டெல்லி சம்பவம்: காதல் முறிவால் கொலை; முதற்கட்ட விசாரணையில் இளைஞர் தகவல்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஒருவரை படுகொலை செய்த இளைஞர், தங்களுக்குள் காதல் முறிவு ஏற்பட்டதாலேயே கொலை செய்ததாக தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியீல் கடந்த 28 ஆம் தேதி இரவு பலரது முன்னிலையில் 16 வயது சிறுமி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் ஷாஹில் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையின் தகவல்கள் வெளியாகியுள்ளன. … Read more

RSS லிஸ்டை கையிலெடுத்த சித்தராமையா… யார் அந்த அதிகாரிகள்? களையெடுக்கும் கர்நாடகா!

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி கட்டிலில் அமர்ந்துவிட்டது. ஒருவழியாக உட்கட்சி பூசலுக்கு முற்றுப்புள்ளி வைத்து முதலமைச்சராக சித்தராமையா, துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் பதவியேற்றுக் கொண்டனர். தங்கள் ஆதரவாளர்களுக்கு அமைச்சரவையில் போதிய எண்ணிக்கையில் இடமளித்துள்ளனர். தற்போது 34 அமைச்சர்கள் பதவியேற்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் பொறுப்பேற்றுக் கொண்டனர். துறைகள் ஒதுக்கீடு அதில் முதலமைச்சர் சித்தராமையாவிற்கு நிதி, அமைச்சரவை விவகாரங்கள், நிர்வாக சீர்திருத்தம், உளவுத்துறை, தகவல் தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை துறைகள் ஒதுக்கப்பட்டன. துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு பாசன வசதி, … Read more

சோழர்களின் செங்கோல் வைக்கப்பட்டிருக்கும் இந்திய நாடாளுமன்ற புதிய கட்டடத்தின் சிற்பி பிமல் ஹஸ்முக் படேல்

Parliament New building Architect: இந்திய நாடாளுமன்ற புதிய கட்டடத்தின் சிற்பி யார் தெரியுமா? அவரது அனுபவமும் திறமையும் குடத்தில் இட்ட விளக்கல்ல…

அசோக் கெலாட் – சச்சின் பைலட் இணைந்து ராஜஸ்தான் தேர்தலை எதிர்கொள்வார்கள்: காங்கிரஸ்

புதுடெல்லி: ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலை அசோக் கெலாட்டும் சச்சின் பைலட்டும் இணைந்து எதிர்கொள்வார்கள் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. ராஜஸ்தானில் வசுந்தராராஜே சிந்தியா தலைமையிலான கடந்த ஆட்சியில், அரசுப் பணிகளை வழங்குவதில் ஊழல் நடந்ததாகப் புகார் எழுந்தது. இது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும், ராஜஸ்தான் பப்ளிக் சர்வீஸ் கமிஷனை முழுமையாக கலைத்துவிட்டு மறுசீரமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வருகிறார். அவரது கோரிக்கை ஏற்கப்படாததால், முதலில் ஜெய்ப்பூரில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதையடுத்து, கோரிக்கையை வலியுறுத்தி … Read more

ஏன் அப்படி செய்தார் ஜெய் ஷா… சர்ச்சையான சைகை!

மத்திய உள்துறை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா. ஜெய் ஷா பிசிசிஐ செயலாளராக உள்ளார். நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற 16 வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியை நேரில் கண்டு ரசித்தார் ஜெய் ஷா. அப்போது அவர் செய்த சைகைதான் தற்போது பெரும் பேசு பொருளாகியுள்ளது. 16 வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற வேண்டிய இந்த … Read more

அணையில் விழுந்த செல்போனை எடுக்க 21 லட்சம் நீரை வெளியேற்றிய அதிகாரி: பணம் செலுத்த உத்தரவு

போபால்: கடந்த வாரம் சத்தீஸ்கர் மாநிலத்தின் கான்கெர் மாவட்டத்தில், கொய்லிபெடா வட்டார உணவுப் பொருள் ஆய்வாளர் ராஜேஷ் விஸ்வாஸ், கெர்கட்டா-பரல்கோட் நீர்த்தேக்கத்திற்கு சென்ற போது தனது விலை உயர்ந்த செல்போனை அணையில் 15 அடி ஆழ நீரில் தவறவிட்டுள்ளார். தொடர்ந்து தனது போனை மீட்க அணையில் இருந்து சுமார் 10 அடி ஆழத்திற்கு நீரை அவர் வெளியேற்றி இருந்தார். இந்த செய்தி தேசிய அளவில் கவனம் பெற்றது. அப்போது வெளியேற்றப்பட்ட தண்ணீரால் எந்தப் பயனும் இல்லை என … Read more

திருப்பதி பக்தர்களுக்கு சோதனை… தேவஸ்தான அதிகாரிகள் சொல்வது இதுதான்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருக்கும் நேரம் அதிகரித்திருப்பதற்கான காரணம் வெளியாகியுள்ளது. திருப்பதி வெங்கடேச பெருமாள்ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கலியுக கடவுள் என அழைக்கப்படும் திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்ய, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.​ கோப்பையை தட்டி தூக்கிய சிஎஸ்கே… முதல்வர் ஸ்டாலின் என்ன சொல்லியிருக்கர் பாருங்க!​குவியும் பக்தர்கள்கோடை விடுமுறை … Read more

பிரதமர் மோடியின் 9 ஆண்டு ஆட்சி காலத்தில் முழு வீச்சில் நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்

மும்பை: ‘‘பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் கடந்த 9 ஆண்டுகளில், நாடு முழு வீச்சில் முன்னேற்றம் அடைந்துள்ளது’’ என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதமாக கூறினார். மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு, 9 ஆண்டுகளை நிறைவு செய்து 10-ம் ஆண்டில் காலடி வைத்துள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 9 ஆண்டு காலங்களில் நிகழ்த்திய மாற்றங்களை பொது மக்களிடம் கொண்டு சேர்க்க … Read more

ராஜஸ்தான் அரசியலில் என்ன நடக்கிறது? 4 மணி நேர டெல்லி டீலிங்… முடிவுக்கு வருமா கெலாட் vs பைலட் சண்டை!

ராஜஸ்தான் அரசியலை பொறுத்தவரை தேசிய கட்சிகளின் ஆதிக்கம் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக 1993க்கு பின்னர் காங்கிரஸ், பாஜக என இரண்டு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளன. கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக (163 இடங்கள்) வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. அப்போது காங்கிரஸ் பெற்றிருந்த இடங்களின் எண்ணிக்கை 21 மட்டுமே (மொத்த இடங்கள் 200). ராஜஸ்தான் அரசியல் இந்த சூழலில் … Read more

ஜம்முவில் பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து: 8 பேர் பலி; காயம் 20

ஸ்ரீநகர்: ஜம்முவில் பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியாகினர். 20 பேர் காயமடைந்தனர். விபத்துக்குள்ளான பேருந்து கட்ரா நோக்கி சென்று கொண்டிருந்தது. ஜஜ்ஜார் கோட்லி பகுதியில் விபத்து நடந்துள்ளது. இந்த விபத்து குறித்து அதிகாரிகள் தரப்பில், “மாதா வைஷ்ணோதேவி கோயிலுக்கு புனித யாத்திரை மேற்கொண்டவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஜஜ்ஜார் கோட்லி அருகே விபத்துக்குள்ளானது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். மீட்புப் பணிகள் நடைபெற்றுவருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளை … Read more