தேஜஸ்வி, சகோதரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டில் ரூ.70 லட்சம் சிக்கியதாக தகவல்!

பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் மற்றும் அவரது சகோதரிகள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் 70 லட்சம் ரூபாய் ரொக்கம், ஒன்றரை கிலோ தங்கம் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு 2004ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தபோது ரயில்வே அமைச்சராக ராஷ்ட்ரீய ஜனதா தளம் நிறுவனர் லாலு பிரசாத்  இருந்தார். அப்போது, ரயில்வேயில் வேலை அளிப்பதற்கு லஞ்சமாக நிலத்தை லாலு குடும்பம் தொடர்புடைய நிறுவனங்களால் பெறப்பட்டதாக … Read more

பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ சம்மன்

பாட்னா : பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.லாலு பிரசாத் யாதவ் ஒன்றிய அமைச்சராக இருந்த போது, ரயில்வே பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இன்றே விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கைவினை கலைஞர்களுக்கு நிறுவன ஆதரவை PM-VIKAS திட்டம் வழங்குகிறது – பிரதமர் மோடி 

புதுடெல்லி: கைவினை கலைஞர்கள் எளிதாக கடன்வசதி பெறவும், உற்பத்தி செய்யும் பொருட்களை எளிதாக விற்கவும் தேவையான நிறுவன ஆதரவினை பிரதமரின் விஸ்வகர்மா கவுசால் சம்மான் திட்டம் வழங்குகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பட்ஜெட்டுக்குப் பிந்தைய வலையரங்கில், இந்த திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். அப்போது, “பகவான் விஸ்வகர்மா படைப்பாளராகவும், கட்டிடக் கலைஞராகவும் கருதப்படுபவர். கையில் பல்வேறு உபகரணங்களுடன் அவரது சிலை இருக்கும். உபகரணங்களின் உதவியுடன் கைகளால் பல்வேறு பொருள்களை உருவாக்கும் நீண்ட … Read more

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார்!!

டெல்லி :தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார். டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் நடைபெற்ற சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும் எம்.எல்.சியுமான கவிதா அமலாக்கத்துறை முன் ஆஜராகி விளக்கமளிக்க உள்ளார். அமலாக்கத்துறை கவிதாவை கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக அவரது கட்சி நேற்று குற்றம் சாட்டியதோடு இதை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும் கூறியிருந்தந்து.

நிலமோசடி வழக்கு | தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ மீண்டும் சம்மன்

புதுடெல்லி: நிலமோசடி வழக்கில் லாலு பிரசாத் யாதவின் மகனும், பிகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ இரண்டாவது முறையாக இன்று சம்மன் அனுப்பியுள்ளது. ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் இருந்தபோது, ரயில்வேயில் வேலை வழங்கும் விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புலனாய்வு அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. குறிப்பாக, வேலை பெற்றவர்கள் தங்களின் நிலங்களை பரிசாக அல்லது குறைந்த விலைக்கு, லாலுவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பினாமிகளின் பெயர்களுக்கு எழுதித் தந்திருப்பதாகவும், இதன்மூலம் பல கோடி ரூபாய் … Read more

டெல்லி அரசின் மதுவிலக்கு கொள்கை முறைகேடு புகார் தொடர்பாக தெலுங்கானா முதல்வரின் மகள் கவிதா அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார்..!!

டெல்லி: டெல்லி அரசின் மதுவிலக்கு கொள்கை முறைகேடு புகார் தொடர்பாக தெலுங்கானா முதல்வரின் மகள் கவிதாவிடம் விசாரணை தொடங்கியுள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. விசாரணைக்குப் பிறகு அவரை மார்ச் 20ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த வழக்கு  தொடர்பாக ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் அருண் ராம்சந்திர … Read more

அட சீ..இந்தியாவில் ஹோலி பண்டிகை கொண்டாட வந்த ஜப்பான் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்..!!

தலைநகர் டெல்லியில் பகர்கஞ்ச் பகுதியில் உள்ளூர்வாசிகளும், வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் சேர்ந்து ஹொலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஜப்பானை சேர்ந்த பெண் பயணியிடம் சில இளைஞர்கள் பாலியல் ரீதியில் அத்துமீறலில் ஈடுபட்டனர். அந்த பெண் மீது முட்டையை வீசி, பாலியல் ரீதியில் அத்துமீற முயற்சித்தனர். தன்னிடம் அத்துமீறிய ஒரு இளைஞனை அந்த இளம்பெண் கன்னத்தில் அறைந்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணி … Read more

''ஜனநாயகத்தை கொலை செய்ய முயல்கிறது மோடி அரசு'' – மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு

புதுடெல்லி: நாட்டின் ஜனநாயகத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கொலை செய்ய முயல்வதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் இருந்தபோது, ரயில்வேயில் வேலை வழங்கும் விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புலனாய்வு அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. குறிப்பாக, வேலை பெறுபவர்கள் தங்களின் நிலங்களை குறைந்த விலைக்கு, லாலுவின் பினாமிகளின் பெயர்களுக்கு எழுதித் தந்திருப்பதாகவும், இதன்மூலம் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக … Read more

Tax Evasion: 420 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு வழக்கில் அனில் அம்பானிக்கு பெரும் நிவாரணம்

 Anil Ambani: வரி ஏய்ப்பு செய்ததாகக் குற்றம் சாட்டுள்ள அனில் அம்பானி மீது கருப்புப் பணச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது தள்ளிப் போடப்பட்டுளது. அனில் அம்பானிக்கு எதிராக வெளியிடப்பட்ட நோட்டீஸ் மீது மார்ச் 17ஆம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என வருமான வரித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  வரி ஏய்ப்பு வழக்கு ரிலையன்ஸ் அடாக் குழுமத்தின் (Reliance ADAG Group) தலைவரான அனில் அம்பானிக்கு பாம்பே உயர்நீதிமன்றத்தில் இருந்து கிடைத்துள்ள இந்த செய்தி பெரும் … Read more

பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ சம்மன்: டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இன்றே விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

டெல்லி: பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. லாலு பிரசாத் யாதவ் ஒன்றிய அமைச்சராக இருந்த பொது ரயில்வே பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இன்றே விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. 2004-2009 காலகட்டத்தில் மும்பை, ஜபல்பூர், கொல்கத்தா, ஜெய்ப்பூர் மற்றும் ஹாஜிபூர் ஆகிய இடங்களில் உள்ள பல்வேறு மண்டலங்களில், பீகாரில் உள்ள பாட்னாவில் வசிப்பவர்கள் சிலர், குரூப்-டி பதவிகளில் பணியமர்த்தப்பட்டதாக எப்ஐஆரில் குற்றம் சாட்டப்பட்டது. … Read more