ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்படும் – இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு | முழு விவரம்

புதுடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து, மக்கள் தங்கள் கைவசம் உள்ள ரூ.2000 நோட்டுகளை மே 23-ம்தேதி முதல் வங்கிகள் மூலமாக மாற்றிக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு செப்.30-ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. அனைத்து ரூ.2000 நோட்டுகளையும் புழக்கத்தில் இருந்து அகற்ற ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ள நிலையில்வங்கிகள் அந்த நோட்டுகளை பொதுமக்களுக்கு விநியோகிக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறுவது தொடர்பாக இந்திய … Read more

ஜி7 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி

ஹிரோஷிமா நகரில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜப்பான் புறப்பட்டு சென்றார். இந்த  பயணம் குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடேவின் அழைப்பை ஏற்று ஜி7 மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாகவும், உலகம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றை கூட்டாக எதிர்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து இந்த பயணத்தின் போது உலகத் தலைவர்களுடன்  ஆலோசிக்கவுள்ளதாகவும் தெவித்துள்ளார். ஜி7 மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, ஹிரோஷிமா நகரில் … Read more

ஒடிசா மாநிலத்தில் ரூ.8,200 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை தொடங்கினார் பிரதமர் மோடி

புதுடெல்லி: ஒடிசா மாநிலத்தில் ரூ.8,200 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை நேற்று தொடங்கிவைத்த பிரதமர் மோடி, ஹவுரா-புரி இடையிலான `வந்தே பாரத்’ ரயில் சேவையையும் தொடங்கிவைத்தார். ஒடிசா மாநிலத்தில் முதல்முறையாக ஹவுரா-புரி இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்த சேவையை பிரதமர் மோடி காணொலி வாயிலாகத் தொடங்கிவைத்தார். மேலும், மொத்தம் ரூ.8,200 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களையும் பிரதமர் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: ஹவுரா-புரி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், … Read more

மும்பை வந்த விமானத்தில் கதவைத் திறந்து வெளியே விடுமாறு கலாட்டா.. நடுவானில் பதற்றமடைந்த பயணி..!

அமெரிக்காவில் இருந்து மும்பை வந்த ஏர் இந்தியா விமானத்தில் முதன் முறையாக பயணித்த ஒருவருக்கு நடுவானில் பேனிக் அட்டாக் எனப்படும் பயணப் பதற்றம் ஏற்பட்டு பெரும் ரகளையில் ஈடுபட்டார். நெவார்க் நகரில் இருந்து புறப்பட்ட விமானம் வானில் பறக்கத் தொடங்கிய சில மணி நேரத்தில், தனது மனைவியுடன் பிசினஸ் வகுப்பில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு பதற்றம் பற்றிக் கொண்டது. கதவை திறந்து தம்மை வெளியே விடுமாறு ரகளையில் ஈடுபட்ட நபர், விமான சிப்பந்திகளை நோக்கி கத்திக் … Read more

ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை – உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு

புதுடெல்லி: ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பாக தமிழக அரசு கொண்டுவந்த சட்டத் திருத்தம் செல்லும் என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மற்றும் மாட்டுவண்டிப் பந்தயங்களை தடையின்றி நடத்தும் வகையில், விலங்குகள் வதை தடுப்புச் சட்டத் திருத்தத்தை தமிழக அரசு கொண்டுவந்தது. இதேபோல, … Read more

"அனைவரும் தியாகம் செய்ய வேண்டும்" – துணை முதல்வர் பதவி கோரிய கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ ஜி.பரேமேஸ்வரா கருத்து 

பெங்களூரு: “அனைவரும் ஒரு கட்டத்தில் தியாகம் செய்ய வேண்டும். அனைத்தும் சிறப்பாகவே நடத்திருக்கிறது” என்று கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ ஜி.பரமேஸ்வரா இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற காங்கிஸ் கட்சி ஐந்து நாள் இழுபறிக்கு பின்னர் வியாழக்கிழமை மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவையும், ஒரே துணைமுதல்வராக டிகே சிவகுமாரையும் அறிவித்தது. மேலும் 2024 மக்களவைத் தேர்தல் முடியும் வரை மாநில காங்கிரஸின் தலைவராக அவரே தொடர்வார் எனவும் தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டு தலைவர்களும் பெங்களூருவில் … Read more

தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு..!

புதுச்சேரி வில்லியனூர் அருகே வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான். ஜி.என்.பாளையம் பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநரான மணிகண்டனின் இளைய மகன் ஜஷ்வந்த், வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானான். வெகுநேரம் தேடியும் மகன் கிடைக்காததால், வில்லியனூர் காவல் நிலையத்தில் தந்தை மணிகண்டன் புகார் அளித்தார். புகாரையடுதது சிறுவன் ஜஷ்வந்தை தேடிய போலீசார், அவனது வீட்டின் அருகே, உறவினர் ஒருவர் புதிதாக கட்டி வரும் வீட்டின் … Read more

மேற்கு வங்க வெடிவிபத்து: முக்கிய குற்றவாளி பானு பேக் உயிரிழப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கடந்த 16-ம் தேதி நிகழ்ந்த வெடிகுண்டு தொழிற்சாலை வெடி விபத்தில் சிக்கிய தொழிற்சாலை உரிமையாளர் பானு பேக் சிகிச்சை பலனின்றி காலமானார். தப்பியோடிய குற்றவாளி: மேற்கு வங்கத்தின் மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள காடிகுல் என்ற கிராமத்தில் பானு பாக் என்பவர் சட்டவிரோதமாக வெடிகுண்டு தொழிற்சாலையை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், இந்த வெடிகுண்டு தொழிற்சாலையில் கடந்த 16-ம் தேதி நேரிட்ட வெடிவிபத்தில் 5 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். பானு பேக் உள்பட … Read more

ரூ.2,000 நோட்டுகள் | “பணமதிப்பிழப்பு முட்டாள்தனமானம் என்பது உறுதியானது” – ப.சிதம்பரம் சாடல்

சென்னை: “எதிர்பார்த்ததைப் போலவே மத்திய அரசும், ரிச்ர்வ் வங்கியும் 2000 ரூபாய் நோட்டு வாபஸ் பெற்றுள்ளதோடு, இந்த நோட்டுகளை மாற்றிக் கொள்ள செப்.30 வரை அவகாசம் அளித்துள்ளது” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்பியுமான ப.சிதம்பரம் கூறியுள்ளார். இது தொடர்பாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எதிர்பார்த்தது போலவே, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் 2000 ரூபாய் நோட்டை திரும்பப் பெற்று, நோட்டுகளை மாற்ற செப்டம்பர் 30 வரை அவகாசம் அளித்துள்ளது. 2000 ரூபாய் … Read more

Tirupati: என்ன கொடுமை சார் இது… திருப்பதி ஏழுமலையானிடமே கைவரிசை… லட்டுக்கு வந்த சோதனை!

திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கால்கடுக்க பலமணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி என்றாலே லட்டுதான். திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்பவர்கள் லட்டு வாங்காமல் திரும்ப மாட்டார்கள். திருப்பதியில் தயாரிக்கப்படும் லட்டுக்கள், தயாரிக்கும் இடத்தில் இருந்து தட்டுக்களில் அடுக்கப்பட்ட கன்வேயர் பெல்ட் மூலம் பிரசாதம் விற்பனை செய்யப்படும் கவுண்டர்கள் அருகே கொண்டு வரப்படும். அப்படி தட்டுக்களில் வரும் லட்டுக்களை ஊழியர்கள் தள்ளுவண்டிகள் மூலம் அங்குள்ள … Read more