தலைமை தேர்தல் ஆணையர் பேட்டி யாருடைய கட்டளைப்படியும் செயல்படவில்லை

கவுகாத்தி: ‘தேர்தல் ஆணையம் யாருடைய கட்டளைக்கும் கீழ்பட்டு செயல்படவில்லை, எதிர்காலத்திலும் அப்படி இருக்காது’ என தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார் கூறி உள்ளார். அசாமில் 126 சட்டப்பேரவை மற்றும் 14 மக்களவை தொகுதிகளின் எல்லை மறுவரையறை செய்யும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இதில் அம்மாநிலத்தில் ஆளும் பாஜவின் உத்தரவுப்படி தேர்தல் குழு செயல்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியிருந்தது. இந்நிலையில், தொகுதி மறுவரையறை தொடர்பான 3 நாள் ஆய்வுப்பணிகளுக்குப் பிறகு கவுகாத்தியில் நேற்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார் … Read more

சட்டீஸ்கர், ஆந்திராவில் அமலாக்கத்துறை சோதனை

புதுடெல்லி:  சட்டீஸ்கரில் நிலக்கரி வரி வசூல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு ஆண்டுகளில் ரூ.540 கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட நிர்வாக அதிகாரி சவுமியா, நிலக்கரி வர்த்தகர் சூர்யகாந்த் திவாரி உட்பட  9 பேரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் நேற்று சட்டீஸ்கர் மற்றும் ஆந்திராவின் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.

வடக்கிலிருந்து தெற்கு வரை பாஜக மட்டுமே `PAN-INDIA' கட்சி – பிரதமர் மோடி

புதுடெல்லி: பாஜகவின் புதிய மத்திய அலுவலகம் டெல்லியில் இன்று திறக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, “1984-ன் இருண்ட காலத்தை இந்தியா ஒருபோதும் மறக்காது. அக்காலகட்டத்தில் நாங்கள் முற்றிலுமாக அழிந்தோம். எனினும், மன உளைச்சலுக்கு ஆளாகவில்லை. அதற்காக மற்றவர்களை குறைகூறவில்லை. வெறும் இரண்டே இரண்டு மக்களவை வெற்றியுடன் தொடங்கிய எங்களின் பயணம், 303 மக்களவை இடங்கள்வரை எட்டியிருக்கிறது. கிழக்கிலிருந்து மேற்கு வரையிலும், வடக்கிலிருந்து தெற்கு வரையிலும் பாஜக மட்டுமே தற்போது `PAN-INDIA’ கட்சி. … Read more

கேரளாவில் பெண்கள் வேடத்தில் ஆண்கள் பங்கேற்கும் வினோத திருவிழா: கொல்லம் அருகே கொட்டம்குளக்கரா தேவி கோயிலில் வழிபாடு

திருவானந்தபுரம்: கேரளாவின் கொல்லம் அருகே பெண்க வேடமிட்ட ஆண்கள் பங்கேற்ற வினோத திருவிழா விமர்சியாக நடைபெற்றது. கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டம்குளக்கரா தேவி கோயிலில் ஆண்டுதோறும் மலையாள மீனம் மாதத்தில் சமய விளக்கு திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் கேரளாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆண்கள் பெண்கள் வேடமிட்டு பங்கேற்பர். மகளிர் வேடமிட்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதன் மூலம் செல்வம் பெருகும் என்பது அவர்களின் நம்பிக்கை. மாலை முதலே ஆலயத்து படையெடுக்கும் ஆண்கள் கோயிலில் விற்கப்படும் … Read more

மோடி படத்தை கிழித்த வழக்கு காங். எம்எல்ஏவுக்கு ரூ.99 அபராதம்: குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு

நவ்சாரி: குஜராத்தில் பிரதமர் மோடியின் படத்தை கிழித்த வழக்கில் தொடர்புடைய காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு ரூ. 99 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  குஜராத் மாநிலம் நவ்சாரி பகுதியில் வேளாண் பல்கலைக்கழகம் செயல்படுகிறது. அந்த பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 2017ம் ஆண்டு மாணவர்களின் போராட்டம் நடந்தது. அந்த போராட்டத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ அனந்த் படேல் கலந்து கொண்டார். போராட்டத்திற்கு இடையே வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் அறைக்குள் நுழைந்த எம்எல்ஏ அனந்த் படேல், அங்கிருந்த பிரதமர் மோடியின் படத்தை கிழித்தார். … Read more

