லட்சத்தீவு எம்.பி. முகமது ஃபைசல் தகுதி இழப்பு நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டது: மக்களவை செயலர் அறிவிப்பு

புதுடெல்லி: லட்சத்தீவு எம்.பி. முகமது ஃபைசல் பி.பி.-யின் தகுதி இழப்பு நடவடிக்கை திரும்பப் பெறப்படுவதாக மக்களவை செயலாளர் இன்று (மார்ச் 29) நோட்டீஸ் வெளியிட்டுள்ளார். ஃபைசல் மீதான குற்றவியல் வழக்கின் தண்டனையை நிறுத்திவைப்பதாக அறிவித்த கேரளா உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்று வெளியிடப்பட்டுள்ள மக்களவை செயலரின் அறிக்கையில், “முகமது ஃபைசல் பி.பி,யின் தகுதி இழப்பு நடவடிக்கைக்கு தடைவிதித்து ஜன.25, 2023-ல் கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி, 2023ம் … Read more

யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் எந்த கூடுதல் கட்டணமும் செலுத்த தேவையில்லை: பேடிஎம் விளக்கம்

மும்பை: யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் எந்த கூடுதல் கட்டணமும் செலுத்த தேவையில்லை என பேடிஎம் விளக்கமளித்துள்ளது. யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல் வெளியான நிலையில் யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணமும் செலுத்த தேவையில்லை பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது. யூபிஐ வாயிலாக 2000 ரூபாய்க்கு அதிகமான தொகைக்கு ஆன்லைன் மூலம் வணிக பரிமாற்றம் செய்தால் வரும் 1ம் தேதி முதல் 1.1% வரை கூடுதல் கட்டணம் வசூலிக்க தேசிய … Read more

ராகுல் காந்தி சட்டத்திற்கு மேலானவரா?- மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

புதுடெல்லி: ராகுல் காந்தி சட்டத்திற்கு மேலானவரா என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கேள்வி எழுப்பியுள்ளார். ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ”பிற்படுத்தப்பட்ட சமூகத்தை அவமதித்த குற்றச்சாட்டிற்காக நீதிமன்றம் ராகுல் காந்தியை தண்டித்திருக்கிறது. … Read more

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்: மே 10ம் தேதி வாக்குப்பதிவு, மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை

டெல்லி: 224 தொகுதிகளை கொண்ட கார்நாடக சட்டப்பேரவைக்கு ஒரேகட்டமாக மே 10-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 13-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். கர்நாடகா தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் ஏப்ரல் 13-ல் தொடங்கி ஏப்ரல் 20-ம் தேதி நிறைவடைகிறது.

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் | மே.10 வாக்குப்பதிவு; மே.13 வாக்கு எண்ணிக்கை

புதுடெல்லி: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று (மார்ச் 29) தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை அறிவித்தார். அதன்படி 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக மே 10 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் தேதி நடைபெறும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்தார். கர்நாடக தேர்தல்: … Read more

கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் 2023 தேதி: மே 10ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு!

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் தேதி தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், கர்நாடகாவில் 2018-19ஆம் ஆண்டிற்கு பின்னர் முதல்முறை வாக்காளர்கள் 9.17 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி 18 வயது பூர்த்தி அடையும் அனைவரும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கலாம். கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் மே 25ஆம் தேதி உடன் மாநில சட்டமன்றத்தின் பதவிக் காலம் நிறைவு பெறுகிறது. … Read more

மோடி அரசின் மிகப்பெரிய பரிசு: மருத்துவ செலவுகளில் இனி கிடைக்கும் மிகப்பெரிய நிவாரணம்

ஆயுஷ்மான் பாரத் 2.0: ரேஷன் கார்டு, விவசாயிகளுக்கான பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டம், ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட பல திட்டங்களை ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்காக மோடி அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக நடுத்தரக் குடும்பங்களுக்கு இப்போது புதிய பரிசை அரசு அளிக்கவுள்ளது. இது ஆயுஷ்மான் பாரத் 2.0 என அழைக்கப்படும். இதில், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு (மிடிள் கிளாஸ் குடும்பங்கள்) காப்பீடு வசதி வழங்கப்படும். இதன் மூலம், நாட்டின் சுமார் 40 கோடி மக்களுக்கு … Read more

கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் மே.10-ம் தேதி நடைபெறும்: தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

டெல்லி: கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் மே.10 நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவை பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் அதற்குள் தேர்தல் நடைமுறைகல் நடத்தி முடிக்க வேண்டியது விதி ஆகும். கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: கர்நாடக சட்டப்பேரவை பதவிக்காலம் மே 24ஆம் தேதி முடிவடைகிறது. எனவே மே … Read more

மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் இன்றும் அமளி: இரு அவைகளும் ஒத்திவைப்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் இன்றும் (மார்ச் 29) அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடர் தொடங்கியது முதல் தொடர் அமளி காரணமாக இரு அவைகளும் அடிக்கடி ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. வழக்கம்போல் நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்குக் கூடின. மக்களவையில் மூன்று மசோதாக்களையும், மாநிலங்களவையில் இரண்டு மசோதாக்களையும் அறிமுகப்படுத்தி அதன் மீது விவாதம் … Read more

லட்சத்தீவு எம்.பி முகமது பைசல் தகுதி நீக்கம் ரத்து; ராகுல் காந்திக்கும் சூப்பர் வாய்ப்பு!

காங்கிரஸ் எம்.பியாக இருந்த ராகுல் காந்தியின் பதவி தகுதிநீக்க அடிப்படையில் பறிக்கப்பட்டது. இதன் பின்னணியில் 2019 மக்களவை தேர்தலின் போது கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடந்த பிரச்சாரம் முக்கியமான விஷயமாக அமைந்தது. அப்போது, தவறு செய்பவர்கள் அனைவரும் தங்கள் பெயருக்கு பின்னால் ’மோடி’ என்ற பெயரை வைத்துக் கொள்வதாக குறிப்பிட்டிருந்தார். அவதூறு வழக்கு இதனை எதிர்த்து பாஜக பிரமுகர் தொடுத்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதன் தொடர்ச்சியாக … Read more