மணிப்பூர் வன்முறை – அமித் ஷா வீட்டின் முன்பாக குகி இனத்தவர் ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி: மணிப்பூரில் நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களைத் தடுக்கக் கோரி மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த குகி இனத்தைச் சேர்ந்த மக்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டின் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்டடனர். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மாதம், 2 இனக்குழுக்கள் இடையேஏற்பட்ட மோதல், வன்முறையில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டன. இதையடுத்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்காக பாதுகாப்புப் படையினர் பல்வேறு … Read more

மும்பை தாராவியில் 7 மாடி குடியிருப்பு வளாகத்தில் பயங்கர தீ விபத்து..!

மும்பையின் தாராவி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில்  தீ விபத்து ஏற்பட்டது. இதில் குழந்தைகள் உட்பட 32 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் சில பெரிய கட்டடங்களும் உள்ளன. அவ்வாறுஉள்ள பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் தீப் பிடித்தது. தீயணைப்பு படையினர் துரிதமாக செயல்பட்டு அனைவரையும் பத்திரமாக மீட்டனர். 32 பேருக்கு மூச்சுத்திணறல் மற்றும் தீக்காயங்கள் ஏற்பட்டதையடுத்து அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர் Source link

பாலியல் குற்றச்சாட்டுக்கு மத்தியில் பாஜக கூட்டத்தில் கவிதை வாசித்த பிரிஜ் பூஷண் சிங் – பிரதமர் மோடிக்கு புகழாரம்

புதுடெல்லி: வரும் 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் ‘மகாசம்பர்க் அபியான்’ என்ற பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, உத்தர பிரதேச மாநிலம் கோண்டா நகரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக எம்.பி.யும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் பேசினார். அப்போது பாதிப்பு, துரோகம் மற்றும் அன்பு ஆகியவற்றை சுட்டிக்காட்டும் உணர்ச்சிப்பூர்வமான ‘கபி அஷ்க், கபி காம்’ என்று தொடங்கும் கவிதையுடன் தனது பேச்சை தொடங்கினார். “சில நேரங்களில் கண்ணீரையும், சில … Read more

மணிப்பூரில் இணைய சேவைகள் மீதான தடை வருகிற 15ஆம் தேதி பிற்பகல் வரை நீட்டிப்பு!

மணிப்பூரில் கடந்த 24 மணிநேரமாக வன்முறை சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை என்ற நிலையில் அமைதியை மீட்பதற்கான அனைத்து வகை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மணிப்பூரில் இருவேறு இனக்குழுவினர் இடையே மோதல் வெடித்துபெரும் வன்முறையாக வளர்ந்த சூழலில் ராணுவத்தின் உதவியோடு கவவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. சுமார் 50 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி 350 அரசு காப்பகங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். சமூக விரோதிகள் சமூக ஊடகங்கள் மூலமாக வதந்திகளையும் போலி வீடியோக்களையும் பரப்புவதைத் தடுக்க 15ம் தேதி … Read more

மனிதர்களைப் போலவே மிருகங்களுக்கும் உணர்வுகள் உண்டு – மும்பை உயர் நீதிமன்றம் கருத்து

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் போலீஸார் கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அளவுக்கு அதிகமாக எருமை மாடுகளை ஏற்றி வந்த லாரியை மடக்கினர். மாடுகளை கொடுமைப்படுத்தும் வகையில் லாரியில் அடைத்து ஏற்றி வந்ததையடுத்து அந்த மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு கோசாலையில் விடப்பட்டன. இதையடுத்து எருமை மாடுகளின் உரிமையாளர்கள் சார்பில் வழக்கறிஞர் லைக் ஹுசைன் பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். அதில் அந்த … Read more

டெல்லியில் அமல்படுத்தப்பட்ட அவசர சட்டம்.. விரைவில் பிற மாநிலங்களிலும் அமல்படுத்தப்படும் – முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் அமல்படுத்தப்பட்ட அவசர சட்டம் இப்போதே தடுத்து நிறுத்தப்படாவிட்டால் விரைவில் பிற மாநிலங்களிலும் அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் தொடர்பாக துணைநிலை ஆளுநருக்கும் டெல்லி அரசுக்கும் மோதல் நீடித்து வந்த நிலையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு அரசுக்கு சாதகமாக இருந்தது. இதனையடுத்து மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்து அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டது. மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு எதிராக டெல்லியில்  ஆம் ஆத்மி கட்சி சார்பில் … Read more

ஐக்கிய அரபு அமீரகம் 2022-23-ல் ரூ.27,500 கோடி முதலீட்டுடன் இந்தியாவில் 4-வது இடம்

புதுடெல்லி: ஐக்கிய அரபு அமீரகத்துடன் இந்தியா கடந்த ஆண்டு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டது. இதையடுத்து இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்யும் நாடுகளின் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. 2021-22 நிதி ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவில் 1 பில்லியன் டாலர் (ரூ.8,200 கோடி) முதலீடு செய்திருந்தது. கடந்த ஆண்டு மே மாதம் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செயல்பாட்டு வந்தது. இதையடுத்து 2022-23 நிதி ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தின் … Read more

MET City: டெல்லி-என்சிஆர் அருகே கனவு நகரத்தை உருவாக்கும் ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி!

Mukesh Ambani Dream Project MET City: டெல்லி-என்சிஆர் அருகே கனவு நகரத்தை உருவாக்கும் ரிலையன்ஸ் முகே!ஷ் அம்பானி

வேலைவாய்ப்பு மேளா | பிரதமர் மோடி 70,000  பேருக்கு நாளை நியமன ஆணைகள் வழங்கல்

புதுடெல்லி: அரசு துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக சேர்க்கப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு மேளாவின் கீழ், சுமார் 70,000 நியமன ஆணைகளை நாளை (ஜூன் 13) பிரதமர் மோடி வழங்குகிறார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: புதிதாகப் பணிகளில் சேர்க்கப்பட்ட சுமார் 70,000 பேருக்கு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி அளவில் காணொளி மூலம் நியமன ஆணைகளை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் உரை நிகழ்த்தவுள்ளார். இந்த வேலைவாய்ப்பு மேளா நாடு … Read more

Biparjoy: குஜராத்தில் ரெட் அலர்ட்! பிபோர்ஜாய் புயல் தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை

Cyclone Biparjoy Update: குஜராத்தின் வல்சாத் பகுதியில் ‘பிபோர்ஜாய்’ புயலின் தாக்கம் தொடங்கிவிட்டது; அடுத்த 2 முதல் 3 நாட்களில் புயல் வலுவடைந்து பாதிப்புகளை ஏற்படுத்தலாம்