கர்நாடகாவில் தேர்தல் பேரணியில் பணத்தை அள்ளி வீசிய காங். தலைவர் – வைரலாகும் வீடியோ

கர்நாடகாவில் தேர்தல் பேரணியின்போது காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், மக்களிடம் பணத்தை அள்ளி வீசியதாக வீடியா காட்சி வெளியாகி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரமும் சூடுபிடித்துள்ளது. ஆளும் பா.ஜ.க. ஆட்சியை தக் வைக்க வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது. காங்கிரஸோ, ஆட்சி அமைப்பதற்கான அஸ்திவாரங்களை எடுத்து வருகிறது. இதனால் கர்நாடக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் தீவிரமாய்ச் … Read more

பழைய ஓய்வூதியத்தை தேர்ந்தெடுக்க இறுதி நாள் இதுதான்! காலக்கெடு நிர்ணயம் உண்மையா?

நியூடெல்லி: பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்துவது குறித்து, நாட்டில் விவாதம் நடந்து வருகிறது. இதற்கிடையில் பழைய ஓய்வூதிய முறை குறித்து பெரும் செய்திகள் வெளியாகி வருகின்றன. நாட்டின் பல மாநிலங்களில் பழைய ஓய்வூதிய முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், மத்திய அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய முறையைத் திரும்ப கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. ஆகஸ்ட் மாதத்திற்குள் பழைய ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்யவும் அரசு ஊழியராக … Read more

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் போடப்பட்டு இருந்தாலும் கூட, அவற்றை சீனா பின்பற்றுவதில்லை: இந்திய ராணுவ தளபதி பேட்டி

புதுடெல்லி: இந்தியா – சீனா இடையிலான எல்லைப் பிரச்னைகள் தொடரும் நிலையில், இரு நாட்டின் அதிகாரிகள் மத்தியில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. எல்லையில் இரு நாட்டு படைகளும் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்படுகிறது. ஆனால் சீனா தரப்பில், எல்லையில் தனது ராணுவத்தையும், ஆபத்தான ஆயுதங்களையும் குவித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராணுவ தளபதி மனோஜ் பாண்டே அளித்த பேட்டியில், ‘சீனாவிடமிருந்து பல வகைகளில் ஆபத்துகள் வருகின்றன.  சைபர் கிரைம் … Read more

பாஜகவின் மகாராஷ்டிரா, கோவா வியூகம் தமிழ்நாட்டில் இதுவரை எடுபடாதது ஏன்?

தமிழ்நாட்டிலே பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை நிலைப்பாடுகள் தொடர்ந்து நிராகரிக்கப்படுவதன் காரணமாகவே அந்த கட்சி மகாராஷ்டிரா, கோவா, மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பிற கட்சிகளை விழுங்கி வளர்ந்ததைப் போல கூட்டணி கட்சியான அதிமுகவை தன்னுள் இழுத்து  அதிவேக வளர்ச்சி அடைய இயலவில்லை. தமிழகத்தில் திமுகவுக்கு சவால் விடும் அளவில் வாக்கு வங்கி அதிமுகவுக்கு மட்டுமே உள்ளது என்பதும், பல தேர்தல்களில் தொடர்ச்சியாக முயற்சித்தும் பாஜக பெரிய வெற்றிகளை அடைய முடியவில்லை என்பதும், அந்தக் கட்சி தமிழகத்தில் … Read more

கொரோனா ரிட்டர்ன்ஸ்! மீண்டும் 2020இல் இருந்தது போல வேகமெடுக்கிறது கோவிட் நோய்

Coronavirus Deteriorated: இந்தியாவில் கோவிட் நோய்த்தொற்றின் அளவு கணிசமாக அதிகரித்து வருவது கவலைகளை அதிகரித்துள்ளது. தினசரி சராசரி 1.30 சதவீதம் மற்றும் வாராந்திர விகிதம் 1.47 சதவீதமாக இருந்தது. ஆனால், இந்தியாவில் தற்போது 32 மாவட்டங்களில் கொரோனா பாசிடிவ் வழக்குகள் 10% க்கும் அதிகமாக உள்ளது.  6 மாநிலங்களில் கொரோனா நிலைமையை மோசமாக்கியுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 1,573 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை 10,981 ஆக உள்ளது. … Read more