வாலிபர் பின்தொடர்வதாக நடிகை புகார்: போலீஸ் விசாரணை

ஐதராபாத்: ஓ பில்லா நீ வல்லா, பாக்ய நகர வீட்டில் கம்மத்து உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்தவர் ஷாலு சவுதாசியா. ஐதராபாத் கேபிஆர் பூங்காவில் 2021ம் ஆண்டில் நடைபயிற்சியில் ஈடுபட்டபோது மர்ம நபர்கள் அவரை தாக்கி பலாத்கார முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களிடமிருந்து தப்பித்த ஷாலு, அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருந்தார். மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு, படங்களில் நடிப்பதையும் நிறுத்தியிருந்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது அதே இடத்துக்கு நடை பயிற்சி செய்ய ஷாலு செல்கிறார். … Read more

முன்னாள் முதல்வரின் மனைவி மற்றும் மகள்கள் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை..!!

ஐ.ஆர்.சி.டி.சி ஊழல் தொடர்பாக லல்லு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக லல்லு பிரசாத் மற்றும் அவரது மனைவிக்கு தில்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. முன்னதாக ரயில்வே அமைச்சராக லல்லு பிரசாத் இருந்தபோது, வேலைக்காக அணுகியவா்களிடமிருந்து நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கிக் கொண்டு, அவா்களுக்கு குரூப்-டி பணிகள் வழங்கப்பட்டுள்ளன. எந்த விளம்பரமோ, பொது அறிவிக்கையோ இல்லாமல் இந்த நியமனங்கள் முறைகேடாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வகையில், பாட்னாவில் சுமார் 1.05 லட்சம் சதுர … Read more

வெளிநாடுகளை சார்ந்திருப்பதை குறைத்து சுகாதாரத் துறையில் தன்னிறைவு பெற முயற்சி – பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி: சுகாதாரத் துறையில் இந்தியா வெளிநாடுகளை சார்ந்திருப்பதை குறைத்து தன்னிறைவு பெற மத்திய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆய்வு தொடர்பான பட்ஜெட்டுக்கு பிந்தைய இணைய வழி கலந்துரையாடல் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசியதாவது: நீண்ட காலமாக ஒருங்கிணைந்த அணுகுமுறை மற்றும் தொலைநோக்குப் பார்வை இல்லாததால் இந்தியாவின் சுகாதாரத் துறை பாதிக்கப்பட்டது. ஆனால்எனது அரசில் சுகாதார அமைச்சகம் மட்டுமின்றி … Read more

வங்கிக் கணக்கு விவரங்களை கொடுத்து ஆன்லைன் மோசடியால் ரூ.57 ஆயிரம் இழந்த ஸ்வேதா மேனன்

மும்பை: வங்கிக் கணக்கு விபரங்களை கொடுத்து, ஆன்லைனில் ரூ. 57 ஆயிரம் இழந்த நடிகை ஸ்வேதா மேனன், இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். மலையாள நடிகை ஸ்வேதா மேனன், தமிழில் சாது மிரண்டால், சினேகிதியே, அரவான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆன்லைன் பணமோசடி அதிகரித்து வரும்நிலையில் ‘பான்’ எண் புதுப்பித்தல் உள்ளிட்ட காரணங்களால் வங்கிக் கணக்கில் பணம் இழந்த 40 பேர் மும்பை போலீசில் புகார் அளித்தனர். மேற்கண்ட 40 பேரில் நடிகை ஸ்வேதா மேனனும் … Read more

லிபியாவில் சிக்கிய 12 இந்தியர்கள் மீட்பு – வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை

புதுடெல்லி: வேலைவாங்கித் தருவதாக மோசடி செய்து லிபியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தவித்து வந்த 12 இந்தியர்களை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மீட்டுள்ளது. பஞ்சாபிலுள்ள 12 பேருக்கு துபாயில் வேலை வாங்கித் தருவதாக கூறி சிலர் லிபியாவுக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். அங்கு அவர்கள் கொத்தடிமை போல வேலை செய்து வந்தனர். இதுதொடர்பான புகார் மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு (என்சிஎம்) வந்தது. இதையடுத்து சிறுபான்மையினர் ஆணையம் அதிரடியாக நடவடிக்கை எடுத்து 12 … Read more

சந்திராயன் – 3 விண்கலத்தின் இரண்டாம் கட்ட பரிசோதனை வெற்றி – இஸ்ரோ விஞ்ஞானிகள்

சந்திராயன் – 3 விண்கலத்தின் இரண்டாம் கட்ட பரிசோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.  2019ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் – 2 விண்கலம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தோல்வியடைந்த நிலையில், இந்த ஆண்டுக்குள் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்படுமென்று இஸ்ரோ அறிவித்திருந்தது. அதன்படி, சந்திரயான்-3 பயணத்திற்கான கிரையோஜெனிக் எஞ்சினில் வெப்ப பரிசோதனை மகேந்திரகிரியில் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக, இஸ்ரோ தெரிவித்துள்ளது.    Source link

கைதிகளின் ஆதார் சரிபார்க்க மாநிலங்களுக்கு அனுமதி

புதுடெல்லி: ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘சீர்த்திருத்த நடவடிக்கைகள், சுகாதாரம், திறன் மேம்பாடு, தொழிற்பயிற்சி, உறவினர்களுடனான நேர்காணல், சட்ட உதவி போன்ற பல்வேறு சலுகைகள் மற்றும் உதவிகளை வழங்க, கைதிகளின் சம்மதத்துடன் அவர்களின் ஆதார் சரிபார்ப்பு செயல்முறையை மாநில அரசுகள் மேற்கொள்ளலாம்’ என கூறப்பட்டுள்ளது.

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா திஹார் சிறையில் அடைப்பு

புதுடெல்லி: மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆம் ஆத்மி மூத்த தலைவர் மணிஷ் சிசோடியாவை மார்ச் 20 வரை நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசில் துணை முதல்வராக இருந்தவர் மணிஷ் சிசோடியா. மதுபானக் கொள்கை மூலம் ஊழலில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. கடந்த 26-ம் தேதி, 8 மணி நேர … Read more

திரிபுரா முதல்வராக மாணிக் சகா மீண்டும் தேர்வு

அகர்தலா: திரிபுரா முதல்வராக மாணிக் சகா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை அவர் பதவி ஏற்க உள்ளார். 60 உறுப்பினர்கள் கொண்ட திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மார்ச் 2ம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில் 32 இடங்களை பிடித்து பா.ஜ மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. ஆனால் முதல்வர் தேர்வில் இழுபறி ஏற்பட்டது. பெரும்பாலான பா.ஜ எம்எல்ஏக்கள் முன்னாள் முதல்வர் பிப்லப் குமார் தேப்பிற்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து தற்போதைய முதல்வராக உள்ள மாணிக் சகா மாற்றப்படுவார் … Read more

மக்கள் அதிர்ச்சி..!!உத்தரகண்டில் 12 மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள்..!!

உத்தரகாசி மாவட்டத்தின் பத்வாரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.45 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. சிரோர் வனப்பகுதியில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 2.5 புள்ளிகளாக பதிவானது. இதைத் தொடர்ந்து மூன்றாவது நிலநடுக்கம் காலை 10.00 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 1.8 ஆக இருந்தது. இதன் காரணமாக, வீடுகளில் கதவு, ஜன்னல்கள் அதிர்ந்தன. பாத்திரங்களும் கீழே விழுந்ததால், வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள், பதறியடித்து எழுந்து, வெளியே ஓடிவந்தனர். பீதி காரணமாக மீண்டும் வீடுகளுக்குள் … Read more