இந்தியாவுக்கு ரூ.2.07 லட்சம் கோடி கடன் வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஆர்வம்

புதுடெல்லி: இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவும் நோக்கில் ரூ.2.07 லட்சம் கோடியை கடனாக வழங்க விரும்புவதாக ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மாசாத்சுகு அசாகவா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் இன்று(புதன் கிழமை) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் அவர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து, ஆசிய வளர்ச்சி வங்கி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: ”பிரதமர் நரேந்திர மோடியை, மாசாத்சுகு அசாகவா இன்று … Read more

மெக்கின்சி நிறுவனம் 2,000 ஊழியர்களை பணியிலிருந்து நீக்க உள்ளதாக அறிவிப்பு

மும்பை: நிர்வாக ஆலோசனை நிறுவனமான மெக்கின்சி அன்ட் கோ 2,000 ஊழியர்களை பணியிலிருந்து நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது. ஆள்குறைப்பு தொடர்பாக பல நிறுவனங்களுக்கு ஆலோசனை அளித்து வந்த  நிறுவனமே தன் பணியாளர்களை குறைக்க உள்ளது. மெக்கின்சியில் பணிபுரியும் 45,000 பேரில் வாடிக்கையாளர், நிறுவனங்களுடன் தொடர்பில் இல்லாத ஊழியர்கள் சிலரை நீக்கவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

குழந்தையின் அரிய வகை நோய்க்கு சிகிச்சை: பெயர் வெளியிட விரும்பாத நபர் ரூ.11.6 கோடி நன்கொடை

மும்பை: கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த சாரங் மேனன் மற்றும் ஆதித்தி நாயர் தம்பதி மும்பையில் வசிக்கின்றனர். இவர்களின் 15 மாத குழந்தை நிர்வானுக்கு ‘ஸ்பைனல் மஸ்குலர் ஆன்ட்ரோபி’ என்ற அரிய வகை மரபணு கோளாறு ஏற்பட்டது. இது உடலில் உள்ள தசைகளை பலவீனமடையச் செய்து இயங்க முடியாமல் ஆக்கும். இதற்கு சிகிச்சை அளிக்க ரூ.17.5 கோடி செலவாகும். இவ்வளவு அதிக தொகை செலவழிக்க அவர்களுக்கு வசதி இல்லாததால், ஆன்லைன் மூலம் பலரிடம் நன்கொடை வசூலிக்க முடிவு செய்தனர். … Read more

விஜய் பட பாணியில் நடத்துனர் மீது வழக்கு தொடர்ந்து இழப்பீடு பெற்ற நபர்!

கடந்த 2002-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படம் குடிமக்களின் அடிப்படை சட்டங்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய படமாக அமைந்திருந்தது.  அந்த படத்தில் ஒரு காட்சியில் பேருந்தில் பயணம் செய்யும் பயணி ஒருவருக்கு மீதி சில்லறையை தராமல் நடத்துனர் அலட்சியம் செய்வார், உடனே அந்த நடத்துனர் மீது வழக்கு தொடர்ந்து நஷ்ட ஈடு  கோரப்படும்.  அதேபோன்ற ஒரு சம்பவம் தான் தற்போது பெங்களூரு பகுதியில் நடந்துள்ளது, பேருந்தில் ரூ.1 சில்லறை தர மறுத்ததால் பெங்களூரு நுகர்வோர் … Read more

திருப்பதி அடுத்த ரேணிகுண்டாவில் சர்வதேச விமான நிலைய வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்-கலெக்டர் உத்தரவு

திருப்பதி : திருப்பதி அடுத்த ரேணிகுண்டாவில் உள்ள சர்வதேச விமான நிலைய வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கலெக்டர் வெங்கடரமணா உத்தரவிட்டுள்ளார். திருப்பதி கலெக்டர் அலுவலகத்தில் விமான நிலைய வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் வெங்கடரமணா தலைமை தாங்கினார். தொடர்ந்து, அவர் பேசியதாவது: திருப்பதி மாவட்டத்தில் உள்ள ரேணிகுண்டா சர்வதேச விமான நிலைய வளர்ச்சி பணிகள் விரைந்து நடக்க வேண்டும். விமான நிலையத்திற்கு தேவையான இடங்களை அரசு … Read more

அதிகமான விமானநிலையங்கள், சிறந்த இணைப்பு வசதி மக்களை நெருக்கமாக்குகிறது – பிரதமர் மோடி

