ஒடிசா எல்லையை நோட்டமிட்ட அதிகாரிகளே ஆந்திராவுக்கு திரும்பி செல்லுங்கள்!: ஒன்றிய அமைச்சரின் கோஷத்தால் சலசலப்பு

கோராபுட்: ஒடிசா – ஆந்திர மாநில எல்லையில் உள்ள கோடியாவுக்கு வந்த ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், அங்கிருந்த ஆந்திர மாநில் அதிகாரிகளிடம் ‘ஆந்திராவுக்குத் திரும்பிச் செல்லுங்கள்’ என்று பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒடிசா மற்றும் ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களும் எல்லை கிராமமான கோடியாவை சொந்தம் கொண்டாடி வருகின்றன. ‘உத்கல் திவாஸ்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஒன்றிய கல்வித்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான தர்மேந்திர பிரதான் கோடியாவிற்கு வந்தார். அப்போது அங்கிருந்த ஆந்திர மாநில … Read more

இளம் வயதினரை குறி வைக்கும் மாரடைப்பு மரணங்கள்..!!

தெலுங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டத்தில் உள்ள போடா தாண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் லகாபதி. இவரது மனைவி வசந்தா. விவசாயம் செய்து வரும் இந்த தம்பதிக்கு அன்னு என்ற மகனும், ஸ்ரவந்தி (13) என்ற மகளும் உள்ளனர். இதில் ஸ்ரவந்தி அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை ராமநவமியையொட்டி தெலுங்கானாவில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்ரவந்தி விடுமுறையையொட்டி தனது நண்பர்களுடன் மைதானத்தில் விளையாடியுள்ளார். பிறகு அவர் வீட்டிற்கு சென்று அங்கு … Read more

"என்னங்க நடக்குது".. 13 வயது சிறுமிக்கு திடீர் "ஹார்ட் அட்டாக்".. தெலங்கானாவில் 'ஷாக்'

ஹைதராபாத்: தெலங்கானாவில் வீட்டுக்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே இளம் வயது மாரடைப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. அதிலும், பதின் பருவ சிறுவர் சிறுமிகள் கூட மாரடைப்புக்கு உயிரிழப்பது மக்கள் மத்தியில் ஒருவித பயத்தை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த கல்லூரி மாணவிக்கு மாரடைப்பு, கபடி விளையாடிய 10-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் உயிரிழப்பு என்பன போன்ற … Read more

லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக சிக்கிய பதிவுதுறை உதவி பதிவாளர்..!

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பத்திரப்பதிவுதுறை உதவி பதிவாளர் சந்திரமோகன், அவரது உதவியாளர் அருண் ஆகியோரை லஞ்சம் பெற்ற புகாரில் சிபிஐ கைது செய்தனர். பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் முறைகேடுகள் அதிகரித்திருப்பதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் சென்னையிலிருந்து வந்த சிபிஐயினர் காரைக்கால் அலுவலகத்தை கண்காணித்து, உதவி பதிவாளர் லஞ்சம் வாங்கும் போது வெள்ளிக்கிழமையன்று கையும் களவுமாக கைது செய்தனர். அலுவலகத்திலிருந்து ஆவணங்கள், ரொக்கம், ஹார்ட் டிஸ்க்குகளை கைப்பற்றிய சிபிஐயினர், ராஜாத்தி நகரில் உள்ள சந்திரமோகன் வீட்டிலும் சோதனை நடத்தினர். 2 நாட்களாக … Read more

பீகார் மாநிலத்தில் வன்முறை ஏற்பட்ட நிலையில் தற்போதைய நிலைமை குறித்து ஆளுநரிடம் கேட்டறிந்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா

டெல்லி: பீகார் மாநிலத்தில் வன்முறை ஏற்பட்ட நிலையில் தற்போதைய நிலைமை குறித்து ஆளுநரிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்தார்.பீகாரில் பதற்றமான சூழலை கட்டுக்குள் கொண்டுவர துணை ராணுவ படையினரை உள்துறை அமைச்சகம் அனுப்புகிறது. ஏற்கெனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நிலைமை கண்காணிக்கப்பட்டு வரும்நிலையில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  ராமநவமியையொட்டி நாலந்தா, சசாரம் ஆகிய மாவட்டங்களில் இரு தரப்பினரிடையேயான மோதல் வன்முறையில் முடிந்தது. வன்முறையில் ஒருவர் உயிரிழந்தநிலையில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி இதுவரை 80 பேரை … Read more

சூரத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராகுல்காந்தி மேல்முறையீடு செய்ய திட்டம்!

நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நாளை சூரத் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மோடி பெயர் குறித்ததான அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்து கடந்த மாதம் 23-ம் தேதி தீர்ப்பளித்தது. அத்துடன் மேல்முறையீடு செய்யும் வகையில் ராகுல்காந்திக்கு 30 நாட்கள் ஜாமீனும் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து ராகுல்காந்தி நாளை சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு … Read more

அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து சூரத் அமர்வு நீதிமன்றத்தில் நாளை மேல்முறையீடு செய்கிறார் ராகுல் காந்தி.!

டெல்லி: அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து நாளை ராகுல்காந்தி மேல்முறையீடு செய்ய உள்ளார். குஜராத் மாநிலம் சூரத் அமர்வு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நாளை மேல்முறையீடு செய்கிறார். அவதூறு வழக்கில் கோர்ட் சிறை தண்டனை வழங்கியதை அடுத்து ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி செய்யப்பட்டார். பிரதமர் மோடி குறித்த விமர்சனத்தால் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை … Read more

அதிகாலையில் நடந்த கோர விபத்து..! 2 பேர் பலி… 40 பேர் படுகாயம்..!!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த கீழையூர் அருகே கேரளாவில் இருந்து ஆம்னி பேருந்து ஒன்று 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். மேலும் 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த … Read more

மீண்டும் அவதூறு வழக்கு.. இந்த முறை ஆர்எஸ்எஸ்.. 12ம் தேதி விசாரணை.. ராகுலுக்கு அடிமேல் அடி.!

ராகுல் காந்தி மீது மீண்டும் அவதூறு வழக்கு முன்னாள் எம்பியும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறை இந்த ஆண்டு ஜனவரியில் அவர் பாரத் ஜோடோ யாத்திரையின் போது ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்திற்கு (ஆர்எஸ்எஸ்) எதிராக அவர் கருத்து தெரிவித்ததற்காக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது . இந்தமுறை ஆர்எஸ்எஸ் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் கமல் பதவுரியாவின் புகாரின் பேரில் வழக்கறிஞர் அருண் … Read more

சட்ட விதிகளுக்குப் புறம்பாக ஒருவர் கூட சிறையில் இருக்கக் கூடாது – உச்சநீதிமன்றம் உத்தரவு

சட்ட விதிகளுக்குப் புறம்பாக ஒருவர் கூட சிறையில் இருக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைதிகள் சிறையில் அடைக்கப்படும் காலம் தொடர்பான மனுவை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு  விசாரித்தது. ஒரு வழக்கில் மாஜிஸ்திரேட் உத்தரவிட்ட நாளில் இருந்து 60 அல்லது 90 நாட்களுக்கு ரிமாண்ட் காலம் கணக்கிடப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். குற்றத்தடுப்பு, பாதுகாப்பைப் பராமரித்தல் மாநில அரசுகளின் பொறுப்பு என்றாலும், சட்ட விதிகளை மீறி தனி நபர் எவரும் சிறையில் … Read more