கோவில் விருந்து : 3 குழந்தைகள் கவலைக்கிடம்..!!

உத்திய பிரதேச மாநிலம், பாக்பத்தில் அமைந்துள்ள கோவிலில் மத சமூக விருந்து நடைபெற்றது. இந்த விருந்தை பிப்பன் என்கிற ஓம்பிரகாஷ் என்பவர் ஏற்பாடு செய்துள்ளார். அவர் காலையில் பிரசாதத்தில் கீரை விநியோகித்தார், மாலை சுமார் 5 மணிக்கு கிச்சடி விநியோகிக்கப்பட்டது. இந்த கிச்சடியை சுமார் 100 பேர் சாப்பிட்டனர். இந்த விருந்தில் வழங்கப்பட்ட கிச்சடி சாப்பிட்டதில், குழந்தைகள் உள்பட 21 பேர் மயக்கம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் சுகாதார … Read more

100 வழக்கு, ரூ.11,684 கோடி சொத்து, 5 முறை எம்எல்ஏ – ரவுடி அகமதுவை சிறையில் தீவிரமாக கண்காணிக்கும் உ.பி. அரசு

லக்னோ: உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் பகுதியை சேர்ந்தவர் அத்திக் அகமது (60). இவர் மீது கொலை, ஆள்கடத்தல் உட்பட 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவரது குடும்பத்தினர் மீது 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. உ.பி. முழுவதும் கொலை, ஆள்கடத்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் அத்திக் அகமது ஈடுபட்டு வந்தார். இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.1,200 கோடி வரை அவர் சொத்து சேர்த்ததாகக் கூறப்படுகிறது. பதிவுத் துறை ஆவணங்களின் அடிப்படையில் அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் … Read more

மீண்டும் அதிகரிக்கும் COVID-19 தொற்று: பழைய நிலை திரும்பலாம்! எச்சரிக்கும் மருத்துவர்கள்

நாட்டில் கோவிட்-19 தொற்று மீண்டும் அதிகரித்து வருகின்றது. இதனால் நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது, ஐசியூவில் சேர்க்கப்பட வேண்டிய நிலை, ஆக்ஸிஜனுக்கான தேவை ஆகியவை மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதார நிபுணர்கள் திங்களன்று தெரிவித்தனர். இந்தியாவில் 24 மணி நேரத்தில் 1,805 புதிய கோவிட் நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நேற்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டது. 134 நாட்களுக்குப் பிறகு, நாட்டில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை நேற்று 10,000 ஐத் தாண்டியது. … Read more

சீன எல்லை அருகே 37 புதிய சாலைகளை அமைக்க மத்திய அரசு திட்டம்

சீன எல்லை அருகே 875 கிலோ மீட்டர் நீளம் கொண்ட மேலும் 37 சாலைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ICBR எனப்படும் இந்திய- சீன எல்லைச் சாலைகள் அமைக்கும் பணிகள் லடாக், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடந்து வருகின்றன. இந்நிலையில் 3ம் கட்டப் பணிகளுக்கான உயர்மட்டக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சாலைகள் அமைக்க … Read more

அம்ரித்பால் சிங் தலைமறைவு? நேபாள அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம்

காத்மாண்டு: காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் நேபாளத்தில் தலைமறைவாகி உள்ளார் என கூறப்படுகிறது.  அவரை அங்கிருந்து தப்பாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும்படி நேபாளத்துக்கு ஒன்றிய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. பஞ்சாப்பின் அமிர்தசரஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அம்ரித்பால் சிங். காலிஸ்தான்  ஆதரவாளரான இவர் வாரிஸ் பஞ்சாப் டி என்ற அமைப்பின் தலைவராக உள்ளார். இவரை  கைது செய்ய 7 மாவட்டங்களை சேர்ந்த மாநில போலீசார் அடங்கிய ஒரு சிறப்பு படை அமைக்கப்பட்டு  தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. அம்ரித்பால் … Read more

