கொடுமை.. 16000 இதய ஆபரேஷன்களை செய்த டாக்டர் மாரடைப்பில் உயிரிழப்பு.. 41 வயதில்..

காந்திநகர்: 16,000 இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்த இளம் மருத்துவர் கவுரவ் காந்தி மாரடைப்பால் உயிரிழந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ஜாம் நகரைச் சேர்ந்தவர் கவுரவ் காந்தி (41). குஜராத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள தலைசிறந்த இதய மருத்துவர்களில் ஒருவராக திகழ்ந்தார். இதுவரை 16000 இதய அறுவை சிகிச்சைகளை செய்து மரணத்தின் விளம்பில் இருந்த பலரை மீட்டவர் கவுரவ் காந்தி. அதுமட்டுமின்றி, மாரடைப்பு வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்; … Read more

ஆணாதிக்கம் வெறுக்கப்பட வேண்டியது: கேரள உயர் நீதிமன்றத்தை கூற வைத்த ரெஹானா ஃபாத்திமா யார்?

Women Activist Rehana Fathima: மகனாக இருந்தாலும் சிறுவன் முன்பு அரை நிர்வாணமாக இருந்தது தவறு என குற்றம் சாட்டப்பட்ட ரெஹானா பாத்தீமா செய்தது தவறில்லை என  கேரள உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

“ஜூன் 15 வரை அரசு அவகாசம் கேட்டதால் போராட்டம் நிறுத்திவைப்பு” – மல்யுத்த வீராங்கனைகள்

புதுடெல்லி: மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீதான போலீஸ் விசாரணையை முடிக்க ஜூன் 15-ம் தேதி வரை மத்திய அரசு அவகாசம் கேட்டுள்ளது என்றும், விசாரணை முடியும் வரை போராட்டத்தை ஒத்திவைக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளோம் என்றும் முன்னணி மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் தெரிவித்துள்ளார். மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் செவ்வாய்க்கிழமை இரவு “மல்யுத்த வீராங்கனைகளின் பிரச்சினை தொடர்பாக அவர்களுடன் விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது. பேச்சுவார்த்தைக்கு வருமாறு அவர்களுக்கு மீண்டும் … Read more

Odisha Train Accident: ஒடிசாவில் மீண்டும் ரயில் விபத்து… 4 பேர் பலி!

Odisha Train Accident: ஒடிசா அருகே எஞ்சின் இல்லாமல் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் பெட்டிகள் கவிழ்ந்ததில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  

216 பயணிகளுடன் சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு.. மும்பையிலிருந்து ரஷ்யாவிற்கு தனி விமானம் அனுப்பிய ஏர் இந்தியா

இயந்திரக்கோளாறு காரணமாக ரஷ்யாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏர் இந்தியா விமானத்திற்கு மாற்றாக மற்றொரு விமானம் மும்பையில் இருந்து புறப்பட்டுச் சென்றது. டெல்லியிலிருந்து 216 பயணிகள் மற்றும் 16 ஊழியர்களுடன் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவிற்கு செவ்வாயன்று புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரஷ்யாவின் மகதான் விமான நிலையத்தில் அவரசமாக தரையிறக்கப்பட்டது. பயணிகளை ஹோட்டலில் தங்க வைத்த விமான நிறுவனம், அவர்களை மீண்டும் பத்திரமாக சான்பிரான்சிஸ்கோ அழைத்துச் செல்வதற்காக மும்பையிலிருந்து உணவு, குடிநீர் உள்ளிட்ட … Read more

உ.பி – லக்னோ நீதிமன்றத்தில் பிரபல ரவுடி சஞ்சீவ் ஜீவா சுட்டுக் கொலை

லக்னோ: உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவில் உள்ள சிவில் நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக வந்த ரவுடி சஞ்சீவ் ஜீவா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பிரபல ரவுடிகளில் ஒருவரான சஞ்சீவ் ஜீவா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. உள்ளூர் பாஜக தலைவர் பிராம் தத் திவேதி கொலை வழக்கிலும் சஞ்சீவ் ஜீவா குற்றம் சாட்டப்பட்டுள்ளார். சிறையில் இருந்த சஞ்சீவ் ஜீவா, வழக்கு விசாரணைக்காக லக்னோ சிவில் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டார். நீதிமன்ற … Read more

Wrestlers Protest: மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தும் – காரணம் என்ன?

Wrestlers Protest: டெல்லியில் நடைபெற்று வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம் வரும் ஜூன் 15ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரிடம் 5 முக்கிய கோரிக்கைகளை வைத்த மல்யுத்த வீராங்கனைகள்

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரின் அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தைக்கு சென்ற மல்யுத்த வீராங்கனைகள், அவரிடம் 5 முக்கிய கோரிக்கைகளை வைத்தனர். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக பெண் ஒருவர் பொறுப்பேற்க வேண்டும், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள மல்யுத்த சங்கத்தின் தற்போதைய தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் மல்யுத்தக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கக் கூடாது, மல்யுத்த அமைப்பிற்கு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடத்தப்பட வேண்டும், டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தின் போது … Read more

ஒடிசா ரயில் விபத்து இழப்பீட்டுத் தொகைக்காக நாடகமாடிய மனைவி: அம்பலப்படுத்திய கணவர்

கட்டாக்: ஒடிசா ரயில் விபத்தில் தனது கணவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறி இழப்பீட்டுக்கு விண்ணப்பித்த பெண்ணை, அவரது கணவரே போலீஸில் காட்டிக் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம், ரயில்வே சார்பில் ரூ.10 லட்சம் மற்றும் ஒடிசா மாநில அரசு சார்பில் ரூ.5 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், லட்சக்கணக்கில் வரும் இந்த இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக ஒடிசா மாநிலம் கட்டாக் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் விபத்துக்குள்ளான … Read more

ஏழுமலையான் கனவு பலிக்க போகுது… செம ஹேப்பியில் திருப்பதி தேவஸ்தானம்… மும்பை சும்மா அதிருது!

கனவு பலிச்சிடுச்சு… இப்படித் தான் மகாராஷ்டிர மக்கள் பலரும் கூறி வருகின்றனர். ஏன் அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பேசுகையில் கூட, வெங்கட்ரமனா கோவிந்தா… கோவிந்தா… இந்த நாள் மறக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இது எங்களின் நீண்ட நாள் கனவு. நேவி மும்பையில் ஏழுமலையான் கால் பதிக்கப் போகிறார் என்பது பெரும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. நேவி மும்பையில் ஏழுமலையான்திருமலையில் எப்படி பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கிறதோ, அதேபோல் அற்புதமாக ஒரு கோயில் நேவி மும்பையில் உயர்ந்து … Read more