கோவின் இணையதளம் முற்றிலும் பாதுகாப்பானது: மத்திய அரசு உறுதி

புதுடெல்லி: இந்தியாவில் 2021 ஜனவரியில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இதற்காக கோவின் இணையதளம் தொடங்கப்பட்டது. தடுப்பூசிக்கான முன்பதிவு, தடுப்பூசி மையங்கள் உள்ளிட்டதகவல்கள் இதில் இடம்பெற்றிருந்தன. தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் விவரம் இதில் பதிவேற்றம் செய்யப்பட்டது. பிறகு தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றிதழும் இதிலிருந்து வழங்கப்பட்டது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட அனைத்து இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்களும் இணைய தளத்தில் கிடைப்பதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்துமாறு அரசுக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதுகுறித்து … Read more

இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது நடத்திய தாக்குதல் தொடர்பான வீடியோவை வெளியிட்டது என்ஐஏ

புதுடெல்லி: இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது கடந்த மார்ச் மாதம் தாக்குதல் நடத்த முயன்ற காலிஸ்தான் ஆதரவாளர்களின் வீடியோ காட்சிகளை தேசிய புலனாய்வு (என்ஐஏ) முகமை வெளியிட்டுள்ளது. இவர்கள் குறித்த தகவலை தெரிவிக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பஞ்சாபில் காலிஸ்தான் ஆதரவுதலைவர் அம்ரீத் பால் சிங்குக்கு எதிராக போலீஸார் நடவடிக்கை எடுத்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் லண்டனில் உள்ள இந்திய தூரகத்துக்கு முன்பு, காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். அங்கிருந்த தேசியக் கொடியை ஒருவர் … Read more

‘மோடி அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை’: அமைச்சர் செந்தில்பாலாஜி கைது குறித்து கார்கே காட்டம்

புதுடெல்லி: தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நள்ளிரவில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டிருப்பது மோடி தலைமையிலான அரசின் பழிவாங்கல் நடவடிக்கையே என்று காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே தெரிவித்துள்ளார். இதுகுறித்து காங்கிஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத் துறையால் நள்ளிரவில் கைது செய்யப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். இது எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மோடி தலைமையிலான அரசு மேற்கொள்ளும் துன்புறுத்தல் மற்றும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையே அன்றி வேறொன்றும் இல்லை. இதுபோன்ற … Read more

பிபர்ஜாய் புயல் கரையை கடக்கும்போது உயிர் இழப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் – அமித்ஷா

பிபர்ஜாய் புயல் கரையை கடக்கும்போது உயிர் இழப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென்று அரசு அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். குஜராத்தின் கட்ச் பகுதிக்கும், பாகிஸ்தானின் கராச்சிக்கும் இடையே நாளை புயல் கரையை கடக்கக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருடன்  அமித் ஷா காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், புயல் கரையை கடக்கையில் உயிரிழப்புகள் நேரிடக்கூடாதென்றும், அதேநேரத்தில் பொருட்சேதமும் குறைந்த அளவில் இருப்பதை … Read more

Cyclone Biparjoy | குஜராத்தின் கடலோரப் பகுதிகளுக்கு ரெட் அலர்ட்

அகமதாபாத்: பிப்பர்ஜாய் புயல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து குஜராத்தின் சவுராஷ்ட்ரா, கட்ச் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மைய தகவல்: “வட கிழக்கு அரபிக்கடலில் அதிதீவிர புயலாக உருமாறியுள்ள பிப்பர்ஜாய் புயல், மெதுவாக வட மேற்கு திசையில் கரையை நோக்கி நெருங்கி வருகிறது. காலை 11.30 மணி நிலவரப்படி, மணிக்கு 3 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் கரையை நெருங்கி வருகிறது. ஜாக்குவா போர்ட் பகுதியில் இருந்து 280 கிலோ மீட்டர் தொலைவிலும், தேவபூமி … Read more

”பிபர்ஜாய் சூறாவளியால் ஏற்படும் பாதிப்பை சமாளிக்க முப்படைகளும் தயார்…” – அமைச்சர் ராஜ்நாத் சிங்…!

பிபர்ஜாய் சூறாவளியால் ஏற்படும் பாதிப்பை சமாளிக்க முப்படைகளின் தயார் நிலை குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு மேற்கொண்டார். மீட்பு பணிகளுக்கு முப்படைகளின் குழுக்கள் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். பிபர்ஜாய் புயல், நாளை பிற்பகல் குஜராத்தின் மாண்ட்வி – பாகிஸ்தானின் கராச்சி இடையே கரையைக் கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குஜராத் கடலோர பகுதிகளில் வசித்துவந்த சுமார் 50 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் … Read more

இறந்ததாக கருதப்பட்ட பிஹார் நபர் நொய்டாவில் மோமோஸ் சாப்பிட்டபோது அடையாளம் காணப்பட்ட சம்பவம்!

நொய்டா: பிஹார் மாநிலம் பாகல்பூர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக கருதி கடந்த நான்கு மாத காலமாக அவரது குடும்பத்தினர் துயரத்தில் இருந்து வந்துள்ளனர். இந்தச் சூழலில் நொய்டாவில் செக்டார் 50-ல் அவர் உயிருடன் இருப்பதை அவரது உறவினர் ஒருவர் அடையாளம் கண்டுள்ளார். அந்த நபர் மோமோஸ் கடையில் அப்போது இருந்துள்ளார். அந்த நபரின் பெயர் நிஷாந்த் குமார் என தெரிகிறது. கடந்த ஜனவரி 31-ம் தேதி அவரை காணவில்லை என அவரது தந்தை சச்சிதானந்த் … Read more

செந்தில்பாலாஜி கைது: கார்கே முதல் கேஜ்ரிவால் வரை – பாஜகவுக்கு தேசிய அளவில் குவியும் கண்டனங்கள்

புதுடெல்லி: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரது கைதுக்கு தேசிய அளவில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். மல்லிகார்ஜுன கார்கே: காங்கிஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத் துறையால் நள்ளிரவில் கைது செய்யப்பட்டிருப்பதற்கு கண்டனம் … Read more

அமித்ஷா தெலங்கானா பயணம் திடீர் ரத்து – காரணம் இது தானா?

Amit Shah Visit Cancelled: மத்திய உள்துறை அமித்ஷாவின் நாளைய ஹைதராபாத் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில தலைவர் ட்விட்டரில் அறிவித்துள்ளார். 

லண்டனில் ஹைதராபாத் மாணவி படுகொலை – 2 இளைஞர்கள் கைது

ஹைதராபாத்: ஹைதராபாத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி கோந்தம் தேஜஸ்வினி என்பவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கொல்லப்பட்டார். தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தைச் சேர்ந்த கோந்தம் தேஜஸ்வினி என்பவர் பட்ட மேற்படிப்பு படிப்பதற்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் லண்டன் சென்றுள்ளார். 27 வயதாகும் இவர், லண்டனில் வெம்ப்லே என்ற பகுதியில் நீல்ட் கிரசெண்ட் என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வேறு ஒரு பெண்ணுடன் சேர்ந்து தங்கி இருந்துள்ளார். இந்நிலையில், அதே குடியிருப்பில் வசித்து வந்த பிரேசில் நாட்டைச் … Read more