வரும் ஏப்ரல் முதல் 800 அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்கிறது..!!

இந்தியாவில் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருளான மருந்துகளின் விலையை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் கண்காணித்து வரைமுறை செய்கிறது. இந்த நிலையில் மூலப்பொருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவினம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மருந்துகளின் விலையை அதிகரிக்க அனுமதிக்க வேண்டும் என மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாகவே கோரிக்கை வைத்து வந்தன. அதை ஏற்று சில அத்தியாவசிய மருந்துகளின் விலையை உயர்த்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வலி நிவாரணிகள், தொற்று … Read more

கர்நாடக சட்டப்பேரவைக்கு தேர்தல் எப்போது? – இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று (மார்ச் 29) வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடக சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு மே மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று கர்நாடக தேர்தல் தேதியை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய பிரதான கட்சிகள் தனித் தனியாக களமிறங்குகின்றன. 3 கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை ஏற்கெனவே தொடங்கியுள்ள … Read more

எச்சரிக்கை..கொரோனா புதிய அலை…அச்சப்படுத்தும் புள்ளிவிவரங்கள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது, செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட தரவுகளின்படி, நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 1573 பேர் புதிய கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் 4 பேர் இந்த தொற்றால் உயிரிழந்தனர். கொரோனாவின் புதிய வகை பாதிப்பு அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, மத்திய சுகாதார அமைச்சகம் திங்களன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் கோவிட் 19 மேலாண்மைக்கான தயாரிப்புகளை மதிப்பாய்வு செய்ய ஒரு கூட்டத்தை நடத்தியது. கடந்த இரண்டு வாரங்களில் … Read more

”சைபர் குற்றங்களில் மோசடி செய்யப்பட்ட ரூ.235 கோடி மீட்கப்பட்டது..” – அமித் ஷா..!

சைபர் மோசடி, ஏமாற்றுதல் போன்ற காரணங்களால் 500க்கும் மேற்பட்ட செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். டிஜிட்டல் உலகம் அனைவருக்கும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்வதில் மோடி தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளதாக அமித்ஷா குறிப்பிட்டார். டெல்லியில் உள்ள சைபர் கிரைம் மையத்தின் செயல்பாட்டை ஆய்வு செய்யும் போது அவர் இதனைத் தெரிவிதத்தார். சைபர் கிரிமினல்களால் ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேரிடம் … Read more

புதுச்சேரி கடலில் குளிப்பவர்களுக்கு உயிர்காக்கும் கவசம் வழங்கப்படும்: அமைச்சர் லட்சுமி நாராயணன் தகவல்

புதுச்சேரி: புதுச்சேரி கடலில் குளிப்பவர்களுக்கு மீனவர் கூட்டுறவு சங்கம் மூலம் உயிர்காக்கும் கவசம் வழங்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தகவல் தெரிவித்துள்ளார். சுற்றுலா பயணிகள் கடலில் உயிர்காக்கும் கவசம் அணிந்துதான் குளிக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று புதுச்சேரி சட்டமன்றத்தில் அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறினார்.   

ராகுல் காந்திக்காக என் பங்களாவை காலி செய்ய தயார்: மல்லிகார்ஜுன கார்கே..!!

பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் ராகுல் காந்திக்கு டெல்லியில் துக்ளக் லேன் பகுதியில் அரசு பங்களா ஒதுக்கப்பட்டிருந்தது. நான்கு முறை பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தி, கடந்த 2005 முதல் இந்த பங்களாவில் வசித்து வருகிறார். தற்போது பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், அரசு பங்களாவை காலி செய்வதற்கான நோட்டீசை ராகுல் காந்திக்கு அனுப்ப மக்களவைக்கான பங்களா ஒதுக்கீடு குழு முடிவு செய்தது. இதையடுத்து, அதற்கான நோட்டீசை மக்களவை செயலகம் ராகுல் காந்திக்கு … Read more

நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு உறுப்பினர்கள் தேர்தல்: திருச்சி சிவா 42, தம்பிதுரை 18 வாக்குகள் பெற்று தேர்வு

புதுடெல்லி: நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழுவின் ஏழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதில், அதிக வாக்குகளாக திமுக எம்.பி. திருச்சி சிவா 42, அதிமுக எம்.பி. தம்பிதுரை 16 வாக்குகள் பெற்று உறுப்பினர்களாக தேர்வாகி உள்ளனர். நாடாளுமன்றத்தில் எம்.பி.,க்களுக்காக நாற்பதிற்கும் மேற்பட்ட குழுக்கள் உள்ளன. இவற்றில் நிதிக்கான மூன்று குழுக்களாக பொதுக் கணக்கு குழு, மதிப்பீடு குழு மற்றும் பொதுத்துறைகளுக்கானக் குழு இடம் பெற்றுள்ளன. இந்த மூன்றில் எம்.பி.க்கள் இடையே மிகவும் முக்கியத்துவம் பெற்றதாக பொதுக் … Read more

குடும்ப அரசியலால் நாட்டைக் கொள்ளையடித்த அனைத்து ஊழல் கட்சிகளும் ஓரணியில் திரண்டுள்ளன – பிரதமர் மோடி பேச்சு

குடும்ப அரசியலால் நாட்டைக் கொள்ளையடித்த அனைத்து ஊழல் கட்சிகளும் காங்கிரசின் தலைமையின் கீழ் ஓரணியில் திரண்டிருப்பதாக பிரதமர் மோடி சாடியுள்ளார். டெல்லியில், விரிவாக்கம் செய்யப்பட்ட பாஜக தலைமை அலுவலகத்தைத் திறந்து வைத்து பேசிய மோடி, ராகுல்காந்தி தகுதி நீக்கம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புகளைக் கூட மதிக்காத எதிர்க்கட்சிகளின் போக்கைக் கண்டித்தார். வெறும் 2 மக்களவை உறுப்பினர்களுடன் இருந்த பாஜக, கடுமையான உழைப்பால் இன்று முந்நூறுக்கும் மேற்பட்ட எம்பிக்களுடன் இந்தியாவின் பலம் வாய்ந்த ஒரே கட்சியாகத் திகழ்வதாக மோடி … Read more

பாதுகாப்பான அனைத்து விஷயங்களிலும் ஆப்பிரிக்க நட்பு நாடுகளுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி

புனே: பாதுகாப்பு தொடர்பான அனைத்து விஷயங்களிலும் ஆப்பிரிக்க நட்பு நாடுகளுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதிபட தெரிவித்துள்ளார்.  ஆப்பிரிக்க நாட்டின் ராணுவ தளபதிகள் உள்பட 10 நாடுகளின் ராணுவ தலைவர்கள் கலந்து கொண்ட மாநாடு மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நேற்று நடந்தது. இதில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார்.  அப்போது, “ஆப்பிரிக்க நாடுகளின் ஆயுதப் படைகளுக்கு பயிற்சி  அளிப்பதில் இந்தியா முன்னிலையில் உள்ளது.  … Read more

உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய ராகுல் இப்போது கோழை இல்லை என்கிறார் – மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தாக்கு

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே மன்னிப்பு கோரிய ராகுல், இப்போது தான் ஒரு கோழை இல்லை என்று கூறுகிறார் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உள்ளது. இதனால் எம்.பி. பதவியை இழந்த ராகுல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “என்னுடைய பெயர் சாவர்க்கர் அல்ல. என் பெயர் காந்தி. காந்தி யாரிடமும் மன்னிப்பு கோரமாட்டார்” என்றார். … Read more