தெலங்கானாவில் 3,800 சதுர அடியில் முப்பரிமாண கோயில் அமைகிறது

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், சித்திபேட்டா மாவட்டத்தில் உள்ள புருகுபல்லியில் சர்விதா மெடோஸ் எனும் கட்டுமான நிறுவனம் அப்சுஜா இன்ஃப்ராடெக் மற்றும் சிம்ப்ளி ஃபோர்ஜ் கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 3,800 சதுர அடியில் இந்த முப்பரிமாண பிரின்டட் கோயிலை கட்ட திட்டமிட்டது. மோதக வடிவில் விநாயகர் கோயில், சதுர வடிவில் சிவபெருமான் கோயில், தாமரை வடிவில் பார்வதி கோயில் என மூன்று பகுதிகள் இந்த முப்பரிமாண கோயிலில் இடம்பெறுகின்றன. கடந்த மார்ச் மாதத்தில் சர்விதா மெடோஸ் நிறுவனம், ஹைதராபாத் … Read more

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபாவுக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு பாஸ்போர்ட்

ஸ்ரீநகர்: காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்திக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு புதிய பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் (பிடிபி) தலைவருமான மெகபூபா முஃப்தியின் பாஸ்போர்ட் கடந்த 2019-ம் ஆண்டு காலாவதியானது. இதையடுத்து, அதை புதுப்பிக்க அவர் விண்ணப்பித்தார். அவரது தாயும் தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விண்ணப்பித்திருந்தார். ஆனால், இவர்களுக்கு எதிரானஅறிக்கை ஒன்றை காஷ்மீர் போலீஸார் தாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில் இவர்களுக்கு பாஸ்போர்ட் மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தனக்கு … Read more

பயங்கரமாக மோதியதில் ரயில் குலுங்கியது: உடல் பாகங்கள் சிதறி கிடந்ததாக பயணிகள் பேட்டி

பாலசோர்: ஒடிசாவில் 3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் ஒட்டுமொத்த ரயிலும் குலுங்கி கவிழ்ந்ததாகவும், உடல் பாகங்கள் ரத்த வெள்ளத்தில் சிதறிகிடந்ததாகவும், உயிர் தப்பித்த பயணிகள் கூறினர். விபத்தை சந்தித்த கோரமண்டல்-ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரயிலில், பிஹாரைச் சேர்ந்த தின ஊதிய தொழிலாளி சஞ்சய் முகியா என்பவர் பயணம் செய்தார். ரயில் விபத்து குறித்து அவர் கூறுகையில், ‘‘நான் சென்னை நோக்கி சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தேன். ரயில் மோதியபோது நான் கழிவறையில் … Read more

ஒடிசா ரயில் விபத்து | பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்குவேன் – சேவாக் அறிவிப்பு

புதுடெல்லி: ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை வழங்க உள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். கடந்த 2-ம் தேதி நடைபெற்ற இந்த விபத்தில் பயணிகளுடன் சென்ற 2 அதிவேக ரயில்கள் மற்றும் நின்று கொண்டிருந்த ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்டதில் 275 பேர் உயிரிழந்துள்ளனர், 1000-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் சேவாக் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற்ற … Read more

ஒடிசா | ரயில் விபத்து நடந்த பகுதியில் மீண்டும் ரயில் இயக்கம் தொடக்கம்: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

பாலசோர்: ஒடிசாவில் கடந்த 2-ம் தேதி மாலை சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 2 பயணிகள் ரயில், ஒரு சரக்கு ரயில் மோதிய பயங்கர விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். 1,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில், விபத்து நடைபெற்ற இடத்தில் மீண்டும் ரயில் இயக்கம் தொடங்கியுள்ளது. இதை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார். இந்த விபத்தில் சேதமடைந்த ரயில் பெட்டிகளை அகற்றும் பணிகளை 1000-க்கும் மேற்பட்டவர்கள் மேற்கொண்டனர். கிரேன் போன்ற இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன. தொடர்ந்து ரயில் … Read more

