ஆர்எஸ்எஸ் மீது காங்கிரஸ் அச்சம் கொண்டிருக்கிறது – அஷோக் கெலாட் கருத்துக்கு பாஜக பதிலடி

ஜெய்ப்பூர்: ஆர்எஸ்எஸ் மீது அச்சமும் வெறுப்பும் கொண்ட அரசியல் கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது; இதன் காரணமாகவே, அது ஆர்எஸ்எஸ் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறது என்று ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சி.பி. ஜோஷி தெரிவித்த்துள்ளார். மகாராஷ்டிரா மாநில அரசியல் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றி வியாழக்கிழமை கருத்து தெரிவித்த அசோக் கெலாட், “பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் பாசிஸ்ட்கள். உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. அவர்கள் (பாஜக) மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, … Read more

டெல்லியில் இருசக்கர வாகனத்தில் பெட்ரோலை திறந்து விட்டு தீயிட்டு கொளுத்திய பெண்

டெல்லியில் பெண் ஒருவர் பெட்ரோலை திறந்துவிட்டு இருசக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்திய காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. ஜெய்த்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட் பகுதியில் நேற்று இரவு பெண் ஒருவர் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் உள்ள பெட்ரோலை திறந்துவிட்டு தீயிட்டு கொளுத்தினார். பின்னர் மற்றொரு இருசக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்த முயன்றபோது அப்பகுதி மக்கள் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

காங்கிரஸூக்கு ஆதரவளிக்கத் தயார் – கல்யாண் ராஜ்ஜிய பிரகதி கட்சி அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் தொங்கு சட்டப்பேரவை அமைய இருப்பதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், தங்கள் கட்சி காங்கிரசுக்கு ஆதரவு தரும் என்று கல்யாண் ராஜ்ஜிய பிரகதி கட்சி அறிவித்துள்ளது. முன்னாள் பாஜக அமைச்சரும், பின்னர் அதில் இருந்து பிரிந்து கல்யாண் ராஜ்ஜிய பிரகதி என்ற தனிக்கட்சி தொடங்கியவருமான ஜனார்த்தன ரெட்டி, வெள்ளிக்கிழமை பெல்லாரியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் கட்சி 10 முதல் 13 இடங்களில் நிச்சயம் வெற்றி பெறும். நான் கங்காவதி தொகுதியில் … Read more

புள்ளையா வளர்த்திருக்க.. மாமியார் காலை அடித்து முறித்த ஆவேச மருமகள்..! ஆண் வேடமிட்டு தாக்கினார்..!

ஆண் வேடம் போட்டுச்சென்று மாமியாரின் காலை கம்பியால் அடித்து உடைத்ததாக மருமகளை போலீசார் கைது செய்துள்ளனர்.. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த பாலராமபுரத்தை சேர்ந்தவர் வாசந்தி. கடந்த செவ்வாய்க்கிழமை காலை 6 மணி அளவில் வாசந்தி அருகில் உள்ள பால் நிலையத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது ஆண் ஒருவர் வழிமறித்து இரும்பு கம்பியால் காலிலும், தலையிலும் தாறுமாறாக தாக்கியதில் வாசந்தியின் காலில் எலும்பு முறிவு ஏற்ப்பட்டுள்ளது. இவரது அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அங்கிருந்து … Read more

ஷாருக்கான் மகனை கைது செய்த சமீர் வான்கடே மீது சிபிஐ வழக்கு

மும்பை: ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை கைது செய்த சமீர் வான்கடே மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த 2021ல், சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். அவருடன் மேலும் சிலரும் கைதாயினர். மும்பை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே இந்த கைது நடவடிக்கையில் ஈடுபட்டார். தொடர்ந்து, ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஆதாரம் இல்லை என்று விசாரணைக் குழு … Read more

கர்நாடகாவில் ஆட்சியமைக்கப்போவது யார்.? காலை 8 மணிக்கு துவங்குகிறது வாக்கு எண்ணிக்கை..!

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு கடந்த 10ஆம் தேதியன்று நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள், காலை 8 மணி முதல் எண்ணப்பட உள்ளன. மொத்தம் 36 மையங்களில் வாக்குகள் எண்ணப்படும். பிற்பகலுக்கு மேல் வேட்பாளர்களின் வெற்றி நிலவரம் தெரியவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களை பெற்று ஆட்சியமைக்க பாஜக, காங்கிரஸ், ஜே.டி.எஸ். இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இதனிடையே, பெரும்பான்மை கிடைக்காவிட்டால் எடுக்கப்பட … Read more

திருப்பதி தேவஸ்தானம் அதிரடி முடிவு!!

திருப்பதியில் கோவிலுக்கு செல்லும் பக்தர்களை சோதனை செய்யும் ஊழியர்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கடந்த ஏழாம் தேதி இரவு இலவச தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட சென்ற பக்தர் ஒருவர் செல்போனை கோவிலுக்குள் எடுத்து சென்று வீடியோ பதிவு செய்தார். அவர் பதிவு செய்த காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் செல்போனை கோவிலுக்குள் எடுத்து சென்று வீடியோ எடுத்த … Read more

தேர்தல் கருத்துக் கணிப்புகளால் அதிருப்தி: மஜத தலைவர் குமாரசாமி சிங்கப்பூருக்கு திடீர் பயணம்

பெங்களூரு: கர்நாடகாவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளால் அதிருப்தி அடைந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி திடீர் பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ளார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு புதன்கிழமை நடைபெற்றது. இது தொடர்பான பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் காங்கிரஸூக்கு சாதகமாக வந்துள்ளன. பாஜகவும், மஜதவும் பெரும் பின்னடைவை சந்திக்கும் என முடிவுகள் வெளியாகியுள்ளன. ஒரு சில நிறுவனங்கள் தொங்கு சட்டப்பேரவை அமையும் என தெரிவித்துள்ளன. இதனால், பாஜக, மஜத ஆகிய கட்சித் தலைவர்கள் வருத்தம் அடைந்துள்ள‌னர். இந்நிலையில் … Read more

சமீர் வாங்கடே தெரியுமா.? ஷாருக்கான் மகனை கைது செய்தவர்.. அவர் மேலயா சிபிஐ வழக்கு.?

ஷாருக்கான் மகனை கைது செய்த சமீர் வாங்கடே மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் ஷாருக்கான். வெளிநாடுகளில் இந்திய சினிமா என்றாலே பாலிவுட் தான் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தவகையில் வெளிநாட்டு மக்களுக்கு பரிச்சயமான முகமாக ஷாருக்கான் உள்ளார். இந்த சூழலில் மத்தியில் பாஜக ஆட்சியமைத்தது முதலே இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு, வன்முறை அதிகரித்து வருவதாக எதிர்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். அந்தவகையில் ஷாருக்கானையும் குறிவைத்து வெறுப்பு … Read more

உச்சக்கட்ட நம்பிக்கையில் காங்கிரஸ்… ஜேடிஎஸ் உடன் கூட்டணி? – கார்கேவின் பதில் இதுதான்!

Karnataka Election Results 2023: கர்நாடக தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தற்போது தெரிவித்த கருத்து காங்கிரஸின் நிலைப்பாட்டை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.