்கு போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணான … Read more

ஏதெர் Redux ஸ்போர்ட்டிவ் மின்சார மோட்டோ-ஸ்கூட்டர் அறிமுகம்

ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் மோட்டோ-ஸ்கூட்டருக்கு இணையான பிரீமியம் ஸ்போர்ட்டிவ் டிசைனை பெற்ற ரெட்க்ஸ் (Redux) கான்செப்ட் மாடல் பல்வேறு நவீன அம்சங்களுடன் பெர்ஃபாமென்ஸ் சார்ந்தவற்றை கொண்டுள்ளது. குறிப்பாக, இந்த மாடல் உற்பத்தி எப்பொழுது வரும் நுட்பவிபரங்கள் போன்றவற்றை தற்பொழுது அறிவிக்கவில்லை என்றாலும் நவீன அம்சங்களை மற்ற எதிர்கால ஏதெரின் ஸ்கூட்டர்களில் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. மிகசிறப்பான ரைடிங் டைனமிக்ஸ் கொண்டதாக விளங்கும் ரெட்க்ஸில் இலகு எடை கொண்ட அலுமினிய சேஸிஸ் கொடுக்கப்பட்டு 3D முறையில் அச்சிடப்பட்ட லேட்டிஸ் … Read more

Onam Releases Review: ஓணம் டிரீட்டாக திரைக்கு வந்திருக்கும் மலையாளப் படங்கள் எப்படி இருக்கிறது?

மலையாள சினிமாவுக்கு இந்த வாரம் ரொம்பவே ஸ்பெஷல் எனச் சொல்லலாம். ஓணம் பண்டிகையை முன்னிட்டு இந்தாண்டு கல்யாணி ப்ரியதர்ஷன், நஸ்லென் நடித்திருக்கும் ‘லோகா – சாப்டர் 1: சந்திரா’, ஃபகத் ஃபாஸில், கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்திருக்கும் ‘ஓடும் குதிரை சாடும் குதிரை’, மோகன்லால், மாளவிகா மோகனன் நடித்திருக்கும் ‘ஹ்ருதயபூர்வம்’ போன்ற மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மூன்று படைப்புகள் திரைக்கு வந்திருக்கின்றன. Hridayapoorvam இதில் இரண்டு படங்களில் கல்யாணி ப்ரியதர்ஷன் தான் கதாநாயகியாக இருக்கிறார். இந்த மூன்று திரைப்படங்களும் எப்படி … Read more

2 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு; உச்சநீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதி பணியிடங்களும் நிரம்பியது….

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் 2 புதிய நீதிபதிகள் பதவியேற்ற நிலையில், உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதி பணியிடங்களும் நிரம்பி முழு பலத்தை எட்டி உள்ளது. உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்வது, பணியிட மாற்றம் செய்வது போன்ற முடிவுகளை, உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பு எடுக்கிறது. இந்த கொலிஜியத்தில்,   தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும்  மூத்த நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், ஜே.கே.மகேஸ்வரி, பி.வி.நாகரத்னா ஆகியோர் உள்ளனர். இந்த கொலீஜியம் அமைப்பின் கூட்டம், ஆகஸ்டு  25ந்தேதி … Read more

‘கொழுந்தியாளை விரும்புகிறேன்…’ திருமணம் செய்து வைக்க கோரி வாலிபர் விநோத போராட்டம்

லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் கன்னோஜ் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ் சக்சேனா. இவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால் அந்த பெண் உடல்நலக்குறைவு காரணமாக அடுத்த ஆண்டு உயிரிழந்தார். இதையடுத்து, மனைவியின் சகோதரியை ராஜ் சக்சேனா திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுடன் இரண்டு ஆண்டுகளாக ராஜ் சக்சேனா குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் தனது மனைவியின் மற்றொரு தங்கை மீது அவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இந்த காதல் … Read more