மணீஷ் சிசோடியா கைதுக்கு பினராயி விஜயன் கண்டனம்

கொல்லம்: டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்திருப்பது, எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காக, ஒன்றிய அரசின் அமைப்புகளை பாஜக எப்படி தவறாகப் பயன்படுத்துகிறது என்பதற்கான எடுத்துக்காட்டு என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் எனவும் தெரிவித்துள்ளார்.

'கங்கா விலாஸ்' கப்பல் பெயரை மாற்ற வலியுறுத்தல்: உ.பி. உயர் நீதிமன்றத்தில் அகில இந்திய இந்து மகாசபா மனு

புதுடெல்லி: உலகின் தொலைதூரம் பயணிக்கும் ‘கங்கா விலாஸ்’ எனும் சொகுசுக் கப்பலை கடந்த ஜனவரி 13ல் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதன் பெயரை மாற்ற வலியுறுத்தி, அகில இந்திய இந்து மகாசபா உத்தரப்பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த இந்த சொகுசுக் கப்பல், வாரணாசியிலிருந்து வங்கதேசம் வழியாக அசாமின் திப்ருகருக்கு விடப்பட்டுள்ளது. ஐந்து நட்சத்திர அந்தஸ்தில் கட்டமைக்கப்பட்ட இக் கப்பல், அண்டை நாடனான வங்கதேசத்திலும் நுழைந்து செல்கிறது. சுமார் 4,000 … Read more

ஓட்டலில் நடந்த திருமண பார்ட்டியில் ‘டிஜே’ பாடலா வேணும்… இந்தா வாங்கிக்கோ! விருந்தினர்களுக்கு தர்மஅடி கொடுத்த ஊழியர்கள்

காசியாபாத்: காசியாபாத் ஓட்டலில் நடந்த திருமண பார்ட்டியில் டிஜே பாடல் கேட்ட விருந்தினர்களுக்கு, ஓட்டல் ஊழியர்கள் தர்மஅடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தின் மசூரி பகுதியில் செயல்படும் பிரபல ஓட்டலில் திருமண பார்ட்டி நடந்தது. ஓட்டலுக்கு வந்தவர்கள் இரவு சுமார் 2 மணியளவில் ‘டிஜே’ பாடலுக்கு (வெவ்வேறு இசைக்கருவிகளை பயன்படுத்தி இசைக்கப்படும் இசை) ஆட்டம் போட வேண்டும் என்று விரும்பினர். அதற்காக ஓட்டல் உரிமையாளரிடம் ‘டிஜே’ பாடலை ஒலிபரப்பச் செய்யும்படி கேட்டனர். … Read more

இணையத்தில் வைரலாகும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை இரண்டு காண்டாமிருகங்கள் துரத்திம் வீடியோ..!!

ஜல்தாபாரா தேசியப் பூங்கா கிழக்கு இமயமலை அடிவாரத்தில் மேற்கு வங்கம் மாநிலத்திலுள்ள ஜல்பாய்குரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தப் பூங்காவின் அருகில் தோர்ஸா ஆறு செல்கிறது. இந்தப் பூங்காவானது கடல் மட்டத்தில் இருந்து 61 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த பூங்காவில் ஏழு சுற்றுலாப் பயணிகள் சாஃபாரிக்கு சென்ற வாகனம் மீது இரண்டு காண்டாமிருகங்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சஃபாரி அனுபவத்தை அனுபவிக்க உற்சாகமாக இருந்த ஏழு சுற்றுலா பயணிகள் ஜீப்பில் ஏறி காட்டுக்குள் சென்றனர். அந்த பூங்காவில், புகழ்பெற்ற … Read more

அக்னிபத் திட்டத்திற்கு எதிரான மனு தள்ளுபடி..!!

