எல்லையில் பிரச்சினைகள் உள்ள போதும் சீனா போரை விரும்பவில்லை.. சீனாவின் மூத்த தூதரக அதிகாரி

எல்லையில் பிரச்சினைகள் உள்ள போதும் இந்தியாவுடன் சீனா போரை விரும்பவில்லை என்று  டெல்லியில் உள்ள சீனாவின் மூத்த தூதரக அதிகாரி மா ஜியா கூறினார். இருதரப்பினரும் எல்லைப் பகுதிகளில் போரையோ மோதலையோ விரும்பவில்லை என்று  மா ஜியா தெரிவித்துள்ளார். இந்திய பத்திரிகையாளர்களிடையே பேசிய அவர், இருதரப்பினரின் நிர்வாக ரீதியான மேலாண்மை மற்றும் கட்டுப்பாடு ஆகியவை எல்லையில் மாற்றத்தை ஊக்குவிப்பதாகக் கூறினார். வெளியுறவு அமைச்சர்  ஜெய்சங்கர்  எல்லை நிலைமையை கடுமையானது என்று கூறியதற்கு பதிலளித்த மா, இரு தரப்பினரும் … Read more

50 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக ராணுவ வீரர்களுக்கு சிறுதானிய உணவு பொருட்கள் அறிமுகம்

புதுடெல்லி: ஐம்பது ஆண்டுகளுக்கு பின் ராணுவ வீரர்களுக்கு மீண்டும் சிறுதானிய உணவு  பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கை: 2023ம் ஆண்டை சிறுதானிய ஆண்டாக ஐநா அறிவித்துள்ள நிலையில், ராணுவ வீரர்களுக்கு ரேஷனில் சிறுதானிய உணவு பொருட்கள் வினியோகிக்கப்படும். பாரம்பரிய சிறுதானிய உணவுகள் ஆரோக்கியத்திற்கு ஏற்றவை. இதனைக் கருத்தில் கொண்டே ராணுவத்தில் பணியாற்றும் அனைத்து பிரிவினருக்கும் அன்றாட உணவில் சிறுதானியங்கள் சேர்க்கப்படுகின்றன. 50 ஆண்டுகளுக்கு முன் சிறுதானியங்களுக்கு பதிலாக கோதுமை வழங்கப்பட்டது. தற்போது, ராணுவ … Read more

திடீரென அறுந்து விழுந்த ராட்சத ராட்டினம்!! 11 பேர் படுகாயம்..!! அதிர்ச்சி வீடியோ…

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் பகுதியில் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த பொருட்காட்சிக்கு தினசரி ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அந்த வகையில் வழக்கம் போல் நேற்று முன்தினம் பொருட்காட்சிக்கு வந்த பொதுமக்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த ராட்சத ராட்டினத்தில் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது உயரமாக எழும்பிய ராட்டினம் திடீரென கீழே மெதுவாக இயக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக அதிவேகத்தில் கீழே சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அப்போது ராட்டினத்தில் இருந்த 11 பேருக்கு காயம் ஏற்பட்டது. ராட்டினத்தை சுற்றி … Read more

கல்லறையில் க்யூஆர் கோடு பதித்து இறந்த மகனின் நினைவுகளுக்கு உயிரூட்டிய கேரள பெற்றோர்

திருச்சூர்:  கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குறியாச்சிரா பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ். ஓமனில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவரது மனைவி லீனா, ஓமனில் இந்திய பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியையாக உள்ளார். இவர்களது மகன் ஐவின் பிரான்சிஸ், டாக்டராக பணியாற்றி வந்தார். கடந்த 2021ம் ஆண்டு ஐவின் பேட்மின்டன் விளையாடும் போது துரதிருஷ்டவசமாக இறந்தார். அவரது வயது 26. ஐவின் டாக்டராக மட்டுமின்றி இசை, விளையாட்டில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். சிறந்த மருத்துவராகவும் சமூகத்தில் பிரபலமாக அறியப்பட்டார். … Read more

ரூ.1.29 லட்சம் கோடி உக்ரைனுக்கு கடன் உதவி: சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்

பிராங்க்பர்ட்: நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள உக்ரைனுக்கு ரூ.1.29 லட்சம் கோடி கடனுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது. ரஷ்யா உடனான போரினால் உக்ரைன் ராணுவத்துக்கு அதிகளவில் செலவிட்டதால் அந்நாட்டின் பொருளாதாரம் கடந்தாண்டில் மட்டும் ஏறக்குறைய 30 சதவீதம் வரை குறைந்தது. இதனால் வரி வருவாயும் பெருமளவில் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனின் நிதி நிலையை தூக்கி நிறுத்தவும், போருக்கு பிந்தைய கட்டமைப்புகளை சீரமைக்கவும் உக்ரைனுக்கு ரூ.1.29 லட்சம் கோடி நிதி வழங்க … Read more

