கனடாவில் மகாத்மா காந்தியின் சிலையை சேதப்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள மகாத்மா காந்தியின் வெண்கல சிலைக்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் அவமதிப்பு செய்துள்ளனர். ஹாமில்டனின் சிட்டி ஹால் அருகே வெண்கலத்தால் 6 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த காந்தி சிலையின் முகம் சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சிலையின் மீது பெயிண்டை ஊற்றியதுடன், பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவிக்கும் வாசகங்களை சிலையின் அடிப்பாகத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் எழுதியுள்ளனர்.  Source link

ராகுல் காந்தி தகுதிநீக்கம்: விமர்சனத்தைத் தவிர்த்த அமெரிக்கா

வாஷிங்டன்: ராகுல் காந்தி தகுதிநீக்கம் விவகாரத்தில் இப்போதைக்கு தனிப்பட்ட ரீதியில் விமர்சிக்க முடியாது என்று விலகி நிற்கிறது அமெரிக்கா. சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க அமெரிக்கா இந்தியாவை ஒரு வலுவான கூட்டாளியாகக் கருதுகிறது. இதனால், இந்தியா – அமெரிக்கா இடையே சில காலமாக நெருக்கமான நல்லுறவு நீடித்துவருகிறது. இந்நிலையில் ராகுல் காந்தி விவகாரத்தில் ஜனநாயகத்தை மதிக்கிறோம் தனிப்பட்ட கருத்து இப்போதைக்கு சொல்ல முடியாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மக்களவை … Read more

பிரதமரின் உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் ஓராண்டுக்கு நீட்டிப்பு!

பிரதமரின் உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் 200 ரூபாய் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் வரை இந்த மானியம் பொருந்தும். பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அகவிலைப்படி உயர்வால், 47லட்சத்து 58 ஆயிரம் மத்திய அரசு ஊழியர்களும், 69 லட்சத்து 76 ஆயிரம் ஓய்வூதியதாரர்களும் … Read more

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு: அமைச்சரவையில் முடிவு

புதுடெல்லி: ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், விலைவாசியை கட்டுப்படுத்தும் வகையில், ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி, 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த அகவிலைப்படி 42 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது குறித்து கூட்டத்திற்குப் பின் … Read more

பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த பாசிச நடவடிக்கைக்கு கண்டனம்..!!

2019ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகளுக்கு எதிராக அவர் மீது சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில், ராகுல் காந்தி குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது.நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு 30 நாட்கள் அவகாசமும் உடனடியாக கைது செய்யப்படுவதைத் தவிர்க்கும் வகையில் அவருக்கு ஜாமீனும் வழங்கியது சூரத் … Read more

“பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலை சீராக உள்ளது!!”

பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலை சீராக உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகியாகத் திகழும் பாம்பே ஜெயஸ்ரீ முன்னணி இசையமைப்பாளர்களான ஹாரிஸ் ஜெயராஜ், இளையராஜா, ஏ.ஆர். ரகுமான், வித்யாசாகர், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் பல வெற்றித் பாடல்களைப் பாடியுள்ளார். அவர் வயலின் வாத்தியக்கலைஞர் லால்குடி ஜெயராமனின் சீடர் ஆவார். அவர் இசைப் பயிற்சியை தனது தந்தை சுப்ரமணியன், தாய் சீதா சுப்ரமணியனிடம் தொடங்கியவர். பின்னாளில் டி.ஆர்.பாலாமணியிடமும், இசை மேதை … Read more

ஜனநாயகத்தை ராகுல் இழிவுப்படுத்தியதால் ‘காந்தி’ பெயர் வைத்த அனைவரையும் குற்றம் சொல்ல முடியாது – கிரண் ரிஜிஜூ கருத்து

புதுடெல்லி: ‘‘இந்திய ஜனநாயகத்தை ராகுல் காந்தி இழிவுப்படுத்தியதால், ‘காந்தி’ என்று பெயர் வைத்தவர்கள் அனைவரையும் குற்றம் சொல்ல முடியாது’’ என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ‘மோடி’ பெயரை குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதையடுத்து அவர் மீது அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு நேற்றுமுன்தினம் 2 … Read more

இவ்வளவு வேகமாக ராகுலின் எம்.பி பதவி பறிபோக காரணம் யார் தெரியுமா.? அவரே தான் இவர்… இவரே தான் அவர்..!

தண்டனை பெற்ற எம்.பி, எம்.எல்.ஏக்களின் பதவியை, மேல்முறையீட்டுக்கான காலம் வரை பறிக்காமல் இருக்க, மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் அமைச்சரவை ஒப்புதல் அளித்த அவசர சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்று ராகுல்காந்தி வரவிடாமல் தடுத்த நிலையில், இன்று அவர் பதவி பறிபோக அதுவே காரணமாகி இருப்பதாக தகவல் வெளியாக உள்ளது.  மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய … Read more

இந்திய தூதரகங்கள் தாக்குதலில் சட்ட நடவடிக்கை அவசியம்: அமெரிக்கா, இங்கிலாந்து, கனடாவுக்கு ஒன்றிய அரசு திடீர் கெடுபிடி

புதுடெல்லி:   இங்கிலாந்து தலைநகர் லண்டன், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகங்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள்  தாக்குதல் நடத்தினர். அம்ரித்பால்சிங்குக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுப்பதை கண்டித்து இந்த தாக்குதல் நடந்துள்ளது. லண்டன் தாக்குதல்  சம்பவத்தை தொடர்ந்து டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகம் மற்றும் தூதரக அதிகாரியின் பாதுகாப்பை ஒன்றிய அரசு குறைத்தது. இந்நிலையில் ஒன்றிய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்‌ஷி நேற்று கூறுகையில்,‘‘ இந்திய தூதரகங்கள் மீது … Read more

சிலிண்டர் வைத்திருப்போருக்கு ஹேப்பி நியூஸ்..!!

2016 மே 1-ம் தேதி நாடு முழுவதும் ஏழை மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டமான ‘பிரதமரின் உஜ்வாலா யோஜனா’ திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 5 கோடி பெண் உறுப்பினர்களுக்கு சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்க இலக்கு நிர்ணயித்தது.இதையடுத்து ஏப்ரல் 2018-இல், கூடுதலாக ஏழு பிரிவுகளைச் (பட்டியலின/பட்டியல் பழங்குடி, பிரதமரின் ஆவாஸ் யோஜனா, அந்தியோதயா அன்ன யோஜனா, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகள், தேயிலை தோட்டம், … Read more