ஆன்மிக அரசியல் எல்லாம் வேலைக்கு ஆகாது; உச்சநீதிமன்றம் குட்டு.!

அரசியலையும் மதத்தையும் பிரித்தால் மட்டுமே வெறுப்பு பேச்சுக்களை முடிவுக்கு கொண்டு வர முடியும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்து பெரும்பான்மைவாத பாஜக மத்தியில் ஆட்சி அமைத்தது முதலே, இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புணர்வு மற்றும் வெறுப்பு பேச்சுக்கள் அதிகரித்து விட்டதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இந்து ராஷ்டிரத்தை அமைக்கப் பாடுபடும் வலதுசாரி தீவிர இந்துத்துவ அமைப்பான ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் அரசியல் பிரிவான பாஜக ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி என்ற கொள்கைகளை பின்பற்றி … Read more

நிலக்கரி வரி விதிப்பில் முறைகேடு சட்டீஸ்கர் காங். தலைவர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நிலக்கரி வரி விதிப்பில், ஒரு டன்னுக்கு ரூ. 25 வீதம் கடந்த 2 ஆண்டுகளில் ரூ. 540 கோடி வரை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்திருப்பது கண்டறியப்பட்டது. இந்த முறைகேட்டில் காங்கிரஸ் தலைவர்கள், இடைத்தரகர்கள், வணிகர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில், ராய்ப்பூர் மேயரும் காங்கிரஸ் தலைவருமான அய்ஜாஸ் தேபர், ஐஏஎஸ் அதிகாரி அனில் குமார் துதேஜா, மதுபான தொழிலதிபர் பல்தேவ் சிங் பாட்டியா ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் … Read more

கர்நாடகா தேர்தல்; பாஜகவிற்கு காத்திருக்கும் சிக்கல்.! என்ன ஆகும்.?

கர்நாடகா தேர்தலில், மக்களை வதைக்கும் பல்வேறு சிக்கல்கள் பாஜகவிற்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா பாஜகவிற்கு ஏன் முக்கியம்.? கர்நாடகாவில் பாஜகவில் மீண்டும் ஆட்சி அமைப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் தென் இந்திய மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா மட்டும் தான். கடந்த முறை தேர்தலில் பாஜக மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை, மாறாக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியமைத்ததாக குற்றச்சாட்டு உள்ளது. கடந்த கர்நாடகா தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் … Read more

புதுச்சேரி காவலர்களுக்கு பிறந்தநாள், திருமண நாளில் விடுமுறை தரப்படும்: அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரி: புதுச்சேரி காவலர்களுக்கு பிறந்தநாள், திருமண நாள், முக்கிய நிகழ்வுகளுக்கு விடுமுறை தரப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். போதைப் பொருளை தடுக்க குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாயும் எனவும் அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரியில் 60 எஸ்.ஐ., 26 ஓட்டுநர்கள், 500 ஊர்க்காவல் படை வீரர்கள் என காலி பணியிடங்கள் இவ்வாண்டுக்குள் நிரப்பப்படும் எனவும் கூறினார்.

கர்ப்பமுற்ற பெண் ஊர் காவல் படை ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அளிக்கப்படும்: அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

புதுச்சேரி: கர்ப்பமுற்ற பெண் ஊர் காவல் படை ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அளிக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். 974 வீரர்களுடன் இரண்டாவது ஐ.ஆர்.பி.என். உருவாக்கப்படும். 200 கடலோர ஊர்க் காவல் படை வீரர்கள் பணியிடமும் இந்த ஆண்டுக்குள் நிரப்பப்படும் என்றும் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

உங்கள் கைகளில் இருக்கும் ஸ்மார்ட்போனில் சாட்ஜிபிடி-ஐ பயன்படுத்துவது எப்படி?

