தெலங்கானா போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட ஒய்.எஸ்.ஷர்மிளா

ஐதராபாத்தில் வீட்டுக்காவலில் சிறை வைக்க முயன்ற போலீசாருடன் ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் தலைவர் ஒய்எஸ் ஷர்மிளா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மாநில அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் ஷர்மிளா, புலனாய்வு குழுவினரின் விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக தகவல் வெளியானது. அவர் விசாரணைக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில் வீட்டுக் காவலில் சிறை வைக்க முயன்ற போலீசார், ஷர்மிளாவின் … Read more

கொலீஜியம் முறைக்கு எதிரான வழக்கை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் உறுதி

புதுடெல்லி: கொலீஜியம் முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், நீதிபதிகள் நியமன தேசிய ஆணையத்தை புதுப்பிக்க வேண்டும் என்றும் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை தேதி அறிவிப்பதாக உச்ச நீதிமன்றம் உறுதி அளித்துள்ளது. உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை கொலீஜியம் எனப்படும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் குழு தேர்வு செய்கிறது. இதற்கு மாற்றாக மத்திய அரசு தரப்பில் நீதிபதிகள் நியமன தேசிய ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆணையத்திற்கு … Read more

இந்தியாவின் முதல் நீர் மெட்ரோ திட்டம் : இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!!

இந்தியாவில் உட்கட்டமைப்பு மற்றும் இணைப்பு ஆகியவற்றை மக்களுக்கு வழங்குவதற்கு, முடிவு செய்து உள்ள பிரதமர் மோடி தலைமையிலான அரசு, அனைவரும் ஒன்றையே சார்ந்திருக்கும் நிலையை தவிர்க்க முடிவு செய்தது. இதன் ஒரு பகுதியாக, நாட்டில் மெட்ரோ இணைப்பை விரிவாக்கம் செய்து வரும் நிகழ்வை எடுத்துக்காட்டாக கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதன்படி, நாட்டின் முதல் வாட்டர் மெட்ரோ போக்குவரத்து திட்டம் கேரளாவில் பிரதமர் மோடியால் இன்று தொடங்கி வைக்கப்பட உள்ளது. நாட்டின் தென்பகுதியில் அமைந்துள்ள கேரள … Read more

தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைக்க முயன்றால் கடும் நடவடிக்கை: சரத் பவார்

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைக்க முயல்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சி மகா விகாஸ் அகாதி கூட்டணியில் உள்ளது. இதில், காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவார், பாஜகவோடு கூட்டணி அமைக்க திட்டமிட்டு வருகிறார். தற்போதைய ஆளும் கூட்டணியான பாஜக – சிவசேனா கூட்டணியில் … Read more

வினாத்தாள் கசிவு வழக்கு விவகாரத்தில் YSRTP YS ஷர்மிளா தடுப்பு காவலில்! வீடியோ வைரல்

YSRTP YS Sharmila Detained: போலீசாருடன் கைகலப்பில் ஈடுபட்ட ஒய்.எஸ் ஷர்மிளா, தெலங்கானாவில் கேள்வித்தாள் கசிவு விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறது

திருமலை குழந்தைகள் இதயநல மருத்துவமனையில் மூன்றாவது இதயமாற்று அறுவை சிகிச்சை

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட இதயத்தை சிறுமி ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் குழந்தைகள் இதய நல மருத்துவமனை மருத்துவர்கள் பொருத்தினர்.  மூளை சாவு அடைந்த மாணவன் ஒருவனின் இதயம் அங்கிருந்து விசாகப்பட்டினத்திற்கு கொண்டுவரப்பட்டு, ஏர் ஆம்புலன்ஸ் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. கிரீன் சேனல் மூலம் தேவஸ்தான மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட இதயத்தை, இதயமாற்று அறுவை சிகிச்சைக்காக மூன்று ஆண்டுகளாகக் காத்திருந்த சிறுமி ஒருவருக்கு வெற்றிகரமாக மருத்துவர்கள் பொருத்தினர்.  Source … Read more

அத்தீக் சகோதரர்களைக் கொன்றவர்களுக்கு இந்து மகா சபா பாராட்டு; கொலையாளிகளுக்கு உதவத் தயார் என அறிவிப்பு

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தாதா அரசியல்வாதியான அத்தீக் அகமது, அவரது சகோதரர் அஷ்ரப் அகமதுவை சுட்டுக் கொன்றவர்களை அம்மாநில இந்து மகா சபா பாராட்டியுள்ளது. மேலும், அந்த மூன்று கொலையாளிகளுக்கும் உதவத் தயார் எனவும் அறிவிப்பை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளது. நில ஆக்கிரமிப்பு, ஆள்கடத்தல், கொலை உள்ளிட்ட 103 வழக்குகளில் சிக்கியவர்கள் அத்தீக் அகமது, அவரது சகோதரர் அஷ்ரப் அகமது. கைதிகளான இவர்கள் இருவரையும் ஏப்.15-ல் பிரயாக்ராஜின் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டபோது சுட்டுக் கொல்லப்பட்டனர். வெளிநாட்டு துப்பாக்கிகளால் … Read more

காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தாக்குதல்: ஏகே-47 துப்பாக்கியால் 36 ரவுண்டுகள் சுட்ட தீவிரவாதிகள்

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்பட்ட ராணுவ வாகனத்தின் மீது தீவிரவாதிகள் ஏகே-47 துப்பாக்கியால் 36 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனத்தின் மீது கடந்த வியாழக்கிழமை மதியம் 3 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டது. மழைப்பொழிவு அதிகமாக காணப்பட்ட அந்த நேரத்தில் 3 பக்கங்களிலிருந்து தீவிரவாதிகள் ஏகே 47 ரக துப்பாக்கியை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். குறைந்தபட்சம் 36 ரவுண்டுகள் அவர்கள் துப்பாக்கியால் வாகனத்தை நோக்கி சுட்டுள்ளனர். இந்த … Read more

இந்தியா – சீனா ராணுவ உயர்அதிகாரிகள் இடையே 18வது சுற்று பேச்சுவார்த்தை

இந்தியா சீனா ராணுவ கமாண்டர்கள் மத்தியிலான 18 வது சுற்றுப்பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. எல்லைப் பிரச்சினையில் படைக்குறைப்பு உள்ளிட்ட 3 ஆண்டுகளாக தீராத பல்வேறு பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண நேற்று இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் கிழக்கு லடாக் எல்லை அருகில் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினர். 5 மாதங்கள் இடைவெளிக்குப் பின்னர் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.இரு நாடுகளின் ராணுவத்தினரும் எல்லையை நோக்கிய சாலைக் கட்டுமானப் பணிகளில் தீவிரமாக இயங்கி வருகின்றன. ராணுவத் தளவாடங்கள் … Read more

காஷ்மீர், வடகிழக்கு மாநில எல்லைப் பகுதிகளின் போர் முனைகளில் பெண் அதிகாரிகள் நியமனம்

புதுடெல்லி: இந்திய ராணுவத்தில் 108 பெண்களுக்கு கர்னல் பதவி வழங்கப்பட்டு உள்ளது. இவர்களில் 55 சதவீதம் பேர், காஷ்மீர், வடகிழக்கு மாநில எல்லைப் பகுதிகளின் போர் முனைகளில் உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 1992-ம் ஆண்டில் இந்திய ராணுவத்தில் முதல்முதலாக பெண்கள் பணியமர்த்தப்பட்டனர். ஆனால் குறுகிய கால பணி (எஸ்எஸ்சி) என்ற அடிப்படையில் 14 ஆண்டுகள் மட்டுமே பணியாற்ற அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்ச … Read more