ஐஏஎஸ் அதிகாரி கொலை வழக்கில் விடுதலை ஆகிறார் முன்னாள் கேங்ஸ்டர் ஆனந்த் மோகன் – பிஹாரில் புதிய சர்ச்சை

பாட்னா: ஐஏஎஸ் அதிகாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையிலிருந்த முன்னாள் கேங்க்ஸ்டரும், முன்னாள் எம்.பி.யுமான ஆனந்த் மோகன் விடுதலையாகிறார். ராஜ்புட் சமூகத்தைச் சேர்ந்த அவர் இப்போது விடுவிக்கப்படுவது வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பிஹாரில் கணிசமான வாக்குவங்கி கொண்ட அச்சமூகத்தினரின் வாக்குகளைப் பெறுவதற்காகவே என்று விமர்சனங்களும் எழுந்துள்ளன. மேலும், தேர்தல் ஆதாயத்திற்காக சிறை சட்ட விதிகளில் மாற்றம் செய்து அதன்மூலம் ஆனந்த் மோகன் விடுதலையாக வழிவகுத்துக் கொடுத்துள்ளார் முதல்வர் நிதிஷ் குமார் என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. யார் … Read more

பெங்களூரு மெட்ரோ: பையப்பனஹள்ளி டூ கே.ஆர்.புரம் சேவை எப்போது? வெளியான ஹேப்பி நியூஸ்!

தலைநகர் டெல்லிக்கு அடுத்து இரண்டாவது மிகப்பெரிய மெட்ரோ சேவையை கொண்ட நகரமாக பெங்களூரு திகழ்கிறது. இங்கு ’நம்ம மெட்ரோ’ என்ற பெயரில் 25.63 கிலோமீட்டர் தூர பர்பிள் லைன், 30.32 கிலோமீட்டர் தூர கிரீன் லைன் ஆகியவை பயன்பாட்டில் இருக்கின்றன. இதில் பர்பிள் லைன் என்பது பெங்களூருவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை ஒன்றிணைக்கும் வகையில் பையப்பனஹள்ளி முதல் கெங்கேரி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. பெங்களூரு நம்ம மெட்ரோ கிரீன் லைன் என்பது வடக்கு மற்றும் … Read more

ஹர ஹர மகாதேவா முழக்கத்துடன் யாத்ரீகர்களுக்காக திறக்கப்பட்ட கேதார்நாத் கோவில்!

கேதார்நாத் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பனிப்பொழிவு காரணமாக பனி மூட்டத்தில் மூழ்கியுள்ளது. ஏப்ரல் 25ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக்கில் வானிலை சீரடைந்த பிறகு யாத்திரை மீண்டும் தொடங்கியது.

‘ரெயின்போ திருமணங்கள் கைகூடும்…’ – தலைமை நீதிபதிக்கு தன்பாலின உறவாளர்களின் பெற்றோர் நம்பிக்கைக் கடிதம்

புதுடெல்லி: ரெயின்போ திருமணங்கள் கைகூடும் என நம்பிக்கை தெரிவித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு தன்பாலின உறவாளர்களின் பெற்றோர்கள் கூட்டமைப்பு ஸ்வீகார் (Sweekar) கடிதம் எழுதியுள்ளது. தன்பாலினத்தவர்களின் திருமணத்துக்கு சட்ட ரீதியாக அங்கீகாரம் வழங்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில், ரெயின்போ திருமணங்கள் கைகூடும் … Read more

"ஒரு முஸ்லிம் ஓட்டு கூட தேவை இல்லை".. பாஜக எம்எல்ஏ ஈஸ்வரப்பா பேச்சு.. கர்நாடகாவில் வெடித்த சர்ச்சை!

பெங்களூர்: கர்நாடகாவில் ஏற்கனவே பாஜகவின் கிராஃப் அநியாயத்துக்கு இறங்கிக் கொண்டிருக்கும் சூழலில், அங்கு பாஜக எம்எல்ஏ ஒருவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவுக்கு ஒரு முஸ்லிம் ஓட்டு கூட தேவை இல்லை என்று அவர் பேசி இருப்பது பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அங்கு அரசியல் கட்சிகள் சூறாவளிப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி, கர்நாடகாவில் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக … Read more

மே மாதத்தில் 12 நாட்கள் விடுமுறை..!! வங்கி பணிகளை திட்டமிட்டுக்கோங்க!!

