தமிழர்களை மீட்க சென்னையில் கட்டுப்பாட்டு அறைகள்!!

சூடானில் சிக்கிய தமிழர்களை மீட்க தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக சூடானில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. அதிகாரப்போட்டி காரணமாக ராணுவத்தினருக்கும், துணை ராணுவத்தினருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் அப்பாவி பொதுமக்கள் சிக்கித் தவிக்கின்றனர். இந்நிலையில் அங்கு சிக்கியுள்ள வெளிநாட்டவர்களை மீட்க அந்தந்த நாட்டின் அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. அந்த வகையில் இந்தியா சார்பில் விமானங்களும், கப்பலும் அனுப்பப்பட்டன. ஆப்ரேஷன் காவேரி என்ற பெயரில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அங்கு … Read more

காங்கிரசின் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாகி விட்டன: பிரதமர் மோடி

புதுடெல்லி: காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய்த்துவிட்டன; இனி வாக்குறுதி தரமுடியாத நிலையில் அக்கட்சி உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் 10-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ள கர்நாடக மாநில பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி வியாழக்கிழமை காணொளி மூலம் உரையாற்றினார். அப்போது பிரதமர், “கர்நாடக மக்கள் பாஜக மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையானது பிரச்சாரத்திற்காக பாஜக தலைவர்கள் செல்லுமிடங்களில் எல்லாம் வெளிப்படுகின்றது. 10 … Read more

வந்தே பாரத் vs சதாப்தி எக்ஸ்பிரஸ்: வேகம், வசதிகள், டிக்கெட் கட்டணம்… இரண்டில் எது சிறந்தது?

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்… கடந்த சில மாதங்களாக இந்தியர்கள் மத்தியில் ஒருவித எதிர்பார்ப்பை தூண்டிவிட்டுள்ளது. செம ஸ்பீடு, விமானத்தில் இருப்பது போன்ற வசதிகள், அதிக கட்டணம் எனப் பல்வேறு விஷயங்கள் பேசுபொருளாக மாறியிருக்கின்றன. எந்த ரயில் சிறந்தது? ஏற்கனவே அதிவிரைவு சதாப்தி எக்ஸ்பிரஸ் சேவை அமலில் இருக்கும் போது, புதிதாக வந்துள்ள வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஒப்பீட்டளவில் எப்படி இருக்கிறது என்ற கேள்வி பலருக்கும் எழத் தான் செய்கிறது. இதில் ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள … Read more

தோசை சுட்டு வாக்கு சேகரித்த பிரியங்கா காந்தி!!

கர்நாடகாவில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கடை ஒன்றில் தோசை சுட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கர்நாடக சட்ட சபைக்கு வருகிற 10-ந் தேதி பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடந்தது. 24-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், தற்போது வேட்பாளர்கள் அனைவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தில் … Read more

'ஆபரேஷன் காவேரி' | சூடானில் இருந்து மீட்கப்பட்ட 360 இந்தியர்கள் நாடு திரும்பினர்

புதுடெல்லி: சூடானில் இருந்து மீட்கப்பட்ட 360 இந்தியர்கள் புதுடெல்லி வந்தடைந்தனர். சூடானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் ராணுவத் தளபதி அப்தல் ஃபதா அல் புர்ஹான் தரப்பும், துணை ராணுவப் படையாக ஆர்எஸ்எஃப் பிரிவும் (ரேபிட் சப்போர்ட் ஃபோர்ஸ்) கடும் மோதலில் ஈடுபட்டுள்ளன. அங்கு 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுத்துள்ளது. இது தொடர்பாக கடந்த 21ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. … Read more

தெலுங்கானாவில் பட்டப்பகலில் லாரி ஓட்டுநரை கல்லால் அடித்துக் கொன்ற பயங்கரம்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது

தெலங்கானாவில், பட்டப்பகலில் லாரி ஓட்டுநர் கல்லால் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தாரம் கிராமத்தை சேர்ந்த கனகய்யா – பத்மா தம்பதிக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களது மூத்த மகளும், அதே ஊரை சேர்ந்த மகேஷ் என்ற இளைஞரும் 5 ஆண்டுகளாக காதலித்துள்ளனர். பின்னர் கருத்துவேறுபா டு காரணமாக இருவரும் பிரிந்த நிலையில், தன்னை காதலிக்கும்படி மகேஷ் தொடர்ந்து துன்புறுத்திவந்துள்ளார். இதற்கிடையில், அந்த இளம்பெண்ணுக்கு … Read more

