கர்நாடகாவில் யாருக்கு வெற்றி? குஷியில் JDS… சிக்கலில் பாஜக, காங்கிரஸ்… லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பு முடிவுகள்!

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் 2023… நாடெங்கும் இதே பேச்சாக தான் இருக்கிறது. ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என்று காங்கிரஸ் தீயாய் வேலை செய்து வருகிறது. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று பாஜக வியூகம் வகுத்துள்ளது. எப்படியாவது கிங் மேக்கராகி மீண்டும் ஒருமுறை முதல்வர் நாற்காலியில் அமர்ந்து பார்த்துவிட மதச்சார்பற்ற ஜனதா தளம் தீவிரம் காட்டி கொண்டிருக்கிறது. இவ்வாறு களம் மும்முனை போட்டியாக இருந்தாலும் சாதக, பாதகங்கள் இருப்பதை தவிர்க்க முடியவில்லை. சமீபத்தில் வெளியான தேர்தலுக்கு … Read more

தேசிய மருத்துவ உபகரணங்கள் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: முக்கியமான முடிவு என பிரதமர் பதிவு

புதுடெல்லி: தேசிய மருத்துவ உபகரணங்கள் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனால் சுகாதார துறை ஊக்கம் பெறும் என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், கடந்த 2014 முதல் நாடு முழுவதும் புதிதாக தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கு அருகில் ரூ.1,570 கோடி செலவில் 157 செவிலியர் கல்லூரிகளை நிறுவ ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் தேசிய மருத்துவ உபகரணங்கள் கொள்கைக்கும் … Read more

நாடு முழுவதும் 84 மாவட்டங்களில் 91 எஃப்.எம். டிரான்ஸ்மிட்டர்களை இன்று தொடங்குகிறார் பிரதமர்

புதுடெல்லி: நாடு முழுவதும் பண்பலை வானொலி (எஃப்.எம். ரேடியோ) இணைப்பை மேம்படுத்தும் வகையில், 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 91 எஃப்.எம். டிரான்ஸ்மிட்டர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைக்கிறார். இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வளரும் மாவட்டங்கள் மற்றும் எல்லைப்புற பகுதிகளில் ரேடியோ ஒலிபரப்பை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதையொட்டி, பிஹார், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, ஹரியானா, ராஜஸ்தான், உத்தர … Read more

திமுகவுக்கு எதிராக வியூகம் அமைக்க பாஜகவிடம் இணக்கம் காட்டிய அதிமுக?

புதுடெல்லி: திமுகவுக்கு எதிராக வியூகம் அமைக்க பாஜகவிடம் அதிமுக இணக்கம் காட்டியதாகத் தெரிகிறது. மத்திய உள்துறை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான அமித் ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் சந்தித்து பேசியுள்ளார்.இந்த சந்திப்பில் எதிர்பாராதவிதமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் உடன் இருந்தார். அமித் ஷாவின் அழைப்பின்பேரில் அவர் பங்கேற்றிருக்கிறார். சுமார் 50 நிமிடங்கள் நீடித்த சந்திப்பில் பல முக்கிய விவகாரங்கள் பேசப்பட்டதாகத் தெரிகிறது. சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தை போன்று இந்த சந்திப்பு … Read more

ஆந்திர மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் முதலமைச்சர் வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்றதால் பரபரப்பு..!

ஆந்திர மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அனந்த்பூர் மாவட்டத்தில் தும்பர்தி, மொதுமாரு ஆகிய பகுதிகளில் வீடுகள் கட்டிதர விவசாயிகளிடம் இருந்து 210 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. இதற்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை என கூறி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சிங்கனமாலா தொகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, புட்டப்பர்த்தி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென … Read more

தன்பாலின திருமண விவகாரத்தை நாடாளுமன்ற முடிவுக்கு விடுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் – மத்திய அரசு வலியுறுத்தல்

புதுடெல்லி: தன்பாலினத்தவர்களின் திருமணத் துக்கு சட்ட ரீதியாக அங்கீகரிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எஸ்.கே.பட், ஹிமா கோலி மற்றும் பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடும்போது, “சமுதாயத்தில் மிக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, மிகவும் சிக்கலான … Read more

சிம்லாவில் உள்ள அரசு மருத்துவமனையில் தீ விபத்து… புறநோயாளிகள் பிரிவு முற்றிலும் சேதம்

ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் உள்ள அரசு மருத்துவமனையில் இன்று காலை நேரிட்ட தீ விபத்தில் புறநோயாளிகள் பிரிவு முற்றிலும் சேதமடைந்தது. இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகளுக்காக புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு மேல்தளத்தில் திடீரென பற்றிய தீ, மளமளவென வேகமாக பிற பகுதிகளுக்கும் பரவியது. உடனடியாக அருகருகே வார்டுகளில் இருந்த நோயாளிகள் அனைவரும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீ விபத்தில் உயிரிழப்போ, … Read more

கர்நாடகாவில் ரூ.1.5 லட்சம் கோடி ஊழல் செய்த பாஜக அரசு – காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

பெங்களூரு: கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு அனைத்து துறைகளிலும் 40 சதவீத கமிஷன் வாங்கி ரூ.1.5 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வருகிற மே 10-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி 2 நாள் பயணமாக நேற்று கர்நாடகா வந்தார். நண்பகல் 12 மணிக்கு … Read more

ராமநவமி ஊர்வலத்தில் வன்முறை தொடர்பான வழக்குகளை தேசிய புலானய்வு அமைப்பு விசாரிக்க உத்தரவு!

மேற்குவங்க மாநிலத்தில் ராமநவமியன்று நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பான வழக்குகளை தேசிய புலானய்வு அமைப்பு விசாரிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹவுரா மாவட்டத்தின் கஸிபாரா பகுதியில் ராமநவமி ஊர்வலத்தின் போது வன்முறை வெடித்தது. இருதரப்பினரிடையே நடைபெற்ற மோதலின் போது கடைகள், கார்கள் மற்றும் காவல்துறை வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது. இதேபோல், தல்கோலா மாவட்டத்திலும் மோதல் சம்பவங்கள்  நடைபெற்றன. Source link

திருமலை திருப்பதியில் மாற்றுத் திறனாளி பக்தர்கள் 1008 பேர் இலவச தரிசனம்

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழக கோயில்களின் தலைவர் சேகர்ரெட்டி தலைமையில், ராஜஸ்தான் இளைஞர் சங்கம் மற்றும் சென்னை ஃபுட் பேங்க் ஆகியோரின் ஒத்துழைப்பில் நேற்றுமுன்தினம் சென்னையிலிருந்து 5 வயது முதல் 70 வயது வரை உள்ள மாற்று திறனாளிகள் ரயில் மூலம் இலவசமாக திருப்பதிக்கு அழைத்து வந்து, அங்கிருந்து திருமலைக்கு அழைத்து சென்று, ஏழுமலையானை தேவஸ்தானம் சார்பில் இலவச தரிசன பாக்கியத்தை வழங்கினர். இதில் 160 பேர்கண் பார்வையற்றவர்கள், 100 பேர் மற்ற உடல் பாகங்களில் … Read more