தூக்கு தண்டனைக்குப் பதிலாக வலி குறைந்த தண்டனைகளை கண்டறிய குழு – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: தூக்கு தண்டனைக்குப் பதிலாக வலி குறைந்த தண்டனைகளை கண்டறிய குழு அமைப்பது தொடர் பாக பரிசீலித்து வருவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் மரண தண்டனையை தூக்கு தண்டனையாக நிறைவேற்றாமல் வேறு வழிகளில் நிறைவேற்ற உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ரிஷி மல்ஹோத்ரா சார்பில் பொது நலன் வழக்கு (பிஐஎல்) தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை கடந்த மாதம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு … Read more

”கர்நாடகாவை வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்றுவதே பாஜகவின் நோக்கம்” – பிரதமர் மோடி

உலக நாடுகள் இந்தியாவின் வளர்ச்சியையும், ஜனநாயகத்தையும் மதிக்கும் நிலையில், உலகம் முழுவதும் சுற்றித் திரிந்து, இந்தியா குறித்து காங்கிரஸ் அவதூறு பரப்புவதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்திற்காக கர்நாடகா சென்றுள்ள பிரதமர், முல்கி, மட்பித்ரி உள்ளிட்ட இடங்களில் நடந்த பரப்புரை கூட்டத்தில் பங்கேற்றார். அதில் உரையாற்றிய அவர், பாஜக ஆட்சியின் கீழ் உலகிலேயே 5வது மிகப்பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா முன்னேறியுள்ளதாகவும், கர்நாடகாவை வளர்ச்சியடைந்த மாநிலமாகவும், உற்பத்தி மையமாகவும் மாற்றுவதே கட்சியின் நோக்கம் என்றும் … Read more

ரஜினியுடன் சந்திரபாபு நாயுடு தொலைபேசியில் பேச்சு

அமராவதி: தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு நடிகர் ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, அவரிடம் யார் என்ன கூறினாலும், உங்கள் மீதுள்ள மரியாதை மாறாது என ரஜினி தெரிவித்துள்ளார். மறைந்த நடிகர் என்.டி.ராமாராவின் நூற்றாண்டு தொடக்க விழா விஜயவாடாவில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, என்டிஆரின் மகன் பாலகிருஷ்ணா ஆகியோரை புகழ்ந்து பேசினார். இதனால் ரஜினிகாந்த், ஒய்ஆர்எஸ் … Read more

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் வன்முறை.. – டெல்லி போலீஸை குற்றம் சாட்டும் மல்யுத்த வீரர்கள்

புதுடெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. இருவர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்டோர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். இதுதொடர்பாக பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவர்கள் கடந்த ஜனவரி மாதம் சாலையில் அமர்ந்து போராடினர். இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் … Read more

மேகேதாட்டுவில் அணைக் கட்ட ரூ.9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு; கர்நாடகாவில் இட ஒதுக்கீடு 75 சதவீதமாக உயர்த்தப்படும் – காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று பெங்களூருவில் வெளியிட்டார். இதனை க‌ர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், மூத்த தலைவர்கள் சித்தராமையா, பரமேஷ்வர் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர். அப்போது மல்லிகார்ஜூன கார்கே செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். அரசு பேருந்தில் மகளிர் இலவசமாக பய‌ணிக்கலாம். வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம், … Read more

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சரத் பவார் விலகல்: முடிவை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து சரத் பவார் திடீரென விலகியுள்ளார். தனது முடிவை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் பவார், கடந்த 1999-ம் ஆண்டில் அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். கருத்து வேறுபாடு நீடித்ததால், அதே ஆண்டு ஜூன்10-ம் தேதி காங்கிரஸில் இருந்து வெளியேறி, தேசியவாத காங்கிரஸ் கட்சியை … Read more

திவால் நடைமுறைக்கு விண்ணப்பித்த கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் விமான சேவை நிறுத்தம்..!

திவால் நடைமுறைக்கு விண்ணப்பித்துள்ள கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் விமானங்கள் டெல்லி விமான நிலையத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் பிராட் மற்றும் விட்னி நிறுவனத்திடம் இருந்து விமானங்களுக்கு தேவையாக எஞ்சின் உள்ளிட்ட பாகங்களை வாங்க கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் ஒப்பந்தப்படி எஞ்சின் பாகங்களை அமெரிக்க நிறுவனம் உரிய நேரத்தில் வழங்காததால் 50க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்க முடியாத நிலை உருவானதாகவும், அதன் விளைவாக பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் தெரிவித்திருந்தது. … Read more

பேராசிரியர்கள் பணியிட மாற்றத்தால் மருத்துவ கல்லூரிகளில் பற்றாக்குறை ஏற்படக் கூடாது: தேசிய மருத்துவ ஆணையம்

சென்னை: அரசு மருத்துவ பேராசிரியர்களை பணியிட மாற்றம் செய்யும்போது, சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் பேராசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படக்கூடாது என்று தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) மருத்துவ தர நிர்ணய உறுப்பினர் மருத்துவர் ஜே.எல்.மீனா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தியாவிலுள்ள மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் தேவைக்கேற்ப பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். எந்தக் கல்லூரிக்கு எந்த எண்ணிக்கையில் பேராசிரியர்கள் தேவை உள்ளது என்பது குறித்த ஆய்வை மருத்துவ நிர்ணய வாரியம் மேற்கொள்வதற்கு முன்பு, … Read more

இணைய பயன்பாட்டில் பிற நகரங்களையும் உலகையும் பின்னுக்குத் தள்ளும் இந்திய கிராமங்கள்

Internet Connection In India: 2025 க்குள் அனைத்து நாடுகளும் பின்தங்கச்செய்து இந்தியா முதலிடத்திற்கு வந்துவிடும் என்று சொன்னால் பெருமையாக இருக்கிறதா? இது எந்தத் துறையில் தெரியுமா?

டெல்லியில் குரோஜி காஸ் பகுதியில் திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளம்..!

டெல்லியின் குரோஜி காஸ் பகுதியில் உள்ள சாலையில் திடீரென ரட்சத பள்ளம் ஏற்பட்டதால் அவ்வழியே போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பள்ளம் ஏற்பட்டதும் அந்த பகுதியில் பேரிகார்டுகளை அமைத்து போக்குவரத்தை மாற்றுப் பாதைக்கு போலீசார் திருப்பி விட்டனர். இதனால் அலுவலகம் செல்வோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். கடந்த மார்ச் 31 ஆம் தேதி தெற்கு டெல்லியில் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் அரசு பேருந்து சிக்கியது குறிப்பிடத்தக்கது.  Source link