சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு முறையாக அறிவிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கை நிராகரிப்பு: ஒன்றிய அரசு

டெல்லி: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு முறையாக அறிவிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நிராகரித்துவிட்டதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கம் அளித்துள்ளார். உயர் நீதிமன்றங்களில் ஆங்கிலத்தை தவிர மற்ற மொழிகளை பயன்படுத்த அனுமதி தொடர்பான பரிந்துரைகளின் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் முழு அமர்வு இந்த பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிப்பதில்லை என்று … Read more

அதிகரிக்கும் கரோனா பரவல்: முன்னெச்சரிக்கையாக இருக்க பிரதமர் மோடி அலர்ட்

புதுடெல்லி: கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொது சுகாதார தயார் நிலை மற்றும் சூழ்நிலை குறித்த உயர்நிலை ஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பிரதமர் மோடி முன்னெச்சரிக்கையாகவும், விழிப்புடனும் இருக்க அறிவுறுத்தினார். நாடு முழுவதும் கோவிட்-19 மற்றும் இன்ஃப்ளூயன்சா நோய் குறித்த சூழல்களை எதிர்கொள்வதற்கான தயார் நிலை குறித்து பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கோவிட்-19 தொற்று பரவலை எதிர்கொள்வதற்கான சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள், தடுப்பூசி முகாம்கள், கோவிட்-19 அவசரகால நடவடிக்கைகள் … Read more

பிரதமர் மோடியின் 100வது மன் கி பாத் நிகழ்ச்சி: உலகம் முழுவதும் ஒலிபரப்ப பாஜக முடிவு

புதுடெல்லி: பிரதமர் மோடியின் 100வது மன் கி பாத் நிகழ்ச்சியை உலகம் முழுவதும் ஒலிபரப்ப பாஜ முடிவு செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக அக்டோபர் 3ம் தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதன் மூலம் மாதம் தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். 2வது … Read more

பிரதமர் நரேந்திர மோடியின்  100-வது மனதின் குரல் உரை: உலகம் முழுவதும் ஒலிபரப்பு

புதுடெல்லி: கடந்த 2014-ம் ஆண்டு நரேந்திர மோடி முதல் முறையாக பிரதமராக பொறுப்பேற்றார். அதே ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி முதல்முறையாக ‘மனதின் குரல்’ என்ற பெயரில் அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதன் பிறகு ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் வானொலியில் அவர் உரையாற்றி வருகிறார். இணையதளம் வாயிலாக நாட்டு மக்களின் கருத்தைக் கேட்டு அதையும் தனது உரையில் இடம்பெறச் செய்கிறார். அத்துடன் தங்கள் துறையில் சத்தமின்றி சாதனை படைக்கும் நபர்களைப் பற்றிய … Read more

பஞ்சாப்பை விட்டு அம்ரித்பால் வெளியேறி இருக்கலாம் என தகவல்..

பஞ்சாப் போலீசாரால் தேடப்பட்டு வரும், காலிஸ்தான் பிரிவினைவாத இயக்க ஆதரவாளர் அம்ரித்பால் சிங், பஞ்சாபை விட்டு வெளியேறி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அம்ரித்பாலை பிடிக்க ஆறாவது நாளாக பஞ்சாப் போலீசார் முயற்சித்து வரும் நிலையில், உத்ரகாண்ட் வழியாக நேபாளத்திற்கு தப்பிச்செல்ல அம்ரித்பால் முயற்சிப்பதாக புலனாய்வு அமைப்புகள் சந்தேகித்துள்ளன. அதேநேரம் ஹரியானாவின் குருக்ஷேத்ரா மாவட்டத்தில் அம்ரித்பாலிற்கு அடைக்கலம் கொடுத்த பெண்ணை காவலில் வைத்து போலீசார் விசாரணை  நடத்தி வருகின்றனர்.  Source link

புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை ரூ.6,500-ஆக உயர்வு: ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல்

புதுச்சேரி: புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை 6,500 ரூபாயாக உயர்த்திய கோப்பிற்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.ஏற்கெனவே மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ரூ.5,500 ஆக இருந்த நிலையில் ரூ.1,000 உயர்த்தி ரூ.6,500 ஆக வழங்கப்படும் என்று முதல்-மந்திரி ரங்கசாமி அறிவித்திருந்தார். இதற்காக அமைச்சரவையில் அனுமதி பெற்று அந்த கோப்பு கவர்னர் மாளிகைக்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் புதுச்சேரி, மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மீனவர்களுக்கான விடுமுறை கால நிதிஉதவி மற்றும் … Read more

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக போராட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது அவசியம் – மெகபூபா முஃப்தி

ஸ்ரீநகர்: “வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலிமையாக போராட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைய வேண்டியது அவசியம். ஆனால் அப்படி நடக்குமா என்பது தெரியவில்லை” என்று மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான மெகபூபா முஃப்தி தெரிவித்துள்ளார். ஸ்ரீநகரில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “காங்கிரஸ் தலைமையில் ஒரு பெரிய எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமைய வேண்டியது அவசியமாய் இருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சி முகாமில் விரிசல்களை … Read more

‘பயமா..ராகுல் காந்திக்கா.?’ – பிரியங்கா காந்தி ரியாக்சன்; பாஜகவை பொளந்த கெஜ்ரிவால்.!

காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது தான் தேசிய அளவில் ஹாட் டாபிக். கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடக மாநிலம் கோலாரில் காங்கிரஸ் கட்சிக்காக ராகுல் காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, ’அதெப்படி எல்லா திருடர்களும் தங்களது பெயருக்கு பின்னால் ’மோடி’ என்ற பெயரை வைத்துக் கொள்கின்றனர்?’ எனக் கேள்வி எழுப்பினார். அதைத் தொடர்ந்து ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநில முன்னாள் … Read more

டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு!

டெல்லி: டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்துள்ளார். ஆன்லைன் ரம்மி தடை மசோதா மீண்டும் தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அமித்ஷாவுடன் ஆளுநர் சந்தித்துள்ளார்.

‘2 ஆண்டு சிறை; 1 மாதம் ஜாமீன்…’ நீதிமன்ற தீர்ப்பும், ராகுல் காந்தியின் எதிர்வினையும்!

2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசிய கருத்துக்கு எதிராக, சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. பின்னர் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் எம்.பியுமான ராகுல் காந்தி, “எல்லா … Read more