இனி வழக்கறிஞர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம்: சுப்ரீம் கோர்ட்..!!

இந்தியாவில் நாள்தோறும் பதிவாகும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன்படி, ஒரே நாளில் 4,435 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 21,179-ல் இருந்து 23,091 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,916 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் முக கவசம் அணியவும், தொற்றுக்கான அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்தி கொள்ளவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. … Read more

உள்துறை அமைச்சருடன் தம்பிதுரை எம்.பி. திடீர் சந்திப்பு..!!

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் போது கூட்டணி குறித்து இப்போது முதலுரையும் முடிவுரையும் எழுத முடியாது என்றும் கூட்டணியில் பாஜக இருக்கிறது என்று தான் அமித்ஷா கூறினாரே தவிர கூட்டணியை உறுதி செய்யவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இதனைதொடர்ந்து கூட்டணி குறித்து பாஜக மாநில தலைவர்கள் முடிவெடுக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்தநிலையில், டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் அதிமுக எம்.பி. தம்பிதுரை சந்தித்து பேசினார். … Read more

“தமிழக அரசின் எதிர்ப்பை மீறி கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ‘எஸ்என்எஃப்’ வசதி” – ரவிக்குமார் எம்.பி

புதுடெல்லி: தேசிய மின்கட்டமைப்பிற்கு கூடங்குளம் அணுமின் நிலையம் அளித்த மின்சாரப் பங்கு என்ன என்று டி.ரவிக்குமார் எம்.பி. மக்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பிரதமர் அலுவல் துறையின் மத்திய இணை அமைச்சர் டாக்டர்.ஜிதேந்திர பிரசாத் விரிவான பதிலளித்தார். விழுப்புரம் மக்களவை தொகுதி எம்.பி டி.ரவிக்குமார் இன்று மக்களவையில் எழுப்பிய கேள்வியில், ‘செலவழிக்கப்பட்ட அணு எரிபொருளை(எஸ்என்எப்) சேமிப்பதற்கு ஒன்றிய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்திருக்கிறதா? KNPP வளாகத்திற்குள் எஸ்என்எப் அணு உலைக்கு அப்பால் நிரந்தரமாக சேமித்து வைக்கும் முடிவைப் … Read more

குடியரசு தலைவரிடம் பத்மஸ்ரீ விருது பெற்றார் இசையமைப்பாளர் கீரவாணி..!

டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், 2023-ஆம் ஆண்டுக்கான பத்ம விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு, குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கெளரவித்தார். தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த பின்னணிப் பாடகி வாணி ஜெயராமின் கலை சேவையை பாராட்டி அறிவிக்கப்பட்ட பத்ம பூஷன் விருதினை, அவரது சகோதரி உமா பெற்றுக்கொண்டார். அதேபோல் சிறந்த சமூகசேவைக்காக வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதினை பாலம் கல்யாணசுந்தரம் பெற்றுக்கொண்டார். மறைந்த உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம்சிங் யாதவிற்கு அறிவிக்கப்பட்ட பத்ம விபூஷன் விருதினை, அவரது மகன் … Read more

கர்நாடக பாஜக எம்எல்ஏ கோபாலகிருஷ்ணா காங்கிரஸில் இணைந்தார் – பாஜக.வினர் அடுத்தடுத்து இணைவதால் பரபரப்பு

பெங்களூரு: கர்நாடக பாஜக எம்எல்ஏ என்.ஒய். கோபாலகிருஷ்ணா அக்கட்சியில் இருந்து விலகி, நேற்று காங்கிரஸில் இணைந்தார். கர்நாடகாவில் வருகிற மே 10ம்தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடை பெறுகிறது. இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிற கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளை இழுக்கும் முயற்சியில் காங்கிரஸூம், பாஜக வும் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் பெல்லாரி மாவட்டம் குடிலகி தொகுதியின் … Read more

தெலங்கானாவில் பத்தாம் வகுப்பு வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக, அம்மாநில பாஜக தலைவர் கைது..!

