'மேரா லடுக்கா'.. பிணக்குவியலுக்கு நடுவே மகனை தேடும் தந்தை..நெஞ்சை உலுக்கும் காட்சி

ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து நாட்டையே உலுக்கி எடுத்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்னிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது. ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே லூப் பாதையில் நின்று கொண்டிருந்த கூட்ஸ் ரயில் மீது ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதி முதல் விபத்துக்குள்ளானது. அதற்கு பின்னர் பெங்களூரு-ஹவுரா ரயில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. நேற்று இரவு முழுக்க நடந்த மீட்பு பணிகள் இன்று … Read more

Odisha Train Accident | விபத்து நடைபெற்ற இடத்தில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

பாலசோர்: ஒடிசாவில் நேற்று முன்தினம் சரக்கு ரயில் மீது மோதியதால் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த ஷாலிமர் – சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். 900-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், விபத்து நடைபெற்ற இடத்தில் சுமார் 1000-க்கும் மேற்பட்டவர்கள் அயராது மறுசீரமைப்பு பணியில் மேற்கொண்டு வருகின்றனர். 7-க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள், 2 விபத்து நிவாரண ரயில்கள், 3 முதல் 4 ரயில்வே … Read more

ஒடிசாவில் மம்தா பானர்ஜி – அஸ்வினி இடையே திடீர் வாக்குவாதம்.. பத்திரிகையாளர்கள் முன்பே சம்பவம்

புவனேஸ்வர்: ஒடிசாவில் நிகழ்ந்த கோரமண்டல் ரயில் விபத்து தொடர்பாக நிருபர்களை சந்தித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி – ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது. விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பாக இருவரும் காரசாரமாக விவாதித்தனர். கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவின் பாலாசோர் அருகே உள்ள பஹனபஜார் பகுதியில் சென்ற போது பயங்கர விபத்தில் சிக்கியது. எதிரே வந்த சர்க்கு ரயிலும், கோரமண்டல் ரயிலும் ஒன்றுக்கொன்று … Read more

Odisha Train Accident | இது அரசியலுக்கான நேரம் அல்ல: ராஜினாமா வலியுறுத்தல் குறித்து அஸ்வினி வைஷ்ணவ்

பாலசோர்: ஒடிசாவில் சரக்கு ரயில் மீது மோதியதால் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த ஷாலிமர் – சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். 800-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், இந்த விபத்திற்கு தார்மீக பொறுப்பேற்றுக் கொண்டு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், கடந்த காலங்களில் இந்தியாவில் ரயில் விபத்து ஏற்பட்ட … Read more

இதுதான் விதியோ..? ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் சென்ற பேருந்து.. வேனில் மோதி நொறுங்கியது

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் பாலசோரில் நேற்று நிகழ்ந்த பயங்கர ரயில் விபத்து இந்தியாவையே உலுக்கி இருக்கிறது. இந்நிலையில், இதில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக கொண்டு சென்ற பேருந்து ஒன்று நடு வழியில் வேனுடன் நேருக்கு நேர் மோதி நொறுங்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விதி வலியது என்று சொல்வதன் பொருள் இதுதானோ எனவும் கேட்க தோன்றுகிறது. கொல்கத்தாவில் இருந்து சென்னை புறப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே … Read more

ஒடிசா ரயில் விபத்து – சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார் பிரதமர் மோடி

பாலசோர்: ஒடிசாவில் ரயில் விபத்து நேரிட்ட பகுதிக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு ஆய்வு மேற்கொண்டார். ஒடிசாவின் பாலசோர் நகருக்கு அருகே உள்ள பஹனஹா பஜார் ரயில் நிலையப் பகுதியில் நேற்று மாலை 7 மணி அளவில் இந்த ரயில் விபத்து நேரிட்டது. முதலில் ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்த நிலையில், அந்த தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த மற்றொரு எக்ஸ்பிரஸ் ரயில் அதன் மீது மோதி பின்னர் அருகில் மற்றொரு … Read more

பார்க்க முடியலையே.. ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள்.. வெளியிட்டது ரயில்வே!

புவனேஸ்வர்: ஒடிசாவில் நேரிட்ட கோர ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களை தென்கிழக்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவின் பாலாசோர் அருகே கோர விபத்தில் சிக்கியது. பஹனபஜார் பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த சரக்கு ரயில் கோரமண்டல் ரயில் மீது பயங்கர வேகத்தில் மோதியது. பின்னர் தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது பெங்களூரில் இருந்து ஹவுரா நோக்கி சென்ற … Read more

பாலசோர் ரயில் விபத்து எப்படி, ஏன் நடந்தது? திடுக்கிடும் காரணம் வெளியானது.

Balasore Train Accident Preliminary Investigation: கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பிரதான வழித்தடத்தை விட்டு ‘லூப் லைனில்’ சென்றது விபத்துக்கான காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

உலக அளவில் கடந்த 2004 ஆம் ஆண்டுக்கு பிறகு அதிக உயிர்களை பலி வாங்கிய மிகவும் மோசமான விபத்து ஒடிசா ரயில் விபத்து..!

உலக அளவில் கடந்த 2004 ஆம் ஆண்டுக்கு பிறகு அதிக உயிர்களை பலி வாங்கிய மிகவும் மோசமான ரயில் விபத்தாக ஒடிசா ரயில் விபத்து கருதப்படுகிறது. கடந்த 2004 ஆம் ஆண்டு நேரிட்ட சுனாமி பேரலையின் காரணமாக இலங்கையில் குயின் ஆப் டிரெயின் ரயில் கவிழ்ந்த கோர விபத்தில் ஆயிரத்து 700 பேர் உயிரிழந்தனர். இதன் பிறகு உலக அளவில் அதிக உயிர்களை பலி வாங்கிய விபத்தாக ஒடிசா ரயில் விபத்து நேரிட்டுள்ளது. இந்த விபத்தில் 261 … Read more

Odisha Train Accident | ரயில் விபத்தை காரணம் காட்டி விமானக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது: அரசு அறிவுரை

புதுடெல்லி: ஒடிசா ரயில் விபத்தை காரணம் காட்டி விமானங்களின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம், விமான நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், “ஒடிசாவில் நிகழ்ந்துள்ள துரதிஷ்டவசமான விபத்தை காரணம் காட்டி புவனேஸ்வர் மற்றும் மாநிலத்தின் பிற விமான நிலையங்களிலிருந்து புறப்படும் விமானங்களின் கட்டணங்கள் உயர்த்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். அப்படி கட்டணங்கள் உயர்த்தப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் … Read more