மத்திய பாஜக அரசு ராணுவத்தில் அக்னிபத் என்ற திட்டத்தை புதிதாக கொண்டு வந்தது. முப்படைகளுக்கும் ஒப்பந்த அடிப்படையில் குறுகிய கால சேவைக்கு வீரா்களைத் தோ்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை பாதுகாப்பு அமைச்சகம் கடந்த ஜூன் 14-இல் அறிவித்தது. 17½ வயது முதல் 23 வரையிலான இளைஞர்கள் இந்த திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் மத்திய அரசு அக்னிபத் திட்டத்தை செயல்படுத்தியது. … Read more

இந்திய ஒற்றுமை யாத்திரை 2.O-க்கு தொண்டர்கள் தயார்: காங்கிரஸ்

புதுடெல்லி: இந்திய ஒற்றுமை யாத்திரை 2.O-க்கு தொண்டர்கள் தயாராக இருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வைபவ் வாலியா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மேற்கொண்ட இந்திய ஒற்றுமை யாத்திரை கடந்த மாதம் நிறைவடைந்தது. இந்நிலையில், இந்திய ஒற்றுமை யாத்திரை 2.O-க்கு அக்கட்சி திட்டமிட்டுள்ளது. சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் நடைபெற்ற அக்கட்சியின் 85வது மாநாட்டில் உரையாற்றிய ராகுல் காந்தி, தெற்கில் இருந்து வடக்கு நோக்கி நடைபெற்ற இந்திய … Read more

ஷிவமொக்காவில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

கர்நாடக மாநிலம் ஷிவமொக்காவில் 450 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். தாமரை வடிவில் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையம், கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவுக்கு அடுத்தபடியாக 2-வது பெரிய விமான நிலையமாகும். இன்று முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் 80-வது பிறந்தாளையொட்டி நிகழ்ச்சி மேடையில் அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக ஷிவமொக்கா விமான நிலையத்தின் மாதிரியை பிரதமர் மோடி பார்வையிட்டார். கர்நாடகாவில் ஏப்ரல்-மே மாதங்களில் சட்டப்பேரவை … Read more

சட்டப்பேரவை தேர்தலில் ஆர்வமுடன் ஜனநாயக கடமையாற்றும் மக்கள்!: மேகாலயாவில் 44.73%, நாகாலாந்தில் 57.06% வாக்குகள் பதிவு..!!

ஷில்லாங்: மேகாலயா சட்டப்பேரவை தேர்தலில் இதுவரை 44.73 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாகாலாந்து சட்டப்பேரவை தேர்தலில் இதுவரை 57.06 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகாலாந்தில் சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் சட்டமன்றங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திரிபுராவில் கடந்த 16ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. எஞ்சிய மேகாலயா, நாகாலாந்து சட்டமன்றங்களுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. … Read more

மேகாலயாவில் 26.7%, நாகாலாந்தில் 38.68% | காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்

ஷில்லாங்/ கோஹிமா: வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகாலாந்தில் இன்று (பிப்.27) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் 11 மணி நிலவரப்படி மேகாலயாவில் 26.7%, நாகாலாந்தில் 38.8 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. இந்த இரண்டு மாநிலங்களில் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல் ஐந்து வாக்காளர்களுக்கு நினைவுப் பரிசு: மேகாலயா மாநிலத்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 375 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் சோஹியாங் தொகுதியில் ஒரு … Read more

தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக திருமதி குஷ்பு சுந்தர் நியமனமும் பின்னணியும்

நியூடெல்லி: இந்திய அரசின் சட்டபூர்வமான அமைப்பான தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக திருமதி  குஷ்பு சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். 1992ம் ஆண்டு முதல் இயங்கிவரும் தேசிய மகளிர் ஆணையம், மகளிர் நலன் தொடர்பான கொள்கைகளை உருவாக்கி, அவற்றை இந்திய அரசுக்கு பரிந்துரைக்கும் அமைப்பு ஆகும்.  தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக திருமதி  குஷ்பு சுந்தர் நியமிக்கப்பட்டதற்கு அவர், டிவிட்டரில் அனைவருக்கும், குறிப்பாக பிரதமர் மற்றும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். I thank our H’ble PM … Read more