மணிப்பூர் கலவரம்.. பாஜக எம்எல்ஏ மீது கொலைவெறி தாக்குதல்.. கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை

இம்பால்: மணிப்பூரில் வரலாறு காணாத பெரும் கலவரம் நடந்து வரும் சூழலில், அங்கு பாஜக எம்எல்ஏ வன்ஜாகின் வால்டே என்பவர் மீது வன்முறை கும்பல் நேற்று இரவு கொலைவெறி தாக்குதலை நடத்தியது. இதில் படுகாயமடைந்த அவர், கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 5 நாட்களாக மிகப்பெரிய வன்முறையும், கலவரமும் வெடித்து வருகிறது. மணிப்பூரில் பரவலாக வசிக்கும் ‘மெய்டெய்’ சமூக மக்களுக்கு பழங்குடியினர் (scheduled Tribe) அந்தஸ்து வழங்கக்கூடாது எனக் கூறி, … Read more

‘தி கேரளா ஸ்டோரி’ சர்ச்சை டீசரை நீக்க முன்வந்த தயாரிப்பாளர்; படத்துக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

திருவனந்தபுரம்: ‘தி கேரள ஸ்டோரி’ திரைப்படத்தின் டீசரில் கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதால் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து, அந்த டீசரை நீக்குவதாக படத் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இப்படத்தில் கேரளாவை சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது. இதற்கு கேரளாவில் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், … Read more

சரத் பவாருக்கு ஸ்டாலின் வைத்த வேண்டுகோள்: இதை நீங்க மறுக்க கூடாது!

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை சரத் பவார் மீண்டும் ஏற்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தை மையமாக கொண்டு இயங்கும் தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் தலைவர் சரத் பவார் கடந்த மே 2ஆம் தேதி அறிவித்தார். அத்துடன் தேர்தல் அரசியலில் இருந்தும் விலகி இருப்பதாக கூறினார். மகாராஷ்டிராவில் மட்டுமல்லாமல் தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் தலைவர்களில் ஒருவரான சரத் பவாரின் முடிவு பல … Read more

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக டிஆர்டிஓ விஞ்ஞானி மீது குற்றச்சாட்டு.. பயங்கரவாத எதிர்ப்பு படை விசாரணை!

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்து, ஏவுகணை குறித்த முக்கிய தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டின் கீழ், டிஆர்டிஓ விஞ்ஞானி ஒருவரை கைது செய்து பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புனேவில் உள்ள டிஆர்டிஓ மையத்தில் பணியாற்றி வந்த விஞ்ஞானி பிரதீப் குருல்கர் என்பவரை பாகிஸ்தான் உளவு அமைப்பைச் சேர்ந்தவர்கள் சமூகவலைதளம் மூலம் மாணவி என அறிமுகப்படுத்தி தொடர்புகொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து வாட்ஸ் ஆப் செயலி மூலம் விஞ்ஞானியை தொடர்பு கொண்டதாகவும், அதனை வைத்தே பின் அவர் … Read more

கர்நாடகாவில் பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் இறுதிக்கட்ட பிரச்சாரம்: பெங்களூருவில் 40 கிமீ தூரம் சாலை பேரணி

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அம்மாநிலத்தில் 3 நாட்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். இதுகுறித்து மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரிக்கு முன்பு இருந்தே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அடுத்ததாக, கர்நாடகாவில் 3 நாட்கள் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட இருக்கிறார். வெள்ளிக்கிழமை பிற்பகல் பெல்லாரியிலும், மாலை துமக்கூருவிலும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிர‌ச்சாரம் … Read more

அபுதாபி பயணத்துக்கு தடை போட்ட ஒன்றிய அரசு: அமெரிக்கா கிளம்பும் பினராயி விஜயன்

கேரள முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அபுதாபியில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வெளியுறவுத்துறையிடம் விண்ணப்பித்திருந்தனர். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் இது தொடர்பாக ஆய்வு செய்து முதலமைச்சர் கலந்து கொள்ளும் அளவுக்கு முக்கியமான நிகழ்வு அல்ல அது என்று அனுமதி வழங்க மறுத்தார். இதைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகத்திடம் அனுமதி கேட்கப்பட்டது. அங்கும் வெளியுறவுத் துறை தெரிவித்த கருத்துக்களையே பிரதிபலித்த நிலையில் கேரள முதல்வர் மற்றும் அமைச்சர்களின் அபுதாபி பயணம் ரத்தானது. இந்நிலையில் உடனடியாக அமெரிகா, … Read more

