ஈரோடு கிழக்கில் இன்று வாக்குப்பதிவு: மேகாலயா, நாகாலாந்து சட்டப்பேரவைகளுக்கும் ஒரே கட்டமாக இன்று பொதுத் தேர்தல் நடைபெறுகிறது

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதில் 2.27 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலும் இன்று நடைபெறுகிறது. அனைத்து தேர்தல் முடிவுகளும் மார்ச் 2-ம் தேதி வெளியிடப்படுகின்றன. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெராகாலமானதை அடுத்து, இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, இன்று (பிப்.27) வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காங்கிரஸ், … Read more

மனீஷ் சிசோடியா ஒரு ரூபாய் ஊழல் செய்ததாக கூட பாஜகவால் நிரூபிக்கமுடியாது: AAP சவால்

டெல்லி மதுவிலக்குக் கொள்கை வழக்கில் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே, மதுபானத்தின் மொத்தக் கமிஷனை 2 சதவீதத்தில் இருந்து உயர்த்திய ஆம் அத்மி கட்சி, கமிஷனுக்காக, மக்களின் வாழ்க்கையுடன் விளையாடுவதாக பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, “ஆம் ஆத்மி கட்சியும், மணீஷ் சிசோடியாவும் கமிஷன் பெறுவதற்காக மதுபானங்களின் மொத்த கமிஷனை 2 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தி … Read more

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அதானிக்கு 12லட்சம் கோடி ரூபாய் இழப்பு எனத் தகவல்

உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருந்த அதானி தற்போது 33வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அதானி குழும பங்குகள் பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அந்த நிறுவன பங்குகள் இதுவரை சுமார் 12லட்சம் கோடி ரூபாயினை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. அதானி நிறுவனம் பற்றி அமெரிக்க நிறுவனம் ஒன்று வெளியிட்ட அறிக்கை அதன் பங்குகளை அதலபாதாளத்திற்கு தள்ளியுள்ளது. Source link

அருணாச்சலில் இருந்து குஜராத் வரை ராகுலின் 2ம் கட்ட யாத்திரை திட்டம்: காங்கிரஸ் மாநாட்டில் அதிரடி அறிவிப்பு

ராய்ப்பூர்: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அடுத்ததாக அருணாச்சலில் இருந்து குஜராத் வரை 2ம் கட்ட யாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என காங்கிரஸ் மாநாட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும் ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை எனும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கடந்த செப்டம்பர் … Read more

அடிக்கடி குலுங்கும் அபாய நகரம்: துருக்கி சம்பவத்திற்குபின் பீதியில் அம்ரேலி மக்கள்

அகமதாபாத்: இந்தியாவில் பூகம்பத்தின் குவியலாக குஜராத்தின் அம்ரேலி மாவட்டம் திகழ்கிறது. கடந்த 2 ஆண்டில் இங்கு 400க்கும் மேற்பட்ட நிலஅதிர்வுகள் பதிவாகி உள்ளன. இதனால், துருக்கி சம்பவத்திற்கு பிறகு அம்ரேலி மக்கள் மிகவும் பீதியில் உள்ளனர். துருக்கியில் சமீபத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். அடுத்ததாக இந்தியா, பாகிஸ்தானில் இதுபோன்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அதற்கேற்றார் போல் இந்தியாவில் சமீபகாலமாக அடிக்கடி நிலஅதிர்வுகள் தொடர்கதையாகி உள்ளன. … Read more

எதிராளியிடம் மண்டியிடுவது சாவர்க்கர் சித்தாந்தம் இது தேசியவாதமல்ல… கோழைத்தனம்: ராகுல் காந்தி விளாசல்

