24 மணி நேரத்தில் இதயம் உள்ளிட்ட 6 உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள்.. மும்பை தனியார் மருத்துவமனை தேசிய அளவில் சாதனை!!

மும்பையை சேர்ந்த தனியார் மருத்துவமனை ஒன்றில், 24 மணி நேரத்தில் இதயம் உள்ளிட்ட 6 உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், 3 நன்கொடையாளர்கள் உட்பட 8 பேரிடம் இருந்து இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் தானமாக பெற்றப்பட்டதாகவும், அதைவைத்து உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. 25 அறுவை சிகிச்சை நிபுணர்கள், 30 செவிலியர்கள் உள்ளிட்டோருடன் அறுவை சிகிச்சை உட்பட ஆறு சிகிச்சை … Read more

ஆபரேஷன் திரிசூல் மூலம் 33வது குற்றவாளி சவுதியில் இருந்து நாடு கடத்தல்: சிபிஐ நடவடிக்கை

புதுடெல்லி: ஆபரேஷன் திரிசூல் மூலம் கேரள போலீசாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளி இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டான். நிதி, பண மோசடி, கடத்தல், கொலை குற்றம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கி வெளிநாடு தப்பியோடிய குற்றவாளியை கண்டுபிடித்து இந்தியா கொண்டு வர ஆபரேஷன் திரிசூல் திட்டத்தை சிபிஐ அறிமுகப்படுத்தி உள்ளது. தப்பிய குற்றவாளி எந்த நாட்டில் தங்கியிருக்கிறான் என்பதை இன்டர்போல் போலீசார் உதவியுடன் கண்டறிவது, பின்னர் அந்நாட்டின் அமைச்சக உதவியுடன் அவனை நாடு கடத்த ஏற்பாடு செய்வது, பிறகு … Read more

கட்டமைப்பு வசதி வழங்க கவனம் செலுத்துகிறேன்: பெங்களூரு – மைசூரு விரைவு சாலை தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேச்சு

பெங்களூரு: ‘‘நாட்டு மக்களுக்கு சிறந்த அடிப்படை கட்டமைப்பு வசதிகளை வழங்குவதில் நான் கவனம் செலுத்துகிறேன்’’ என பெங்களூரு – மைசூரு தேசிய நெடுஞ்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் மோடி தெரிவித்தார். கர்நாடகாவில் ஓரிரு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி கடந்த ஜனவரியில் இருந்து 6-வது முறையாக நேற்று கர்நாடகாவுக்கு வந்தார். காலை 11.30 மணியளவில் மைசூரு விமான நிலையத்துக்கு வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டியாவுக்கு சென்றார். அங்குள்ள … Read more

7 தேசிய கட்சிகளின் 66 சதவீத வருமானம் அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து திரட்டப்பட்டவை – ஆய்வறிக்கை!

7 தேசிய கட்சிகளின் 66 சதவீத வருமானம் அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து திரட்டப்பட்டவை என்பது ஆய்வறிக்கை மூலம் வெட்டவெளிச்சமாகியுள்ளது. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், பாரதிய ஜனதா, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், 2 இடதுசாரிக் கட்சிகள், தேசிய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு 2021-2022ம் ஆண்டில் அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து 2,172 கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருப்பதாகவும், இது மொத்த வருமானத்தில் 66 சதவீதம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

விமான கழிப்பறையில் புகை பிடித்தவர் போலீசிடம் ஒப்படைப்பு: ஏர் இந்தியா நடவடிக்கை

மும்பை: ஏர் இந்தியா விமானத்தில் கழிப்பறையில் புகை பிடித்த நபரை போலீசாரிடம் ஒப்படைத்ததாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. டாடா குழுமத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா விமானம் ஏஐ130 மார்ச் 10ம் தேதி லண்டனிலிருந்து மும்பைக்கு வந்து கொண்டிருந்தது. அதில் பயணித்த ஒரு நபர் கழிப்பறையில் புகை பிடித்துள்ளார். விமான ஊழியர்கள் பலமுறை எச்சரித்தும் அவர் தொடர்ந்து புகை பிடித்ததுடன், ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து விமானம் மும்பை வந்தவுடன், அந்த நபரை மும்பை … Read more

