வார்த்தைகளில் கண்ணியம் இருக்க வேண்டும் – பாஜக தலைவர்கள் கருத்து

புதுடெல்லி: வார்த்தைகளில் கண்ணியம் அவசியம். சூரத் நீதிமன்ற தீர்ப்பு ராகுல் காந்திக்கு படிப்பினையாக அமையும் என்று பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்த குஜராத் எம்எல்ஏ புர்னேஷ் மோடி கூறும்போது, “சிலரது தவறுக்காக ஒட்டு மொத்த சமுதாயத்தின் மீதும் பழி சுமத்துவது சட்டவிரோதம். ராகுல் ஒட்டுமொத்த மோடி சமுதாயத்தை இழிவுபடுத்தினார். அரசியலுக்காக அல்லாமல் சமூகப் பிரச்சினைக்காகவே ராகுல் காந்தி மீது வழக்குத் தொடர்ந்தேன். ராகுல் எத்தனை முறை மேல்முறையீடு செய்தாலும் எனது … Read more

எம்.பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம்: 2 ஆண்டு சிறை தண்டனையை காரணம் காட்டி மக்களவை செயலகம் அறிவிப்பு; தலைவர்கள் கண்டனம்

புதுடெல்லி: பிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்து கூறியது தொடர்பாக குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை தொடர்ந்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மக்களவை செயலகம் நேற்று அறிவித்தது. இதற்கு அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரசாரத்தில், கர்நாடக மாநிலம் கோலாரில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘அனைத்து திருடர்களும் … Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்துவென்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவிகிதம் அகவிலைப்படியை உயர்த்துவது என முடிவெடுக்கப்பட்டது. இதனை அதிகாரபூர்வமாக மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் செய்தியாளர்களிடம் அறிவித்தார். அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு 38 சதவிகிதத்தில் இருந்து 42 சதவிகிதமாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி … Read more

இந்தியாவை ஸ்தம்பிக்க வைக்க காங்கிரஸ் வியூகம்; ராகுல் காந்தி பரபர ட்விட்.!

ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்ட வியூகக் கூட்டத்தில் இன்று மாலை இந்த முடிவு எடுக்கப்பட்டது. “ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் தொடர்பான அரசியல் வியூகம் குறித்து நாங்கள் விவாதித்தோம். வரும் நாட்களில் நாடு முழுவதும் போராட்டங்களை … Read more

ராகுல் காந்தி சிறை, அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

டெல்லி: ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் திமுக – காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 9வது நாள் அமர்வு தொடங்கியதும் பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ராகுல்காந்தி முதன்முறையாக மக்களவையில் கலந்துக்கொண்டார். அப்போது ராகுல் காந்தி சிறை மற்றும் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். … Read more

2024க்குள் 1000 பேருக்கு வேலை – ஆகாச ஏர் நிறுவனம் அறிவிப்பு

1000 பேரை புதிதாக வேலையில் அமர்த்த உள்ளது ஆகாச ஏர் நிறுவனம். வரும் 2024ஆம் ஆண்டு, மார்ச் மாதத்திற்குள், 1000 பேரை புதியதாக பணிக்கு நியமிக்க உள்ளதாக ஆகாச ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம், அந்த நிறுவனத்தின் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 3,000ஆக அதிகரிக்க உள்ளது. விமானங்களின் எண்ணிக்கையும் விமானம் சென்று சேரும் இடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், 1000 பேரை பணியில் அமர்த்த உள்ளதாக ஆகாச ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 7 மாதங்களுக்கு … Read more

கர்நாடக பாஜக முன்னாள் எம்எல்சி பாபுராவ் சிஞ்சன்சூர் காங்கிரஸில் இணைந்தார்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், மஜத ஆகிய முக்கிய கட்சிகள் பிற கட்சியினரை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாஜக முன்னாள் எம்எல்சி புட்டண்ணா அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். இதைத் தொடர்ந்து நேற்றுமுன்தினம் 14 தலித் அமைப்புகளின் தலைவர்கள் முன்னாள் அமைச்சர் ஆஞ்சநேயா வழிகாட்டுதலின்பேரில் க‌ர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் முன்னிலையில் காங்கிரஸில் … Read more

நான் இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்வீட்

டெல்லி: நான் இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். பிரதமரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுலுக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் நடவடிக்கை மேற்கொண்டது. மார்ச் 23-ம் தேதி முதல் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலர் உத்பால் குமார் சிங் அறிவித்துள்ளார். தகுதி … Read more

ஒளரங்கசீப் குறித்து செல்போனில் ஸ்டேட்டஸ் வைத்த இளைஞர்… குடும்பத்தை வெளியேற்றிய கிராமம்!

செல்போனில் ஒளரங்கசீப் குறித்து தவறான ஸ்டேட்டஸ் வைத்ததற்காக, இளைஞர் ஒருவரின் குடும்பத்தை, கிராமத்தைவிட்டே வெளியேற்றி உள்ளனர். மகாராஷ்டிராவில் சிவசேனாவில் இருந்து பிரிந்த மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் உள்ள ஔரங்காபாத் நகரை, பெயர் (சத்ரபதி சம்பாஜி நகர்) மாற்றம் செய்தது தொடர்பாக ஏற்கெனவே உள்ளூர் அரசியல் கட்சியினருக்கு இடையே சர்ச்சை நீடித்து வரும் நிலையில், தற்போது புதிய பிரச்சினை ஒன்று வெடித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூர் மாவட்டத்தில் … Read more

முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவின் மனைவிக்கு புற்றுநோய் பாதிப்பு

புதுடெல்லி: காரை நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் 65 முதியவர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவர் பஞ்சாபில் உள்ள பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 1988-ம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவத்துக்கு 34 ஆண்டுகள் கழித்து அதாவது கடந்த 2022-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் நவ்ஜோத் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுருக்கு … Read more