இந்தியாவில் விரைவில் 6ஜி தொலை தொடர்பு சேவை: பிரதமர் மோடி அறிவிப்பு!!

டெல்லி: இந்தியாவில் 6ஜி தொலை தொடர்பு சேவைகளுக்கான சோதனை தொடங்கப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 2030க்குள் நாட்டில் 6ஜி சேவையை முழுமையாக செயல்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 6ஜி தொழில்நுட்ப ஆராய்ச்சி, மேம்பாட்டு சோதனை மையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்தியாவில் 6ஜி சேவை தொடர்பாக செயல்திட்டங்களை உருவாக்க கடந்த 2021ம் ஆண்டு நவம்பரில், பல்வேறு துறை அமைச்சகங்கள், துறைகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள், கல்வி சார்ந்த குழுக்கள், தரநிர்ணய … Read more

அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: மாநில அரசுகள் 5 அடுக்குத் திட்டத்தை பின்பற்ற மத்திய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி: நாட்டில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் 5 அடுக்குத் திட்டங்களைப் பின்பற்ற மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ‘நாட்டில் கரோனா பாதிப்புகள் அதிகரித்துவரும் நிலையில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் சோதனை செய்தல், கண்காணித்தல், சிகிச்சையளித்தல், கோவிட் நடைமுறையை பின்பற்றுதல், தடுப்பூசி செலுத்துதல் ஆகிய 5 அடுக்குத் திட்டங்களைக் … Read more

நள்ளிரவு 2 மணிக்கு பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்த வீடு.. அண்ணன்-தங்கை உள்பட 3 பேர் பலி..!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன்-தங்கை உள்பட 3 பேர் உயிரிழந்த நிலையில், 5 பேர் காயமடைந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ராமஜோகி பேட்டையில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் ஒரு வீட்டில் குடும்பத்தினர் பிறந்த நாள் விழா கொண்டாடி விட்டு படுத்துத் தூங்கிய நிலையில் நள்ளிரவு சுமார் 2 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் வீடு இடிந்து விழுந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களில் 2 பேரை … Read more

திடிரேன பற்றி எரிந்த குழந்தைகள் ஐசியூ: நல்வாய்ப்பாக 7 குழந்தைகள் உயிர் தப்பின

திருச்சூர்: திருச்சூர் மருத்துவமனையில் குழந்தைகள் ஐசியூவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நல்வாய்ப்பாக 7 குழந்தைகள் உயிர் தப்பின. கேரளா மாநிலம் திருச்சூரின் ஒளரி பகுதியில் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அதில் ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக குழந்தைகள் ஐசியூவில் தீ விபத்து ஏற்பட்டது. மேலும், அருகிலுள்ள பிரசவ வார்டுக்கும் மளமளவென புகை பரவியது. இதில் நல்வாய்ப்பாக தீ விபத்து ஏற்பட்டவுடன் குழந்தைகள் ஐசியூவில் இருந்த 7 குழந்தைகளும் மீட்கப்பட்டனர். பின்னர், பிரசவ அறையில் இருந்த 2 … Read more

திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் ரூ.4,411 கோடிக்கு ஒப்புதல்

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ் தானத்தின் 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு குறித்து தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி நேற்று திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில்செய்தியாளர்களிடம் கூறியதாவது, “2023-24-ம் நிதியாண்டுக்கான திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் ரூ. 4411.68 கோடிக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு கடந்த பிப்ரவரி 15-ம் தேதியே அறங்காவலர் குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால் அப்போது ஆந்திராவில் மேலவை தேர்தல் நடைமுறைகள் காரணமாக தேவஸ்தான பட்ஜெட் குறித்து அறிவிக்க இயலவில்லை. வரும் … Read more

தேர்தல் ஸ்கெட்ச்: 4 மாநிலங்களில் பாஜக அதிரடி… புதிய தலைவர்கள் நியமனம்!

