ககன்யான் திட்டம்.. இஸ்ரோவுடன் இணைந்து செயலாற்றும் இந்திய கடற்படை..!

ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளி வீரர்களுக்கான மீட்பு காப்சூலை, மீட்பு குழுக்களின் பயிற்சிக்காக இந்திய கடற்படையிடம், இஸ்ரோ ஒப்படைத்தது. ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ பணியாற்றி வருகிறது. கொச்சியில் உள்ள கடற்படை பயிற்சி மையத்தில் கடந்த பிப்ரவரி முதல் வீரர்கள் பயணிக்கும் காப்சூலை மீட்பது குறித்த பயிற்சியை இஸ்ரோ தொடங்கியது. இந்நிலையில், மீட்பு பயிற்சியில் இஸ்ரோவுடன் இணைந்து இந்திய கடற்படையும் செயலாற்றவுள்ளது. இதுகுறித்த பயிற்சி திட்ட ஆவணத்தை கடந்த 24-ம் தேதி, … Read more

நாடாளுமன்ற திறப்பு விழா புறக்கணிப்பு | அரசியல் செய்வதற்கும் ஓர் எல்லை உண்டு: ஜெய்சங்கர் காட்டம்

ராஜ்பிப்லா(குஜராத்): புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பது என்ற எதிர்க்கட்சிகளின் முடிவு துரதிருஷ்டவசமானது என்று தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், “அரசியல் செய்வதற்கும் ஓர் எல்லை உள்ளது” என்று காட்டமாக கூறியுள்ளார். குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.ஜெய்சங்கர், இரண்டு நாள் பயணமாக அம்மாநிலத்திற்குச் சென்றுள்ளார். நர்மதா மாவட்டத்தில் உள்ள ராஜ்பிப்லா நகரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழா, ஜனநாயகத் திருவிழாவாகக் கொண்டாடப்பட வேண்டும். இதில் சர்ச்சையை … Read more

காங்கிரஸ் கூட்டணியில் அரவிந்த் கெஜ்ரிவால்: பாதை அமைத்து தரும் பாஜக

அவசர சட்டத்தின் மூலம் காங்கிரஸ் உடன் அரவிந்த் கெஜ்ரொவாலின் ஆம் ஆத்மி கட்சி இணைந்து செயல்பட ஒன்றிய பாஜக அரசு பிள்ளையார் சுழி போட்டுள்ளது. டெல்லி மாநில அரசின் நிர்வாக அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இந்த அவசர சட்டத்திற்கு நாடாளுமன்றதில் எதிர்ப்பு தெரிவிக்க காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெற அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவையும், ராகுல் காந்தியையும் சந்திக்க நேரம் கேட்கப்பட்டிருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் … Read more

1 லட்ச ரூபாய்க்கு போனுக்கு… 21 லட்சம் லிட்டர் நீரை வீணாக்கிய அதிகாரி – எப்படி தெரியுமா?

மொபைல் போனுக்கு மதிப்பு அதிகமா, தண்ணீருக்கு மதிப்பு அதிகமா என்று கேட்டால், நீரின் விலை மதிப்பற்றது என்பதுதான் பதிலாக இருக்கும். அந்த வகையில், 21 லட்சம் லிட்டர் நீரை வீணாக்கிய அரசு அதிகாரி குறித்து இதில் காணலாம்.

நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கும் முடிவை எதிர்க்கட்சிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – அமைச்சர் ராஜ்நாத்சிங்!

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கும் முடிவை எதிர்க்கட்சிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். 970 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அக்கட்டிடத்தை வருகிற 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். ஆனால் அக்கட்டிடத்தை குடியரசுத் தலைவர்தான் திறக்க வேண்டுமென வலியுறுத்தி வரும் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட சுமார் 20 எதிர்க்கட்சிகள், விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. தெலுங்குதேசம் உள்ளிட்ட 25 … Read more

சாதாரண பாஸ்போர்ட் கோரிய வழக்கு: ராகுல் காந்திக்கு 3 ஆண்டுகளுக்கு என்ஓசி வழங்க டெல்லி நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி சாதாரண பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்றிதழ் (என்ஓசி) வழங்க டெல்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யான ராகுல் காந்தி கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது ‘மோடி’ பெயர் குறித்து தெரிவித்த கருத்துகள் தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதித்தது. இதனைத் … Read more

தலைமை ஆசிரியையை செருப்பால் அடித்த சக ஆசிரியர்கள்… ஷாக்கிங் வீடியோ!

பீகார் மாநிலம் பாட்னாவில் செயல்பட்டு வரும் பள்ளி கொரியா பஞ்சாயத்து வித்யாலயா. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் அந்தப் பள்ளியில் ஆசிரியைகளுக்குள் நடந்த அடிதடி வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த கொரியா வித்யாலயா பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருப்பவர் காந்தி குமாரி. இதே பள்ளியில் ஆசிரியையாக இருப்பவர் அனிதா குமாரி. இந்நிலையில் தலைமை ஆசிரியை காந்திகுமாரி வகுப்பறையின் ஜன்னலை மூடுமாறு கூறியிருக்கிறார். ஆனால் ஜன்னலை மூட … Read more

புதிய நாடாளுமன்ற திறப்பு விழா…. பொது நலன் மனு விசாரணைக்கு தகுதியற்றது: உச்சநீதிமன்றம்

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வருகிற 28ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைப்பார் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.  புதிய நாடாளுமன்ற கட்டிடம் குடியரசு தலைவரால் திறந்து வைக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்திய எல்லையையொட்டி கிராமங்களை அமைக்கும் சீனா..!

உத்தரகாண்ட் மாநிலத்தையொட்டிய சர்வதேச எல்லையில் கிராமங்களை உருவாக்கி தனது குடிமக்களை சீனா குடியேற்றி வருவதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் சீனாவுடன் சுமார் 350 கிலோமீட்டர் தொலைவிற்கு எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. அந்த எல்லையில் இருந்து சுமார் 11 கிலோ மீட்டர் தூரத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய 250 குடியிருப்புகளை கொண்ட கிராமம் ஒன்றை சீனா உருவாக்கி வருவதாகவும், எல்லையை ஒட்டி இதே போன்ற மேலும் 400 கிராமங்களை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளதாகவும் இந்திய … Read more

செங்கோல் மூலம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததற்கு ஆதாரம் இல்லை: காங்கிரஸ்

புதுடெல்லி: நாடு சுதந்திரம் அடைந்தபோது செங்கோல் மூலம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததாகக் கூறப்படுவதற்கு ஆதாரம் ஏதும் இல்லை என்றும், அவ்வாறு கூறுவது உண்மைக்குப் புறம்பானது என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு: “அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் ஒரு மத அமைப்பால் உருவாக்கப்பட்ட, சென்னையில் வடிவமைக்கப்பட்ட ஒரு கம்பீரமான செங்கோல் ஆகஸ்ட் 1947-இல் ஜவஹர்லால் நேருவிடம் வழங்கப்பட்டது என்பது உண்மை. ஆனால், … Read more