ரஷ்ய கிராமங்களில் இருந்து உக்ரைனுக்குள் வரும் “walking dead” படை: அதிர்ச்சியூட்டும் வீடியோ!

உக்ரைனை கைப்பற்ற ரஷ்யா அதன் கிராமங்களில் இருந்து “walking dead” எனப்படும் புதிய தன்னார்வ படைகளை அனுப்பிவைத்துள்ளது. உக்ரைன் மீதான போரில் எப்படியாவது வெற்றிபெற்றாக வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு மாற்றங்களை ரஷ்யா அடுத்தடுத்து தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அந்தவகையில், தற்போது சிரிய போரில் தலைமை தாங்கிய அனுபவம் உள்ள தளபதியான ஜெனரல் அலெக்சாண்டர் டிவோர்னிகோவ்-வை ரஷ்ய ஜனாதிபதி புடின் சிறப்பு ராணுவ தாக்குதலுக்கு படை தளபதியாக நியமித்தார். A new unit of “walking dead” … Read more

‘தங்க மனசு கொண்ட சிங்கம்’… தனுஷ் குறித்து செல்வராகவன் பதிவு…

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், இந்துஜா, எல்லி அவுர் ரம் நடிக்கும் படம் ‘நானே வருவேன்’. தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வரும் இந்தப் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது. யுவன் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஒரே நேரத்தில் ‘வாத்தி’ மற்றும் ‘நானே வருவேன்’ ஆகிய இரண்டு படங்களில் கேப்பே இல்லாமல் நடித்து வரும் தனுஷ் மூன்றாவதாக திருச்சிற்றம்பலம் படத்திற்காக டப்பிங்கும் பேசி வருகிறார். இந்த நிலையில், யோகி … Read more

ஏப்-09: பெட்ரோல் விலை ரூ. 110.85, டீசல் விலை ரூ.100.94

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 110.85 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.100.94 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை – ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு

புதுடெல்லி, வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டியான ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், குறுகியகால கடனுக்கான வட்டி விகிதம் எந்த மாற்றமும் இன்றி 4 சதவீதமாகவே நீடிக்கும் என்றும் வங்கிகளின் கடன்களுக்காக வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்றும் தெரிவித்துள்ளார். வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து குறுகிய கால மற்றும் நீண்டகால கடன்களை பெறுகின்றன. குறுகிய கால கடன்களுக்கு ரிசர்வ் வங்கி விதிக்கும் … Read more

பிரித்தானியாவில் அதிகரிக்கும் வாழ்வின செலவுகள்… இது இன்னும் மோசமடையும்: போரிஸ் எச்சரிக்கை!

பிரித்தானியாவில் வாழ்வதற்கான செலவினங்கள் அதிகரித்து இருப்பதாகவும், இது இன்னும் மோசமடைய வாய்ப்பு இருப்பதாகவும் அந்த நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் கரோனா பாதிப்புக்கு பிறகு உயர்ந்துள்ள வரிகளாலும், ஏற்பட்டுள்ள பணவீக்கத்தாலும் பொதுமக்கள் வாழ்வதற்கான வாழ்வின செலவினங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், பிரித்தானியாவின் செய்தி நிறுவனத்திடம் பேசிய நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரித்தானியாவில் அதிகரிக்கும் விலைவாசி உயர்வு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் எனவும், வருங்காலங்களில் அது இன்னும் மோசமடையும் என ஒத்துக்கொண்டுள்ளார். இந்த … Read more

பத்திரிகை சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் அரசுக்கு எடிட்டர்ஸ் கில்டு அறிவுறுத்தல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி,-‘ஜனநாயக மதிப்பீடு மற்றும் பத்திரிகை சுதந்திரத்தை மதிக்க வேண்டும்’ என, நாட்டில் உள்ள அனைத்து விசாரணை அமைப்புகளுக்கும் உத்தர விடுமாறு, இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் அறிவுறுத்தி உள்ளது. மத்திய பிரதேசத்தில், சித்தி மாவட்டத்தை சேர்ந்த நாடக கலைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, உள்ளூர் பத்திரிகையாளர் கனிஷ்க் திவாரி சமூக ஆர்வலர்களுடன் சேர்ந்த போராட்டத்தில் ஈடுபட்டார். சமூக ஆர்வலர்களுடன் சேர்த்து பத்திரிகையாளரையும் கைது செய்த போலீசார் அவர்களின் ஆடைகளை … Read more

உ.பி. முதல்-மந்திரியின் டுவிட்டர் கணக்கு 'ஹேக்’ செய்யப்பட்டது…!

லக்னோ, நாட்டின் பல்வேறு மாநில அரசுகள் அந்தந்த மாநில முதல்-மந்திரிகளுக்கென்று அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகள் உள்ளன. அந்த வகையில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்திற்கு அதிகாரப்பூர்வ டுவிட்ட கணக்கு உள்ளது. சிஎம்ஆபிஸ்உபி (CMOfficeUP) என்ற அந்த டுவிட்டர் கணக்கை 4 லட்சம் பேர் பின்பற்றுகின்றனர். இந்நிலையில், உத்தரபிரதேச முதல்-மந்திரியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. கடந்த 1 மணி நேரத்திற்கு டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. முதல்-மந்திரியின் டுவிட்டர் கணக்கில் இருந்து கடந்த ஒரு மணி … Read more

உக்ரைனை அழிக்க புதிய தளபதி நியமனம்: மே 9ம் திகதிக்குள் வெற்றி: புடின் அதிரடி!

உக்ரைனில் ரஷ்யா முன்னெடுத்து வரும் சிறப்பு ராணுவ தாக்குதலின் வெற்றியை துரிதப்படுத்தும் முயற்சியில் அதற்கான புதிய தளபதியை ரஷ்ய ஜனாதிபதி புடின் நியமித்துள்ளார். உக்ரைனில் ரஷ்யா 45வது நாளாக தாக்குதலை நடத்திவரும் நிலையில், ரஷ்யா ஆயிரக்கணக்கான ரஷ்ய ராணுவ வீரர்களை இழந்ததுடன், இதுவரை எந்தவொரு குறிப்பிடத்தக்க வெற்றியையும் ரஷ்யா பெறவில்லை. மேலும் உக்ரைனின் தலைநகர் கீவ் மற்றும் துறைமுக நகரம் மரியுபோல் ஆகிய நகரங்களில் இருந்து படைகளை பின்னகர்த்தி தற்போது உக்ரைனின் கிழக்கு எல்லைப் பகுதிகளில் கவனம் … Read more

தேசிய பங்கு சந்தையில் மோசடி: அமலாக்கத் துறையினர் சோதனை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: தேசிய பங்குச் சந்தையில் நடந்த மோசடி தொடர்பான வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத் துறையினர், டில்லி மற்றும் ஹரியானாவின் குருகிராமில் உள்ள சில இடங்களில் நேற்று சோதனை நடத்தினர். கடந்த 2013 முதல் 2016 வரை, என்.எஸ்.இ., எனப்படும், தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குனராக சித்ரா ராமகிருஷ்ணன் பதவி வகித்தார். அப்போது, அவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, ‘செபி’ எனப்படும், பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு குற்றஞ்சாட்டியது. … Read more