தற்போது உள்ள சூழலில் நாளுக்கு நாள் சாட்ஜிபிடி-ஐ பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், பலர் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டரில் மட்டுமே இதனை பயன்படுத்த முடியும் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உங்கள் கைகளில் இருக்கும் ஸ்மார்ட்போனில் சாட்ஜிபிடி-ஐ பயன்படுத்தலாம். 1. உங்கள் ஸ்மார்ட்போனில் ChatGPT-ஐ இலவசமாகப் பயன்படுத்த, முதலில் Microsoft-ன் Microsoft Edge உலாவியைப் பதிவிறக்கவும். 2. இதற்குப் பிறகு மைக்ரோசாஃப்ட் பிங்கை தேடுபொறியில் தேடுங்கள். 3. இப்போது தேடல் பாக்ஸூக்கு அருகில் உள்ள Bing-ஐகானைக் … Read more

விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் 384 அத்தியாவசிய மருந்துகளின் விலை 11% உயர்வு: ஏப். 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது

புதுடெல்லி: விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் 384 அத்தியாவசிய  மருந்துகள் மற்றும் 1,000க்கும் மேற்பட்ட மருந்துகளின்  விலைகள் 11 சதவீதக்கும் அதிகமாக உயர்த்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவ துறையில் மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் அடிப்படையில்,  தேசிய அத்தியாவசிய மருந்துப் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள மருந்துகளின்  விலைகள் ஆண்டுதோறும் உயர்த்தப்படும். அந்த வகையில் 384 அத்தியாவசிய  மருந்துகள் மற்றும் 1,000க்கும் மேற்பட்ட மருந்துகளின்  விலைகள் 11 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்த்தப்படும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 1ம் … Read more

ஆந்திராவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

கடப்பா: ஆந்திரவின் கடப்பா மாவட்டம் புலிவேந்துலா தொகுதி முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சொந்த தொகுதியாகும். இங்கு, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பரத் குமார் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆடு வியாபாரி திலீப் என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பரத்குமார் துப்பாக்கியால் திலீப்பை நோக்கி சுட்டார். அப்போது திலீப்பை காப்பாற்ற வந்த முகமது பாஷாவையும் சுட்டு விட்டு தப்பிவிட்டார். இதில் திலீப் உயிரிழந்தார். படுகாயமடைந்த முகமது … Read more

Coronavirus: மீண்டும் வேகம் காட்டும் கோவிட்! 5 மாநிலங்களில் அதிகரித்தது அச்சம்

நியூடெல்லி: இன்று, (2023 மார்ச் 29, புதன்கிழமை) சுகாதார அமைச்சகத்தின் புதுப்பிக்கப்பட்ட தரவுகளின்படி, இந்தியாவில் ஒரே நாளில் 2,151 புதிய கொரோனா வைரஸ் (COVID-19) வழக்குகள் பதிவாகியுள்ளன, இது ஐந்து மாதங்களில் மிக உயர்ந்ததாகும். செயலில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 11,903 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில், ஏழு சமீபத்திய இறப்புகளுடன் சேர்த்து கோவிட் இறப்பு எண்ணிக்கை 5,30,848 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் மூன்று, கர்நாடகாவில் ஒன்று, கேரளாவில் மூன்று என மொத்தம் 7 பேர் கோவிட் நோய்க்கு … Read more

நீதிமன்றம் தண்டனையை அறிவித்த பின்னர் ராகுலுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியது யார்? காங்கிரஸ் கட்சிக்கு ஒன்றிய அமைச்சர் கேள்வி

புதுடெல்லி: ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம் தொடர்பாக பாஜக – காங்கிரஸ் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், ஒன்றிய பாஜக அமைச்சர் அனுராக் தாக்கூர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘அவதூறு வழக்கில்  ராகுல் காந்தி குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்த பின்னர், காங்கிரஸ் கட்சியின் பிரபல  வழக்கறிஞர்கள் யாரும் அவருக்கு உதவாதது ஏன்? ேவண்டுமென்றே அவருக்கு உதவவில்லையா? அல்லது காங்கிரசுக்குள் ஏதேனும் சதி உள்ளதா? கடந்த சில வாரங்களுக்கு முன் வழக்கு … Read more