மணிப்பூரில் மீண்டும் வன்முறை | ஒருவர் பலி, இருவர் படுகாயம் – ஊரடங்கு ரத்து

இம்பால்: மணிப்பூரில் புதிதாக ஏற்பட்ட வன்முறையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இருவர் காயமடைந்துள்ளனர். மணிப்பூரில் இம்மாத தொடக்கத்தில் இருவேறு சமூகத்தவர் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நிலைமை கண்காணிக்கப்பட்டு வந்தது. மேலும், பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்ட இடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிலைமை மேம்பட்டு வந்ததை அடுத்து, மணிப்பூரின் பல பகுதிகளில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டது. குறிப்பாக பிஷ்னுபூர், இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு மாவட்டங்களில் காலை … Read more

சீனாவை சமாளிக்க.. உலகிலேயே மிகக் கொடிய தற்காப்புக் கலையை கற்கும் இந்திய ராணுவ வீரர்கள்.. என்ன அது?

புதுடெல்லி: சீன ராணுவத்தினரின் அத்துமீறலையும், அவர்களின் ஆக்ரோஷமான தாக்குதல்களையும் சமாளிப்பதற்காக உலகிலேயே மிகக் கொடிய தற்காப்புக் கலையாக கருதப்படும் க்ராவ் மகா (Krav Maga) என்ற கலையை இந்திய ராணுவத்தினர் கற்று வருகின்றனர். பாகிஸ்தானை போலவே இந்தியாவுக்கு எப்போதும் அச்சுறுத்தலாக இருந்து வரும் நாடு சீனா. பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்தியாவுக்கு அனுப்பி பிரச்சினை செய்கிறது என்றால், சீனாவோ தனது நாட்டு ராணுவ வீரர்களை அவ்வப்போது அனுப்பி நமது எல்லைகளை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய மாநிலங்களான … Read more

ரூ.1.50 கோடியில் ராதா-கிருஷ்ணர் கோயில்… வாழ்நாள் சேமிப்பை செலவழித்து மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய கணவர்…

மத்தியப்பிரதேசத்தில் ஆசிரியர் ஒருவர் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் செலவழித்து மனைவியின் கடைசி ஆசையான ராதா-கிருஷ்ணர் கோவிலை கட்டியுள்ளார். சத்தர்பூரைச் சேர்ந்த சன்சோரியா என்ற அந்நபரின் மனைவி 2016-ம் ஆண்டு நவம்பரில் உயிரிழந்தார். அவரது கடைசி ஆசையை எப்படியும் நிறைவேற்ற வேண்டும் என சன்சோரியா முடிவு செய்தார். இதற்காக தமது கையில் இருந்த சேமிப்பு பணம் ஒன்றரை கோடி ரூபாயை செலவிட்டு, கோவிலை கட்டி முடித்துள்ளார். இஸ்லாமிய கலைஞர்கள் கோவிலின் சிற்ப வேலைப்பாடுகளை செய்துள்ளனர். 6 ஆண்டுகள் நடைபெற்ற … Read more

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கும் முடிவை எதிர்க்கட்சிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: மத்திய அரசு

புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பது என்ற முடிவை எதிர்க்கட்சிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்க இருக்கிறார். இந்த விழாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. குடியரசுத் தலைவரையும், குடியரசு துணைத் தலைவரையும் மத்திய அரசு புறக்கணித்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள … Read more

புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவை புறக்கணிக்க 19 எதிர்க்கட்சிகள் முடிவு..!

புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவை புறக்கணிக்க போவதாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. டெல்லியில் 970 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி வருகிற 28ம் தேதி திறந்து வைக்கவுள்ளார். அக்கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முதான் திறக்க வேண்டும், பிரதமர் மோடி திறக்கக்கூடாதென வலியுறுத்தி காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் கட்சி, … Read more

#BIG NEWS : புதிய நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு செங்கோல்..!!

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமான பணிகள் நிறைவு பெற்று தற்போது திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது. இதனை வரும் மே 28 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.ஆனால் மக்கள் வரிப்பணத்தால் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. மேலும் திமுக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், சிவசேனா, மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான … Read more

மகாராஷ்டிராவில் விபத்தில் இறந்த மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்த டாக்டர் தம்பதி: 11 பேர் பயனடைந்தனர்

மும்பை: மகாராஷ்டிராவில் சாலை விபத்தில் உயிரிழந்த மகனின் உடல் உறுப்புகளை டாக்டர் தம்பதி தானம் செய்தனர். இதன் மூலம் 11 பேர் பயனடைந்தனர். மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டம் விரார் நகரைச் சேர்ந்தவர்கள் டாக்டர் தம்பதிகளான வினீத் தண்டவதே மற்றும் சுமேதா. இவர்களுடைய மகன் சாகேத் தண்டவதே (30) பெங்களூருவில் உள்ள டிஜிட்டல் செயலி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இருசக்கர வாகனம் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட சாகேத், கடந்த 15-ம் தேதி புனே நகரிலிருந்து பெங்களூருவுக்கு … Read more

சோழர் பாரம்பரியப்படி புதிய நாடாளுமன்றத்தில் ‘செங்கோல்’ நிறுவப்படும்: அமித் ஷா

ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியர்களுக்கு அதிகாரம் மாற்றப்பட்டதைக் குறிக்கும் வகையில், நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம்  செங்கோல், ஒப்படைக்கப்பட்டது என்றார் அமித் ஷா.

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக திமுக அறிவிப்பு..!!

புதிய நாடாளுமன்ற வளாகத்தைக் கட்டமைக்க வேண்டும் என்று மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கடந்த 2020- ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் புதிய நாடாளுமன்ற வளாகத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. கொரோனா பெருந்தொற்று பாதிப்பையும் கடந்து கட்டமைப்பு பணிகள் விரைவாக நடந்து முடிவடைந்துள்ளன. புதிதாக கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட நாடாளுமன்றக் கட்டடத்தை வரும் மே 28- ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மே 28ம் தேதி அன்று நடைபெற உள்ள புதிய நாடாளுமன்ற … Read more

இந்து கோயில்கள் மீதான தாக்குதல்: ஆஸ்திரேலிய பிரதமரிடம் மீண்டும் முறையிட்ட பிரதமர் மோடி

சிட்னி: ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட இந்து கோயில்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் குறித்தும், அந்நாட்டில் காலிஸ்தான் ஆதரவு சக்திகளின் செயல்பாடுகள் குறித்தும் அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானிஸிடம் பிரதமர் மோடி இன்று மீண்டும் இந்தியாவின் கவலைகளை தெரிவித்தார். மூன்று நாள் பயணமாக பிரதமர் மோடி ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருக்கிறார். அதன்படி, அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானிஸும் பிரதமர் மோடியும் இன்று (புதன்கிழமை) சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தினர். பரந்த அளவிலான இந்தப் பேச்சுவார்த்தையில், இருதரப்பு வர்த்தக உறவுகளை குறிப்பிடத்தக்க … Read more