மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும் – அரசு ஊழியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை

புதுடெல்லி: அரசு நிர்வாகம் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க செய்வது அனைத்து அரசு ஊழியர்களின் கடமை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்திய அரசு பணியாளர்களின் திறன் மேம்பாட்டுக்கான தேசிய திட்டம் (கர்மயோகி) கடந்த 2020 செப்டம்பரில் தொடங்கப்பட்டது. கொள்கை கட்டமைப்பு, நிறுவன கட்டமைப்பு, போட்டித் திறன் கட்டமைப்பு, டிஜிட்டல் கற்றல் கட்டமைப்பு, மின்னணு மனித வள மேம்பாட்டு திட்டம், கண்காணித்தல் மற்றும் மதிப்பிடுதல் கட்டமைப்பு ஆகிய 6 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த திட்டம் … Read more

பிரதமர் மோடி படிப்பு தொடர்பான அவதூறு வழக்கு – கேஜ்ரிவால் ஆஜராக உத்தரவு

அகமதாபாத்: பிரதமரின் பட்டப்படிப்பு குறித்து கிண்டலான மற்றும் தரக்குறைவான விமர்சனம் குறித்து டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், அவரது கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட கிரிமினல் அவதூறு வழக்கில் இருவரும் ஜூலை 13-ம் தேதி நேரில் ஆஜராக அகமதாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் கல்லூரி பட்டப்படிப்பு விவரங்களை டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கோரியது தொடர்பான வழக்கில் அவ்வாறு வழங்கத் தேவையில்லை என்று குஜராத் உயர் நீதிமன்றம் கடந்த … Read more

இந்திய பெருங்கடல் பகுதியில் சுகோய் போர் விமானம் 8 மணி நேரம் ரோந்து

புதுடெல்லி: மலேசிய தீபகற்பத்துக்கும் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கும் இடையில் அமைந்துள்ள மலாக்கா நீரிணை இந்திய பெருங்கடல், பசிபிக் பெருங்கடலை இணைக்கிறது. உலகின் கடல்சார் வர்த்தகத்தில் 25 சதவீதம் இந்த நீரிணை வழியாக நடைபெறுகிறது. ஆண்டுதோறும் 50,000-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மலாக்கா நீரிணை வழியாக கடந்து செல்கின்றன. குறிப்பாக சீனாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 80 சதவீதம் மலாக்கா நீரிணை வழியாக நடைபெறுகிறது. தைவான் மீது சீன ராணுவம் தாக்குதல் நடத்த தயங்குவதற்கு மலாக்கா நீரிணை மிக முக்கிய … Read more

”மக்களின் நம்பிக்கை தான் மிக பெரிய சொத்து… அவர்களுக்காக தொடர்ந்து போராடுவேன்” – சச்சின் பைலட்..!

மக்களின் நம்பிக்கை தான் தனது மிகப்பெரிய சொத்து என்றும், அவர்களுக்காக தொடர்ந்து போராடுவேன் எனவும் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். தௌசாவில் தனது தந்தையும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜேஷ் பைலட் சிலையை திறந்து வைத்து பேசிய சச்சின் பைலட் இவ்வாறு கூறினார். ராஜஸ்தானில் ஊழலுக்கு இடம் இருக்கக்கூடாது என்றும், அரசு பணியாளர் தேர்வாணையம் கலைக்கப்பட்டு மீண்டும் புதிதாக உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். தனது தந்தை எந்த நிலையிலும் கொள்கை மாறியதில்லை என கூறிய சச்சின் … Read more

கோட்சே இந்தியாவின் மரியாதைக்குரிய நபர் – மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேச்சால் சர்ச்சை

பஸ்தார்: “கோட்சே இந்தியாவின் மரியாதைக்குரிய நபர். முகலாய மன்னர்கள் போல் வந்தேறியவர்கள் அல்ல” என்று அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியதால் சர்ச்சை எழுந்துள்ளது. கிரிராஜ் சிங் இரண்டு நாட்கள் பயணமாக பிஹார் சென்றுள்ளார். கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சில விஷயங்கள்தான் தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியது என்ன? “நாதுராம் கோட்சே இந்தியாவின் மரியாதைக்குரிய நபர். அவர் பாபர், … Read more

