முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 32-வது நினைவு தினம்: சோனியா, ராகுல், கார்கே அஞ்சலி

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32-வது நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தி, தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். கட்ந்த 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உயிரிழந்தார். இந்த நிலையில் இன்று அவரது 32-வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி … Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு இலவச அறிவிப்பு… AIIMS சிகிச்சைக்கு செல்பவர்கள் செம ஹேப்பி!

மத்திய அரசின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு CGHS எனப்படும் மத்திய அரசு சுகாதார திட்டத்தின் கீழ் பல்வேறு சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதாவது, சாதாரண நோய்கள் முதல் தீவிர பாதிப்புகள் வரை, அறுவை சிகிச்சை முதல் நீண்ட கால சிகிச்சை உள்ளிட்டவற்றுக்கு கட்டணமில்லா சேவை அளிக்கப்படுகிறது. இதனை குறிப்பிட்ட மருத்துவமனைகளில் மட்டும் பெற்றுக் கொள்ள முடியும். மத்திய அரசு அறிவிப்பு இதற்கான கட்டணத்தை முதலில் நாம் மருத்துவமனையில் செலுத்திவிட வேண்டும். அதன்பிறகு மத்திய அரசின் சுகாதார திட்டத்தில் … Read more

ஜி20 நாடுகளின் மாநாடு ஸ்ரீநகரில் நாளை ஆரம்பம்… ஸ்ரீநகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களிலும் தீவிர சோதனை..!

ஜி20 நாடுகளின் மாநாடு, ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் நாளை தொடங்கவுள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜி20 நாடுகளின் கூட்டமைப்பிற்கு இந்தியா தலைமையேற்றுள்ள நிலையில், அதன் 3வது சுற்றுலா பணிக்குழு கூட்டம், நாளை தொடங்கி, வரும் 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனையொட்டி, ஸ்ரீநகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும், ராணுவத்தினர் தீவிர சோதனைக்கு உட்படுத்துகின்றனர். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்தான பிறகு நடைபெறும் முதல் சர்வதேச மாநாடு என்பதால், எத்தகைய அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும் வகையில், … Read more

ராணுவ தளவாட உள்நாட்டு உற்பத்தி ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது

புதுடெல்லி: இந்தியாவின் உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தி கடந்த நிதியாண்டில் முதல் முறையாக ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டி உள்ளது. இது 2021-22 நிதியாண்டைவிட 12 சதவீதம் அதிகம். ராணுவ தளவாட இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் குறிப்பிட்ட ராணுவ தளவாடங்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ராணுவ தளவாட உற்பத்தியாளர்களுக்கு உள்ள பிரச்சினைகளை தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை … Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 எய்ம்ஸ் மருத்துவமனையில் பணமில்லாமல் சிகிச்சை

புதுடெல்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: மத்திய அரசு ஊழியர்கள், பென்ஷன்தாரர்கள் நாடெங்கிலும் உள்ள 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் (போபால், புவனேஸ்வர், பாட்னா, ஜோத்பூர், ராய்ப்பூர், ரிஷிகேஷ்) பணம் செலுத்தாமல் சிகிச்சையைப் பெற முடியும். இதுதொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய சுகாதார அமைச்சகத்தின் மத்திய அரசின் சுகாதார சேவைத் திட்டப் பிரிவு (சிஜிஎச்எஸ்), எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் ஆகியவற்றின் இடையே கையெழுத்திடப்பட்டுள்ளது. கடந்த 20-ம் தேதி முதல் இது அமலுக்கு வந்துள்ளது. மத்திய அரசில் … Read more

ஜெய்ப்பூரில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பத்திரமாக மீட்பு..!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், 200 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் 6 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டான். பள்ளி விடுமுறைக்காக போஜ்புரா கிராமத்திலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற அந்த சிறுவன், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளான்.சம்பவ இடத்திற்கு விரைந்த மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 100 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவனை … Read more

10 போலீஸார் உயிரிழந்த வழக்கு – 8 நக்ஸல்கள் கைது

தாந்தேவாடா: சத்தீஸ்கர் மாநிலம் தாந்தேவாடா மாவட்டம் அரண்பூர் பகுதியில் கடந்த மாதம் 26-ம் தேதி சாலையில் கண்ணிவெடியை நக்ஸல்கள் வெடிக்க செய்தனர். இதில் ரிசர்வ் படை போலீஸார் (டிஆர்ஜி) சென்ற வாகனம் தூக்கி எறியப்பட்டு 10 போலீஸார் உயிரிழந்தனர். இந்த வழக்கு தொடர்பாக 9 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் மேலும் 8 பேரை போலீஸார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். இதையடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் … Read more

இனி ஆசிரியர்கள் ஜீன்ஸ், லெகிங்ஸ் அணிய தடை..!!

அசாமில் பள்ளிக்கு வரும் ஆசிரியர், ஆசிரியைகளுக்கான புதிய ஆடை கட்டுப்பாடுகளை பள்ளி கல்வி துறை நேற்று அறிவித்து உள்ளது. இதற்கான அறிவிப்பில், ஆசிரியர், ஆசிரியைகள் ஜீன்ஸ், டி-சர்ட் மற்றும் லெகிங்ஸ் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை பொதுமக்கள் அதிகளவில் ஏற்று கொள்ளவில்லை என அதற்கு விளக்கமும் அளித்து உள்ளது. அந்த அறிக்கையில், கல்வி நிலையங்களில் பணிபுரியும் சில ஆசிரியர், ஆசிரியைகள் தங்களது விருப்பத்திற்கேற்ப ஆடைகளை அணிகின்றனர் என எங்களின் கவனத்திற்கு வந்தது. பெருமளவிலான மக்கள் ஏற்று … Read more

முதல்வர் சித்தராமையா முதல்வராக பதவியேற்ற உடனே 5 உத்தரவாதங்கள் அமல்..?

கர்நாடக சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரசாரத்தின்போது, மக்களுக்கு பல அறிவிப்புகளை வெளியிட்டன. அவற்றில், தேர்தலையொட்டி மக்களுக்கு 5 உத்தரவாதங்களை காங்கிரஸ் கட்சி அளித்து இருந்தது. அவையாவன, கிரக ஜோதி எனப்படும் அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் வரை இலவச மின்சாரம், கிரக லட்சுமி எனப்படும் ஒவ்வொரு குடும்பத்தின் பெண் தலைவருக்கும் ரூ.2,000 வழங்குதல், அன்ன பாக்யா எனப்படும் திட்டத்தின் கீழ் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் மாதம் ஒன்றுக்கு 10 கிலோ … Read more

5 வாக்குறுதிகளை நிறைவேற்ற முதல் நாளிலேயே உத்தரவு – அடுத்த வாரம் அமலுக்கு வருகிறது

பெங்களூரு: கர்நாடக தேர்தலின்போது காங்கிரஸ் அளித்த 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அறிவிப்பை முதல்வர் சித்தராமையா நேற்று வெளியிட்டார். கர்நாடக முதல்வராக பொறுப்பேற்ற சித்தராமையா, தனது அமைச்சரவை சகாக்களுடன் நேற்று பிற்பகலில் பெங்களூருவில் உள்ள‌ தலைமைச் செயலகத்துக்கு சென்றார். அப்போது, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் விதான சவுதாவுக்குள் நுழையும் படிக்கட்டில் தலைகுனிந்து வணங்கினார். இதையடுத்து, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் தங்கள் அறைகளுக்கு சென்று கோப்புகளை பார்வையிட்ட‌னர். பின்னர், முதல்வர் சித்தராமையா தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் … Read more