குஜராத்தில் திருமணத்துக்கு முந்தைய நாள் 150 கி.மீ. பயணித்து அரசு பணி தேர்வு எழுதிய மணமகள்

வடோதரா: குஜராத் மாநில ஊராட்சி பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் கிராம செயலாளர் (நிலை 3) பணிக்கான தேர்வு கடந்த 7-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு வடோதரா நகரின் கோத்ரி பகுதியைச் சேர்ந்த பால்குனி பார்மர் (24) என்ற இளம்பெண் விண்ணப்பித்திருந்தார். இதனிடையே அவருக்கு 8-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. தேர்வுக்கு அடுத்த நாள் திருமணம் என்ற நிலையில், அவருக்கு 150 கி.மீ. தொலைவில் உள்ள தஹோட் நகரில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும் பால்குனி … Read more

பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு வந்தே பாரத் ரயில் இயக்க திட்டம்!

பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு, இம்மாத இறுதியில் வந்தே பாரத் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இரு மாநிலங்களின் தலைநகரையும் இணைக்கும் விதமாக இயக்கப்படவுள்ள இந்த ரயில், இரு ரயில் நிலையங்களுக்கு இடையேயுள்ள தூரத்தை 6 மணி நேரத்தில் கடக்கும் என எதிர்பாக்கப்படுகிறது. தற்போது பாட்னா – ராஞ்சி வழித்தடத்தில் இயக்கப்படும், ‘ஜன் சதாப்தி’ என்ற விரைவு ரயில் 7 மணிநேரம், 55 நிமிடங்களில் இந்த வழித்தடத்தை கடந்து செல்கிறது. பாட்னா- ராஞ்சி வந்தேபாரத் … Read more

கர்நாடக சட்டப் பேரவை தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை ஒரே கட்ட வாக்குப்பதிவு..!!

கர்நாடக தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது. பாஜக, காங்கிரஸ், மஜத முக்கிய கட்சிகளாகப்போட்டியிடும் இத்தேர்தலில், பகுஜன் சமாஜ், சிபிஐ, சிபிஎம், இந்திய குடியரசுக் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. தேர்தல் களத்தில் மொத்தம் 2,615 வேட்பாளர்கள் உள்ளனர். அவர்களில் காங்கிரஸ் சார்பில் 223, பாஜக சார்பில் 224, மஜத சார்பில் 209, பகுஜன் சமாஜ் சார்பில் 133 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தவிர 918 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சட்டப்பேரவைத் தேர்தலில் … Read more

இத்தனை வருஷம் ஆகியும் மருமகளுக்கு குழந்தை பிறக்கல… கொடூர முடிவை எடுத்த மாமியார்..!!

உ.பி-யை சேர்ந்தவர் சாலி பேகம். இவருக்கும் ஃபிரோஸ் அகமது என்பவருக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 15 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்காததால் அவரது கணவர் குடும்பத்தினர் அவருடன் அவரை வசை பாடியுள்ளனர். இது தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பேகம் அவரது சகோதரர் கவுஸ் முகமதுவுக்கு போன் செய்து மாமியார் தனக்கு விஷம் கொடுத்துவிட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து அவர்களது வீட்டிற்கு விரைந்து வந்த முகமது, உயிருக்கு … Read more

ரூ.171 கோடி செலவில் கேஜ்ரிவால் பங்களா புதுப்பிப்பு: காங்கிரஸ் மூத்த தலைவர் புகார்

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான் நேற்று கூறியதாவது. டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் அரசு பங்களா ரூ.45 கோடியில் புதுப்பிக்கப்படவில்லை. அதைவிட மூன்று மடங்குக்கும் அதிகமாக ரூ.171 கோடி செலவில் அந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான பட்ஜெட்டை டெல்லி அரசு நிறைவேற்றியபோது கேஜ்ரிவாலின் பங்களாவை புதுப்பிப்பதற்குத்தான் இந்த தொகை செலவிடப்பட உள்ளது என்பதை எந்த இடத்திலும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. கேஜ்ரிவாலின் பங்களாவை சுற்றிலும் 22 அதிகாரிகள் வசிக்கும் வீடுகள் இருந்தன. சீரமைப்பு பணிகள் தொடங்கியதில் … Read more

கர்நாடகாவில் முதல்முறை வாக்காளர்களை ஊக்குவிக்க கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்த உணவக உரிமையாளர்..!