இந்தியாவில் 10.1 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிப்பு – மருத்துவ ஆய்வில் தகவல்

புதுடெல்லி: நீரிழிவு நோயாளிகள் குறித்த ஆய்வு ஒன்றை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் இணைந்து நடத்தின. நாடு முழுவதும் 1 லட்சத்து 13 ஆயிரத்து 43 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் உலகப் புகழ்பெற்ற லான்செட் மருத்துவ இதழில் வெளியாகியுள்ளது. இதில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் நீரிழிவு நோயாளிகள் 10 கோடியே 10 லட்சம் பேர் உள்ளனர். 13 கோடியே 60 லட்சம் பேர் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் உள்ளனர். இது நாட்டின் … Read more

லவ் ஜிகாத்… உத்தர பிரதேச அரசின் சர்ச்சைக்குரிய சட்டம் – முக்கியமான 5 தகவல்கள்!

Love Jihad Law: டெல்லியில் ஷரத்தா கொலை வழக்கு முதல் தற்போதைய கேரள ஸ்டோரி வரை தொடர்ந்து ‘லவ் ஜிகாத்’ குறித்த பேச்சுகளும் அதிகமாகின. இந்த சமயத்தில் லவ் ஜிகாத் சட்டம் குறித்து இதில் தெரிந்துகொள்ளலாம்.

ஒத்தைக்கு ஒத்தை வர்ரீயா..! பஜாரை தெறிக்க விட்ட ராவான ரவுடிகள்…!!!

நாங்கெல்லாம் ராவான ரவுடிகள் என்பது போல கேரளாவின் கோழிக்கோட்டில் சாலையில் குத்துச்சண்டை போட்டவர்களை போலீஸார் கொத்தாக பிடித்து தூக்கிச் சென்றனர். மதுபோதையில் சாலையில் கட்டிப்பிடித்து உருண்டு புரண்டு மல்லுக்கட்டும் இவர்கள் தான் ரம்சாத், ரஷீத். கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள ஊராட்சி உண்டு நகரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அரை நிர்வாணத்துடன் ஒருவர் சண்டைக்கு துள்ளிக் குதித்து தயாராகிறார். கலர்வேஷ்டி சட்டையில் களமிறங்கும் மற்றொருவர் களத்தில் இறங்கும் போதே எதிராளி விடும் குத்தை லாவகமாக … Read more

ஒடிசாவில் 82 உடல்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை

புவனேஸ்வர்: ஒடிசாவின் பாலசோர் மாவட் டத்தில் கடந்த 2-ம் தேதி நடந்த ரயில் விபத்தில் 288 பேர் உயரிழந்தனர். விபத்து நிகழ்ந்து ஒரு வாரத்துக்குப் பிறகும் இன்னும் 82 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் நேற்று முன்தினம் கூறும்போது, “பெரும்பாலான சடலங்கள் அடையாளம் காண முடியாத அளவு சிதைந்துள்ளன. எனவே டிஎன்ஏ அறிக்கைக்காக உறவினர்கள் காத்தி ருக்கின்றனர்” என்றனர். இதற்கிடையில், மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று முன்தினம் புவனேஸ்வர் எய்ம்ஸ் … Read more

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக பிரபுல் படேல், சுப்ரியா சுலே நியமனம்

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக பிரபுல் படேல், சுப்ரியா சுலே ஆகியோரை கட்சியின் தேசிய தலைவர் சரத் பவார் நியமித்துள்ளார். கடந்த 1999-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது. அக்கட்சி தொடங்கி 25-வது ஆண்டு தொடங்குவதையொட்டி டெல்லியில் நேற்று விழா கொண்டாடப்பட்டது. கட்சியின் வெள்ளி விழாவை முன்னிட்டு, அக்கட்சிக்கான புதிய செயல் தலைவர்களை சரத் பவார் நேற்று அறிவித்துள்ளார். Source link