டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவர் கைது

டெல்லி: டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவரை அமலாக்கத்துறை கைது செய்தது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் 11-வது நபரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். ஐதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அருண் பிள்ளையை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

தெலங்கானாவில் பெண் ஊழியர்களுக்கு நாளை அரசு விடுமுறை

ஹைதராபாத்: நாளை 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, பெண்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் பல சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் தெலங்கானா மாநில தலைமை செயலாளர் சாந்திகுமாரி நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, அனைத்து அரசு பெண் ஊழியர்களுக்கும் மார்ச் 8-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்படுகிறது. மேலும், அன்றைய தினம் ரூ.750 கோடி மதிப்பில் மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் தன்னார்வ மகளிர் அமைப்பினருக்கு … Read more

ஈரானில் இருந்து கடத்தி வரப்பட்ட 425 கோடி ரூபாய் மதிப்புடைய போதைப் பொருள்.. குஜராத் அருகே பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல்படையினர்..!

ஈரானில் இருந்து படகில் கடத்தி வரப்பட்ட 425 கோடி ரூபாய் மதிப்புடைய போதைப் பொருளை, குஜராத் அருகே இந்திய கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். போதை பொருள் கடத்தல் குறித்து கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், குஜராத் அருகே அரபிக் கடலில் இந்திய கடலோர காவல்படையினரும், குஜராத் தீவிரவாத எதிர்ப்பு படையினரும் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி வந்த ஈரானியப் படகை மடக்கி சோதனையிட்டதில் போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து படகில் இருந்த 5 பேரை கைது … Read more

நாகாலாந்தில் எதிர்க்கட்சிகளே இல்லாத ஆட்சி அமைகிறது: பாஜக கூட்டணிக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு

கொஹிமா: நாகாலாந்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி 25 இடங்கள், பாஜக 12 இடங்கள் என மொத்தம் 37 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. பிற அரசியல் கட்சிகளான தேசிய வாத காங்கிரஸ் 7 இடங்களிலும், என்.பி.பி. 5  இடங்களிலும், நாகாலாந்து மக்கள் கட்சி ஐந்து இடங்களிலும், ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி, நாகா மக்கள் முன்னணி, ராம்தாஸ் அதவாலேவின் இந்திய குடியரசு கட்சி, ஐக்கிய ஜனதா … Read more

நாகாலாந்து, மேகாலயா முதல்வர்கள் இன்று பதவியேற்பு – பிரதமர் மோடி பங்கேற்கிறார்

கோஹிமா / ஷில்லாங்: நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் இன்று புதிய அரசு பொறுப்பேற்க உள்ள நிலையில், அதற்கான பதவியேற்பு விழாக்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். நாகாலாந்து தேர்தல் முடிவு: நாகாலாந்தில், தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி – பாஜக இடையேயான கூட்டணி மொத்தமுள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 37 தொகுதிகளைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. நெய்பியூ ரியோ மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழா இன்று நடைபெற இருக்கிறது. ஆளுநர் … Read more

நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்: காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் உற்சாகம்

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள சர்வதேச எல்லையில் ராணுவ வீரர்கள் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டு மகிழ்ந்தன. சம்பா மாவட்டத்தில் பல இடங்களில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து ஹோலி பண்டிகையில் ஈடுபட்டன. ஒருவர் மீது ஒருவர் கலர் பொடிகளை தூவி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். குளிர்காலத்தை வழி அனுப்பி விட்டு வசந்த காலத்தை வரவேற்பதாக ஹோலி பண்டிகை அமைகிறது.   இரண்டு நாட்கள் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையில், முதல் நாளான நேற்று chotti … Read more

இமாச்சல பிரதேசத்தில் இந்து கோயிலில் முஸ்லிம் ஜோடிக்கு திருமணம்

சிம்லா: இமாச்சல பிரதேசம், சிம்லா மாவட்டம், ராம்பூரில் சத்தியநாரா யணன் கோயில் உள்ளது. விஸ்வ இந்து பரிஷத் கோயிலை நிர்வகித்து வருகிறது. அதோடு கோயில் வளாகத்தில் ஆர்எஸ்எஸ் அலுவலகமும் செயல்படுகிறது. சத்தியநாராயணன் கோயிலில் திருமணம் செய்து கொள்ள முஸ்லிம் மதத்தை சேர்ந்த ராகுல் ஷேக், நிமாயத் மாலிக் விருப்பம் தெரிவித்தனர். இதற்கு கோயில் நிர்வாகம் ஒப்புதல் வழங்கியது. இதன்படி கடந்த 3-ம் தேதி கோயிலில் ராகுல் ஷேக், நிமாயத் மாலிக் ஜோடிக்கு முஸ்லிம் முறைப்படி திருமணம் நடைபெற்றது. … Read more

எதிர்கால யுத்தங்களை கணிக்க முடியாது, எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் – எச்சரித்த அமைச்சர் ராஜ்நாத் சிங்

எதிர்கால யுத்தங்களை கணிக்க முடியாதென்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார். 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 40 ஆயிரம் டன் எடையுடன் இந்தியாவிலேயே கட்டமைக்கப்பட்ட முதல் விமானந்தாங்கி போர் கப்பலான INS Vikrant -ல் கடற்படை கமாண்டர்களுடன் அவர் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளிலும், கடலோர பகுதிகளிலும் தொடர்ந்து விழிப்புடனும், எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் கடற்படை தயாராக இருக்க வேண்டும் என்றார். … Read more

ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் இன்று பொங்கல் விழா: திருவனந்தபுரத்தில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!

திருவனந்தபுரம்: பிரசித்தி பெற்ற ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் வழிபாடு இன்று நடைபெறுகிறது. இதையொட்டி திருவனந்தபுரத்தில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் வருடம்தோறும் மாசி மாதத்தில் நடைபெறும் பொங்கல் விழா உலகப் பிரசித்தி பெற்றதாகும். 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 9வது நாள் பொங்கல் வழிபாடு நடைபெறும். இந்த வருட பொங்கல் திருவிழா கடந்த 27ம் தேதி தொடங்கியது. அன்று முதல் பகவதி அம்மனுக்கு தினமும் … Read more

கருவிலேயே குழந்தைக்கு கீதை, ராமாயண பாடம் – ஆர்எஸ்எஸ் துணை அமைப்பு திட்டம்

புதுடெல்லி: ஆர்எஸ்எஸ் அமைப்பின் பெண்கள் பிரிவான ராஷ்டிர சேவிகா சமிதியின் ஓர் அங்கம் சாம்வர்தினி நியாஸ். இது ‘கர்பா சன்ஸ்கார்’ என்ற திட்டத்தை தொடங்கி உள்ளது. இந்த அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பு செயலாளர் மாதுரி மராத்தே நேற்று கூறும் போது, “கர்பா சன்ஸ்கார் திட்டத்தின் கீழ், கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சியுடன் பகவத் கீதை, ராமாயண பாடம் கற்பிக்கப்படும். இதன் மூலம் தாயின் கருவறையில் இருக்கும் குழந்தைகள் கலாச்சார மதிப்பை தெரிந்து கொள்ள உதவும். கர்ப்ப காலம் முதல் … Read more