உக்ரைனில் பிரித்தானிய கூலிப்படைகள்: ரஷ்யா வெளியிட்ட 100 பேர் பட்டியல்

உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிராக 100 பிரித்தானிய கூலிப்படைகள் களமிறங்கியுள்ளதாக பட்டியல் ஒன்றை ரஷ்ய ஆதரவு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஆதரவு சமூக ஊடகமான குழு ஒன்று வெளியிட்டுள்ள தகவலில், 99 ஆண்கள் மற்றும் பெண் ஒருவர் என மொத்தம் 100 பேர் உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிராக போரிட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், தனியார் கூலிப்படையை சேர்ந்த மொத்தம் 700 பேர்கள் உக்ரைனில் களமிறக்கப்பட்டுள்ளதாக ஏப்ரல் 5ம் திகதி தாங்கள் குறிப்பிட்டுள்ளதாகவும், தற்போது அவர்களின் பெயர்கள், பிறந்த … Read more

டி20 ஆட்டத்தில் அடித்து விளையாடவே பார்ப்பார்கள்… தோனி அறிவுரை!

டி20 ஆட்டத்தின் பெரும்பாலான நேரங்களில் பேட்ஸ்மேன் ஆஃப் ஸ்பின்னர்களை அடித்து விளையாடவே பார்ப்பார்கள் என சென்னை அணியின் நெட் பவுலர் சல்மான் கானிடம் சிஎஸ்கே அணியின் முன்னணி வீரர் தோனி தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகள் என்பது சூதாட்டம், பணம் கொட்டும் வியாபாரம் என பலரால் விமர்சிக்கப்பட்டாலும், இந்த ஐபிஎல் போட்டிகள் திறமை வாய்ந்த இளம் இந்திய வீரர்களை கண்டறிவதிலும் முதன்மையாக இருக்கிறது. மும்பையின் ஹர்திக் பாண்டியா முதல் தமிழகத்தின் நடராஜன் வரை இந்த ஐபிஎல் போட்டிகள் தான் … Read more

இந்தியாவில் பல மாநிலங்களின் வெப்பநிலை.. 45 டிகிரி செல்ஷியஸ்! . தொடரும் மின் தடையால் மக்கள் அவதி| Dinamalar

புதுடில்லி-நாடு முழுதும், கோடை காலம் துவங்கியது முதல் கடும் வெப்பம் பதிவாகி வருகிறது. பெரும்பாலான மாநிலங்களின் வெப்பநிலை 45 டிகிரி செல்ஷியசை தொட்டுள்ளது. பல மாநிலங்களில் அடிக்கடி மின் தடையும் ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.கோடை காலம் துவங்கி படிப்படியாக உயரும் வெப்பநிலை, அக்னி நட்சத்திரம் துவங்கியவுடன் உச்சம் தொடுவது வழக்கம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே முந்தைய ஆண்டை விட வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. கோடை துவங்கியது முதலே உஷ்ணம் வாட்டி … Read more

உக்ரைனில் வீர மரணமடைந்த முதல் பிரித்தானிய வீரர்: புகைப்படத்துடன் வெளியான தகவல்

உக்ரைனில் ரஷ்ய துருப்புகளுக்கு எதிராக போரிட்டு வந்த பிரித்தானிய வீரர் ஒருவர் வீர மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள பிரித்தானிய முன்னாள் வீரர்களில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக வெளியாகும் தகவல் இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. 36 வயதான Scott Sibley என்பவரே ரஷ்ய துருப்புகளுக்கு எதிரான போரில் கொல்லப்பட்டுள்ளார். இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான Scott Sibley துணிச்சல் மிகுந்த போர் வீரர் என்றே அவரது முன்னாள் சக வீரர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், உக்ரைனில் போர் … Read more

சுயசார்புடன் ராணுவத் துறை அமைச்சர் வலியுறுத்தல்| Dinamalar

புதுடில்லி,-”ராணுவத் துறையில் நாம் சுயசார்புடன் இருக்க வேண்டும் என்பதை, ரஷ்யா – உக்ரைன் போர் நமக்கு உணர்த்துகிறது,” என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.நம் கடற்படை கமாண்டர்களின் நான்கு நாள் மாநாடு டில்லியில் நடந்தது. இதன் இறுதி நாளான நேற்று நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது :நம் நாடு சுயசார்புடன் இருக்க வேண்டும் என்பதை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக, ராணுவத் துறையில் நாம் சுயசார்புடன் இருப்பதை உறுதி செய்ய … Read more

