ஒன்றிய அரசு வழங்கும் சூப்பர் திட்டம்.. யாரெல்லாம் தகுதியானவர்கள் தெரியுமா?

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) என்பது ஒன்றிய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் நேரடிப் பரிமாற்றப் பலன் திட்டமாகும். இத்திட்டத்தின்கீழ், பயனாளிகளின் வங்கி (அ) அஞ்சல் சேமிப்புக் கணக்கில் நேரடியாக ஊக்கத்தொகை ரூ.5,000 செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு உதவுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டம் பிரதமர் மோடியால் 2016ம் ஆண்டின் டிசம்பர் மாதம் 31ம் தேதி அறிவிக்கப்பட்டு, 2017ம் … Read more

விளையாட்டு பிரியர்களுக்கு நற்செய்தி..!! மீண்டும் இந்தியாவில் வருகிறது பப்ஜி..!

தென் கொரிய நாட்டை சேர்ந்த கிராப்டன் நிறுவனத்துக்கு சொந்தமானது பப்ஜி. இந்த விளையாட்டு இந்தியாவில் குறுகிய காலத்திலேயே அதீத வரவேற்பை பெற்றது. இந்தியாவில் இ-ஸ்போர்ட்ஸ் துறை வளர்ச்சியில் பப்ஜிக்கு முக்கிய பங்கு உண்டு. எனினும், இந்தியா – சீனா இடையேயான எல்லை பிரச்சினை வலுவடைந்தபோது பல்வேறு சீன செயலிகளுக்கு ஒன்றிய அரசு தடை விதித்தது. அப்போது பப்ஜி விளையாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டது. பின்னர் இந்திய அரசுடன் ஆலோசனை நடத்தி கிராப்டன் நிறுவனம் பிஜிஎம்ஐ என்ற பெயரில் மீண்டும் … Read more

வக் ஷீர் நீர்மூழ்கி கப்பலின் பரிசோதனை தொடக்கம்

மும்பை: சீனா தனது நாட்டின் கடற்படையை வலுப்படுத்தி வருகிறது. இந்திய பெருங்கடல் பகுதியில் சீன கடற்படை கப்பல்களின் போக்குவரத்தும் தற்போது அதிகரித்துள்ளது. இதனால் இந்திய கடற்படையில் உள்ள போர்க் கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ‘புராஜெக்ட்-75’ திட்டத்தின் கீழ் பிரான்ஸ் கடற்படை குழுமத்துடன் இணைந்து 6 கல்வாரி ரக நீர்மூழ்கி கப்பல்களை இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. கல்வாரி ரக நீர் மூழ்கி கப்பலில் இருந்து டார்பிடோ உட்படபல வகையான ஏவுகணைகளை ஏவ முடியும். … Read more

GNCTD: தேசிய தலைநகர் சிவில் சேவைகள் ஆணையம் அமைக்க அவசரச்சட்டம்: மத்திய அரசு

National Capital Territory of Delhi Ordinance: டெல்லி நிர்வாக சேவைகளில் மாநில அரசுக்கே அதிகாரம் உண்டு என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, இடமாற்றங்கள் தொடர்பான அவசரச் சட்டத்தை கொண்டு வந்தது மத்திய அரசு    

முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே சிவக்குமாரும் இன்று பதவியேற்பு

கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா இன்று பதவியேற்கிறார். பெங்களூரு கண்டீவரா மைதானத்தில் பிற்பகல் 12:30 மணியளவில் நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். சித்தராமையாவுடன் துணை முதலமைச்சராக டி.கே சிவக்குமாரும், அமைச்சர்கள் சிலரும் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பதவியேற்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா, ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களும் பதவியேற்பு நிகழ்ச்சியில் … Read more

இறைச்சி சாப்பிட்ட கல்லூரி மாணவி பலி.. விக்கல் ஏற்பட்டு உயிரிழந்த சோகம்!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பொன்னாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜவேல். இவரது மனைவி ஜெயலட்சுமி (38). இந்த தம்பதிக்கு மஞ்சு என்ற அஸ்வினி (18) என்ற மகள் இருந்தார். இவர் சென்னை மயிலாப்பூரில் உள்ள டிப்ளமோ நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 14-ம் தேதி வயலுக்குச் சென்ற ராஜவேல், வயல் சேற்றில் கிடந்த கொக்கு ஒன்றை எடுத்து வந்துள்ளார். பின்னர் அதை சமைத்து தனது மகளுக்கு கொடுத்துள்ளார். அதனை வாங்கி சாப்பிட்ட மஞ்சுக்கு … Read more

ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்படும் – இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு | முழு விவரம்

புதுடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து, மக்கள் தங்கள் கைவசம் உள்ள ரூ.2000 நோட்டுகளை மே 23-ம்தேதி முதல் வங்கிகள் மூலமாக மாற்றிக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு செப்.30-ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. அனைத்து ரூ.2000 நோட்டுகளையும் புழக்கத்தில் இருந்து அகற்ற ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ள நிலையில்வங்கிகள் அந்த நோட்டுகளை பொதுமக்களுக்கு விநியோகிக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறுவது தொடர்பாக இந்திய … Read more

ஜி7 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி

ஹிரோஷிமா நகரில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜப்பான் புறப்பட்டு சென்றார். இந்த  பயணம் குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடேவின் அழைப்பை ஏற்று ஜி7 மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாகவும், உலகம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றை கூட்டாக எதிர்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து இந்த பயணத்தின் போது உலகத் தலைவர்களுடன்  ஆலோசிக்கவுள்ளதாகவும் தெவித்துள்ளார். ஜி7 மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, ஹிரோஷிமா நகரில் … Read more

ஒடிசா மாநிலத்தில் ரூ.8,200 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை தொடங்கினார் பிரதமர் மோடி

புதுடெல்லி: ஒடிசா மாநிலத்தில் ரூ.8,200 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை நேற்று தொடங்கிவைத்த பிரதமர் மோடி, ஹவுரா-புரி இடையிலான `வந்தே பாரத்’ ரயில் சேவையையும் தொடங்கிவைத்தார். ஒடிசா மாநிலத்தில் முதல்முறையாக ஹவுரா-புரி இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்த சேவையை பிரதமர் மோடி காணொலி வாயிலாகத் தொடங்கிவைத்தார். மேலும், மொத்தம் ரூ.8,200 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களையும் பிரதமர் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: ஹவுரா-புரி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், … Read more

மும்பை வந்த விமானத்தில் கதவைத் திறந்து வெளியே விடுமாறு கலாட்டா.. நடுவானில் பதற்றமடைந்த பயணி..!

அமெரிக்காவில் இருந்து மும்பை வந்த ஏர் இந்தியா விமானத்தில் முதன் முறையாக பயணித்த ஒருவருக்கு நடுவானில் பேனிக் அட்டாக் எனப்படும் பயணப் பதற்றம் ஏற்பட்டு பெரும் ரகளையில் ஈடுபட்டார். நெவார்க் நகரில் இருந்து புறப்பட்ட விமானம் வானில் பறக்கத் தொடங்கிய சில மணி நேரத்தில், தனது மனைவியுடன் பிசினஸ் வகுப்பில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு பதற்றம் பற்றிக் கொண்டது. கதவை திறந்து தம்மை வெளியே விடுமாறு ரகளையில் ஈடுபட்ட நபர், விமான சிப்பந்திகளை நோக்கி கத்திக் … Read more