இரு சக்கர வாகனங்களில் 3 பேர் பயணிக்க அனுமதி இல்லை: மத்திய அமைச்சர் கட்கரி திட்டவட்டம்

புதுடெல்லி: இரு சக்கர வாகனங்களில் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையும் மூன்றாவது நபராக ஏற்றிச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி இளமாறன் கரீமின் கோரிக்கைக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கமளித்துள்ளார். இரு சக்கர வாகனங்களில் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையும் பெற்றொருடன் ஏற்றிச் செல்ல அனுமதிக்கும் வகையில் மோட்டார் வாகனச் சட்டத்தில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு திருத்தம் செய்ய மத்திய அரசை அணுகலாமா என்று கேரள அரசு ஆலோசித்து வருகிறது. … Read more

பஞ்சாப் மாநிலம் அட்டாரி-வாகா எல்லையருகில் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் டிரோன்

பஞ்சாப் மாநிலம் அட்டாரியில் வாகா எல்லை அருகே பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய டிரோனை எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். தொலைத் தொடர்பு தகவலின் அடிப்படையில் பாகிஸ்தானில் இருந்து டிரோன் ஒன்று எல்லைத் தாண்டியதாக தகவல் கிடைத்ததும் உடனடியாக அவர்கள் அந்த டிரோனை சுட்டு வீழ்த்தினர். டிரோனில் 3 கிலோ எடை கொண்ட போதைப் பொருட்கள் இருந்ததாகவும் ராணுவத்தினர் தெரிவித்தனர். Source link

பாதுகாப்பு உபகரண கூட்டுத் தயாரிப்புக்கு இந்தியா, அமெரிக்கா ஒப்புதல்

புதுடெல்லி: பாதுகாப்பு உபகரண கூட்டு உற்பத்திக்கு இந்தியாவும், அமெரிக்காவும் ஒப்புதல் அளித்துள்ளன. இந்தியா வந்துள்ள அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாயிட் ஜே. ஆஸ்டின் III, இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து இது தொடர்பாக இன்று(ஜூன்5) பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்தைப்பை அடுத்து இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஜே. ஆஸ்டின் III ஆகியோர் இருதரப்பு பாதுகாப்பு … Read more

விபத்துக்குப் பின் நேற்றிரவு முதல் சரக்கு ரயில் இயக்கம்.. இன்று முதல் பயணிகள் ரயில் சேவைக்கு திட்டம்.!

ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் இரு வழித்தடத்திலும் தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டதையடுத்து 51 மணி நேரம் கழித்து, தெற்கு நோக்கிய தடத்தில் முதல் சரக்கு ரயில் இயக்கப்பட்டது. இன்று காலை குறைந்த வேகத்தில் பயணிகள் ரயில் சேவையும் மீண்டும் தொடங்கியுள்ளது. ஒடிசா மாநிலம் பாஹநஹாவில் கடந்த வெள்ளிக்கிழமையன்று, இருபது ஆண்டுகளில் இல்லாத கோர ரயில் விபத்து…. அடுத்தடுத்து இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் விபத்தில் சிக்கி சரிந்த பெட்டிகளில் மனிதர்கள் … Read more

திருமணமான மறுநாளில் மாரடைப்பால் உயிரிழந்த தம்பதி – உ.பி.யில் சோகம்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் திருமணமான அடுத்த நாளே புதுமணத் தம்பதி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரதாப் யாதவ் (24). இவர் புஷ்பா யாதவ் (22) என்பவரை கடந்த செவ்வாய்க்கிழமை திருமணம் செய்துள்ளார். திருமணத்துக்கு மறுநாள் பஹாரைச் பகுதிக்கு உட்பட்ட காசியார்கஞ்ச் பகுதியில் உள்ள கோதியா எனும் கிராமத்துக்குத் திரும்பினர். அதுதான் மணமகனின் சொந்த ஊர். அன்றைய தினம் திருமணத்துக்குப் பிந்தைய சடங்குகளை நிறைவு செய்து இரவு உறங்கச் சென்றுள்ளனர். ஆனால், … Read more

வளர்ந்த நாடுகள் சிலவற்றின் தவறான கொள்கைகளுக்கான விலையை வளரும் நாடுகள் கொடுத்து வருகிறது – பிரதமர் மோடி!

வளர்ந்த நாடுகள் சிலவற்றின் தவறான கொள்கைகளுக்கான விலையை வளரும் நாடுகள் கொடுத்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார். சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு டெல்லியில் அவர் வெளியிட்ட காணொளிச் செய்தியில், பெரிய மற்றும் முன்னேற்றம் அடைந்த சில நாடுகள் சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் தராமல், தங்கள் வளர்ச்சிக்கு மட்டுமே நீண்ட காலமாக முன்னுரிமை கொடுத்து வந்ததாக தெரிவித்தார். அத்தகைய நாடுகளின் தவறுகளை பல தசாப்தங்களாக யாருமே தட்டிக் கேட்கவில்லை என்று குறிப்பிட்ட பிரதமர், தற்போது அத்தகைய நாடுகளிடம் … Read more

அவதேஷ் ராய் கொலை வழக்கு | கேங்ஸ்டர், அரசியல்வாதி முக்தார் அன்சாரிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

புதுடெல்லி: கடந்த 1991-ம் ஆண்டு நடந்த அவதேஷ் ராய் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் கேங்ஸ்டர், அரசியல்வாதி முக்தார் அன்சாரிக்கு வாரணாசி நீதிமன்றம் ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தும் இன்று (திங்கள்கிழமை) தீர்ப்பு வழங்கியது. கடந்த 1991-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி, காங்கிரஸ் பிரமுகரும், முன்னாள் எம்எல்ஏவுமான அஜய் ராயின் தம்பி அவதேஷ் ராய், அஜய் ராயின் வீட்டிற்கு வெளியே சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக முக்தார் அன்சாரி மற்றும் சிலர் … Read more

பருவநிலை மாற்றத்துக்கு வளர்ந்த நாடுகள் முன்னுரிமை கொடுக்கவில்லை: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

புதுடெல்லி: பருவநிலை மாற்றத்துக்கு வளர்ந்த நாடுகள் முன்னுரிமை கொடுக்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சிக்காக வீடியோ செய்தி ஒன்றை பிரதமர் மோடி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “உலகின் பருவநிலையைப் பாதுகாக்க அனைத்து நாடுகளும் சிந்திக்க வேண்டியது அவசியம். இதில், சுயநலத்திற்கு இடம் இருக்கக் கூடாது. நீண்ட காலமாகவே முன்னேறிய நாடுகளின் வளர்ச்சி முன்னுதாரணமானதாக இருக்கவில்லை. முதலில் நம் நாட்டை வளமாக்குவோம்; பிறகு சுற்றுச்சூழலைப் பற்றி சிந்திப்போம் … Read more

கர்நாடகாவில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்… ஆனால் சில நிபந்தனைகள் உண்டு!

கர்நாடகா சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான மகளிருக்கு இலவச அரசு பேருந்து திட்டத்தை செயல்படுத்த மாநில உத்தரவு பிறப்பித்துள்ளது.

Odisha Train Tragedy | விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்தவர்களின் குடும்பத்தினரை கண்டறிவதில் ரயில்வே தீவிரம்

பாலசோர்: விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்த பயணிகளின் உறவினர்கள் அரசு அறிவித்துள்ள இலவச தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ள வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அடையாளம் காணப்பட்ட உடல்கள்: ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 3 ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 170 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அம்மாநில தலைமைச் செயலர் பிரதீப் ஜெனா தெரிவித்திருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “170 உடல்கள் அடையாளம் … Read more