வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார் கள்ளழகர்

 மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 12-ந்தேதி பட்டாபிஷேகமும், 13-ந்தேதி திக்குவிஜயமும், நேற்று முன்தினம் மீனாட்சி அம்மன்- சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், நேற்று தேரோட்டமும் நடைபெற்றது.  சித்திரைத் திருவிழாவில் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபம் இன்று காலை நடைபெற்றது. இதற்காக அழகர்மலையில் இருந்து சுந்தரராஜப்பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் மதுரைக்கு … Read more

காவல் துறையில் சீர்திருத்தங்களை செய்து வருகிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டர் பதிவு

சென்னை: காவல்துறையில் சீர்திருத்தங்களை செய்து வருகிறோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  இதுதொடர்பாக டிவிட்டரில் நேற்று வெளியிட்டுள்ள பதிவு: நமது அரசு பொறுப்பேற்று காவல்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்து வருகிறது. நடைபெறும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவல்துறை மானியக் கோரிக்கை விரைவில் வரவுள்ளது. அம்பத்தூர் காவல் நிலையத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, காவல்துறையினரின் கருத்துகளையும் கேட்டறிந்தேன்.  இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

தற்கொலைக்கு முன் நடந்தது என்ன? கான்ட்ராக்டரின் நண்பர்கள் வாக்குமூலம்| Dinamalar

உடுப்பி : கான்ட்ராக்டர் தற்கொலைக்கு முன் நடந்தது என்ன என்பது குறித்து உடன் இருந்த நண்பர்கள் போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.கான்ட்ராக்டர் சந்தோஷ் நண்பர்களான பிரசாந்த் ஷெட்டி, 35, சந்தோஷ் மேதப்பா, 33 ஆகியோரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். போலீசாரிடம் அவர்கள் கூறியுள்ளதாவது:இம்மாதம் 7ல் நாங்கள் மூவரும் தார்வாடில் இருந்து காரில் புறப்பட்டு அடுத்த நாள் 8ல் சிக்கமகளூரை அடைந்தோம். அங்கு நான்கு நாட்கள் ‘பான் ஆப் பெர்ரி’ என்ற ஹோம் ஸ்டேவில் தங்கி இருந்தோம்.அங்கிருந்து 11ல் புறப்பட்டு … Read more

பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றுக்குள் எழுந்தருளினார் கள்ளழகர்

மதுரை: கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றுக்குள் எழுந்தருளினார். கோவிந்தா கோஷமிட்டும், தண்ணீரை பீச்சியடித்தும், ஆடிப்பாடியும் பக்தர்கள் உற்சாக தரிசனம் செய்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய நிகழ்வுகளில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதை அடுத்து, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல லட்சம் மக்கள் நேற்றிரவு முதலே மதுரையில் குவிந்துள்ளனர்.

உக்ரைன் போரில் புடின் பின்தள்ளப்பட்டால்…உலகநாடுகளே தயாராகுங்கள்: ஜெலன்ஸ்கி எச்சரிக்கை!

ரஷ்ய ஜனாதிபதி புடின் உக்ரைனில் போரில் தந்திரமாக அணுஆயுதத்தை பயன்படுத்த வாய்ப்பு இருப்பதால் உலகத்தில் இருக்கும் அனைத்து நாடுகளும் தயாராக இருக்க வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி எச்சரித்துள்ளார். மக்களின் உயிருக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் எந்தவொரு மதிப்பும் வழங்கவில்லை என்பதால் உக்ரைனில் தந்திரமான அணுஆயுதத்தையோ அல்லது உயிரியல் ஆயுதத்தையோ பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக CNN தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அணுஆயுத தாக்குதல் குறித்து நாங்கள் மட்டும் அல்ல, அனைத்து நாடுகளும் அச்சத்தில் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 62,19,818 பேர் பலி

ஜெனீவா:உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.19 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 62,19,818 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 50,35,48,554 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 45,39,63,551பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 42,782 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இப்படியொரு யாக்கரா…வாய்பிளந்த ரசிகர்கள்: துள்ளிக்குதித்து ஆர்ப்பரித்த டேல் ஸ்டெய்ன்!

ஐபிஎல்-லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையிலான போட்டியில் உம்ரான் மாலிக் வீசிய யாக்கர் கிரிக்கெட் ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது. ஐபிஎல்-லின் 25வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை செய்தன. இதில் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 175 ஓட்டங்களை குவித்து இருந்த நிலையில், அதனை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 17.5 ஓவர்களிலேயே துரத்தி வெற்றியை அபாரமாக … Read more

வசந்தோற்சவத்தின் இரண்டாம் நாளில் திருமலையில் தங்க தேர் ஊர்வலம்| Dinamalar

திருப்பதி-திருமலையில் நடந்து வரும் வருடாந்திர வசந்தோற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று காலையில் தங்க தேர் ஊர்வலம் நடந்தது .திருமலையில், ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில், தேவஸ்தான நிர்வாகம் வசந்தோற்சவத்தை நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் துவங்கிய வசந்தோற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று காலையில் தங்கதேர் ஊர்வலம் நடைபெற்றது. இதில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பஸ்வாமி வலம் வந்தனர். மகாலட்சுமி அம்சம் பொருந்திய தங்க தேரை, பெண்கள் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். பின், ஸ்ரீதேவி, பூதேவி … Read more

மர்மம் வாய்ந்த 14ம் நூற்றாண்டு கல் சவப்பெட்டி…தயவுசெய்து திறக்காதீர்கள்: அலறும் பொதுமக்கள்!

பிரான்ஸ் நாட்டில் உள்ள நோட்ரே டேம் கதீட்ரல் பேராலயத்தில் கண்டெடுக்கப்பட்ட 14ம் நூற்றாண்டை சேர்ந்த கல் சவப்பெட்டியை திறக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த 2019ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள நோட்ரே டேம் கதீட்ரல் பேராலயத்தில் ஏற்பட்ட தீ விபத்திற்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகளின் போது பேராலயத்தில் அடிப்பகுதியில் இருந்து 14ம் நூற்றாண்டை சேர்ந்த கல் சவப்பெட்டி மற்றும் 19ம் நூற்றாண்டை சேர்ந்த வெப்பமூட்டும் அமைப்பு போன்றவை கண்டெடுக்கப்பட்டு இருப்பதாக பிரான்ஸ் நாட்டின் … Read more

மத்திய அமைச்சர் ஜோஷி தகவல்!| Dinamalar

விஜயபுரா : ”காலியாக உள்ள ஐந்து அமைச்சர் பதவிகள் வெகு விரைவில் நிரப்பும் வகையில், கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்,” என, கர்நாடகாவைச் சேர்ந்த, பா.ஜ.,வின், பார்லிமென்ட் விவகார துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் எப்போது நடக்கும் என்று பதவி எதிர்பார்ப்பவர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.முதல்வர் பசவராஜ் பொம்மை டில்லி செல்லும் போதெல்லாம், அமைச்சரவை விரிவாக்கம் குறித்து தான் முக்கியமாக பேசப்படுகிறது.சமீபத்தில் டில்லி சென்ற போது, மூத்த தலைவர்களுடன் ஆலோசித்து, கர்நாடகா வரும் போது … Read more