இருமல் மருந்தால் பறிபோன 10 குழந்தைகளின் உயிர்: ம.பி. மருத்துவர் கைது

போபால்: மத்தியப் பிரதேசத்தில் இருமல் சிரப் உட்கொண்டதால் குழந்தைகள் உயிரிழந்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து, அந்த மருந்தை பரிந்துரைத்த சிந்த்வாரா பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிஎன்எஸ் சட்டப்பிரிவு 105, 276 மற்றும் மருந்துகள் மற்றும் காஸ்மெடிக்ஸ் சட்டப்பிரிவு 27 ஆகியனவற்றின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அந்த மருத்துவரிடம் காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருவதாகத் தெரிகிறது. முன்னதாக, மத்தியப் பிரதேசத்தில் ஒன்பது குழந்தைகள், மகாராஷ்டிராவில் இரண்டு குழந்தைகள் … Read more

டார்ஜிலிங்கில் கனமழையால் நிலச்சரிவு: 9 பேர் பலி – மீட்புப் பணியில் என்டிஆர்எஃப்!

டார்ஜிலிங்: மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மாயமாயினர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. கடந்த மாதம் டெல்லி, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் போன்ற மாநிலங்களில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இப்போது, மேற்குவங்க மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் இமயமலையை ஒட்டி உள்ள மலைப் பிரதேசங்களான டார்ஜிலிங், … Read more

அக்.7-ல் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்துகிறார் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடருக்கு முன்பாக அக்டோபர் 7 இல் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்துகிறார் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன். இதன்மூலம், அவர் மத்திய அரசு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே பாலமாக முயற்சிப்பதாகக் கருதப்படுகிறது. நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பரில் தொடங்குகிறது. அநேகமாக இது, பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு தொடங்கும் வாய்ப்புகள் உள்ளன. வழக்கமாக நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு ஒருநாள் முன்பாகவே அனைத்துக் கட்சி கூட்டத்தை குடியரசு துணைத் தலைவர் நடத்துவது உண்டு. இந்தமுறை … Read more

பரேலியில் திருமண மண்டபம் உட்பட பல சட்டவிரோத கட்டிடங்கள் இடிப்பு

பரேலி: உத்​தரபிரதேசம், கான்​பூர் மாவட்​டம் ராவத்​பூரில், கடந்த மாதம் 4-ம் தேதி மிலாடி நபி பண்​டிகை​யையொட்டி நடை​பெற்ற ஊர்​வலத்​தில் ‘ஐ லவ் முகமது’ என்ற வாசகம் தாங்​கிய பேனர்​களை​யும் கொண்டு சென்​றனர். இதற்கு இந்​துக்​கள் எதிர்ப்பு தெரி​வித்​தனர். இது தொடர்​பாக செப்டம்பர் 26-ம் தேதி இருதரப்​பினர் இடையே மோதல் ஏற்​பட்டு கலவர​மாக மாறியது. இந்​நிலை​யில், பரேலி நகரில் டாக்​டர் நபீஸ் அகமதுக்கு சொந்​த​மான ராஸா பேலஸ் என்ற திரு​மணம் மண்​டபத்தை மாவட்ட வளர்ச்சி ஆணைய அதி​காரி​கள் போலீ​ஸாரின் … Read more

13 குழந்தைகளை காவு வாங்கிய இருமல் மருந்து… காரணமான டாக்டர் கைது – முழு பின்னணி

Cough Syrup Death: மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து குடித்ததால் உயிரிழந்த 13 குழந்தைகளுக்கு, சிகிச்சை அளித்த மருத்துவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம். 

தசரா பண்டிகைக்கு மாமியார் வீட்டுக்கு வந்த மருமகனுக்கு 100 வகை உணவுகளுடன் விருந்து

ஹைதராபாத்: தெலங்​கா​னா​வில் தசரா பண்​டிகையை கொண்​டாட மாமி​யார் வீட்​டிற்கு வந்த மரு​மக​னுக்கு 100 வகை​யான உணவு​களு​டன் பிரம்​மாண்ட விருந்து அளிக்​கப்​பட்​டது. அதோடு மரு​மக​னுக்கு ஒரு சவரன் நகை பரி​சாக வழங்​கப்​பட்​டது. தெலங்​கானா மாநிலம், வனபர்த்தி மாவட்​டத்தைச் சேர்ந்​தவர் சிந்​து. இவருக்​கும் வாரங்​கலை சேர்ந்த சுரேஷ் என்​பவருக்​கும் கடந்த 2 மாதங்​களுக்கு முன்பு திருப்​ப​தி​யில் திரு​மணம் நடை​பெற்​றது. திரு​மணத்​துக்கு பிறகு நவராத்​திரி பண்​டிகை வந்​த​தால் புதுமண தம்​ப​தி​யினர் கொத்​தகோட்​டா​விற்கு வரும்​படி பெண் வீட்​டார் அழைப்பு விடுத்​தனர். இதையேற்று சுரேஷும் … Read more