தீவிரவாதத்தின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தும் வகையில் ‘தி கேரளா ஸ்டோரி’ படம் எடுக்கப்பட்டுள்ளது – பிரதமர்

தீவிரவாதத்தின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தும் வகையில் ‘தி கேரளா ஸ்டோரி’ படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், வாக்கு வங்கிக்காக அப்படத்தை காங்கிரஸ் எதிர்ப்பதாகவும் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். கர்நாடகாவின் பெல்லாரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர், சூடானில் நிலவிய சூழலால் அந்நாட்டில் இருந்து தங்களது குடிமக்களை மீட்க பெரிய நாடுகளே மறுத்த நிலையில், மத்திய அரசு இந்தியர்களை மீட்டதாக பெருமிதத்துடன் கூறினார். சூடான் விவகாரத்தை வைத்து அரசியல் செய்யவே காங்கிரஸ் விரும்பியதாகவும் பிரதமர் குற்றஞ்சாட்டினர். கர்நாடகாவின் வளர்சிக்கானதாக … Read more

”மல்யுத்த வீராங்கனைகளின் கோரிக்கைகள் நிறைவேற்றம்; போலீஸ் விசாரணையை முடிக்க விடுங்கள்” – மத்திய அமைச்சர்

புதுடெல்லி: “போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. டெல்லி போலீஸார் தங்களின் பாரபட்சமில்லாத விசாரணையை முடிக்க வீரர்கள் ஒத்துழைக்க வேண்டும்” என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார். டெல்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர், “கோபத்துடன் அங்கு போராடிக்கொண்டிருக்கும் அனைத்து வீரர்களுக்கும் இந்த வேண்டுகோளை விடுக்கிறேன். உங்களின் எல்லா கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. நீதிமன்றமும் வழிகாட்டி உத்தரவு வழங்கியுள்ளது. முதலில் போலீஸார் தங்களின் பாரபட்சமில்லாத … Read more

திருப்பதி தரிசனமா… போலி டிக்கெட்டை எப்படி கண்டறிவது? OTPல தான் விஷயமே இருக்கு!

கோடை விடுமுறைக்கு மட்டுமல்ல… எல்லா மாதங்களிலும் திருப்பதியில் கூட்டம் நிரம்பி வழியும். ஏழுமலையானை தரிசிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று டிக்கெட்கள் முன்பதிவு செய்ய வேண்டும். இங்கு தான் சிக்கலே… எது உண்மையான இணையதளம்? எது போலி என்று உங்களுக்கு தெரியுமா? கொஞ்சம் மிஸ் ஆனாலும் பணத்தை ஏமாற்றி விடுவார்கள். இந்த விவகாரம் பக்தர்களுக்கு மட்டுமல்ல. திருப்பதி தேவஸ்தானத்திற்கும் தலைவலியாக வந்து நிற்கிறது. திருப்பதி தரிசன டிக்கெட் இதுதான் online.tirupatibalaji.ap.gov.in அதிகாரப்பூர்வ இணையதளம். இதில் … Read more

ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு வீசித் தாக்கியதில் 5 வீரர்கள் வீரமரணம்..!

ஜம்மு – காஷ்மீரின் ரஜௌரியில் பயங்கரவாதிகளுடனான  துப்பாக்கிச்சண்டையில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. கண்டியின் கேசரி பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் ஏற்கனவே 2 வீரர்கள் உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்த மேலும் 3 வீரர்கள் சிகிச்சை பலனின்றி வீரமரணமடைந்தனர். துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து வரும் நிலையில், ரஜெளரியில் பாதுகாப்பு நடவடிக்கையாக மொபைல் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. Source link