எம்.பி. பதவி பறிப்பு எதிரொலி.. அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு ஒரு மாதம் கெடு!

டெல்லி: அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டிருப்பதால் டெல்லியில் உள்ள அரசு பங்களாவில் அவர் தொடர்ந்து குடியிருக்க முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது.கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரசாரத்தில், கர்நாடக மாநிலம் கோலாரில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரை வைத்துள்ளது எப்படி?’ என்று தெரிவித்தார்.இதை எதிர்த்து ராகுலுக்கு எதிராக குஜராத்தின் சூரத்தை சேர்ந்த பாஜ எம்எல்ஏ புர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் அவதூறு … Read more

இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து!!

கர்நாடகா அரசு இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது. முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் நேற்று கர்நாடகா மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒக்கலிகர்களுக்கு 6 சதவீதமும், லிங்காயத் சமூகத்திற்கு 7 சதவீத இட ஒதுக்கீடும் வழங்குவது என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மத சிறுபான்மையினருக்கான இஸ்லாமியர் தனி இடஒதுக்கீடு ரத்து செய்யப்படுகிறது. பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு பதிலாக … Read more

லட்சத் தீவு எம்.பி. முகமது பைசல் போன்று மீண்டு வருவாரா ராகுல்?

புதுடெல்லி: லட்சத் தீவின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் முகமது பைசல். கடந்த 2009 -ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது அப்போதைய மத்திய அமைச்சர் சையதுவின் மருமகன் முகமது சலியாவை கொலை செய்ய முயற்சித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் முகமது பைசலுக்கு 10 ஆண்டுசிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவரது மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. ஆனால், முகமது பைசல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், எம்பி பதவியில் … Read more

ராகுல் காந்தி தகுதி நீக்கம்: உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல்!

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 8(3) படி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு நேற்று முன் தினம் இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து நேற்று மக்களவைச் செயலகம் ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவித்தது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் … Read more

7th Pay Commission: அடி தூள்… டிஏ ஹைக்கை தொடர்ந்து ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் ஏற்றம், கணக்கீடு இதொ!!

மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நல்ல செய்தி நேற்று வந்தது. அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பை நேற்று மத்திய அமைச்சரவை வெளியிட்டது. அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு தற்போது 42 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரண (டிஆர்) அதிகரிப்பு ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வரும். இதனால் ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும்.  ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும்? அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 4 சதவீதம் … Read more

வருமான வரி உச்சவரம்பில் திருத்தம் செய்து புதிய நிதி மசோதாவுடன் நாடாளுமன்றத்தில் தாக்கல்!

வருமான வரி உச்சவரம்பில் திருத்தம் செய்து புதிய நிதி மசோதாவுடன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 7 லட்சம் ரூபாய் வரை வருமான வரி செலுத்தத் தேவையில்லை. ஆனால் 7 லட்சத்து 100 ரூபாய் வருமானத்துக்கு 25 ஆயிரத்து 10 ரூபாய் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற நிலை இருந்தது. இதில் திருத்தம் வெளியிட்ட நிதியமைச்சர், உச்சவரம்பை உயர்த்தியுள்ளார். இத்திருத்தத்தில் 7 லட்சத்து 27 ஆயிரத்து 700 ரூபாய் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு … Read more

ராகுல்காந்தியை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு

டெல்லி: ராகுல்காந்தியை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு அளித்துள்ளார். வழக்குகளில் தண்டனை பெற்ற உடனேயே தகுதி நீக்கம் செய்யப்படும் முறையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. உடனடியாக தகுதி நீக்கம் செய்வது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தி தகுதி நீக்கத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் – மவுனம் காக்கும் பிஹார் முதல்வர் நிதிஷ், ஒடிசா முதல்வர் நவீன்

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். எனினும் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர். மம்தா பானர்ஜி: ராகுல் காந்தி விவகாரத்தில் மேற்குவங்க முதல்வரும் திரிண மூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மவுனம் காத்து இருந்தார். அவர் நேற்று தனது மவுனத்தை கலைத்தார். அவர் … Read more

கனடாவில் மகாத்மா காந்தியின் சிலையை சேதப்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள மகாத்மா காந்தியின் வெண்கல சிலைக்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் அவமதிப்பு செய்துள்ளனர். ஹாமில்டனின் சிட்டி ஹால் அருகே வெண்கலத்தால் 6 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த காந்தி சிலையின் முகம் சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சிலையின் மீது பெயிண்டை ஊற்றியதுடன், பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவிக்கும் வாசகங்களை சிலையின் அடிப்பாகத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் எழுதியுள்ளனர்.  Source link

ராகுல் காந்தி தகுதிநீக்கம்: விமர்சனத்தைத் தவிர்த்த அமெரிக்கா

வாஷிங்டன்: ராகுல் காந்தி தகுதிநீக்கம் விவகாரத்தில் இப்போதைக்கு தனிப்பட்ட ரீதியில் விமர்சிக்க முடியாது என்று விலகி நிற்கிறது அமெரிக்கா. சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க அமெரிக்கா இந்தியாவை ஒரு வலுவான கூட்டாளியாகக் கருதுகிறது. இதனால், இந்தியா – அமெரிக்கா இடையே சில காலமாக நெருக்கமான நல்லுறவு நீடித்துவருகிறது. இந்நிலையில் ராகுல் காந்தி விவகாரத்தில் ஜனநாயகத்தை மதிக்கிறோம் தனிப்பட்ட கருத்து இப்போதைக்கு சொல்ல முடியாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மக்களவை … Read more