“ஓட்டு கேட்கும் நாங்களும் பிச்சைக்காரர்கள் தான்" – அமைச்சர் நாசர் கலகல!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் ஒருபுறம் கட்டுக்கோப்பாக நடத்தி வர, இன்னொருபுறம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அரசியல் கட்சித் தலைவர்கள். நாள்தோறும் விதவிதமான முறையில் ஓட்டு கேட்டு வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்துவருகின்றனர். இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட, தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் “பிச்சைக்காரன் ரெண்டு வகை, காசு கேட்டு ஒருத்தன் … Read more

தேனுடன் எள் சேர்த்து சாப்பிடுவதால் இந்த நோயை தடுக்க முடியுமா? தெரிந்து கொள்வோம் வாங்க!

தேன் மற்றும் எள்ளை ஒன்றாக கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும். மேலும் இந்த கலவையை தினமும் உட்கொள்ளும் போது உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களின் வளர்ச்சி தடுக்கப்படும். அதுபோல இந்த கலவையில் உள்ள தேன் மற்ற இனிப்பு உணவுகளின் மீதுள்ள நாட்டத்தைக் குறைத்து உள்ளுறுப்புகளில் இருக்கும் கொழுப்பை கரைத்து உடல் எடையைக் குறைக்க உதவும். அதுமட்டுமின்றி வாய் ஆரோக்கியமும் மேம்படும். மேலும் தேனுடன் எள் சேர்த்து சாப்பிடுவதால் … Read more

கோவாவில் 78.94% வாக்கு பதிவு – தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

கோவா: கோவாவில் 78.94% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று கோவா தலைமை தேர்தல் அதிகாரி குணால் தெரிவித்துள்ளார். 40 தொகுதிகளைக் கொண்ட கோவா பேரவைக்கும், 70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகண்ட் பேரவைக்கும் இன்று ஒரேகட்டமாகத் தோ்தல் நடைபெற்றது. காலையில் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில், கோவாவில் 78.94% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று கோவா தலைமை தேர்தல் அதிகாரி குணால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அதிகபட்சமாக சன்குலிம் தொகுதியில் 89.64% வாக்குகள் பதிவாகியுள்ளன. தெற்கு கோவாவில் … Read more

எல்ஐசி பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: எல்.ஐ.சி நிறுவனம் பல்லாண்டுகளாகப் பலகோடி இந்தியர்களின் தேவைகளை நிறைவுசெய்து, அவர்களின் நன்னம்பிக்கையைச் சம்பாதித்து, தனது திறம்பட்ட செயல்பாட்டால் அவர்களுக்குச் சமூகப் பாதுகாப்பை வழங்கியுள்ளது. அத்தகைய நிறுவனத்தின் பங்குகளில் 5 விழுக்காட்டை விற்பனை செய்ய ஒன்றிய அரசு வரைவு அறிக்கை தாக்கல் செய்திருப்பது தனியார்மயத்தை நோக்கிய – முற்றிலும் விரும்பத்தகாத செயலாகும். இம்முடிவு மக்களின் நலனையோ எல்ஐசி நிறுவனத்தின் நலனையோ கருதி மேற்கொள்ளப்பட்டதன்று. ஒரு நல்லரசு என்பது … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 17ஆம் தேதி மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவு: ஆணையம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வரும் 17ஆம் தேதி மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவு பெறும் என மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. பிரசாரம் முடிந்த பின் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் அந்தந்த உள்ளாட்சி பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் கூறியுள்ளது. மேலும் வெளியேறாதவர்கள் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

ஏர் இந்தியா சி.இ.ஓ.,வாக இல்கர் அய்சியை நியமித்தது டாடா நிறுவனம்| Dinamalar

புதுடில்லி: துருக்கி ஏர்லைன்ஸ் தலைவராக பணியாற்றிய இல்கர் அய்சி, ஏர் இந்தியாவின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாகவும் (சி.இ.ஓ), நிர்வாக இயக்குநராகவும் (எம்.டி) நியமிக்கப்பட்டுள்ளார். கடந்தாண்டு அக்டோபரில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ஏற்பட்ட இழப்பை சமாளிக்கும் வகையில் தனியாருக்கு மத்திய அரசு ஏலம் விடப்பட்டது. இதில் 18 ஆயிரம் கோடிக்கு ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியது. இதில் ரூ.2,700 கோடியை ரொக்கமாக செலுத்தவும், எஞ்சிய ரூ.15,300 கோடிக்கு ஏா் இந்தியாவின் கடனை ஏற்கவும் டாடா … Read more

ரீடைல் பணவீக்கம் 6 மாத உயர்வு..!

இந்தியாவில் நாளுக்கு நாள் விலைவாசி அதிகரித்து வரும் நிலையில் சில்லறை பணவீக்கம் ஜனவரி 2022ல் ஆறு மாத உச்ச அளவான 6.01 சதவீதத்தை எட்டியுள்ளது. நாட்டின் சில்லறை பணவீக்கம் டிசம்பர் 2021ல் 5.59 சதவீதமாக இருந்தது, இது ஐந்து மாத உயர்வாகும், அதைத் தொடர்ந்து ஜனவரி மாதம் 6 மாத உயர்வை எட்டியுள்ளது. உணவுப் பொருட்களின் விலையில் ஏற்பட்ட தொடர் உயர்வின் காரணமாக ரீடைல் பணவீக்கம் அதிகரித்து உள்ளது. உணவுப் பணவீக்கம் 2021 டிசம்பர் மாதம் 4.05 … Read more

நீட் உதயமாக காங்கிரஸ் – திமுக காரணமா? – அதிமுக-வின் தொடர் குற்றச்சாட்டும்… எதிர்தரப்பு விளக்கமும்!

“நீட் தேர்வை ரத்துசெய்வதற்குக் கடுமையான முயற்சி மேற்கொண்டோம். இருந்தாலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி நீட் தேர்வு நடத்தவேண்டிய சூழ்நிலையில் அப்போது அ.தி.மு.க இருந்தது. இப்போதும் நீட் தேர்வு நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், இன்று நீட் தேர்வு தமிழகத்தில் நுழைந்ததற்கு முழுக்க முழுக்க காங்கிரஸும் தி.மு.க-வும்தான் காரணம்.” என அ.தி.மு.க தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பேசி வருகிறார்கள். “2010-ல் மத்திய காங்கிரஸ் அமைச்சரவையில் சுகாதாரத்துறை இணையமைச்சராக தி.மு.க-வைச் சேர்ந்த காந்திசெல்வன் இருந்த காலகட்டத்தில்தான் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. … Read more

வரும் 17 ஆம் தேதி மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவு : தேர்தல் ஆணையம் அறிக்கை

சென்னை தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் வரும் 17 ஆம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவு பெற உள்ளது. தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  இதனால் தேர்தல் நடைமுறை விதிகளின்படி வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்துக்கு 48 மணி நேரம் முன்பாக அரசியல் கட்சிகளின் அனைத்து விதமான பிரசாரங்களையும் நிறுத்த வேண்டும்.   எனவே வரும் 17 ஆம் தேதி மாலை 6 மணியுடன் அனைத்து பிரசாரங்களும் … Read more

தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு- இன்று 1,634 பேருக்கு தொற்று

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,634 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நேற்றைய பாதிப்பு 2,296 ஆக இருந்த நிலையில் இன்று 2000-க்கும் கீழ் குறைந்துள்ளது. மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 37 ஆயிரத்து 896 ஆக அதிகரித்துள்ளது.  சென்னையில் இன்று 341 … Read more