உக்ரைன், சீனாவில் இருந்து கரோனாவால் திரும்பிய இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனுத்தாக்கல்

புதுடெல்லி: கரோனா பரவல் காலத்திலும், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த போதும், சீனா, உக்ரைன், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் மருத்துவம் பயின்ற இந்திய மாணவர்கள் ஏராளமானோர் நாடு திரும்பினர். அவர்கள் மருத்துவ படிப்புகளை தொடர முடியாத சூழல் ஏற்பட்டதால், இங்குள்ள மருத்துவ கல்லூரிகளில் அவர்கள் சேர்ந்து தங்கள் பட்டப் படிப்பை முடிக்க வழி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களின் மருத்துவப் படிப்பும், வாழ்க்கையும் வீணாக … Read more

கொரோனாவுக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு உண்டா என ஐசிஎம்ஆர் ஆய்வு

கோவிட் பாதிப்புகளைத் தொடர்ந்து மாரடைப்பு மரணங்கள் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கான காரணம் குறித்து இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் தனி ஆய்வு நடத்திவருவதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மாரடைப்பு காரணமாக ஏற்படும் மரணங்கள் எண்ணிக்கை அதிகரித்ததற்கும் கொரோனாவுக்கும் தொடர்பு இருக்குமா என்று ஆராயப்படுகிறது. அடுத்த இரண்டு மாதங்களில் ஆய்வறிக்கை வெளியாகும் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று 2ஆயிரத்து 151 பேருக்கு புதிதாக … Read more

போபால்-டெல்லி இடையே புதிய வந்தே பாரத் ரயிலை ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

போபால்-டெல்லி இடையே புதிய வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி ஏப்ரல் ஒன்றாம் தேதி கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். மத்தியப் பிரதேசத்துக்கு வருகை தரும் மோடி இங்குள்ள ராணிகமலாப்பட்டி ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலைத் தொடங்கி வைக்கிறார். சுமார் 708 கிலோமீட்டர் தூரத்தை இந்த ரயில் 8 மணிநேரத்திற்குள் சென்றடையும். கமாண்டர்கள் மாநாட்டிலும் பங்கேற்க உள்ள பிரதமர், முப்படைத் தளபதிகளுடன் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார். Source link

224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடக்கிறது கர்நாடக சட்டசபைக்கு மே 10ல் தேர்தல்: மே 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைக்கு மே மாதம் 10ம் தேதி ஒரே கட்டமாக  தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மே 13ம் தேதி வாக்குகள் எண்ணப்படும். இந்த அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. கர்நாடகாவில் தற்போது முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜ அரசு பதவியில் உள்ளது. அம்மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே 24ம் தேதியுடன் முடிகிறது. இதனால், ஆளும் பாஜ மட்டுமில்லாமல், காங்கிரஸ் மற்றும் மஜத உள்ளிட்ட … Read more

வயநாடில் இடைத்தேர்தல் நடத்தப்படுமா? – தலைமை தேர்தல் ஆணையர் சொல்வதென்ன ?

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் நரேந்திரமோடி, நீரவ் மோடி, லலித் மோடியை குறிப்பிட்டு ‘அனைத்து திருடர்களின் பெயரும் மோடி என்று முடிகிறது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். மோடி சமூகம் குறித்து அவதூறு ஏற்படுத்தும் என்ற வகையில் பேசியதாக கூறி ராகுல்காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என்று கோர்ட்டு தீர்ப்பளித்து 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. அதேவேளை, … Read more

ஜனநாயகத்தின் தாயாக இருக்கிறது இந்தியா: ஜனநாயக உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: ஜனநாயகத்தின் இரண்டாவது உச்சி மாநாட்டை தென் கொரியா நடத்தியது. இதில் தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கோஸ்டா ரிகா அதிபர் ரோட்ரிகோ சாவ்ஸ் ரோப்லஸ், ஜாம்பியா அதிபர் ஹகைன்டி, நெதர்லாந்து பிரதமர் மார் ரூட் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். இதில் ‘ஜனநாயகம் வழங்கும் பொருளாதார வளர்ச்சி மற்றும் பகிரப்பட்ட வளம்’ என்ற தலைப்பில் நடந்த கூட்டத்தில் பிரதமர் … Read more

பாஜ ஆட்சி முடிவுற்றால் தான் ஊழல் முடிவுக்கு வரும்: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆவேசம்

புதுடெல்லி: மத்திய புலனாய்வு அமைப்பும், அமலாக்கத்துறையும் ஊழல்வாதிகளை ஒரே கட்சிக்குள் கொண்டு வந்துள்ளது என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.  கெஜ்ரிவால் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர பாஜ முயற்சி செய்தது. ஆனால், அதற்கு போதிய ஆதரவு இல்லாததால் அந்த முடிவை பாஜ கைவிட்டது. இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் கெஜ்ரிவால், “ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முடியாததால், என் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாஜ வாபஸ் பெற்றுள்ளது. எந்த … Read more

இனி ரூ. 2 ஆயிரத்திற்கும் அதிகமான வணிக பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்..!!

இந்தியாவில் பெரும்பாலான பெருநகரங்களில், யுபிஐ மூலம் கூகுள் பே உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. கிராமங்களில் கூட தற்போது பண பரிவர்த்தனை சுலபமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. சில்லறை வணிக கடைகள் உட்பட பல இடங்களில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளுவதற்கு ஆன்லைன் செயலிகள் பயன்படுகின்றன. இதனால் ரூபாய் நோட்டுகள் பயன்பாடு குறைந்து வருகிறது. ஏடிஎம் வாசலில் கூட மக்கள் நிற்பது, முன்பை விட குறைந்து விட்டது. தற்போதெல்லாம் பேடிஎம், கூகுள் பே, ஜி பே, போன் பே … Read more

224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு: மே 10-ம் தேதி கர்நாடகா தேர்தல்

புதுடெல்லி: கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் மே 10-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் நேற்று அறிவித்தார். கர்நாடக சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் மே 24-ம் தேதி நிறைவடைகிறது. இந்நிலையில், டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளுக்கும் மே 10-ம் தேதி … Read more

அரசியல்வாதிகள் மதத்தைப் பயன்படுத்துவதை நிறுத்தினால் வெறுப்புணர்வு பேச்சுக்கள் முடிவுக்கு வரும் – உச்ச நீதிமன்றம்!

அரசியல்வாதிகள் மதத்தைப் பயன்படுத்துவதை நிறுத்தினால் வெறுப்புணர்வு பேச்சுக்கள் முடிவுக்கு வரும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வெறுப்பைத் தூண்டும் பேச்சு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், வெறுப்புணர்வு பேச்சுக்கள் ஒரு தீயவட்டம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இத்தகைய பேச்சுக்கள் விளிம்பு நிலையில் இருந்து வருவதாகவும், மக்கள்தான் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். அரசியலை மதத்துடன் கலக்கும் போது பெரிய பிரச்சனை எழுகிறது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், … Read more