மன் கி பாத் 100-வது நிகழ்ச்சியையொட்டி மாநாடு: பிரதமர் மோடிக்கு நடிகர் ஆமிர் கான் பாராட்டு

புதுடெல்லி: வானொலி வாயிலாக ஒலிபரப்பாகும் பிரதமர் மோடியின் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சி கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் துவக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் 100-வது பகுதி வரும் ஏப்ரல் 30-ம் தேதி ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது. இதையொட்டி டெல்லியில், ‘மன் கி பாத்-100′ என்ற மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாலிவுட் நடிகர் ஆமிர் கான், நடிகை ரவீணா டாண்டன், விளையாட்டு வீராங்கனைகள் தீபா மாலிக், நிகத் ஜரீன், பத்திரிகையாளர்கள், தொழில்முனைவோர் உள்ளிட்டோர் … Read more

கர்நாடகா தேர்தல்.. பாஜகவுக்கு எதிராக திரும்பிய இந்துத்துவா.. களம் தெரியாமல் ஆடிய 'பொம்மை'! மிஸ் ஆன 'தல'

பெங்களூர்: கர்நாடகாவின் சிம்மாசனத்தை பிடிக்கும் போட்டியில் காங்கிரஸ் அசுர பலத்துடன் முந்தி வரும் சூழலில், பாஜக இந்த பின்னடைவை சந்தித்ததற்கு என்ன காரணம் என்பதை அலச வேண்டியது அவசியமாகிறது. வட மாநிலங்களில் பாஜக செய்யும் அரசியல் கர்நாடகாவில் எடுபட்டுள்ளதா? வடக்கே செல்லுபடியான பாஜகவின் ‘மேஜிக்’ கன்னட மக்களை ஈர்த்திருக்கிறதா? இங்கு பார்க்கலாம். இப்போதைய நிலவரப்படி, கர்நாடகாவில் முன்னிலையில் இருப்பது காங்கிரஸ் தான். கிட்டத்தட்ட அனைத்து கருத்துக்கணிப்புகளும் இதை உறுதிப்படுத்தி விட்டன. கள யதார்த்தமும் அதைதான் சொல்கிறது. அதே … Read more

தனியார் பள்ளிகளில் படிப்போருக்கு மாற்று சான்றிதழ் தர தடை விதிப்பு..!!

புதுச்சேரியில் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் குறையக்கூடாது என்பதற்காக புதுச்சேரியில் சில தனியார் பள்ளிகள் சுமாராக படிக்கும் 9 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை ஏதாவது காரணம் கூறி பள்ளியில் இருந்து நீக்கத் தொடங்கியதாக புகார்கள் வந்தன. இவ்விவகாரம் கல்வித் துறைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் பள்ளிக் கல்வி துறை இயக்குனர் பிரியதர்ஷினி வெளியிட்ட உத்தரவில்., “புதுச்சேரியில் 9, 10, 11,12 ஆகிய வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால், மாணவர்களின் … Read more

சூடானில் இருந்து இந்தியர்கள் 360 பேர் தாயகம் வருகை!!

ஆப்ரேஷன் காவேரி திட்டத்தின் மூலம் சூடானில் இருந்து 360 இந்தியர்கள் பத்திரமாக டெல்லி அழைத்து வரப்பட்டுள்ளனர். கடந்த 10 நாட்களாக சூடானில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. அதிகாரப்போட்டி காரணமாக ராணுவத்தினருக்கும், துணை ராணுவத்தினருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் அப்பாவி பொதுமக்கள் சிக்கித் தவிக்கின்றனர். இந்நிலையில் அங்கு சிக்கியுள்ள வெளிநாட்டவர்களை மீட்க அந்தந்த நாட்டின் அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. அந்த வகையில் இந்தியா சார்பில் விமானங்களும், கப்பலும் அனுப்பப்பட்டன. ஆப்ரேஷன் காவேரி என்ற பெயரில் இந்திய வெளியுறவுத்துறை … Read more