புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமான பணிகள்: திடீர் ஆய்வு செய்த பிரதமர் நரேந்திர மோடி!

டெல்லி: புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், திடீரென அங்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், தொழிலாளிகளிடம் கலந்துரையாடினார். இந்தியாவின் வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமான ஒன்று நாடாளுமன்றம். தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நமது நாடாளுமன்றம் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எந்த மாற்றமும் செய்ய முடியாது என்பதால், அதற்கு பதிலாக … Read more

போப் பிரான்சிஸ் விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ் விரைவில் குணமடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 86 வயதாகும் போப் பிரான்சிஸ்-க்கு மூச்சுக்குழாயில் ஏற்பட்ட தொற்று காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் இன்னும் சில நாட்களில் அவர் மருத்துவமனையில் இருந்து திரும்பலாம் என்றும் வாட்டிகன் மற்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போப் பிரான்சிஸ் விரைவில் குணமடைய பிரதமர் … Read more

பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை கொலை செய்து கத்தியுடன் காவல் நிலையத்தில் சரணடைந்த இளம்பெண்

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் மதுபோதையில் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த இளம்பெண் காவல் நிலையத்தில் சரணடைந்தார். முலுகு கிராமத்தை சேர்ந்த 30 வயதான ஸ்ரீனு என்பவர், அதே கிராமத்தை சேர்ந்த 25 வயது இளம் பெண் ஒருவர் வெளியில் செல்லும்போதெல்லாம் கடந்த சில மாதங்களாக பின்தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று இளம்பெண் வீட்டில் இருந்தபோது குடிபோதையில் தள்ளாடியபடி சென்ற ஸ்ரீனு, அவருக்கு பாலியல் தொல்லை … Read more

காரைக்காலில் வரும் திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

காரைக்கால்: காரைக்காலில் வரும் திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஸ்ரீ கைலாசநாதர் தேர் திருவிழாவை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக ‘போஸ்டர்’ ஒட்டியதாக 8 பேர் கைது

புதுடெல்லி: குஜராத் மாநிலம், அமதாபாத் நகரின் பல்வேறு பகுதிகளில் பிரதமர் மோடிக்கு எதிராக சர்ச்சைக்குரிய போஸ்டர் ஒட்டியதாக 8 பேரை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர். இது குறித்து அகமதாபாத் குற்றப் பிரிவு போலீஸார் கூறியதாவது: “மோடி ஹட்டாவோ தேஷ் பச்சோ” (மோடியை அகற்றுங்கள், நாட்டைக் காப்பாற்றுங்கள்) என்ற முழக்கங்கள் அடங்கிய போஸ்டர்கள் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று சட்டவிரோதமாக ஒட்டப்பட்டிருந்தன. இது குறித்த விசாரணையில் இந்தச் சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது … Read more

கொசுவர்த்தி சுருளால் ஏற்பட்ட விபரீதம்-6 பேர் உயிரிழப்பு

டெல்லியில் கொசுவர்த்தி சுருள் மெத்தையில் பட்டு தீப்பிடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தீக்காயம் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தனர். சாஸ்திரி பார்க் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இரவு கொசுவர்த்தி சுருளை ஏற்றிவைத்துவிட்டு உறங்கிக்கொண்டிருந்தபோது, கொசுவர்த்தி சுருள் மெத்தையில் விழுந்து தீப்பிடித்துள்ளது. நச்சுப்புகையால் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் சுய நினைவை இழந்துள்ளனர். தீ விபத்து மற்றும் மூச்சுத்திணறலால் உறங்கிக்கொண்டிருந்த ஒரு குழந்தை, ஒரு பெண் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். 2 பேர் மூச்சுத்திணறல் காரணமாக ஆபத்தான … Read more

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் அதிகாலை பயங்கர தீ விபத்து : சுமார் 500 கடைகள் தீயில் எரிந்து சேதம்!!

லக்னோ : உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கான்பூரின் பாஸ்மண்டி பகுதியில் உள்ள ஹம்ராஜ் மார்க்கெட்டில் அதிகாலை 3 மணி அளவில் தீ பிடித்து எரிய தொடங்கியது. அந்த நேரத்தில் காற்று பலமாக வீசிக் கொண்டு இருந்ததால் அடுத்தடுத்த கட்டிடங்களுக்கு தீப் பரவியது. இதனால் அருகில் இருந்த மசூத் டவரின் 2 கட்டிடங்கள் உள்ளிட்ட வணிக வளாகங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. இந்த … Read more

''தப்பி ஓடவில்லை; விரைவில் உலகின்முன் தோன்றுவேன்'': அம்ரித்பால் சிங்

சண்டிகர்: தான் தப்பி ஓடவில்லை என்றும் விரைவில் உலகின்முன் தோன்றுவேன் என்றும் பஞ்சாபில் தேடப்பட்டு வரும் மத போதகர் அம்ரித்பால் சிங் தெரிவித்துள்ளார். அம்ரித்பால் சிங் மீது உள்ள வழக்குகள் காரணமாக அவரை போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில், ஆடியோ கிளிப் ஒன்றை வெளியிட்ட அம்ரித்பால் சிங், அதனைத் தொடர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”நான் தப்பி ஓடிவிட்டேன். எனது சகாக்களை நான் விட்டுவிட்டேன் என்று நினைப்பவர்களின் நினைப்பு தவறு. இது ஒரு மாயை. இதனை … Read more

டெல்லி சாஸ்திரி பூங்கா அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு

டெல்லி: டெல்லி சாஸ்திரி பூங்கா அருகே கொசுவத்தி சுருளில் இருந்து வந்த நச்சு புகையை சுவாசித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். சென்னை சாஸ்திரி பூங்கா பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கொசு விரட்டி மருந்தில் இருந்த நச்சு வாயுவை சுவாசித்ததின் காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு கொசு விரட்டியை எரியவிட்டு தூங்கிய நிலையில் கொசு விரட்டியின் சுருள் மெத்தையின் மீது விழுந்ததில் தீ பற்றி … Read more

கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு அரசு சார்பில் விழா: முதல்வர் அறிவிப்பு..!!

முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் பேசியதாவது., “மத்திய அரசு உதவியோடும் உறுதுணையோடும் அதிக நிதி பெற்று சிறந்த முறையில் செலவிட்டு புதுச்சேரியை முன்னேற்றுவோம். பட்ஜெட் கூட்டத்தொடரில் எம்எல்ஏக்கள் கேள்விகளுக்கு நிறைவான பதில்களை அமைச்சர்கள் தந்துள்ளனர். புதிய சட்டப்பேரவைக்கு வரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. எங்கு என்பது விரைவில் முடிவு எடுக்கப்படும். இந்த ஆண்டுக்குள் புதிய சட்டப்பேரவை கட்ட முடிவு எடுக்கப்பட்டு பூமி பூஜை போடப்படும். அரசானது காலி பணியிடங்களை நிரப்புவதே எண்ணம். பத்தாயிரம் பணியிடங்கள் காலியாக இருந்தது. ஒவ்வொரு துறைவாரியாக நிரப்புகிறோம். … Read more