இந்தியாவுக்கு எதிராக பேசிய ராகுல் காந்தியின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய வேண்டும்: பாஜக எம்.பி. நிஷிகாந்த் வலியுறுத்தல்

புதுடெல்லி: தென் அமெரிக்க நாடான கொலம்​பி​யா​வில் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி 2 நாட்​களுக்கு முன்​னர் சுற்​றுப் பயணம் மேற்​கொண்​டார். அப்​போது இஐஏ பல்​லைக்​கழகத்​தில் மாணவர்​களு​டன் ராகுல் காந்தி உரை​யாடி​னார். அப்​போது அவர் பேசும்​போது, ‘‘இந்​தி​யா​வில் பல மதங்​கள், மொழிகள், கலாச்​சா​ரங்​கள் உள்​ளன. ஜனநாயக அமைப்பு அனை​வருக்​கும் இடமளிக்​கும் ஒரு தளமாக செயல்​படு​கிறது. தற்​போது, அந்த ஜனநாயக அமைப்பு பாஜக தலை​மையி​லான அரசின் கீழ் பல திசைகளில் இருந்​தும் தாக்​குதலுக்கு உள்​ளாகி வரு​கிறது. இது​தான் இந்​தி​யா​வுக்கு … Read more

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன கடலோர காவல் படை ரோந்து கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

காரைக்கால்: இந்​திய கடலோர காவல் படைக்​காக உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்ட அதிநவீன ரோந்​துக் கப்​பல், காரைக்​காலில் நேற்று நடை​பெற்ற விழா​வில் நாட்​டுக்கு அர்ப்​பணிக்​கப்​பட்​டது. இந்​திய கடலோர காவல் படை​யின் காரைக்​கால் மையம் நிரவி பகு​தி​யில் செயல்​பட்டு வரு​கிறது. காரைக்​கால் மாவட்​டம் வாஞ்​சூரில் உள்ள அதானி கப்​பல் துறை​முகத்தில் உள்ள தளத்​தில் இருந்து கடலோர காவல் படைக்​குச் சொந்​த​மான ரோந்​துக் கப்​பல்​கள், படகு​கள் இயக்​கப்​படு​கின்​றன. இந்​நிலை​யில், இந்த மையத்​தின் செயல்​பாடு​களை மேம்​படுத்​தும் வகை​யில், கோவா கப்​பல் கட்​டும் தளத்​தில் புதி​தாக … Read more

ஹைதராபாத்தை சேர்ந்த பல் மருத்துவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை

ஹைதராபாத்: ஹைத​ரா​பாத்​தைச் சேர்ந்த இளம் பல் மருத்​து​வர், அமெரிக்​கா​வில் நேற்று காலை மர்ம நபரால் சுட்டு கொல்​லப்​பட்​டார். ஹைத​ரா​பாத் பிஎன் நகரைச் சேர்ந்​தவர் போலே சந்​திரசேகர். இவர் பிடிஎஸ் பட்​டப்​படிப்பை முடித்து விட்​டு, கடந்த 2023-ம் ஆண்டு மேற்​படிப்​புக்​காக அமெ ரிக்​கா​வின் டெக்​ஸாஸ் மாகாணத்​தில் உள்ள டல்​லஸ் நகரில் குடியேறி​னார். கடந்த 6 மாதங்​களுக்கு முன்பு மேற்​படிப்பு முடித்த சந்​திரசேகர், அங்கு ஒரு நிரந்தர வேலையை தேடிக்​கொண்​டே, ஒரு காஸ் நிறு​வனத்​தில் பணி​யாற்றி வந்​துள்​ளார். இந்​நிலை​யில், நேற்று … Read more

அரசு ஐடிஐ மாணவர்களுக்கு உலகத் தரத்தில் தொழிற்பயிற்சி வழங்க ரூ.60,000 கோடியில் புதிய திட்டம் தொடங்கினார் பிரதமர் மோடி

புதுடெல்லி: மேம்படுத்தப்பட்ட ஐடிஐக்கள் மூலம் பிரதமரின் திறன் மற்றும் வேலைவாய்ப்பில் மாற்றம் அளிக்கும் திட்டத்தை (பிஎம்-எஸ்இடியு) பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி நாடு முழுவதும் 1,000 அரசு ஐடிஐ கல்வி நிறுவன மாணவ, மாணவிகளுக்கு உலகத் தரத்தில் சிறப்பு தொழிற்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. டெல்லி விஞ்ஞான் பவனில் நேற்று நடைபெற்ற விழாவில், இளைஞர்களை மையமாக கொண்ட ரூ.62,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். குறிப்பாக, ரூ.60,000 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட … Read more