அதிகம் கடன் வாங்கும் மாநிலங்களில் தமிழகம் 3-வது ஆண்டாக முதலிடம்

புதுடெல்லி: ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா தகவல்படி, அதிகம் கடன் வாங்கும் மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது ஆண்டாக முதலிடம் வகிக்கிறது. கடந்த 2022-23 நிதி ஆண்டில், முதல் 11 மாதங்களில் தமிழகம் ரூ.68 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளது. தமிழகத்துக்கு அடுத்ததாக ஆந்திரப் பிரதேசம் ரூ.51,860 கோடியும், மகாராஷ்டிரா ரூ.50 ஆயிரம் கோடியும் கடன் வாங்கி உள்ளன. இதற்கு முந்தைய 2 நிதி ஆண்டுகளிலும் அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம்தான் இருந்தது. 2020-21 நிதி … Read more

தெருவில் இறங்கி… பி.டி.உஷா இப்படி பேசுவாங்கனு எதிர்பார்க்கல… செம டென்ஷனில் மல்யுத்த வீரர்கள்!

டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மற்றும் சில பயிற்சியாளர்கள் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தர்ணா போராட்டம், பேச்சுவார்த்தை, மல்யுத்த வீரர்கள் போராட்டம் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் … Read more

உள்நாட்டுப் போர் நடைபெறும் சூடானில் இருந்து இதுவரை 2,000 இந்தியர்கள் மீட்பு

ஆபரேசன் காவேரி திட்டத்தில் சூடானில் இருந்து மேலும் 135 இந்தியர்கள் விமானம் மூலம் ஜெட்டா வழியாக இந்தியா புறப்பட்டதாக வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ச்சி தெரிவித்துள்ளார். சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் மீட்பு நடவடிக்கைகளை நேரடியாக கண்காணித்து வருகிறார். 9 வது தவணையாக, பயணிகள் கப்பல் மூலமாக சூடானில் இருந்து ஜெட்டா அழைத்து வரப்பட்ட 326 பேர் விமானம் மூலமாக டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். 3,500 இந்தியர்கள் சூடானில் இருப்பதாக கூறப்படும் நிலையில் இதுவரை 2 ஆயிரம் … Read more

இந்தியாவில் புதிதாக 7,533 பேருக்கு கோவிட் – ஒரே நாளில் 44 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,533 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதன்படி தற்பேது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 53,852 ஆக குறைந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியாவில் புதிதாக 7,533 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாடு முழுவதும் சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 53,852 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் 44 பேர் உயிரிழந்தனர். இதுவரை தொற்றால் … Read more

இந்தியாவில் யானைகளின் வாழிடம் 86 விழுக்காடு அழிக்கப்பட்டதாக ஆய்வில் தகவல்

ஆசியா முழுவதும் யானைகளின் வாழ்விடங்களில் 3ல் 2 பங்கு அழிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. சான்டியாகோவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், காடழிப்பு, விவசாயம், மரம் வெட்டுதல், சாலைகள் அமைத்தல் போன்ற காரணங்களால் யானைகள் தங்கள் வாழிடங்களை இழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. தற்போது 13 நாடுகளில் வசித்து வரும் ஆசிய யானைகளின் காடுகள் மற்றும் புல்வெளிப் பகுதிகளில் 64 விழுக்காடு அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக யானை, மனித மோதல்கள் அதிகரித்துள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. சீனாவில் 94 விழுக்காடு நிலத்தையும், … Read more

கர்நாடகாவில் ஓபிஎஸ் வேட்பாளர் குமார் மீது மோசடி வழக்குப் பதிவு

பெங்களூரு: க‌ர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து மோசடி செய்ததாக, ஓ.பன்னீர்செல்வம் வேட்பாளர் குமார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் காந்தி நகர் தொகுதியில் ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த குமார் (52) வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் கடந்த 20ம் தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் ஒன்றை … Read more

கர்நாடகாவில் யாருக்கு வெற்றி? குஷியில் JDS… சிக்கலில் பாஜக, காங்கிரஸ்… லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பு முடிவுகள்!

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் 2023… நாடெங்கும் இதே பேச்சாக தான் இருக்கிறது. ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என்று காங்கிரஸ் தீயாய் வேலை செய்து வருகிறது. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று பாஜக வியூகம் வகுத்துள்ளது. எப்படியாவது கிங் மேக்கராகி மீண்டும் ஒருமுறை முதல்வர் நாற்காலியில் அமர்ந்து பார்த்துவிட மதச்சார்பற்ற ஜனதா தளம் தீவிரம் காட்டி கொண்டிருக்கிறது. இவ்வாறு களம் மும்முனை போட்டியாக இருந்தாலும் சாதக, பாதகங்கள் இருப்பதை தவிர்க்க முடியவில்லை. சமீபத்தில் வெளியான தேர்தலுக்கு … Read more

தேசிய மருத்துவ உபகரணங்கள் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: முக்கியமான முடிவு என பிரதமர் பதிவு

புதுடெல்லி: தேசிய மருத்துவ உபகரணங்கள் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனால் சுகாதார துறை ஊக்கம் பெறும் என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், கடந்த 2014 முதல் நாடு முழுவதும் புதிதாக தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கு அருகில் ரூ.1,570 கோடி செலவில் 157 செவிலியர் கல்லூரிகளை நிறுவ ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் தேசிய மருத்துவ உபகரணங்கள் கொள்கைக்கும் … Read more

நாடு முழுவதும் 84 மாவட்டங்களில் 91 எஃப்.எம். டிரான்ஸ்மிட்டர்களை இன்று தொடங்குகிறார் பிரதமர்

புதுடெல்லி: நாடு முழுவதும் பண்பலை வானொலி (எஃப்.எம். ரேடியோ) இணைப்பை மேம்படுத்தும் வகையில், 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 91 எஃப்.எம். டிரான்ஸ்மிட்டர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைக்கிறார். இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வளரும் மாவட்டங்கள் மற்றும் எல்லைப்புற பகுதிகளில் ரேடியோ ஒலிபரப்பை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதையொட்டி, பிஹார், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, ஹரியானா, ராஜஸ்தான், உத்தர … Read more

திமுகவுக்கு எதிராக வியூகம் அமைக்க பாஜகவிடம் இணக்கம் காட்டிய அதிமுக?

புதுடெல்லி: திமுகவுக்கு எதிராக வியூகம் அமைக்க பாஜகவிடம் அதிமுக இணக்கம் காட்டியதாகத் தெரிகிறது. மத்திய உள்துறை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான அமித் ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் சந்தித்து பேசியுள்ளார்.இந்த சந்திப்பில் எதிர்பாராதவிதமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் உடன் இருந்தார். அமித் ஷாவின் அழைப்பின்பேரில் அவர் பங்கேற்றிருக்கிறார். சுமார் 50 நிமிடங்கள் நீடித்த சந்திப்பில் பல முக்கிய விவகாரங்கள் பேசப்பட்டதாகத் தெரிகிறது. சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தை போன்று இந்த சந்திப்பு … Read more