டெல்லியில் இருந்து பாஜக தேசிய தலைமை இன்று (மார்ச் 23) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் மூன்று மாநிலங்களுக்கு புதிய தலைவர்களை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள இந்த மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பாஜக அதிரடி இதுதொடர்பான பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிடப்பட்ட அறிவிப்பில், டெல்லி பாஜகவின் செயல் தலைவராக இருந்த விரேந்திர சச்தேவா அம்மாநில தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் ராஜஸ்தான் மாநில பாஜக தலைவராக … Read more

ஐயோ!! மறுபடியும் முதல இருந்தா..5 மாநிலத்தை அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா

கோவிட்-19 ஓமிக்ரான்: நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓமிக்ரான் வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. பரவலாகப் பார்த்தால், இவை இந்தியாவில் பரவியிருக்கின்றன. இதனிடையே BA.1, BA.2, BA.5, BQ.1, BA.4, BA 2.12.1 XBB, BA 2.75, இவை அனைத்தும் ஓமிக்ரானின் மாறுபாடுகள் ஆகும். மேலும் ஓமிக்ரானின் 1000 வகைகளில், 100 மறுசீரமைப்பு பதிப்புகள் இந்த நேரத்தில் பரவுகின்றன. இந்த நேரத்தில் XBB1.5 மற்றும் XBB 1.16 ஆகியவை Variant Of Interest ஆகும், மேலும் இதில் தற்போது விஞ்ஞானிகள் கவனம் … Read more

சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை எப்போது?.. ஒன்றிய அரசு பதில்

2026-ம் ஆண்டுக்கு பின்னர் நாட்டில் உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகள் மறுவரையறை செய்யப்படலாம் என்று ஒன்றிய அரசு விளக்கமளித்துள்ளது. நாட்டில் உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகள் மறுவரையறை செய்யப்படுவது வழக்கம். அந்த அடிப்படையில், 2008-ம் ஆண்டு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத்தில் உள்ள தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டன. 2008-ம் ஆண்டு தொகுதிகள் மறுவரையறை செய்யும் போது பின்பற்றப்பட்ட நடைமுறைகள் குறித்தும், தொகுதிகளை மறுவரையறை செய்யும் போது மாநிலங்களுக்கான பங்கு என்ன என்றும், அடுத்த தொகுதி மறுவரையறை … Read more

மும்பையில் போலி சோதனை நடத்தி வர்த்தகரிடம் ரூ.11 லட்சம் பறித்த 3 ஜிஎஸ்டி அதிகாரி பணிநீக்கம்

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள கல்பதேவி பகுதியில் லால்சந்த் வனிகோடா என்ற வர்த்தகர் அலுவலகத்தில் போலியாக சோதனை நடத்தி, மாநில ஜிஎஸ்டி ஆய்வாளர்கள் ஹிதேஷ் வசைகர், மச்சிந்திர கங்கனே, பிரகாஷ் ஷேகர் ஆகிய மூவரும் 2021 ஜூன் 14-ம் தேதி ரூ.11 லட்சத்தை எடுத்துச் சென்றனர். பின்னர் இந்த சோதனை போலி என்று அறிந்த லால்சந்த் எல்.டி.மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட3 ஆய்வாளர்கள், அவர்களுடன் வந்த ஒருவரை … Read more

”சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா நதிகளின் நீரோட்டம் குறையும்..” – ஐ.நா. எச்சரிக்கை..!

உலக வெப்பமயமாதல் காரணமாக வரும் பத்தாண்டுகளில் சிந்து, கங்கை மற்றும் பிரம்மபுத்திரா போன்ற முக்கிய இமாலய நதிகளின் நீரோட்டம் குறையும் என்று ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் எச்சரித்துள்ளார். ஐநாவில் நடைபெற்ற சர்வதேச பனிப்பாறைகள் பாதுகாப்பு கருத்தரங்கில் பேசிய குட்ரெஸ், 1900ம் ஆண்டு முதல் உலக சராசரி கடல் மட்டம் முந்தைய 3 ஆயிரம் ஆண்டுகளில் உயர்ந்ததை விட வேகமாக உயர்ந்து வருவதாக உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது என்று தெரிவித்தார். காலநிலை மாற்றத்தின் மோசமான தாக்கங்களைத் … Read more