பத்தாம் வகுப்பு இந்தி வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக, தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சையை, அவரது இல்லத்தில் வைத்து நள்ளிரவில் போலீசார் கைது செய்தனர். பாலகுர்த்தியில் உள்ள மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அவரை போலீசார் அழைத்துச்சென்ற நிலையில், காரை தடுத்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். பண்டி சஞ்சை கைதை கண்டித்து, பொம்மலா ராமராம் காவல் நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏ-க்கள் மற்றும் தொண்டர்களை போலீசார் … Read more

காஷ்மீரில் ஆர்எஸ்எஸ் பிரமுகர்களுக்கு கொலை மிரட்டல்

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் ஆர்எஸ்எஸ் பிரமுகர்கள் 30 பேரை கொல்லப் போவதாக காஷ்மீரை சேர்ந்த ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரன்ட்’ (டிஆர்எப்) என்ற தீவிரவாத குழு பட்டியல் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் பினாமி அமைப்பாக டிஆர்எப் கருதப்படுகிறது. இந்த அமைப்புக்கு மத்திய அரசுதடை விதித்துள்ளது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தனது அகண்ட பாரதம் குறித்த யோசனையை வெளிப்படுத்திய 3 நாட்களில் டிஆர்எப் இந்த மிரட்டலை விடுத்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசின்மூத்த அதிகாரி … Read more

ஆன்லைன் லாட்டரி சீட்டு குலுக்கலில் அடித்த ஜாக்பாட்.. ஒரே நாளில் கோடீஸ்வரரான பெங்களூர் அதிர்ஷ்டசாலி..!

வளைகுடா நாடான அபுதாபியில் நடைபெற்ற ஆன்லைன் லாட்டரி சீட்டு குலுக்கலில் பெங்களூரைச் சேர்ந்தவருக்கு, 44 கோடி ரூபாய் பரிசு கிடைத்ததால், ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறினார். கர்நாடகாவைச் சேர்ந்த அருண்குமார், ஆன்லைன் மூலமாக வாங்கியிருந்த லாட்டரி சீட்டுக்கான குலுக்கல், கடந்த 3ம் தேதி நடைபெற்றபோது, முதல் பரிசான 20 மில்லியன் திர்காமை வென்றார். இதனை அவரிடம் தெரிவிப்பதற்காக செல்போனில் லாட்டரி நிறுவனம் தொடர்பு கொண்ட போது, அருண்குமார் அதனை நம்பாமல், ஆன்லைன் மோசடி எண்ணாக இருக்குமென நினைத்து, … Read more

அரிசி திருடியதாக கூறி இளைஞரை அடித்து கொன்ற வழக்கில் 14 பேர் குற்றவாளிகள்: கேரள நீதிமன்றம் தீர்ப்பு

திருவனந்தபுரம்: அரிசி திருடியதாகக் கூறி பழங்குடியின இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 14 பேரை குற்றவாளிகள் என கேரள நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கேரள மாநிலம் அட்டபாடி பகுதி சிந்தகி பகுதியைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர் மது (27). மனநிலை பாதிக்கப்பட்ட இவர் அடிக்கடி வனப்பகுதிக்குள் சென்று குகைகளில் வசித்து வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு சிந்தகி பகுதியிலுள்ள கடைக்கு வந்த இவர் அங்குள்ள கடைகளில் அரிசி திருடியதாக கூறி ஒரு கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்டார். … Read more

அதிகரிக்கும் மாரடைப்பு.. கொரோனா காரணமா.. களமிறங்கும் ஆராய்ச்சி குழு.. என்னவாம்?

டெல்லி: இந்தியாவில் இளம் வயதினர் மத்தியில் மாரடைப்பு அதிகரித்து வரும் நிலையில், இதுதொடர்பாக ஆராய்ச்சி செய்ய நிபுணர் குழு அமைத்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா பாதிப்புக்கும், மாரடைப்புக்கும் சம்பந்தம் உள்ளதா என்பதை இந்தக் குழு முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். கொரோனாவும் மாரடைப்பும்.. இந்தியாவில் சமீபகாலமாக இளம் வயதினர் மத்தியில் மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளது. இளம் வயதினர் என்றால் 30, 35 … Read more