புதுடெல்லி: விமான போக்குவரத்து துறை, அதிக விமான நிலையங்கள், சிறந்த இணைப்பு வசதிகளுடன் மக்களை நெருக்கமாக கொண்டு வருவதுடன், நாட்டின் முன்னேற்றத்திற்கும் ஊக்கமளிக்கிறது என்று பிரதமர் மோடி இன்று (பிப்.22) தெரிவித்தார். கோவிட்-19 தொற்றுக்குப் பின்னர், உள்நாட்டு விமானப் போக்குவரத்து பயணம், பிப்,19 ஆம் தேதி 4.45 லட்சம் என்ற புதிய இலக்கைத் தொட்டுள்ளதாக தெரிவித்துள்ள சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் ட்வீட்டை பகிர்ந்துள்ளார். மேலும், அந்தப் பதிவில்,”அதிக விமான நிலையங்கள், சிறந்த … Read more

இந்திய டெக்டானிக் பிளேட் 5 செ.மீ. நகர்கிறது… உத்தராகண்டில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு அதிகம் : விஞ்ஞானிகள் தகவல்!!

டெல்லி: இந்திய டெக்டானிக் பிளேட் ஆண்டுதோறும் 5 செ.மீ. நகர்வதாக தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவன தலைமை விஞ்ஞானி என்.பூர்ணசந்திர ராவ் கணித்துள்ளார். கடந்த சில நாட்களாக உலகின் பல்வேறு நாடுகளில்  நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றன. பிப்ரவரி 6ம் தேதி துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 46,000 மக்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து,  பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து, ஜப்பான் என பல நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.  இதனிடையே இந்தியாவிலும் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக … Read more

மனிஷ் சிசோடியாவை ஊழல் தடுப்பு சட்டத்தில் விசாரிக்க உள்துறை அனுமதி

புதுடெல்லி: சட்டத்துக்குப் புறம்பாக உளவு அமைப்பை உருவாக்கி முறைகேடுகளில் ஈடுபட்டதாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவை ஊழல் தடுப்பு சட்டத்தில் விசாரிக்க உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. இதுதொடர்பாகம் துணைநிலை ஆளுநருக்கு உள்துறை அமைச்சகம் கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில், மனிஷ் சிசோடியாவை ஊழல் தடுப்புச் சட்டத்தில் விசாரிக்க சிபிஐ அமைப்புக்கு அனுமதி வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளது. 2015 வழக்கு: 2015ஆம் ஆண்டு டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தபோது … Read more

நேர்மைக்கு உதாரணம் பாஜக! நேர்மையானவர்களின் பதவியை பறிப்பது காங்கிரஸ்? எஸ்.ஜெய்சங்கர்

புதுடில்லி: வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், காங்கிரஸ் கட்சியில், தனது தந்தை டாக்டர் கே.சுப்ரமணியம் செயலர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக தெரிவித்துள்ள விவகாரம் மிகப் பெரிய பேசுபொருளாகிவிட்டது. தனது தந்தையும் நாட்டுக்கு சேவையாற்றிவர் என்று கூறும் தற்போதைய மத்திய வெளியுறவு அமைச்சர, 2019ல் மத்திய அமைச்சராக வாய்ப்பு கிடைத்தது முதல், தனது தந்தையை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நீக்கியது தொடர்பாகவும் மனம் திறந்து பேசியுள்ளார். செய்தி நிறுவனம் ANI க்கு அளித்த பேட்டியில், ஜெய்சங்கர், ஐ.எஃப்.எஸ் அதிகாரியாக பணியாற்றிய தான், … Read more

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: 3 தங்கத்துடன் இந்தியா முதலிடம்.!

எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்று வரும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 3 தங்கப்பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் முதலிடம் வகித்து வருகிறது. 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் ருத்ராங்ஷ் பாட்டீல் 16க்கு 8 என்ற புள்ளி கணக்கில் ஜெர்மனியின் மேக்ஸிமிலியன் உல்பெர்க்கை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். ஏற்கனவே, கலப்பு அணிகள் பிரிவில் ருத்ராங்ஷ் பாட்டீல் நர்மதா நிதினுடன் இணைந்து தங்கம் வென்றிருந்தார். மற்றொரு பிரிவில் வருண் தோமர்-ரிதம் சங்வான் இணை தங்கம் … Read more