6ஜி ஆராய்ச்சி, மேம்பாடு சோதனை மையம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

புதுடெல்லி:  6ஜி தொழில்நுட்ப ஆராய்ச்சி, மேம்பாட்டு சோதனை மையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்தியாவில் 6ஜி சேவை தொடர்பாக செயல்திட்டங்களை உருவாக்க கடந்த 2021ம் ஆண்டு நவம்பரில், பல்வேறு துறை அமைச்சகங்கள், துறைகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள், கல்வி சார்ந்த குழுக்கள், தரநிர்ணய அமைப்புகள், தொலைத்தொடர்பு சேவை வழங்குபவர்கள், தொழில் துறையினர் உள்ளிட்டோர் இணைந்து 6ஜி தொழில்நுட்ப புத்தாக்க குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பாரத் 6ஜி தொலைநோக்கு ஆவணத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில், புதுடெல்லியில் … Read more

பதற்றத்தை உருவாக்குவதோடு போலி செய்திகளால் ஜனநாயகத்திற்கு ஆபத்து: தலைமை நீதிபதி சந்திரசூட் எச்சரிக்கை

புதுடெல்லி: போலி  செய்திகள் சமூகங்களுக்கு இடையே பதற்றத்தை உருவாக்கி, ஜனநாயக மதிப்புகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார். டெல்லியில் நடந்த 16வது ராம்நாத் கோயங்கா விருதுகள் வழங்கும் விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ஜனநாயகத்தை சிறந்த எதிர்காலத்தை நோக்கி இயக்கும் இயந்திரம் பொறுப்பான பத்திரிகை. இந்த  டிஜிட்டல் யுகத்தில், பத்திரிகையாளர்கள்  துல்லியமாகவும், பாரபட்சமின்றி, பொறுப்புடனும், அச்சமின்றியும் இருப்பது முன்னெப்போதையும் … Read more

பாகிஸ்தான், ஆப்கானில் பூகம்பத்தால் 12 பேர் பலி: 160 பேர் காயம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் நேற்று ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தால் 12 பேர் பலியானார்கள். மேலும் 160 பேர் காயமடைந்தனர்.  பாகிஸ்தானில் நேற்று முன்தினம் இரவு பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக குடியிருப்புக்கள், வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, பெஷாவர் உள்பட பல்வேறு பகுதிகளில் பூகம்பம் உணரப்பட்டது. இதன் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 100க்கும் மேற்பட்டோர் … Read more

ஜாமீனுக்கு பணம் இல்லாமல் தவிக்கும் டெல்லி சிறை கைதிகளுக்கு ரூ. 5.11 கோடி வழங்க தயார்: மோசடி மன்னன் சுகேஷ் கடிதம்

புதுடெல்லி: டெல்லியில் உள்ள சிறைகளில் ஜாமீன் பத்திரம் வழங்க பணம் இல்லாமல் தவித்து வரும் கைதிகளுக்கு ரூ. 5.11 கோடி பணம் வழங்க தயாராக இருப்பதாக சிறைத்துறை இயக்குனருக்கு மோசடி  மன்னன் சுகேஷ் சந்திர சேகர் கடிதம் எழுதியுள்ளார். இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்தது, 200 கோடி பணமோசடி செய்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வருகிறார் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர்.  இந்தநிலையில்  சுகேஷ் சந்திரசேகர் சிறைத்துறை … Read more

ஏசி 3 அடுக்கு எகானமி வகுப்பு மீண்டும் அமல்

புதுடெல்லி: கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்ட ஏசி 3 அடுக்கு எகானமி வகுப்பு கட்டணத்தை மீண்டும் கொண்டு வருவதாக ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்களில் குறைவான கட்டணத்தில் குளிர்சாதன வகுப்பில் பயணிகள் பயணிக்க வசதியாக ஏசி 3 அடுக்கு எகானமி வகுப்பு கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது. ‘3இ’ என குறிப்பிடப்பட்ட இந்த எகானமி வகுப்பில் ஏசி 3 அடுக்கு கட்டணத்தை விட 6 முதல் 8 சதவீதம் வரை குறைவாக இருக்கும். இதற்கிடையே, இந்த எகானமி … Read more