ராய்ப்பூர்: ‘நம்மை விட வலுவானவன் என்பதற்காக எதிராளி முன் மண்டியிடுவது சாவர்க்கரின் சித்தாந்தம். இது தேசியவாதமல்ல, கோழைத்தனம்’ என காங்கிரஸ் மாநாட்டில் ராகுல் காந்தி பேசினார். காங்கிரஸ் கட்சியின் 85வது மாநாடு, சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நேற்று நிறைவடைந்தது. இதில், கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று பேசியதாவது:அதானிக்கும் பிரதமருக்கும் என்ன தொடர்பு என்று நாங்கள் நாடாளுமன்றத்தில் கேட்டபோது, முழு உரையும் நீக்கப்பட்டது. அதானியின் உண்மை வெளிவரும் வரை நாடாளுமன்றத்தில் ஆயிரக்கணக்கான முறை கேள்வி கேட்போம், … Read more

‘நாட்டு, நாட்டு’ பாடலுக்கு தென்கொரிய தூதரக அதிகாரிகள் நடனம்: பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி: ‘நாட்டு, நாட்டு’ பாடலுக்கு தென் கொரிய தூதரக அதிகாரிகள் கலக்கலாக ஆடிய நடனத்தை பிரதமர் மோடி பாராட்டி உள்ளார். இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் வெளியாகி இந்திய அளவில் மிகப்பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘நாட்டு, நாட்டு’ எனும் நாட்டுக்கூத்து பாடல் மொழிகளையும், நாடுகளையும் தாண்டி பலரையும் கவர்ந்துள்ளது. இதனால் கோல்டன் குளோப் விருதை வென்ற இப்பாடல், ஆஸ்கர் விருதுக்கான … Read more

ஆன்லைனில் மருத்துவ ஆலோசனை பெறும் இ-சஞ்ஜீவனி செயலி மூலமாக 10 கோடி பேர் பலன் பெற்றனர்: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: ஆன்லைனில் மருத்துவ ஆலோசனை பெறக்கூடிய இ-சஞ்ஜீவனி செயலில் மூலம் பலனடைந்தவர்கள் எண்ணிக்கை 10 கோடியை தாண்டி இருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். அகில இந்திய வானொலியின் 98வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று பேசியதாவது:வேகமாக முன்னேறி வரும் டிஜிட்டல் இந்தியாவின் பலம், மூலை முடுக்கெங்கும் காணப்படுகிறது. இதற்கு பல்வேறு செயலிகள் (மொபைல் ஆப்) பெரும் பங்காற்றி வருகின்றன.  இப்படிப்பட்ட ஒரு செயலி தான், இ-சஞ்ஜீவனி. இந்தச் செயலி வாயிலாக தொலைபேசிவழி … Read more

பிரகாசமான இடத்தில் இந்தியா காங். குற்றச்சாட்டுக்கு பாஜ பதிலடி

புதுடெல்லி: உலக அரங்கில் இந்தியா பிரகாசமான இடத்தில் இருக்கிறது என்று காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பாஜ பதிலளித்துள்ளது. சட்டீஸ்கரில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. இதில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா  காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் பேசும்போது, பாஜ ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் பேரழிவு ஏற்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினர். இந்த மாநாட்டில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நேற்று பேசுகையில், ‘‘பாஜ கட்சி செயற்கையான தேசியவாதத்தில் ஈடுபடுவதற்காக இளைஞர்களை நிர்பந்திக்கிறது.இந்திய ஒற்றுமை யாத்திரை பயணத்தின் போது காஷ்மீர் சென்ற … Read more

ஷிவமொக்காவில் விமான நிலையம் திறப்பு பிரதமர் மோடி இன்று கர்நாடகா வருகை: விவசாயிகளுக்கு ரூ.2000 உள்ளிட்ட பல திட்டங்களை துவக்கி வைக்கிறார்

பெங்களூரு: ஷிவமொக்கா விமான நிலையத்தின் திறப்பு விழா மற்றும் ரயில்வே, சாலை, குடிநீர் உள்ளிட்ட புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோடி இன்று கர்நாடகா வருகிறார். இதை முன்னிட்டு ஷிவமொக்கா மற்றும் பெலகாவியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் ஷிவமொக்கா விமான நிலையத்தின் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திரமோடி புதிய விமான நிலையத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்து வைப்பதுடன் ரயில்வே, குடிநீர், சாலை உள்ளிட்ட திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். ஷிவமொக்கா விமான நிலையத்தின் … Read more