விற்பனைக்கு வருகிறது கோவிஷீல்டு தடுப்பூசி – பூஸ்டர் டோஸின்  விலை ரூ. 600 + வரி!

டெல்லி: கோவிஷீல்டு தடுப்பூசி தனியார் மருத்துவமனைக்கு விற்பனை செய்யப்படுவதாக சீரம் நிறுவனம் அறிவித்து உள்ளது. அதன்படி, கோவிஷீல்டு  பூஸ்டர் டோஸின்  விலை ரூ. 600 + வரி என்றும்  சீரம் நிறுவனம் அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுப்பூசி தடுப்பூசிகள் பெரும் பங்காற்றி வருகின்றன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், முன்களப்பணியாளர்கள் மற்றும் இரு டோஸ் எடுத்துக்கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், … Read more

குதிரை பேரம் நடப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது – இம்ரான் கான் பேச்சு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பாராளுமன்றத்தைக் கலைத்த அந்நாட்டு அதிபரின் உத்தரவு செல்லாது என்றும், சனிக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பை இம்ரான்கான் அரசு சந்திக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தால் இம்ரான்கான் அரசு கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது.  இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் நாட்டு மக்கள் நாளை வீதிகளில் இறங்கிப் போராட வேண்டும் என அழைப்பு விடுத்தார். இதுதொடர்பாக இம்ரான்கான் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது: … Read more

1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பெங்களூர் நிறுவனம்.. ஊழியர்கள் கண்ணீர்..!

இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வந்த EDTECH துறையில் முன்னணி நிறுவனமாக இருந்து Unacademy புதிய முதலீடுகளைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ள காரணத்தால் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காகச் சுமார் 1000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளது. இதன் மூலம் இத்துறையில் இருக்கும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மத்தியில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஆனால் இதே துறையில் இருக்கும் பைஜூஸ் வேகமாக வளர்ந்து வருகிறது குறிப்பிடத்தக்கது. பில் கேட்ஸ், ஜெப் பெசோஸ்-க்கு இப்படி … Read more

அருப்புக்கோட்டை வழியே மதுரைக்குக் கடத்த முயன்ற 2,340 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் – ஒருவர் கைது!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வழியே மதுரைக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக விருதுநகர் குடிமைப்பொருள் வழங்கல் தடுப்புப்பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆய்வாளர் ஆல்பின் பிரிஜிட்மேரி தலைமையிலான போலீஸார் விருதுநகர் மாவட்டம் ஆவியூர், அருப்புக்கோட்டை பகுதியில் தீவிர வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த லோடு ஆட்டோ ஒன்றைத்தடுத்து நிறுத்தி சந்தேகத்தின்பேரில் சோதனை நடத்தினர். இதில் அந்த வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்திக்கொண்டு வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து, வாகன ஓட்டுநரான மதுரையைச் சேர்ந்த மதன்குமாரை குடிமைப்பொருள் … Read more

அத்துமீறிய ரஷ்ய போர்விமானங்கள்…தொடங்கியது பின்லாந்து மீதான தாக்குதல்: அதிகரிக்கும் பதற்றம்!

நேட்டோவில் இணைவது தொடர்பான நடவடிக்கைளை பின்லாந்து முன்னெடுத்து வரும் நிலையில், அந்த நாட்டின் அரசு இணையதளங்கள் முடக்கப்பட்டதோடு இல்லாமல் பின்லாந்தின் எல்லைக்குள் ரஷ்ய போர் விமானங்கள் பறந்து சென்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போருக்கு மத்தியில், பாதுகாப்பு காரணங்களுக்காக பின்லாந்து மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதற்கு ரஷ்யா கடுமையான கண்டனத்தை தெரிவித்ததுடன் மட்டுமில்லாமல் பயங்கரமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தும் இருந்தது. … Read more

ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கட்டணம் மூலம் பூஸ்டர் தடுப்பூசி! மத்தியஅரசு

டெல்லி: ஏப்ரல் 10ந்தேதி முதல் (ஞாயிற்றுக்கிழமை) 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் அல்லது முன்னணி ஊழியர்களாக இல்லாவிட்டால், அவர்களின் கோவிட் பூஸ்டர் ஷாட்க்கு பணம் செலுத்த வேண்டும் என்று மத்தியஅரசு அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் உள்ள 18 வயதுக்கும் மேற்பட்டோர் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் கோவிட்-19 பூஸ்டர் டோஸ்களை தனியார் மையங்கள், மருத்துவமனைகளில் செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 … Read more

ஷுப்மான் கில், ரஷித் கான் அபாரம் – பஞ்சாப்பை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது குஜராத்

மும்பை: ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 16-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்த லிவிங்ஸ்டன் 27 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷிகர் தவான் 35 ரன்கள் எடுத்தார். அடுத்து ஜிதேஷ் சர்மா அதிரடியாக … Read more

இந்தி குறித்த அமித்ஷா பேச்சு நாட்டின் பன்மைத்துவத்துக்கு எதிரானது: திருமாவளவன்

சென்னை: இந்தி குறித்த அமித்ஷா பேச்சு நாட்டின் பன்மைத்துவத்துக்கு எதிரானது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; இந்திய அலுவல் மொழிகள் 22. இந்தி அவற்றுள் ஒன்று. இந்தியைப் பேசுவோரின் எண்ணிக்கையை விட பிறமொழிகள் பேசுவோரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகம். ஆனால், பிறமொழிகளைப் பேசுவோரின் உரிமைகளுடன்  நாட்டின் பன்மைத்துவத்தையும் சிதைக்கிற முயற்சியில் குறியாகவுள்ளனர். எனவேதான் அமித்ஷா இப்படி பேசிகிறார். அமித்ஷாவின் இந்தக் கருத்துப் புதியதல்ல. ஒரேநாடு- ஒரேமொழி எனும் … Read more

விவாதங்களை ஏற்படுத்தாதீர்: ரமேஷ்குமார் கெஞ்சல்| Dinamalar

கோலார்-”நானும் மாம்பழ விவசாயி தான். குறிப்பிட்ட மதத்தினருக்கு கொடுக்கக் கூடாது என இங்கு எந்த விவாதமும் இல்லை; இது ஊடகங்களின் கற்பனை. இத்தகைய விவாதங்களை ஏற்படுத்த வேண்டாம் என கை கூப்பி கேட்கிறேன்,” என முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்தார்.கோலாரில் அவர் நேற்று கூறியதாவது:விவசாயிகள் புதிதாக நிலத்தில் மாம்பழம் விளைவிக்கவில்லை. விவசாயிகள் அன்யோன்யமாக உள்ளனர். எந்த பிரச்னையும் இல்லை. சமுதாயத்தில் ஊடகத்தினருக்கும் பொறுப்புள்ளது. தேவையற்ற விவாதங்களை ஏற்படுத்த வேண்டாம்.நானும் கூட மாம்பழ விவசாயி தான். எனக்கு யார் … Read more