மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு அரசியலமைப்புச்சட்டத்தில் இடமில்லை – அமித்ஷா

மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பிரிவின் கீழ் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்த மாநில அரசு, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டு பிரிவில், சிறுபான்மையினரை சேர்க்க முடிவு செய்துள்ளது. இந்நிலையில், கர்நாடகாவின் பிதார் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, பிரிவினை அரசியலை மையப்படுத்தி, சிறுபான்மையினருக்கு முந்தைய காங்கிரஸ் அரசு … Read more

உலகம் முழுவதும் ‘செமிகண்டக்டர்’ தட்டுப்பாட்டால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொள்முதலில் சுணக்கம்: அடுத்தாண்டு மக்களவை தேர்தலால் கூடுதல் நிதி ஒதுக்கீடு

புதுடெல்லி: உலகம் முழுவதும் ‘செமிகண்டக்டர்’ தட்டுப்பாட்டால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொள்முதலில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் பெரும்பாலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பராமரிக்கவும், கொள்ளுமுதல் செய்யவும் ஒன்றிய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் மிகக் குறைந்தளவே தேர்தல் ஆணையம் பயன்படுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2022-2023ம் நிதி ஆண்டில் ஜனவரி 31ம் தேதி வரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் … Read more

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு இன்று மாலை நடை திறப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். நடப்பாண்டிற்கான மகரஜோதியை தரிசிப்பதற்காக கடந்த 14-ந் தேதி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதேபோன்று,  ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். அதன்படி பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்பட உள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் மண்டல … Read more

ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிப்பு காங்கிரசை மேலும் வலுப்படுத்தும்: ப. சிதம்பரம்

புதுடெல்லி: ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிப்பு சம்பவம் காங்கிரஸ் கட்சியை மேலும் வலுப்படுத்தும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள நேர்காணலில், ”அவசரநிலை காலகட்டத்தைப் போன்ற ஒரு நிலையில் நாடு இருக்கிறது. தற்போது இருப்பது அறிவிக்கப்படாத அவசரநிலை. இந்திரா காந்தி காலத்தில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டதை அடுத்து பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. தற்போது அதில் வித்தியாசம் ஏதும் இருக்கிறதா? ஊடகங்கள் மற்றும் ஊடகவியாலாளர்கள் … Read more

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து

டெல்லி: உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை சவீட்டி பூராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.சவீதி பூரா சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளார்.  உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதற்காக பெருமைப்படுகிறோம். உலக குத்துச்சண்டை போட்டியில்  அவரது வெற்றி வரவிருக்கும் பல விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய வீராங்கனைகள் நீத்து கங்காஸ், சவீத்தி போரா தங்கப் பதக்கம் … Read more

ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து!!

கேரளாவில் கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதை அடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது. கொச்சி அருகே நெடும்பசாரி விமானநிலையத்தில் கடற்படைக்குச் சொந்தமான ஏ.எல்.ஹெச் துருவ் மார்க் 3 ஹெலிகாப்டரை சோதனை செய்யும் பணி நடைபெற்று வந்தது. ஹெலிகாப்டர் சுமார் 25 அடி உயரத்தில் இருந்து பறந்து கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 3 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் … Read more

காசி தமிழ்சங்கமம், தமிழ்நாட்டிற்கும் – காசிக்கும் இடையேயான பழமையான உறவை கொண்டாடியது – பிரதமர் மோடி

காசி தமிழ்சங்கமம், தமிழ்நாட்டிற்கும் – காசிக்கும் இடையேயான பழமையான உறவை கொண்டாடிய நிலையில், செளராஷ்டிர தமிழ் சங்கமம் மூலம், தமிழ்நாட்டுடனான குஜராத்தின் பல நூற்றாண்டு கால உறவு புதுப்பிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், ஒரே பாரதம், உன்னத பாரதம் கீழ், செளராஷ்டிரியர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையிலான உறவு செளராஷ்டிரா தமிழ் சங்கமம் மூலம் புதுப்பிக்கப்படும் என தெரிவித்தார். வரும் ஏப்ரல் 17 முதல் 30 வரை, குஜராத்தின் பல்வேறு பகுதிகளில், … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,890 கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,890 கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்தியாவில் இதுவரை 9,433 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உ யிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் பரபரப்பு: இந்திய பத்திரிகையாளர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்

வாஷிங்டனில் இந்திய பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.  ‘வாரிஸ் பஞ்சாப் டி’ அமைப்பின் தலைவராக அம்ரித்பால் சிங் பொறுப்பேற்றது முதல் பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதக் கொள்கைகள் தலைதூக்கின. இதையடுத்து அவரை கைது செய்ய பஞ்சாப் காவல்துறை முனைப்பு காட்டிவருகிறது. அதைக் கண்டித்து அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை செய்தியாக்கிக் கொண்டிருந்த பிடிஐ செய்தி நிறுவனத்தின் ஊடகவியலாளர் லலித் குமார் ஜா … Read more

டெல்லி ராஜ்காட்டில் சத்தியாகிரக போராட்டம் எங்கள் குடும்பத்தை தொடர்ந்து அவமானப்படுத்துகிறீர்கள்!.. 32 ஆண்டுக்கு முன் நடந்ததை கூறி பிரியங்கா காந்தி உருக்கம்

புதுடெல்லி: எங்கள் குடும்பத்தை தொடர்ந்து அவமானப்படுத்துகிறீர்கள் என்று டெல்லியில் நடந்த போராட்டத்தில் பிரியங்கா காந்தி உருக்கத்துடன் பேசினார். டெல்லி ராஜ்காட்டில் காங்கிரஸ் சார்பில் இன்று நடந்த சங்கல்ப் சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசுகையில், ‘கடந்த 1991ம் ஆண்டில் நடந்த சம்பவத்தை நினைவு கூற விரும்புகிறேன். என் தந்தையின் (ராஜீவ் காந்தி) இறுதி ஊர்வலம் தீன் மூர்த்தி பவனில் இருந்து புறப்பட்டு சென்றது. எங்களது தாய் (சோனியா), எனது சகோதரர் … Read more