29.04.22 வெள்ளிக்கிழமை – Today Rasi Palan | Daily Rasi Palan | Indraya Rasi Palan| இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். இந்த வார ராசிபலன் : https://youtu.be/Jxoon8CISOw #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

சுவிஸ் மாகாணம் ஒன்றில் பாஸ்போர்ட் வழங்கலை வேகப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள ஒரு நடவடிக்கை

ஜெனீவாவில் புதிதாக பாஸ்போர்ட் மற்றும் அனுமதிகள் வழங்குவதற்கான மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பையோமெட்ரிக் மையம் திறக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பாஸ்போர்ட்கள் மற்றும் அனுமதிகள் வழங்குவதை விரைவாக செய்ய முடியும் என நம்பிக்கை உருவாகியுள்ளது. ஆனாலும், தங்களிடம் போதுமான அலுவலர்கள் இல்லை என்று கூறியுள்ள மாகாண அதிகாரிகள், மேலும் 15 பணியாளர்களாவது இருந்தால்தான் சமாளிக்க முடியும் என்கிறார்கள். இருந்தாலும், இந்த புதிய பாஸ்போர்ட் மற்றும் அனுமதிகள் வழங்கும் மையத்தால், நாளொன்றிற்கு 700 விண்ணப்பங்களை பரிசீலிக்க முடியும் என்பதால், … Read more

5 – 12 வயது சிறார்களுக்கு கோர்பேவாக்ஸ் தடுப்பூசி?

புதுடில்லி,-நம் நாட்டில், 5 – 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை துவக்க, தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு இன்று பரிந்துரைக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நாட்டில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு, ‘பாரத் பயோடெக்’ நிறுவனத்தின், ‘கோவாக்சின்’ தடுப்பூசியும், ‘சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா’ நிறுவனத்தின், ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகின்றன.இதேபோல், 15 – 18 வயதுக்கு உட்பட்டோருக்கு கோவாக்சின் தடுப்பூசியும், 12 – 14 வயதுக்கு உட்பட்டோருக்கு, ‘பயாலஜிக்கல் – இ’ … Read more

DC v KKR: சொதப்பிய ஸ்ரேயாஸ் பிளான்; குல்தீப்பின் சுழலாலும், வார்னர், பவல் அதிரடியாலும் வென்ற டெல்லி!

கேகேஆருக்கு எதிராக மீண்டுமொரு முறை குல்தீப் விஸ்வரூபமெடுக்க, ராணாவின் அரைசதம் வீணாகும்படி முஸ்தஃபிஸுரின் முடிவுரை முத்தாய்ப்பாக அமைந்தது. பேட்டிங்கிலோ வார்னர் தொடக்கத்தைச் சிறப்பாக்க, இறுதிக் காரியங்களை பவல் சிறப்பாகச் செய்தார். மோதல்கள் சுவாரஸ்யமூட்டும் என்றாலும் பழிவாங்கும் படலங்கள் அதை இன்னொரு உயர் தளத்திற்கு எடுத்துச் செல்லும். இந்த சீசனில் கேகேஆர் – டெல்லிக்கு இடையேயான முதல் சந்திப்பில் டெல்லி, குல்தீப்பின் எழுச்சியால் வாகை சூடியது. அதற்கு முன்னதாக 3/4 என காலரைத் தூக்கிவிட்டுச் சுற்றிய கேகேஆர், டெல்லியுடனான … Read more

ஜேர்மனியில் நுழைவு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு!

ஜேர்மனியில் இன்று முடிவுக்கு வரவிருந்த தற்போதைய நுழைவுக் கட்டுப்பாடுகள் மே இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் தற்போதைய COVID-19 நிலைமை பயண விதிகளை முழுமையாக அகற்ற அனுமதிக்கவில்லை என்ற மதிப்பீட்டின் அடிப்படையில், தற்போதுள்ள கொரோனா வைரஸ் நுழைவு கட்டுப்பாடுகளை மே இறுதி வரை நீடிக்க ஜேர்மன் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த கட்டுப்பாடுகள் இன்று (ஏப்ரல் 28) முடிவடையவிருந்த நிலையில், இந்த முடிவை ஜேர்மன் போர்ட்டல் deutschland.de அறிவித்தது. “கொரோனா வைரஸின் பரவலில் இருந்து பாதுகாக்க, விடுமுறைக்கு … Read more