தனியார் மற்றும் அரசு சார்ந்த வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கீழ் தான் செயல்பட்டு வருகிறது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடப்படும் விடுமுறைகளை ரிசர்வ் வங்கி அந்த மாதம் துவக்கத்திலேயே அறிவிப்பது வழக்கம் ஆகும். பொதுமக்கள் தங்களது வரவு – செலவு கணக்கு, பணத்தை டெபாசிட் செய்வது, எடுப்பது, லோன் உள்ளிட்ட தேவைகளுக்காக வங்கிகளை நாடி வருகின்றனர். எனினும் வங்கி பணி நாட்கள் எது என்று தெரியாமல் விடுமுறை நாட்களில் வங்கிக்கு சென்று திரும்புவதும் நடைபெறுகிறது. … Read more

அகவிலைப்படி மீண்டும் உயர வாய்ப்பு! மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்..!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) மற்றும் மத்திய அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலை நிவாரணம் (DR) 4 சதவீதம் அதிகரித்துள்ளது என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மார்ச் 24, 2023 அன்று அறிவித்தார். இந்த புதிய அறிவிப்பு மூலம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி அளவு 42 சதவீதமாக உயர்த்தப்படும். இதன் மூலம் சுமார் 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 69.76 லட்சம் … Read more

ஆபரேஷன் காவிரி | சூடானில் இருந்து 278 இந்தியர்களுடன் புறப்பட்டது ஐஎன்எஸ் சுமேதா கப்பல்

கார்த்தும்: உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடான் நாட்டில் இருந்து மீட்கப்பட்ட 278 இந்தியர்களுடன் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சுமேதா கப்பல் புறப்பட்டது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி தனது ட்விட்டர் பக்கத்தின் தெரிவித்துள்ளார். அதில் அவர் மீட்கப்பட்ட இந்தியர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். “ஆபரேஷன் காவிரி மூலம் மீட்கப்பட்ட இந்தியர்கள் அடங்கிய முதல் குழு சூடான் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது. இந்தக் குழுவானது ஐஎன்எஸ் சுமேதா கப்பலின் மூலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா … Read more

Kochi Water Metro: வெறும் ரூ.20க்கு ஏசி பயணம்… தண்ணீரில் சீறும் சொகுசு மெட்ரோ… சிறப்பம்சங்கள் இதோ!

கொச்சி வாட்டர் மெட்ரோ (Kochi Water Metro – KWM)… இந்தப் பெயர் இந்தியாவிற்கு புதிது. கேரளாவின் கனவு திட்டம் தற்போது நாட்டிற்கே முன்னுதாரணமாக மாறியுள்ளது. இம்மாநிலத்தில் நீர்வழிப் போக்குவரத்து என்பது அவசியமான ஒன்றாக இருக்கும் சூழலில், வாட்டர் மெட்ரோ அதனை ஒருபடி மேலே கொண்டு சென்றுள்ளது. இந்த திட்டத்திற்காக 1,136.83 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. கொச்சி வாட்டர் மெட்ரோ கேரள அரசு, ஜெர்மனியை சேர்ந்த KFW நிறுவனம், பசுமை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வங்கிகள் ஆகியவற்றின் … Read more

‘மக்கள் தொகையில் சீனாவை முந்தும் இந்தியா’ – ஜெர்மனி பத்திரிகை கார்ட்டூனால் கொதிப்படைந்த இந்தியர்கள்

சென்னை: மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவை, இந்தியா இந்த ஆண்டு பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடிக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் தெரிவித்தது. இதைக் கருப்பொருளாக வைத்து ஜெர்மன் நாட்டின் ’டெர் ஸ்பீகல்’ (Der Spiegel) என்ற வார இதழ் கார்ட்டூன் ஒன்றை வெளியிடப்பட்டது. அது இந்தியர்களை கொதிப்படைய செய்யும் வகையில் உள்ளது. அந்தக் கார்ட்டூனில் சீனா மற்றும் இந்திய தேச கொடிகளை பிரதிபலிக்கும் ரயில்கள் இரண்டு அதன் தடங்களில் செல்கின்றன. அதில் இந்திய … Read more