லே பகுதியில் 3 சாலையும் முன்கூட்டியே திறப்பு – சீன எல்லையில் 37 சாலைகள் அமைக்க மத்திய அரசு திட்டம்

புதுடெல்லி: துருப்புகளின் நடமாட்டத்தை எளிதாக்குவதற்காக இந்த ஆண்டு லே செல்லும் 3 வழித்தடங்களிலும் விரைந்து பனி அகற்றப்பட்டு திறக்கப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் வழியாகவும் இமாச்சல பிரதேசத் தின் மணாலி வழியாகவும் லே செல்லும் சாலைகள் லடாக்கின் உயிர்நாடியாக உள்ளன. இச்சாலைகள் குளிர் காலத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக மாதக் கணக்கில் மூடப்பட்டிருக்கும். இந்நிலையில் 439 கி.மீ. நீள ஸ்ரீநகர் வழித்தடம் இந்த ஆண்டு 68 நாட்களுக்குப் பிறகு, அதாவது மார்ச் 16-ம் தேதி திறக்கப்பட்டது. இந்த … Read more

ஜி20 நாடுகளின் உள்கட்டமைப்பு பணிகள் உச்சி மாநாடு இன்று தொடக்கம்.!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஜி 20 நாடுகளின் உள்கட்டமைப்பு பணிக்குழுக் கூட்டம் இன்று தொடங்குகிறது. இந்த இரண்டுநாள் மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200 பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். வெளிநாட்டு பிரதிநிதிகளுக்குத் தேவையான போக்குவரத்து, தங்குமிடம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவற்றுக்காக 157 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநாட்டின் போது வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு மாநிலம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் பற்றிய முழுமையான தகவல்கள் வழங்கப்படும் என ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே, மாநாட்டையொட்டி விசாகப்பட்டினம் … Read more

பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டம் தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் கையெழுத்திட மறுப்பு: ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: பிஎம் ஸ்ரீ பள்ளி என்பது பள்ளிகளை மேம்படுத்த ஒன்றிய அரசு அறிவித்துள்ள புதிய நிதியுதவி திட்டம். இந்த திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஆண்டு செப்.5ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி நாடு முழுவதும் 14500க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கப்படும். இந்த திட்டத்தில் இதுவரை 9 ஆயிரம் பள்ளிகள் கல்வி அமைச்சகம் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகள் உள்பட 2.5 லட்சம் … Read more

‘சிந்திக்கும் இயந்திர மனிதன் வருவான்’ – 59 ஆண்டுக்கு முன்பே கணித்த எழுத்தாளர்

புதுடெல்லி: செயற்கை நுண்ணறிவு குறித்து புனைக் கதை எழுத்தாளர் ஆர்த்தர் கிளார்க் 59 ஆண்டுக்கு முன்பே பேசிய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் உலகம் முழுவதும் இப்போது பேசு பொருளாகி உள்ளது. இது மனிதனைப் போலவே சில பணிகளை செய்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. ஓட்டலில் உணவு வழங்கும் சேவை செய்வது முதல் மருத்துவத்தில் அறுவைச் சிகிச்சை செய்வது வரையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ரோபோக்கள் வந்துவிட்டன. இந்த … Read more

2024-25 கல்வியாண்டில் புதிய பாடப்புத்தகங்கள் வெளியீடு: ஒன்றிய அரசு அதிரடி

புதுடெல்லி: தேசிய கல்வி கொள்கையின்படி  பாட புத்தகங்களில் மாற்றம் செய்யப்பட்டு  2024-25 கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படுகிறது என ஒன்றிய அரசு  தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு ஒன்றிய பாஜ அரசு தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியது.  இந்நிலையில் 2024-25 கல்வியாண்டு முதல் அனைத்து நிலை மாணவர்களும் புதிய, புதுப்பிக்கப்பட்ட பாடப்புத்தகங்களை படிப்பார்கள் என ஒன்றிய  கல்வி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பாட புத்தகங்களில் திருத்தம் செய்து புதிய பாடங்களை சேர்ப்பதற்கு  முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்துாரி … Read more