திருப்பதியில் தீவிரவாதிகள் ஊடுருவல்? பகீர் இமெயில்.. முழு மலையையும் சுற்றி வளைத்த போலீஸார்.. என்னாச்சு?

திருப்பதி: திருமலை திருப்பதியில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மர்ம இமெயில் ஒன்று வந்த நிலையில், திருப்பதி கோயில் மற்றும் மலைப்பகுதி முழுவதையும் ஆந்திரா போலீஸார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்புதான், திருப்பதி கோயிலுக்கு மேலே ஆளில்லா விமானம் பறந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற, பிரசித்தி பெற்ற கோயில்களிலேயே திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு என்று தனி இடம் உண்டு. இந்தக் … Read more

CBSE Result 2023: சிபிஎஸ்இ 10, 12-ஆம் தேர்வு முடிவுகள், எப்படி சரிபார்ப்பது?

CBSE 10th Exam Result 2023: கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் வரை நடைபெற்ற 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் கோடைகாலத்தில் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் வகையில் செயல் திட்டம்

டெல்லியில், கோடைக் காலத்தில் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் வகையில் செயல் திட்டம் வகுத்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அதன்படி, கட்டுமானத்திலிருந்து வெளிவரும் தூசியினால் ஏற்படும் மாசுவைக் கட்டுப்படுத்த, 500 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான கட்டுமானங்கள் கண்காணிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தூசி மாசுபாடு, குப்பைகளை திறந்த வெளியில் எரித்தல், தொழிற்சாலை பகுதிகளில் கழிவுகளை கொட்டுதல் ஆகியவற்றை சரிபார்க்க ரோந்து குழுக்கள் அமைக்கப் படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தூசி மாசுவை சமாளிக்க சாலை துப்புரவு இயந்திரங்கள், தண்ணீர் … Read more

கர்நாடக தேர்தல் | மகளிர்க்கு மாதம் ரூ.2000 முதல் பஜ்ரங் தல், பாப்புலர் ஃப்ரன்ட்டுக்கு தடை வரை.. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்

பெங்களூரு: கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பெங்களூருவில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார், மூத்த தலைவர் சித்தராமையா உள்ளிட்டோர் இணைந்து தேர்தல் அறிக்கையை இன்று (மே 2) வெளியிட்டனர். இதில் மகளிர்க்கு மாதம் ரூ.2000, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000 ஊக்கத் தொகை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் முக்கிய அறிவிப்புகள்: 1. க்ருஹ லக்‌ஷ்மி திட்டத்தின் … Read more

பெண்களுக்கு மாதம் ரூ.2,000… இலவச பேருந்து வசதி… 200 யூனிட் இலவச மின்சாரம்… காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு!

கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, அரசியல் கட்சிகள் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. அந்த வகையில் பாஜக நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இந்நிலையில் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இதுதொடர்பாக பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநிலத் தலைவர் டிகே சிவக்குமார், முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா உள்ளிட்டோர் கலந்து … Read more

Congress Election Manifesto: “நாங்களும் சளச்சவங்க இல்ல” அசத்தல் வாக்குறுதிகளை அள்ளிவிசிய காங்கிரஸ்

Congress Election Manifesto: இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் முதல்வர் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோர் கர்நாடக தேர்தளுக்கான தேர்தல் வாக்குறுதி அறிக்கையை வெளியிட்டனர். அதன் முழு விவரத்தை அறிந்துக்கொள்ளுங்கள்.

விதிகளை மீறிய காரணத்திற்காக 3,500-க்கும் மேற்பட்ட கடன் செயலிகளை பிளே ஸ்டோரிலிருந்து நீக்கியது கூகுள்..!

இந்தியாவில் விதிகளை மீறிய காரணத்திற்காக 3,500-க்கும் மேற்பட்ட தனிநபர் கடன் செயலிகளை பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது. அண்மையில், கூகுள் பிளே ஸ்டோரின் தனியுரிமை கொள்கைகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அதன்படி, கடன் வழங்கும் செயலிகளுக்கு வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பெறுத ல், அவற்றை பயன்படுத்துதல், தொடர்பு கொள்ளுதல் உள்ளிட்டவற்றில் கூகுள் விதிகளை கடுமையாக்கியது. சமீபத்தில், நாடு முழுதும் ஆன்லைன் லோன் ஆப் மோசடியில் ஈடுபட்ட 14 பேரை மும்பை சைபர் கிரைம் போலீசார் … Read more

14 மெசெஞ்சர் செயலிகள் முடக்கம்: மத்திய அரசு நடவடிக்கை..!!

ஜம்மு காஷ்மீரில் இருந்து செயல்படும் தீவிரவாத குழுக்கள் தங்களுக்குள் தகவல்கள் பரிமாறிக்கொள்ளவும், பாகிஸ்தானில் இருந்து உத்தரவு பெறவும் பயன்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ள 14 மொபைல் மெசேஞ்சர் செயலிகளை மத்திய அரசு முடக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பல்வேறு தீவிரவாத குழுக்களைச் சேர்ந்தவர்கள் இந்தியாவிற்கு எதிரான தகவல்களைப் பரப்ப இந்த செயலிகளை பயன்படுத்துவதாக உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் மற்றும் தொடர்புடைய பிற அமைப்புகளுடன் இணைந்து உள்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த … Read more

ஜம்மு-காஷ்மீர் | பூஞ்ச் உள்பட பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பூஞ்ச் மாவட்டம் உள்பட பல்வேறு இடங்களிலும் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தெற்கு மற்றும் மத்திய காஷ்மீரில் உள்ள பல்வேறு பகுதிகளில் குறிப்பாக ரஜோரி, பூஞ்ச் மாவட்டங்களில் அதிக இடங்களில் என்ஐஏ சோதனை நடைபெறுவதாகத் தெரிகிறது. கடந்த மாதம் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐந்து வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. பூஞ்ச் தாக்குதல்: ஜம்மு-காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டுக் … Read more

கிருஷ்ண ஜென்மபூமி சர்ச்சை வழக்கு: விசாரணைக்கான தடை நீக்கம் – மீண்டும் விசாரிக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி வழக்கில் மீண்டும் புதிதாக வாதங்களை எடுத்து வைக்க ஏதுவாக விசாரணைக்கான தடையை அலகாபாத் உயர் நீதிமன்றம் நேற்று நீக்கி உத்தரவிட்டது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி பாபர் மசூதி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு அங்கு ராமர் கோயில் கட்டப்படுகிறது. அதேபோல் மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி 13.37 ஏக்கர் நிலத்தின் உரிமை தொடர்பான சர்ச்சை, கோயில் தேவஸ்தானத்துக்கும், அங்குள்ள மசூதி அறக்கட்டளைக்கும் இடையே நீண்ட காலமாக இருந்து … Read more