கர்நாடகாவில், முதல்முறை வாக்காளர்களை ஊக்குவிக்க உணவக உரிமையாளர் ஒருவர் கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்து உள்ளார். கர்நாடகாவில் நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல் முறை வாக்களிப்பவர்கள் வாக்களித்தபின் கை விரலில் வைக்கப்பட்ட மையை காண்பித்தால், இலவசமாக பட்டர் கல் தோசை, மைசூர் பாக், ஜூஸ் மற்றும் சினிமா டிக்கெட்டுகளும் வழங்கப்படும் என பெங்களூருவில் உள்ள தனியார் உணவக உரிமையாளர் அறிவித்துள்ளார். இதே அறிவிப்பை, கடந்த 2018, 2019 தேர்தல்களிலும் அந்த ஓட்டல் உரிமையாளர் செயல்படுத்தினார் Source … Read more

வெளியே செல்கிறேன் என கூறிய மகன்… நிச்சயமான காதலியுடன் ஓட்டலில் தற்கொலை..!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் சன்வர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் கபில் சாகு (23). இவருக்கும் நிஷா என்பவருக்கும் திருமணம் செய்வது என நிச்சயிக்கப்பட்டு இருந்த நிலையில், கபில் தனது பெற்றோரிடம் விஜய் நகர் பகுதிக்கு செல்கிறேன் என கூறி விட்டு காலை நேரத்தில் சென்று உள்ளார். ஆனால், மதியம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால், கபிலின் தந்தை அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, கபில் விஷம் குடித்த தகவலை, அவருடன் இருந்த … Read more

முதியவர்களுடன் காதலியை உல்லாசத்திற்கு அனுப்பி அதை ஆபாச தளத்தில் பதிவேற்றிய காதலன்..!!

அசாமின் தேவி சரண் கல்லூரியை சேர்ந்த தர்சனா பராலி என்ற மாணவியும், சந்திர கமல் பெஜ்பருவா வர்த்தக கல்லூரியில் படித்து வரும் அபிசேக் காஷ்யப் இருவரும் உறவில் இருந்து வந்து உள்ளனர். இவர்களின் வேலை என்னவென்றால் முதியவர்களாக பார்த்து காதலி தர்சனாவை உல்லாசத்திற்கு அனுப்பி அதனை வீடியோ எடுப்பதும், பின்னர் அதனை சர்வதேச ஆபாச தளங்களில் காஷ்யப் பதிவேற்றுவதும் வழக்கம். இந்நிலையில் அசாமின் ஜோர்ஹத் பகுதியை சேர்ந்தவர் தீபன் கலிதா (வயது 65). இவர் தர்சனா பராலியுடன் … Read more

‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனம் செய்த நபர் மீது சரமாரி தாக்குதல் – போலீஸார் வழக்குப் பதிவு

ஜோத்பூர்: ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்த நபர் மீது சரமாரி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இப்படத்தில், கேரளாவைச் சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டதாக காட்டப்பட்டுள்ளது. இப்படத்துக்கு எதிராக கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வந்தன. இப்படம் கடந்த மே 05ஆம் தேதி நாடு … Read more

‘அந்த உண்மையை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கப் போகிறீர்களா? ’ – பிரதமர் மோடிக்கு கபில் சிபல் கேள்வி

புதுடெல்லி: இந்தியாவில் இருந்து கர்நாடகாவை காங்கிரஸ் கட்சி பிரிக்க விரும்புகிறது என்ற பிரதமர் மோடியின் குற்றச்சாட்டிற்கு மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் பதில் அளித்துள்ளார். மே 10-ம் தேதி (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற உள்ள கர்நாடாகவில் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், “கர்நாடகாவிற்கு மட்டுமின்றி, மிகுந்த வலியுடனும் வேதனையுடனும் ஒட்டுமொத்த இந்தியாவிற்குமே இதனை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நேற்று (சனிக்கிழமை) தேர்தல் பிரச்சாரத்திற்காக கர்நாடகா வந்த காங்கிரஸ் கட்சியின் ஷாஹி … Read more