மக்களுக்கு விரைவில் நீதி கிடைக்க தொழில்நுட்பத்தை நீதித்துறை பயன்படுத்த வேண்டும் – தலைமை நீதிபதி வலியுறுத்தல்

புதுடெல்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) நாடுகளின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளின் 18-வது கூட்டம் டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் ‘‘ஸ்மார்ட் நீதிமன்றங் கள் மற்றும் நீதித்துறையின் எதிர் காலம்’’ என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியதாவது: நீதித்துறையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்தியாவில் இ-நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன. இதனால் நீதித்துறை திறம்படவும், வெளிப்படைத்தன்மையுடனும் செயல்படுகிறது. இதில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பணிகள், தேவையான டிஜிட்டல் … Read more

மீண்டும் அதானி சர்ச்சை; பட்ஜெட் தொடரின் 2வது அமர்வில் எதிர்க்கட்சிகள் பக்கா பிளான்!

கடந்த ஜனவரி மாதம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2023-24 தொடங்கியது. ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடைபெற்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொது பட்ஜெட் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் ஒரு மாத கால விடுமுறைக்கு பின்னர், பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று (மார்ச் 13) தொடங்குகிறது. இரண்டாவது அமர்வு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி வரை இந்த அமர்வு நடைபெறவுள்ளது. இதில் … Read more

இந்திய ஜனநாயகம் குறித்து சிலர் லண்டனில் கேள்வி எழுப்புகின்றனர்; இது நாட்டை அவமதிக்கும் செயல்: பிரதமர் மோடி கண்டனம்

டெல்லி: இந்திய ஜனநாயகம் குறித்து சிலர் லண்டனில் கேள்வி எழுப்புகின்றனர்; இது நாட்டை அவமதிக்கும் செயல் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ஜனநாயக பாரம்பரியம் மீது எந்த சக்தியாலும் பாதிப்பு ஏற்படுத்த முடியாது. இந்திய ஜனநாயகத்தின் அடித்தளம் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக சமீபத்தில் ராகுல் காந்தி லண்டனில் பேசியிருந்த நிலையில், பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் இசை நிகழ்ச்சியின்போது நாட்டுப்புற பாடகர் மீது பண மழை பொழிந்த மக்கள்

வல்சாத்: கடந்த சனிக்கிழமை குஜராத் மாநிலம் வல்சாத் நகரில் பக்தி இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் பிரபல குஜராத்தி நாட்டுப்புற பாடகர் கிர்திதன் காத்வி தன் இசைக் குழுவுடன் பாடல்கள் பாடினார். அவர் பாட பாட அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் உணர்ச்சிமயமாயினர். ரூபாய் நோட்டுகளை எடுத்து காத்வி மீது பொழிந்தனர். இதற்கென்று 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுக் கட்டுகளை மக்கள் கொண்டு வந்திருந்தனர். ஒவ்வொரு நோட்டாக எடுத்து மேடையை நோக்கி மக்கள் வீசினர். … Read more

ரஷ்ய கச்சா எண்ணெய் மீதான மேற்கத்திய நாடுகளின் விலை நிர்ணயத்தை இந்தியா மீறாது என தகவல்!

ரஷ்ய கச்சா எண்ணெய் விலையை பேரலுக்கு 60 டாலர் என்று மேற்கத்திய நாடுகள் நிர்ணயித்துள்ள வரம்பை இந்தியா மீறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவை தண்டிக்கும் வகையில் அந்நாட்டின் கச்சா எண்ணெய் மதிப்பை மேற்கத்திய நாடுகள் குறைத்தன. இதை சுட்டிக்காட்டி, வர்த்தகர்கள் மற்றும் வங்கிகளுக்கு விலை வரம்பை மீறக்கூடாதென இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து ஜி20 மாநாட்டுக்கு இடையே அமெரிக்கா மற்றும் ஜி7 நாடுகளுடன் இந்தியா அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் … Read more