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் உரிமை கோரப்படாத 167 சடலங்களின் புகைப்படங்கள் ஒடிசா அரசு வெளியீடு..!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் உரிமை கோரப்படாத 167 சடலங்களின் புகைப்படங்களை ஒடிசா அரசு வெளியிட்டுள்ளது. பிணவறைகளில் வைக்கப்பட்டுள்ள இந்த சடலங்களை உறவினர்கள் அடையாளம் காணும் வகையில் அரசின் இணையதளத்தில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. புகைப்படங்களில் குறிப்பிட்டுள்ள எண்ணை தொடர்பு கொண்டு உடல்களை பெற்று செல்லுமாறு மற்ற மாநிலங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளின் விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. Source link

இறைவனால் அடையாளப்படுத்திய மொழி ‘தமிழ்’: நீதிபதி அரங்க. மகாதேவன் பேச்சு

மதுரை: கனடா தமிழ்ச் சங்கம் சார்பில், மதுரை உலகத் தமிழ் சங்க கட்டிடத்தில் வைகைத் திருவிழா என்ற நிகழ்ச்சி நடந்தது. கனடா தமிழ்ச் சங்க நிறுவனத்தலைவர் வள்ளிக்கண்ணன் மருதப்பன் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் பங்கேற்றார். ஜல்லிக்கட்டு திருவிழாவை நீதிமன்றங்கள் வரை சென்று போராடி மீட்க காரணமாக இருந்த தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையின் மாநிலத் தலைவர் பி.ராஜசேகரனுக்கு தமிழ் மேன்மையாளர் விருதும், அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபருக்கு வாழ்நாள் … Read more

"புத்தம் புதுசு".. பீகாரில் புதிதாக கட்டப்பட்ட பாலம் கங்கையில் கரைந்தது.. 2-வது முறையாக சம்பவம்

பாட்னா: பீகாரில் கங்கை நதிக்கு மேலே புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் அப்படியே இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் சமீபகாலமாக புதிதாக கட்டப்பட்ட மேம்பாலங்கள் இடிந்து விழுவதும், சாலைகள் கரைவதும் தொடர் கதையாகி வருகிறது. ஒப்பந்தத்தில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளும், லஞ்ச லாவண்யங்களுமே இதற்கு காரணம் என்பதை யாரும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. குஜராத்தில் கடந்த மாதம் புதிதாக கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்ட கேபிள் மேம்பாலம் அறுந்து விழுந்ததில் 141 பேர் … Read more

மணிப்பூரில் கள்ளச்சந்தையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.200-க்கு விற்கப்படுவதாக தகவல்..!

வன்முறை சம்பவங்கள் ஏற்பட்ட மணிப்பூரில் கள்ளச்சந்தையில் பெட்ரோல் லிட்டருக்கு 200 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், ஏடிஎம்களில் பெரும்பாலும் பணம் இல்லாத நிலையே நீடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தை அடுத்து ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகள் குவிக்கப்பட்டன. இந்நிலையில், அம்மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளதால் தலைநகர் இம்பாலுக்கு பொருட்கள் கொண்டுசெல்லப்படுவது தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அரிசி, காய்கறிகள், முட்டை போன்றவற்றின் விலை உயர்ந்துள்ளதாகவும், உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் சொல்லப்படுகிறது. … Read more

பிஹார் | கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்தது

பாகல்பூர்: பிஹார் மாநிலம் பாகல்பூரில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்தது. அந்த காட்சியை உள்ளூர் மக்கள் தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். தற்போது சமூக வலைதளத்தில் அது பரவலாக பகிரப்பட்டு வருகிறது. ஞாயிறு (ஜூன் 4) அன்று மாலை 6 மணி அளவில் இது நடந்துள்ளது. சுமார் 1,717 கோடி ரூபாய் செலவில் இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்துள்ளது. அகுவானி சுல்தான்கஞ்சில் கங்கை பாலம் என இது அறியப்படுகிறது. இதுவரை இந்த பாலம் … Read more